Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் ஆயுதக்கப்பலை தவறவிட்ட சிறிலங்கா கடற்படை: "சண்டே ரைம்ஸ்"

Featured Replies

அனைத்துலக கடற்பரப்பில் தரித்து நின்ற விடுதலைப் புலிகளின் பாரிய கப்பல் மாயம்: அதிர்ச்சியில் சிறிலங்கா படைத்தரப்பு

[வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2008, 07:48 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]

முல்லைத்தீவை அண்டிய அனைத்துலக கடற்பரப்பில் கனரக ஆயுதங்களுடன் தரித்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் எங்கே சென்றது எனும் அதிர்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம் உறைந்து போயுள்ளதாக கொழும்பு வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கனடாவில் இருந்து உக்ரேன் நாட்டுக்கு கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் மூன்று உறுப்பினர்கள் பயணமானார்கள். அங்கு அவர்கள் ஓரேரா விடுதியில் தம்மை பதிவு செய்து கொண்டார்கள்.

விடுதலைப் புலிகளின் பிரதம ஆயுத முகவரான கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் அப்போது சுகவீனம் காரணமாக தாய்லாந்தில் தங்கியிருந்தார்.

எனினும் அவர் இந்த குழுவின் இருந்த பிரதி தலைவருடன் தொடர்பில் இருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடி தொடர்பும் அவருக்கு உள்ளது. இளங்கோ என்பவரே இந்த கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

கே.பியின் உத்தரவுக்கு அமைவாகவே கனடாவில் இருந்து மூவர் வந்திருந்தனர். எனினும் அவர்களை வெளிநாட்டு உளவு அமைப்புக்கள் தீவிரமான பின்தொடர்ந்தன.

மறுநாள் அவர்கள் உக்ரேனைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படை அதிகாரி ஒருவரை சந்தித்து கொள்வனவு செய்ய வேண்டிய ஆயுதங்கள் தொடர்பாக பேசினார்கள்.

இவர்களின் ஆயுத பட்டியலில் 122 மி.மீ, 130 மி.மீ, 152 மி.மீ பீரங்கிகள், மோட்டார்கள், கனரக இயந்திர துப்பாக்கிகளுக்கான வெடிபொருட்கள் மற்றும் சிறிய ஆயுதங்கள் என்பன இருந்தன.

மேலும் 60 மற்றும் 70 குதிரைவலு கொண்ட வெளி இணைப்பு இயந்திரங்களையும் கொள்வனவு செய்திருந்தனர்.

ஆயுத விநியோக மையத்திற்கு சென்று அவர்கள் ஆயுதங்களையும் பார்வையிட்டனர். உக்ரேனிய படை அதிகாரி கொள்வனவுக்கான பரிந்துரைகளை மேற்கொண்டார். அதன் பின்னர் விடுதலைப் புலிகள் இரண்டு தவணைகளில் பணத்தை செலுத்தியிருந்தனர்.

கொள்வனவு உறுதியானதும், அதனை கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை அவர்கள் ஆராய்ந்தனர்.

இந்த தகவலை படையினரின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

முதலில் விடுதலைப் புலிகள் வானூர்தி ஒன்றை வாடகைக்கு அமர்த்தவே முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அது கைகூடாததனால் அவர்கள் கப்பல் ஒன்றை வாடகைக்கு பெற்று கொண்டனர். அல்லது அது அவர்களின் சொந்த கப்பலாகக் கூட இருக்கலாம்.

உக்ரேனில் உள்ள ஆயுத விநியோக மையத்திற்கு செல்வதற்கு ஏற்றது போல கப்பல் மறுசீரமைக்கப்பட்டு ஆயுதங்கள் ஏற்றப்பட்டு அது சிறிலங்கா நோக்கி புறப்பட்டது.

சிறிலங்கா நோக்கிய பயணத்தின் போது கப்பல் பல தடவைகள் கொடிகளையும், பெயரையும் மாற்றி கொண்டது.

கப்பல் முல்லைத்தீவுக்கு அண்மையான அனைத்துலக கடற்பரப்பை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நின்றதும் அதில் இருந்த பொருட்கள் 40 மீற்றர் நீளமான றோலர்களில் இறக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று சிறிலங்காவுக்கு தகவல்களை வழங்கியிருந்தது.

