Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவ்வொரு இலங்கையர் தொடர்பான தகவல்கள் பாக்கிஷ்தான் டேட்டா பேசுக்கு செல்ல்லப்போகிறதா--இந்தியா அலறல்

Featured Replies

இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகளுக்குப் பதிலாக அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள கணனிமயப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் கேள்விப் பத்திரத்தை முறைகேடான வகையில் பாகிஸ்தானின் நெட்ரா நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கத்தின் பொறுப்பு மிக்கவர்கள் சிலர் மேற்கொள்ளும் முயற்சி குறித்து இந்தியா தனது கவலையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது.

இந்தக் கேள்விப் பத்திரம் பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதன் மூலம் முழு இலங்கையர்கள் தொடர்பான விபரங்கள் பாகிஸ்தானிடம் சென்றடையும் என தெரிவித்துள்ள இந்திய அரசாங்கம், இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் தாம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வரும் போது, இலங்கையின் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய முக்கியமான பொறுப்பை பாகிஸ்தானுக்கு பெற்றுக்கொடுப்பதன் மூலம், எதிர்காலத்தில் பாதுகாப்பு சம்பந்தமாக பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

இதேவேளை மும்பாய் நகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் எதிர்காலத்தில் ஏதோ ஒரு வகையில் இந்தக் குழுக்கள் இலங்கையில் இருந்து செயற்படக் கூடிய ஆபத்து குறித்தும் இந்தியா கூடிய கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அடையாள அட்டை தயாரிப்பு தொடர்பான கேள்விப் பத்திரத்தை பாகிஸ்தான் நிறுவனம் வழங்கியிருந்தது, கேள்வி பத்திரத்தில் அடிப்படைத் தகுதிகள் காணப்படாத நிலையில் நிறுவனத்தின் கோரிக்கை ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலரின் தலையீட்டை அடுத்து அந்த நிறுவனம் தொழிற்நுட்ப மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போதும், ஆரம்பத்தில் வெளியேற்றப்பட்ட நிறுவனம் ஒன்றை மீண்டும் சேர்த்து கொள்வதன் மூலம், அரசாங்கத்தின் மீது எதிர்காலத்தில் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என தொழில்நுட்ப ஆய்வுகுழு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டை சம்பந்தமான திட்டத்திற்கு பாகிஸ்தான் அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க முயற்சித்து வருவதாகவும் இந்த கொடுக்கல் வாங்கல்களின் பின்னனியில் இலங்கையின் முக்கிய அமைச்சர்கள் சிலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இதுவும் போப்போது இதெல்லாம் தேவையா நீங்கள் என்னத்தை கொண்டுவந்தாலும் அவங்களை ஒண்டும் செய்ய ஏலாது

சிறிலங்காவின்ர அல்வா என்ன " ரேஸ்ற் " கண்டியளே? இந்தியா ஒரு கிள்ளுக் கீரையாக நடந்து கொள்ளுது.

  • கருத்துக்கள உறவுகள்

<_< சிங்களவன் இந்தியாவுக்கு அப்பூக்கு மேல ஆப்பா வைச்சுக்கொண்டு வாறான். ஆனால் கெடுகிறன் பிடி சபதம் எண்டு சொல்லிக்கொண்டு இந்தியாவும் நல்லா ஆப்புக்க இறக்கிவிட்டு நிக்குது !

சரி, இவ்வளவுகாலமும் சிங்களவன் தமிழனுக்குத்தானே ஆப்பு வைச்சான் எண்டு இருந்தியள், இப்ப உங்களுக்கே வைக்கத் தொடங்கீட்டான். ஆனால் அதுக்கு ஒண்டும் செய்ய ஏலாது, ஆனால் இன்னும் இன்னும் இலங்கையின்ர பாதுகாப்புக்கும், மண்ணாங்கட்டிக்கும் எண்டு சொல்லிக்கொண்டு தாரை வார்த்துக்கொண்டு நில்லுங்கோ." இந்த இந்தியா ரொம்ப நல்லவண்டா, எப்படித்தான் அடித்தாலும் வலிக்காமல் சிரித்துக்கொண்டு இருக்கிறானே" எண்டு சிங்களவனும், பாக்கிஸ்த்தான் காரணும் உங்கட தலையில ஐய்சா கொட்டிப்போட்டு போகட்டும்.

