Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோல்டன் குளோப் விருதை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கின்றதோ, அது நன்றாவே நடக்கின்றது

எது நடக்க இருக்கின்றதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை நீ இழந்தாய் ! எதற்காக நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் ! அதை நீ இழப்பதற்கு ?

எதை நீ படைத்திருந்தாய் ! அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்துக் கொண்டுயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதைக் கொடுத்தாதோ, அதி இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொருநாள் அது வேறோருவருடையாதாகும்.

கு.சா

"என்ரை பிள்ளையள் தமிழ் படிக்கோணும் தமிழிலை கதைக்கோணும்.எங்கடை ஆக்களை கண்டால் தமிழிலை வணக்கம் சோல்லோணும் எண்ட வெறியோடை திரியுறன்." என்பதற்கு முதல் நீங்கள் தமிழை ஒழுங்காய் எழுதிற வழியைப் பாருங்கள்.

வசம்பு அண்ணை!பிழையை சொன்னதுக்கு நன்றிகள். :D

நீங்கள் எழுத்து பிழை பிடிக்கிறதெண்டால் உங்கை எக்கச்சக்கமான ஆக்கள் திரியினம்.அவைக்கும் வாத்தியார் வேலை பாத்தியளெண்டால் நல்லாயிருக்கும். :lol:

வெட்டி ஒட்டேக்கை ஏதோ பிழை நடந்துட்டுதப்பா இதுக்குப்போய்............................. :(

அண்ணை நீங்கள் என்னதான் சொன்னாலும் நிஜம் எண்டு ஒண்டிருக்கு :(

Edited by குமாரசாமி

  • Replies 63
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் உலகமே வியக்கும் ஒருவரை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், கோளாறு எங்கே உள்ளது ??

நீங்கள் இப்படி கூறுவதுதான் கொடுமையிலும் கொடுமையாக உள்ளது :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விருதுடன் திரும்பிய ரஹ்மானுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

சென்னை: கோல்டன் குளோப் விருதுடன் சென்னை திரும்பிய இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக கோல்டன் குளோப் விருது பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார் ரஹ்மான். இந்தியர் ஒருவருக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சாதனையுடன் ரஹ்மான் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். இதையடுத்து விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ரஹ்மானை அவர்கள் நாதஸ்வரம், மேள தாளம் முழங்க சிறப்பான வரவேற்பளித்தனர்.

பின்னர் விமான நிலையத்திலிருந்து வீடு வரை ரசிகர்கள் ரஹ்மானின் காரைப் பின் தொடர்ந்து சென்று அவரை வீடு கொண்டு போய் சேர்த்தனர்.

ரசிகர்களின் இந்த பிரமாண்ட வரவேற்பினால் உற்சாகமடைந்தார் ரஹ்மான். இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

இந்தியாவையும், அதன் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் படம் ஸ்லம்டாக் மில்லனர். சாதாரண குடும்பத்துப் பின்னணி கொண்ட எனக்கு இப்படி ஒரு மிகப் பெரிய கெளரவம் கிடைத்திருப்பது பெரும் உந்துதலாக உள்ளது என்றார் ரஹ்மான்.

தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

சரி அண்ணை!

வல்லமைமிக்க முஸ்லீம்நாடுகள் சுற்றிவர இருக்க ஏன் குட்டிநாடு பலஸ்தீனம் இன்னும் இஸ்ரேலிடம் அடிவாங்கிக்கொண்டு நிக்குது? :unsure:

காசாவில் உடனடியாக போரை நிறுத்தும்படி எத்தனை நாடுகள் கேட்டுக்கொண்டிருக்கின்றன தவிர தமிழகத்தில் இப்போது கருணாநிதியின் ஆட்சி இருப்பதால்த்தான் தமிழுழம் பற்றி மெதுவாக எனிலும் குசுகுசுக்கிறார்கள். ஜெயலலிதா மீண்டும் ஆட்சி ஏறினால்? வை.கோ. மட்டும் ஏதும் பேசிபோட்டு பொய் கொஞ்சகாலம் சிறையிருந்துவிட்டு வருவார். கூடி பிறந்தவர்களாலேயே கைவிடபடுகிறோம் காட்டிகொடுக்க படுகிறோம் கூடிபிறந்வர்களால்தான் நாம் அதிக இழப்புகளை சந்திக்கிறோம். எங்கிருந்து இந்த மனம் பிறக்கிறது...... சாதியை சொல்லி அயலவனை சித்திரவதை செய்தோமே ஒரு அடிப்படை மனிதானாக கூட மதிக்காத மனதோடு வாழ்ந்தோமே ஞாபகம் வருகிறதா?

அன்பைமட்டும் போதித்திருக்கலாமே மதத்தினுடாக பல மனங்கள் மாறியிருக்கும். இஸ்லாமை நான் துக்கிநிறுத்த முயலவில்லை எனது வீட்டை கழுவி தூய்படுத்தவே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழுப்புள்ளவர்களுக்கு மாத்திரம் :unsure::lol::wub:

இசை கேட்டால் உடல் கொழுப்பு கரையும்

யாராவது ஏதாவது செய்து விட்டால், 'என்ன கொழுப்பா?' என்று நாம் கேட்பதுண்டு. உண்மையில் நம் உடலில் கொழுப்பு அதிகமானால் அது உயிருக்கே உலை வைத்துவிடும்.