அதன் பின்னர், சிறிலங்கா கடற்படையினரும், வான் படையினரும் மேற்கொண்ட இணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது றோலர் கண்டறியப்பட்டது.

விடுதலைப் புலிகள் சிறிய படகுகளிலும் பொருட்களை இறக்கியிருந்தனர். எனினும் கடற்படையினரின் புலனாய்வுத்துறையின் பலவீனம் காரணமாக விடுதலைப் புலிகளின் பிரதான கப்பலை கண்டறிய முடியவில்லை.

ஆனால், அதனை கண்டறிவதே முக்கியமானது, அது தவறவிடப்பட்டது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

மூழ்கடிக்கப்பட்ட செய்தி ஒன்று வெளிவந்ததே, அது நடக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது தாத்தா பாட்டி சிறுவர்களுக்கு கதை சொல்றது மாதிரி இருக்கு.

இப்படியொரு விடயம் தங்கள் கண்ணெதிரே நடைபெற இலங்கை அரசு ஒருபோதும் அனுமதித்திருக்கமாட்டார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று சிறிலங்காவுக்கு தகவல்களை வழங்கியிருந்தது.

அந்த வெளிநாட்டு உளவு நிறுவனமும் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கப்போவதுமில்லை.

மூழ்கடிக்கப்பட்ட செய்தி ஒன்று வெளிவந்ததே, அது நடக்கவில்லையா?

அதன் தொடர்ச்சிதான் இது.

Edited by தமிழச்சி

இனி அடுத்த வாரம் தொடர்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனில் உள்ள ஆயுத விநியோக மையத்திற்கு செல்வதற்கு ஏற்றது போல கப்பல் மறுசீரமைக்கப்பட்டு ஆயுதங்கள் ஏற்றப்பட்டு அது சிறிலங்கா நோக்கி புறப்பட்டது.

சிறிலங்கா நோக்கிய பயணத்தின் போது கப்பல் பல தடவைகள் கொடிகளையும், பெயரையும் மாற்றி கொண்டது.

கப்பல் முல்லைத்தீவுக்கு அண்மையான அனைத்துலக கடற்பரப்பை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நின்றதும் அதில் இருந்த பொருட்கள் 40 மீற்றர் நீளமான றோலர்களில் இறக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று சிறிலங்காவுக்கு தகவல்களை வழங்கியிருந்தது.

அதன் பின்னர், சிறிலங்கா கடற்படையினரும், வான் படையினரும் மேற்கொண்ட இணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது றோலர் கண்டறியப்பட்டது.

விடுதலைப் புலிகள் சிறிய படகுகளிலும் பொருட்களை இறக்கியிருந்தனர். எனினும் கடற்படையினரின் புலனாய்வுத்துறையின் பலவீனம் காரணமாக விடுதலைப் புலிகளின் பிரதான கப்பலை கண்டறிய முடியவில்லை.

ஆனால், அதனை கண்டறிவதே முக்கியமானது, அது தவறவிடப்பட்டது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் , எல்லாம் பக்கத்தில் நின்று பார்த்திருக்கிறார்கள் .

அதுக்குள்ளை கப்பல் எங்கே போட்டுது , சிலவேளை மகிந்த தன்ரை வேட்டிக்குள்ளை ஒளிச்சு வைச்சுட்டாரோ ?

5000 டொலர் குடுத்து ஒரு கப்பலை உடைச்சு இரும்பு எடுக்க எண்டு வாங்கி கொண்டு வந்து புலிக்கப்பல் எண்டு காட்ட முல்லை தீவுக்கு அருகிலை கட்டி இருந்து இருப்பார்கள்.... கப்பலை அடிச்சு தாக்கிறதுதான் இப்ப செய்ய வேண்டிய வேலை...

அதுக்கு வீடியோ கமெராக்கள், செய்தி சேகரிப்போர் எண்டு எல்லாரையும் ஏத்தி கொண்டு கப்பலுக்கு அருகிலை போக முன்னம் கப்பல் தானாய் தாண்டு போட்டுது... இப்ப கப்பல் மாயம் எண்டு செய்தி சேகரிக்க போனவை எழுதுகினம் போல...

