Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தமது முக்கிய பிரதேசங்களை இழப்பதால் அவர்களின் போராட்டம்; முடிவுக்கு வந்துவிடாது - ராமன்:

Featured Replies

புலிகள் தமது முக்கிய பிரதேசங்களை இழப்பதால் அவர்களின் போராட்டம்; முடிவுக்கு வந்துவிடாது - ராமன்:

இலங்கை இராணுவத்தால் விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரமான கிளிநொச்சி ஜனவரி இரண்டாம் திகதி கைப்பற்றப்பட்டதை அடுத்து கொழும்பிலும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட வெற்றிவிழாக்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கொழும்பின் வெற்றி விழாக் காட்சிகள் ஈராக்கிற்கான அமரிக்க போர்ப் பிரகடனத்தின் பின்னான நிகழ்வுகளை நினைவு படுத்தலாம்:

இந்தக்காட்சி, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஸ் டபிள்யூ புஸ் ஈராக்கிற்கு எதிராகச் செய்த போர்ப்பிரகடனத்தைத் தொடர்ந்து அதனை நிறைவேற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையையும் அதன் பின்னான நிகழ்வுகளையும் ஞாபகப்படுத்துவதாக அமையக் கூடும். இந்தப் பிரகடணத்தின் போது 20003இல் எவ்வித எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல் சதாமின் படைகள் பாக்தாத்தை விட்டு வெளியேறினர். இதனைத் தொடர்ந்து எவ்வித எதிர்ப்புமின்றி அமெரிக்கப்படைகள் பாக்தாத்துக்குள் நுழைந்தமை இதேபோன்றதொரு காட்சியை ஞாபகத்திற்கு கொண்டு வந்திருக்கக் கூடும்.

6 வருடங்களின் பின் இன்னமும் ஈராக்கில் வன்முறை தொடர்கிறது:

ஆறு வருடங்களுக்குப் பின்னரும் ஈராக்கில் இன்னமும் வன்முறை தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. அமெரிக்கத் துருப்புக்கள் பாக்தாத்துக்குள் நுழைந்தவுடன் நான் குறிப்பிட்டிருந்தேன். பேர் ஒரு கட்டத்துள் இருந்து இன்னொரு கட்டத்துக்குள் நகர்ந்திருக்கிறது என்று.

ஆப்பானிலும் மோதல் தொடர்கிறது:

2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்கியாகிவிட்டது என்று அறிவித்த பிறகும் இன்று வரை அங்கு யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மரபுரீதியற்ற மோதல்களில் முன்கூட்டிய எதிர்வு கூறல் சாத்தியமற்றது:

12 வருடங்களாகப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிளிநொச்சியின் வீழ்ச்சியைக் குறைத்து மதிப்பிடுமுகமாக நான் இவற்றை இங்கு குறிப்பிடவில்லை. அரசாங்கத்திற்கும் ஒரு இயக்கத்திற்கும் இடையிலான மரபு ரீதியற்ற மோதலில் இவ்வாறு முன்கூட்டியே எதிர்வு கூறுதல் என்பது அவ்வளவு சிறந்ததாகப்படவில்லை.

புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வராது:

எவ்வாறெனினும் சிறிலங்கா இராணுவம் கிளிநொச்சியை மீளக் கைப்பற்றியமையானது இயற்கையாகவே அவர்களுக்கு பெருமிதத்தையும், தன்னம்பிக்கையையும், உறுதிப்பாட்டையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. அதேவேளை இது கட்டாயமாக விடுதலைப் புலிகளின் உறுதிப்பாட்டையும் முன்முயற்சியையும் குறைத்து மதிப்பிடுதல் என்பதாகாது. இழந்த இப்பிரதேசத்தை மீளக் கைப்பற்றியது என்பது இலங்கை இராணுவத்திற்கு முக்கியமானது தான். ஆனால் இது விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்துடன் இணைந்த ஆயுதப் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விடாது.