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க என்ன செய்யலாம்? இதோ ஒரு சிறந்த ஆலோரனை உங்களுக்கு :

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும், இதய பாதுகாப்புக்கும் இசை கேட்பது நல்ல பலனைத் தரும் என்று தெரிய வந்துள்ளது.இதய நோயாளிகள் தங்களுக்குப் பிடித்தமான இசையை தினமும் சுமார் அரை மணி நேரம் கேட்டால், அவர்களின் மனம் 'ரிலாக்ஸ்' ஆவதுடன் உடல்ரீதியிலான ஆரோக்கியமும் ஏற்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இசையை ரசிப்பதால் இரத்த நாளங்கள் விரிவடைவதுடன் சுத்தப்படுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இசை கேட்பதால், இதய பாதிப்பின்றி இருக்கவும், கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. இசை கேட்கும் சிகிச்சை முறையை அமெரிக்காவில் சில நோயாளிகளுக்கு அளித்து பரிசோதித்ததாகவும், இதனை பிரிட்டன் நிபுணர்கள் வரவேற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இசையைக் கேட்டு ரசிப்பதால் மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்ஸைட் வெளிப்படுவதாகவும், இது இரத்தம் உறைவதைத் தடுப்பதுடன் கொழுப்பு சேர்வதையும் கரைப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மனித உடலில் இசையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சியின் ஒருபகுதியாக இது அமைந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிம்பொனி இசை மனநலத்தை மேம்படுத்தக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜி ரகுமானின் இசையை கேட்டால் கொழுப்பு கரையாது என்னும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
அப்ப புத்தரின் சிந்தனைகளை சுலோகமாக வைத்திருந்தால் துரோகி முத்திரை குத்துவியள் போலை கிடக்கு 

ஒறிஜினல் சிந்தனைகளை வைத்திருப்பதற்கும் யாரோ ஒரு அனாமதேயம் தன்பாட்டில் எழுதிய கீதையின் சாரமென்னும் கப;சாவை வைத்திருப்பதற்கும் நிறைய வேறுபாடுகளுண்டு

Edited by karu

படங்களை வீடுகளில் தொங்க வைத்திருப்பவர்கள் அனைவரும் அதன் பற்றாளர்களில்லை. அதகிமானவர்கள் சந்தர்ப்பவாதிகள்.

கொள்கைப்பிடிப்பு என்பது வேறு வேசம் என்பது வேறு. அடுத்தவன் வைத்திருக்கிறான் என்பதற்காக சேகுவேரா போன்றவர்களது படங்களை பலர் தம் வீடுகளில் வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த நபருக்கு சேகுவேரா பற்றியே தெரியாது :D

உண்மையான கொள்கைப்பிடிப்பாளன் பேசாமல் செயலாற்றுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜி ரகுமானின் இசையை கேட்டால் கொழுப்பு கரையாது என்னும் கூடும்.

ரதி அதுக்காக உங்களை ரகுமானின் பாடல்களை கேளுங்கள் என்று சொல்லவில்லை இசையை கேளுங்கள் என்றுதான் சொல்லவந்தேன் :D:(:(

ரதி அதுக்காக உங்களை ரகுமானின் பாடல்களை கேளுங்கள் என்று சொல்லவில்லை இசையை கேளுங்கள் என்றுதான் சொல்லவந்தேன் :D:lol::(

:(உதுக்குத் தான் சொல்லுவது எதையும் கொஞ்சம் விளக்கமாய்..ய்...ய்.....ய் சொல்ல வேண்டும் என்று. அப்ப தான் சிலபேருக்குப் புரியும். :(:)

ரகுமானுக்கு விருது வழங்கப்பட்டது. பாடல்களுக்காக அல்ல. படத்தின் பின்னணி இசைகக்காக.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுமானின் தலைப்பின் கீழ் கொண்டு வந்து போட்டால் ரகுமானின் இசையைத் தான் விமர்சிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுமானின் தலைப்பின் கீழ் கொண்டு வந்து போட்டால் ரகுமானின் இசையைத் தான் விமர்சிப்போம்.

ஒரு தலைப்புக்குள் ஆயிரம் கருத்துக்கள் வரும் அக்கருத்துக்கள் ஒவ்வொன்றும் அந்த தலைப்புக்குத்தான் உரியவையாக இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது ஒன்று அதை சார்ந்தாக இருக்கும் மற்றது வேறாக இருக்கும் :):)

ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு விதத் திறைமை இருக்கும். தனி முத்திரை பதிக்காதவர்கள் என்றும் நிலைத்து நிற்க முடியாது. அதனால் எனக்கு எல்லா இசையமைப்பாளர்களையும் ஒவ்வொரு விதத்தில் பிடிக்கும். எனக்குப் பிடித்தவர்களென்பதற்காக மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டிய கட்டாயமில்லை.

:) ஆனால் உலகமே வியக்கும் ஒருவரை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், கோளாறு எங்கே உள்ளது ?? :)

வசம்பண்ணை,

சுவிசில் இப்போ இசைஞானம் கிலோ என்னவிலை போகுது? :D

இங்கை லண்டனில் றஹ்மானால் பங்குச்சந்தை உயர்ந்து இருக்கு.

இன்றைய நிலைமைப்படி கிலோ 99.9P இருக்கு.

அதாவது கோல்டொன் க்லோபல் விருதை வெல்லுவதற்கு இருந்ததைவிட 2.2 விகிதம் உயர்ந்து இருக்கு.

இது இசைஞானம் அற்றவரை மிகவும் பாதிக்கும் என்று செவுட் அவுடோர் சங்கம் தெரிவித்துள்ளது :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.