Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூடப்பிறந்த காமப்பிசாசுகள்

Featured Replies

வங்கி முறிந்துவிட்டது என்ற செய்திகேட்ட மஞ்சுளா உண்மையில் அதிர்ச்சிஅடைந்துவிட்டாள். அவள் அப்பா குருவி சேர்த்ததுபோல சேர்த்துவைத்த பணம் அந்த வங்கியல்தான் உள்ளது. இந்தச்செய்தியை தந்தையிடம் சொல்லத்தான் முடியுமா? அவருக்கு கேட்டால் நோய்முற்றிவிடலாம். எதுவும் சொல்லாமல் வங்கிக்கு சென்று கிடைக்கின்ற பணத்தை முதலில் எடுத்துவந்துவிடுவதுதான் நல்லது என்று தோன்றிது. கோவில் சென்று வருவதாக சொல்லிவிட்டு வங்கிநோக்கி நடையைக்கட்டினாள். தெருவில் இராணுவத்தினரும் பொலிசாரும் காவலில் ஈடுபட்டிருந்தனர். மங்சுளா கலவரமாக நடந்துசெல்வது அவர்களுக்கு சந்தேகத்தை வரவளைத்திருக்கவேண்டும். அழைத்து அடையாள அட்டையை பரிசோதித்து கொழும்பு முகவரி இருக்கவும் விட்டுவிட்டார்கள். பஸ்ஸில் ஏறி வேர்வையைத்துடைத்தபோதுதான் தான் மறதியாக பொட்டை அழிக்க மறந்துவிட்டது தெரிந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் அது இன்னும் பிரச்சனைகளை வரவேற்கும் என்பதால் கைக்குடடையால் அழுத்தி துடைத்துக்கொண்டாள்.இப்போது அவளும் ஒரு சிங்களப்பெண். இது தமிழ்பெண்களுக்கு பாதுகாப்பான வேசம்.

வங்கி அருகில் உள்ள நிறுத்தத்தை பஸ்ஸைநிறுத்தச்சொல்லி பிதுங்கிவழியும் கூட்டத்தில் இருந்து வெளியே குதித்து ஆடைகளைத் சரிசெய்து நிமிர்ந்தபோது வங்கியில் கூட்டம் நிரம்பிவழிந்தது. இந்தனை கூட்டத்தில் பணம் எடுக்க எவ்வளவுநேரமாகுமோ அதற்குள் வங்கியில்பணந்தீர்ந்துவிடும

Edited by aathipan

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லா இடங்களிலும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைதான் நான்பல தடவை பேருந்துகளில் பார்த்திருக்கேன் என்னத்தை சொல்வது அதுக்கென அலையும் நாய்களை திருத்த முடியாது ஒரு தடவை அடி பிடி ஆகிவிட்டது பேரிந்தினுள் அதுக்கு அவன் கேட்டது அவளே சத்தம் போடாமல் இருக்கா உனக்கு என்னடா ..............உனது சொந்தக்காரியா எனக்கேட்டான் அந்த நாய் அதற்க்கு பிறகு என்னுடைய வேலையை மட்டுமே பார்த்து கொண்டு பயணிப்பது பயண சீட்டு எடுத்து விட்டு ஏறும் பாதையில் தொங்கி செல்வது :rolleyes::huh:

  • தொடங்கியவர்

பெண்களுக்கு நடக்கின்ற அநீதிகளில் இது ஒன்று என்று எப்படிவிட்டுவிட முடியும்.

கடந்த வாரத்தில் களத்தில் வீரமரணம் அடைந்த எமது சகோதரிகளை நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்திய எதிரியைவிட இவர்கள் கேவலமானவர்கள் இல்லையா? அவன் போரிலே அடைந்த கோபத்தில் ,தன்னுடன் சண்டையிட்ட ,இறந்த, எதிரிபெண்ணை கேவலப்படுத்தினார்கள்.இவர்கள

  • தொடங்கியவர்

இதற்கு முன்பு ஒருதடவை அகதிகளாக கொழுப்பு வந்திருந்தோம். கொழுப்பில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். அனைத்தையும் இளந்து வந்துநின்றோம். என்னசெய்வது என்றுதெரியாத நிலை. எமது விடுதிக்கு அப்பால் பல விடுதிகளில் தமிழ் அகதிகள் தங்கியிருந்தனர். எங்கள் விடுதியில் இருந்த ஒரு பெண்ணைப்பார்த்து மற்ற விடுதியில் இருந்த ஒரு போக்கிரி கையைக்காட்டி கிண்டல் செய்தான். உடனேபெண்ணின் தந்தை மகளை அறைக்குள் போகும் படி பணித்தார். இதனால் கோபமுற்ற அந்த போக்கிரி இளைஞன் தனது செருப்கை களற்றி இங்கிருந்த தந்தைக்கு காட்டி மிரட்டினான். எங்கள் விடுதி ஒரு மோசமான இடத்தில் இருந்ததால் ரவுடிகள் அதிகம் அந்த இடத்தில் இருந்தார்கள். பெண்கள் அறையை விட்டு வெளியே வர முடியவில்லை. அந்த ரவுடிகளுக்கு மட்டுமல்ல அகதியாக வந்த எமது இளைஞர்களுக்கும் பெண்ணைப்பெற்ற தந்தை அஞ்சவேண்டிய நிலை ஏற்பட்டது. இது எவ்வளவு ஒரு கேவலமான நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பிசாசுகள் ஊருக்கு ஊர் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி பலவிடத்தில கேள்விப்பட்டிருக்கிறன் என்ன செய்வது இப்படிப்பட்டவர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள் அந்த நேரத்தில தைரியமாக அந்தப்பென் பேசியிருப்பாலே ஆனால் அந்த இளஞ்சன் மீண்டும் வேறொருத்தியை முயற்சிசெய்யமாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

நேரஞ்சொல்லச்சொல்ல கூட்டம் சேர்ந்ததே தவிர கூட்டம் பெதுவாகவே நகர்ந்தது. பின்னால் நின்ற இளைஞனின் சேட்டை அளவுகடந்து போய்க்கொண்டிருந்தது. இப்பொழுது அவன் தன் ஆணுறுப்பால் இடிப்பதை உணரமுடிந்தது. இதற்குமேலும் அவளால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.மஞ??சுளா வெகுண்டு எழுந்தாள். சிங்களத்தில் "தமிழ் நாயே உனக்கு அக்கா தங்கை இல்லையா? உனக்கு தேய்பதற்கு சிங்களப்பெண்ணா கிடைத்தாள். எங்கள் சிங்கள நாட்டில் என்ன செய்கிறாய்?" என்று கத்தித்தீர்த்தாள். அதைக்கேட்ட கூட்டத்தில்ற்கு காவலுக்குநின்ற பொலிஸார் அவனை பிடித்து மிரட்டி அடித்து ஜீப்பில் ஏற்றினர்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சந்தர்பத்தில் பெண்ண்கள் பயந்து இருப்பதால் "அவர்கள் " துணிகிறார்கள். என எண்ணுகிறேன். இந்த யுகத்திலும்

பெண்கள் பயந்து இருக்கலாமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.