மரபு ரீதியற்ற போரொன்றில் திட்டமான வெற்றிநாளென்று ஒன்று இல்லை - மக்களின் ஆதரவை இழக்கும் போதே சாத்தியம்:

புலிகள் தமது முக்கிய பிரதேசங்களை இழப்பதால் அவர்களின் போராட்டம்; முடிவுக்கு வந்துவிடாது. மாறாக அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்களுடையதும் புலம்பெயர்ந்தோரதும் ஆதரவை இழக்கும்போதே முடிவுக்கு வரும். மரபு ரீதியற்ற போரொன்றில் திட்டவட்டமான வெற்றிநாளென்று ஒன்று இல்லை. மாறாக அந்த வெற்றியானது மிசோரத்தில் நடந்தது போல தீவிரவாத அல்லது பயங்கரவாதக் குழுவானது தொடர்ந்து போராடுதல் மற்றும் வன்முறை என்பன இனியும் பொருத்தமான தெரிவுகள் அல்ல என்று முடிவெடுக்கும் போது அல்லது பஞ்சாப்பின் காலிஸ்தானியப் பயங்கரவாதத்துக்கு ஏற்பட்டது போன்று எந்த மக்களுக்காகப் போராடுவதாக அவர்கள் கூறுகிறார்களோ அந்த மக்களின் ஆதரவை இழக்கும் போது மட்டுமே கிடைக்கிறது.

எமது அரசியற் தலைவர்கள் குறித்து நாம் பெருமைப்படலாம். மிசோ தேசிய முன்னணியின் தலைவர் இலால்தெங்கா 1975 இல் இந்திய அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தபோதோ 1990 களின் இறுதியில் சீக்கியர்களின் ஆதரவை இழந்து காலிஸ்தான் இயக்கம் மறைந்தபோதோ எம் அரசியற் தலைவர்கள் வெற்றிவிழாக்கள் எடுக்கவில்லை.

கொழும்பிடம் இன்னும் wisdom இன் அறிகுறிகள் தெரியவில்லை:

மரபு ரீதியற்ற போரின் திருப்புமுனைகள் போர்க்கருவிகளால் கொண்டுவரப்படுவன அல்ல, force of wisdom ஆல் கொணரப்படுபவை. போர்க்கருவிகள் wisdom த்துடன் பயன்படுத்தப்பட்டால் அவை முக்கிய பங்காற்றும். கொழும்பிடம் இன்னும் அத்தகைய wisdom இன் அறிகுறிகள் தெரியவில்லை. இந்த நிலையில் இலங்கையின் திருப்பமானது பிரபாகரனால் தமது போராட்டத்துக்குப் பாதகமே என்று தமிழர்கள் புரிந்து கொள்ளும்போது மட்டுமே ஏற்படும். இலங்கையில் உண்மையான அமைதி வரவேண்டுமானால் பிரபாகரனின் முடிவு சிங்களப் படைத்தரப்பால் அன்றித் தமிழர்களாலேயே ஏற்பட வேண்டும். கிளிநொச்சிக்குள் படைத்தரப்பு நுழைந்தமையால் அத்தகைய நாள் மேலும் அண்மித்திருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

globaltamilnews.com

தமிழர்களே புலிகள். புலிகளே தமிழர்கள்.

தமிழர்களே புலிகள். புலிகளே தமிழர்கள்.

அதை உடைப்பதற்கு தொடர்ந்து அம்பு எய்து கொண்டிருப்பவர் ராமன்

அதை உடைப்பதற்கு தொடர்ந்து அம்பு எய்து கொண்டிருப்பவர் ராமன்

அதென்ன ராமபாணமா?

அதை உடைப்பதற்கு தொடர்ந்து அம்பு எய்து கொண்டிருப்பவர் ராமன்

இவர் எய்வது இராமபாணம் அல்ல! ஏனென்றால் திருவாளர். ராமனே இந்திய புலனாய்வுத்துறையின் ஒரு பாணம் தான்!!!

இந்த கட்டுரையிலும் வழமை போல் தமிழர் தலைமையை குறிவைப்பதிலேயே திரு.ராமன் குறியாய் இருக்கிறார்!

திரு.ராமன் எப்போதும் போல் திருட்டு ராமனாகவே இருக்கிறார்!! :lol:

புலிகள் தான் தமிழர்கள்! தமிழர்கள் தான் புலிகள்!!