தமிழீழம் தான் என்றும் இந்தியாவின் நட்பு சக்தி, இந்தியாவின் பதுகாப்புக்கு தமிழீழம் அமைவதே சாலச்சிறந்தது என்று தலைவர் கூறியதை இந்தியா உணரும் நேரம் வந்து விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பூமியிலை இப்ப ஆசியா (இந்தியா சீனா) பக்கந்தான் கொஞ்ச பொருளாதார வளர்ச்சி மற்ரது அந்த இந்த வளர்ச்சியெண்டு அதிரெடியாய் முன்னேறிக்கொண்டு வருது.

இது எங்கடை பழசுகளுக்கு (ஐரோப்பா அமெரிக்கா) கொஞ்சம் வயித்தை கலக்குது போலை கிடக்கு

அதுக்கு சிறிலங்கா தான் அவையள் குந்தியிருந்து சீனாவுக்கும் இந்தியாவுக்கும் கண்ணுக்குள்ளை விரலை வைச்சு ஆட்டக்கூடிய இடம்.

இஞ்சை தான் ஆடுபுலியாட்டம் நடக்குது.

இதிலை இந்தியாவுக்குத்தான் பயங்கர தோல்வி அதுவும் கிட்டடியிலை

எனக்கு ஒரு சந்தேகம்!

எங்கட விபரங்களையெல்லாம் எடுத்து பாகிஸ்தான் கரன் என்ன செய்வான்?......

அதில இந்தியாவுக்கு என்ன பிரச்சனைவரும்?.....

யாராவது இதை விளங்கப்படுத்துங்கோ....

  • தொடங்கியவர்

எனக்கு ஒரு சந்தேகம்!

எங்கட விபரங்களையெல்லாம் எடுத்து பாகிஸ்தான் கரன் என்ன செய்வான்?......

அதில இந்தியாவுக்கு என்ன பிரச்சனைவரும்?.....

யாராவது இதை விளங்கப்படுத்துங்கோ....

இலங்கையரின் அடையாளங்களுடன் இலகுவாக இந்தியாவுக்குள் ஊடுருவி நாசகார வேலைகளில் ஈடுபடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையரின் அடையாளங்களுடன் இலகுவாக இந்தியாவுக்குள் ஊடுருவி நாசகார வேலைகளில் ஈடுபடலாம்

அப்போ வைகோ சொன்னது சரிதான் :(:)

  • கருத்துக்கள உறவுகள்

"புனிதப்போர்" தென் இந்தியாவில் நடத்த நல்ல வசதியாக இருக்கும்......இது இந்தியாவின் உள்விவகாரம் நாங்கள் ஏன் தலையிடுவான்.......

இலங்கையரின் அடையாளங்களுடன் இலகுவாக இந்தியாவுக்குள் ஊடுருவி நாசகார வேலைகளில் ஈடுபடலாம்

வாங்கோ நல்லா....

ஒரு அவசர வேலையா இந்தியவுக்கு வீசா எடுக்க எங்கட சனம் படுறபாடு... அந்தவெய்யுலுக்குள்ள, ... கால்கடுக்க... . இது உங்களுக்கு இலகுவா?.. :( ..

Edited by Sooravali

  • தொடங்கியவர்

வாங்கோ நல்லா....

ஒரு அவசர வேலையா இந்தியவுக்கு வீசா எடுக்க எங்கட சனம் படுறபாடு... அந்தவெய்யுலுக்குள்ள, ... கால்கடுக்க... . இது உங்களுக்கு இலகுவா?.. :( ..

பாக்கிஷ்தானை சொன்னன்

பாகிஸ்தான் காரந்தான் 10 நாளைக்கு ஒரு கப்பலெண்ட கணக்கை சொல்லி 11வது கப்பலை முபாயில இறக்கிட்டானே. வனுக்கு அடையாள அட்டை எதுக்கு.... சுவரேறி குதிக்கிறமாதி மலை ஏறிக்குதிச்சா இந்தியா............

இதை விட்டுப்போட்டு அலுமினியம் கொண்டுபோட்டாங்களெண்டு இஞ்ச வந்து குளறி.... கடசிய்யா வை.கோ வை 1வரும் போட்டு பயங்கரவாதத்தை நிப்பட்ட முடிஞ்சதா?... கூடினதுதான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கோ

ஸ்ரீலங்காவின் நலனில்

ஸ்ரீலங்காவைவிட இந்தியாவின் அக்கறையை

இவர்கள் மறந்தாலும் அவர்கள் தூங்குவதாயில்லை

இந்த நிலையில் இந்தியாவிடம் ஈழத்தை எடுத்துத்தா என்று இன்னும் எம்மில் சிலர்?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.