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவுக்கு அண்மையிலும் Bermuda triangle போல ஒன்று இருக்கலாம். அதுதான் எதுவித தடயங்களும் இல்லாமல் மறைந்துவிட்டது. அல்லது அமெரிக்கன் ஒருவருக்கும் தெரியாமல் குவான்ரனமோ தடுப்பு முகாமுக்குத் தூக்கிப் போய்விட்டானோ தெரியவில்லை. :wub:

முல்லைத்தீவுக்கு அண்மையிலும் Bermuda triangle போல ஒன்று இருக்கலாம். அதுதான் எதுவித தடயங்களும் இல்லாமல் மறைந்துவிட்டது. அல்லது அமெரிக்கன் ஒருவருக்கும் தெரியாமல் குவான்ரனமோ தடுப்பு முகாமுக்குத் தூக்கிப் போய்விட்டானோ தெரியவில்லை. :rolleyes:

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் , எல்லாம் பக்கத்தில் நின்று பார்த்திருக்கிறார்கள் .

அதுக்குள்ளை கப்பல் எங்கே போட்டுது , சிலவேளை மகிந்த தன்ரை வேட்டிக்குள்ளை ஒளிச்சு வைச்சுட்டாரோ ?

சிலவேளை , கப்பல் வாழைப்பழம் வேட்டிக்குள் .....

சும்மா .... ஐமிச்சம் தான் எனக்கு .

  • தொடங்கியவர்

புலிகளின் ஆயுதக்கப்பலை தவறவிட்ட சிறிலங்கா கடற்படை: "சண்டே ரைம்ஸ்"

[ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 06:56 பி.ப ஈழம்] [பி.கெளரி]

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் தொடர்பாக ஒரு வாரத்திற்கு முன்னர் சிறிலங்கா கடற்படையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன. எனினும் கடற்படையினரால் அதனை வெற்றிகரமாக தடுக்க முடியவில்லை என கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் வெளிவந்த பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரையோர கிராமமான சிலாவத்தை பகுதியை தக்க வைப்பதற்கு விடுதலைப் புலிகள் தம்மை தயார்படுத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகள் தமது பீரங்கி மற்றும் மோட்டார் நிலைகளையும் மாற்றி அமைத்துள்ளனர்.

பெரும் எண்ணிக்கையான மக்கள் படைகளும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சினைப்பர் படையணிகள் புதிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் கடற்புலிகளும் ஜெயந்தன் பிரிகேட் மற்றும் சோதியா றெஜிமென்ட் படையணிகளும் முல்லைத்தீவு பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு படைத்துறை விநியோகங்கள் சீராக கிடைத்து வருகின்றன என்பதும் மற்றும் ஒரு காரணி.

விடுதலைப் புலிகளின் றோலர் படகு ஒன்றை தாம் கடந்த வாரம் தாக்கியழித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் தொடர்பாக ஒரு வாரத்திற்கு முன்னர் கடற்படையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

கப்பலின் கடற்பாதை தொடர்பாகவும் அது பயணிக்கும் நாட்கள் தொடர்பாகவும் புலனாய்வுத்துறை தெரிவித்திருந்தது.

எனினும், கடற்படையினரால் அதனை வெற்றிகரமாக தடுக்க முடியவில்லை. விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் முல்லைத்தீவின் வடபகுதி கடற்பகுதியை டிசம்பர் 20 ஆம் நாள் அடைந்திருந்தது.

அதில் இருந்த பொருட்கள் பாரிய பொதிகளில் கரைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப்பட்டது தொடர்பான ஒளிப்பட தகவல்கள் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்புச் சபை மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் ஒரு றோலர் மீது கடற்படையினரின் படகுகள் தாக்குதலை மேற்கொண்ட போதும் மற்றைய ஒரு றோலர் ஆயுதங்களுடன் தப்பிச் சென்று விட்டது. அதனைப் போல முன்னரும் பல படகுகள் மூலம் ஆயுதங்கள் இறக்கப்பட்டு விட்டன.

எனவே தான் விடுதலைப்புலிகள் கடந்த வாரங்களில் ஏற்பட்ட மோதல்களின் போது பாரிய அளவில் எறிகணைகளை பயன்படுத்தியிருந்தனர். அதனையே படை அதிகாரி ஒருவர் "எறிகணை மழை" என தெரிவித்திருந்தார்.

இம்மோதல்களில் எறிகணைகளால் படையினர் பாரிய சேதங்களை சந்தித்திருந்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.