இதை மறுப்பவர்கள் தமிழர்களுக்கு சமாதிகட்ட நினைக்கும் கேடிகள்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

எமது அரசியற் தலைவர்கள் குறித்து நாம் பெருமைப்படலாம். மிசோ தேசிய முன்னணியின் தலைவர் இலால்தெங்கா 1975 இல் இந்திய அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தபோதோ 1990 களின் இறுதியில் சீக்கியர்களின் ஆதரவை இழந்து காலிஸ்தான் இயக்கம் மறைந்தபோதோ எம் அரசியற் தலைவர்கள் வெற்றிவிழாக்கள் எடுக்கவில்லை
.

ராமா உங்க அரசியல் தலைவரை நீங்கள் புகழலாம் , தப்பில்லை,ஆனால் சிரிலன்கா அரசியல் தலைவர்களை பற்றி உன்களுக்கு தெரியாது.அவர்களின் அரசியல் சாணக்கியத்தின் முன் இந்திய அரசியல் தலைவர்கள் ஜூ ஜூப்பி....

வெகுவிரைவில் உங்களுக்கு (இந்திய் அரசியல்வாதிகளுக்கு)புரியவைப

  • கருத்துக்கள உறவுகள்

இராமனின் விருப்பு வெறுமனே விடுதலைப்புலிகளுக்கான முற்றுப்புள்ளி மட்டுமல்ல ,தமிழ் மக்களின் உரிமைப்போருக்கான முற்றுப்புள்ளியாகும். பிராந்த்திய நலன்களுக்காக ஒரு இனத்தை உசுபேத்தி(அவரது பாசையில் சொன்னால் பயங்கரவாதத்துடன் கூடிய ஆயுதப்போருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிவிட்டு),பின்னர் அவர்களை அழிக்க படை அனுப்பியது மாத்திரமல்லாமல் ,சிங்களத்துக்கு பின்னின்று இன அழிப்பிற்கு உதவி செய்கிறார்களே!

எம்தமிழினம் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிராக என்ன செய்தது?

ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள், அந்தாள் உயிரோட இருகேக்கயும் தமிழன் செத்தான் இப்பவும் எமது மக்கள் சிங்களப்படையால் கொல்லப்படுவதற்கு இந்த்தியாவே காரணம்.

எமது உரிமைப்போர் ஒருபோதும் அழியாது,ஆக்கிரமிப்பு உள்ளவரை உரிமைப்போர் அழியாது அதற்கு நல்ல உதாரணம் யாழ்பாணம்.

புலம் பெயர் உறவுகளின் வெளி நாட்டில் பிறந்த குழந்தைகள் கூட ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பது என்பது அதை விட நல்ல உதாரணம்,போராட்டம் அடுத்த தலைமுறைக்கு எப்போதோ வழங்கப்பட்டு விட்டது.

இராமன் அவர்களுக்கு!

புலிகள் இந்தியாவில் தடை செய்யப்படும் முன்னர் இந்திய காவல் துறையினர் (கியூ பிரிவினர்) போராளிகளை கைது செய்வது சித்திரவதை செய்வது என்பது வழமையாக நடைபெறும் சம்பவம் ஒன்று அப்பொது இலங்கைத்தமிழ் போராளி ஒருவரை மிக மோசமாக ஒரு தமிழக தமிழ் காவல்துறையினன் சித்திரவதை செய்தான் அவனைப்பார்த்து அந்த போரளி கேட்டான்

"உன் அப்பன் என்ன இந்திக்காரனோ"

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலே யாருக்கும் விலை போகாத தலைவனை நாங்கள் பெற்று வைத்திருக்கிறோம்.அந்தக் காழ்ப்;புணர்ச்சியில் தலைவருக்கு எதிராக தமிழரைத் திருப்ப தமிழர்களின் மனஙகளை வெல்லுமாறு சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை சொல்கிறீர்கள். இதே கருத்துப்பட நீஙகளும் நாரயணண்களும் பலமுறை அறிக்கை விட்டிருக்கிறீர்கள்.ஈழத்தமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.