Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முர‌ளியின் புதிய உலக சாத‌னை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியின் சுழற் பந்து வீரரான முத்தையா முரளிதரன் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 500 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார். இன்னும் 2 விக்கட்டுகளை கைப்பற்றினால் வசிம் அக்ரம் சாதனையை முறியடித்து விடுவார்.ஒரு நாள் போட்டியை பொறுத்த வரை அதிகவிக்கெட்டுக‌ளை கைப் பற்றிய வீரர்களில் முரளிதரன் தற்போது 2ம் இடத்தில் உள்ளார்.

வாழ்த்துகள் முர‌ளி. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இவர இப்ப கட்டாயம் வாழ்த்தி தான் ஆக்கனும்.. இன்டைக்கு 300 பேர் பலி :wub::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ரொம்ப முக்கியம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முரளி இன்று 503 விக்கட்டுகளை கைப்பற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தி உள்ளார்.

உது முக்கியம்தான் கண்டீங்களே, வேலீக்க ஆமி நிக்குறான் கடவைக்குள்ள கள்ளன் (முரளி) தான் தமிழனில்லையாம் அதில வாழ்த்துங்கோ முக்கியம்தான்.

முரளி என்னும் தமிழ் மொழி (இடைக்கிடை) பேசும் சிங்கள கிரிக்கெட் வீரனுக்கு என் வாழ்த்துக்கள். வாழ்த்து மட்டை ஒன்றில் முல்லையில் கொல்லப் பட்ட கைக் குழந்தையின் மூளை சிதறிய படம் இணைத்து அனுப்ப உத்தேசித்துள்ளேன், யாராவது graphics தெரிந்தவர்கள் உதவுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியவில்லை நான் விளையாட்டுப் பகுதியில் தான் இச் செய்தியை கொண்டு வந்து போட்டேன்.உங்களுக்கு முரளியின் விளையாட்டு பிடிக்கவில்லை என்றால் அது சம்மந்தமாக விமர்சியுங்கள்.

தீயெரியும் மனசுக்குள்...வாழ்த்துவதற்கேத

எனக்கு புரியவில்லை நான் விளையாட்டுப் பகுதியில் தான் இச் செய்தியை கொண்டு வந்து போட்டேன்.உங்களுக்கு முரளியின் விளையாட்டு பிடிக்கவில்லை என்றால் அது சம்மந்தமாக விமர்சியுங்கள்.

முரளியின் விளையாட்டை பிடிக்கும். ஆனால் அவர் இலங்கை அணியில் பங்கு கொள்வதால் நிறுவப்படும் "தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை இலங்கையில், இருப்பது புலிகளின் 'பயங்கரவாதப்' பிரச்சனையே " என்ற கருத்தியலையும், அவர் சார்ந்த இலங்கை அணி எனும் சிங்கள் பெளத்த பேரினவாத அரசினையும் தான் பிடிக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் நிழலி எனக்கும் ஒரு விளையாட்டு வீரனாகத் தான் முரளியைப் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பொறுத்தவரைக்கும் பண்டியோடை சேர்ந்த கன்றும் ---- தின்னும்

மீண்டும் ஒரு சாதனை நிகழ்த்தியிருக்கும் முரளிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

முரளியின் விளையாட்டை பிடிக்கும். ஆனால் அவர் இலங்கை அணியில் பங்கு கொள்வதால் நிறுவப்படும் "தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை இலங்கையில், இருப்பது புலிகளின் 'பயங்கரவாதப்' பிரச்சனையே " என்ற கருத்தியலையும், அவர் சார்ந்த இலங்கை அணி எனும் சிங்கள் பெளத்த பேரினவாத அரசினையும் தான் பிடிக்கவில்லை.

முரளி இன்று தனது திறமைகளை வெவளிக்காட்டத் தேவைப்பட்ட ஒரு களம் தான் இலங்கை அணி. இந்த அணியில் இடம்பெறாமல் முரளியால் எந்தவொரு சாதனையையும் நிகழ்த்தியிருக்க முடியாது. அப்படியிருக்க சிங்கள இனம் மீதுள்ள வெறுப்பை முரளி மீது காட்டுவதில் ஒரு பிரியோசனமுமில்லை. நாம் எமக்கொரு நாடும் எமக்கொரு அணியும் வைத்திருந்து, முரளி சிங்கள அணியில் இருந்திருந்தால் நீங்கள் சொல்வது சரி. ஆனால் முரளியின் சூழ்நிலையிலிருந்து சிந்தித்தால் அவரில் எந்தவொரு தவறுமில்லை.

Edited by Vasampu

  • 2 weeks later...

முரளி எந்த அணியிலுள்ளார் என்பது பிரச்சனையில்லை.

அவர் எந்த இனத்தை சார்ந்தவர் என்பதே இங்கு முக்கியமானது.

முரளி ஒரு தமிழன் என்ற ரீதியிலேயே பெரும்பாலான தமிழர் அவருக்கு விசிறியாகவுள்ளனர். ஆனால் முரளி தமிழருக்காக என்ன செய்தார். ஒரு துரும்பையும் கிள்ளியெறியவில்லை.

சிம்பாவே நாட்டின் ஆட்சிக்கெதிராக பல கிறிக்கெட் வீரர்கள் கறுப்புப்பட்டி அணிந்து விளையாடினார்கள். அணியை விட்டு விலகினார்கள். ஆனால் முரளி ?

அப்படியிருக்கும் போது முரளிக்கு வாழ்த்துச்சொல்வது அதுவும் எமது தாயக உறவுகள் கதறியழும் நேரத்தில் வாழ்த்துவது தேவையற்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எல்லோருக்கும் இது விளையாட்டுப் பகுதி அதில் தான் முரளியைப் பற்றி பதிந்தேன் இதில் முரளின் விளையாட்டு தொடர்பாக ஏதாவது கருத்துகள் இருந்தால் பதியவும்.வாழ்த்து சொல்வது தேவையற்றது என்றால் ஏன் எட்டிப் பார்த்தனீங்கள்? நீங்கள் எல்லாம் 24 மணி நேரமும் சாப்பிடாமல் குடிக்காமல் கொல்லப் படும் மக்களை நினைத்து கொண்டா இருக்கிறீர்கள்?

சுனாமியின் போது முரளி திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறைக்கு எல்லாம் சென்று அங்கு உள்ள தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்தார். முரளி ஒரு கிரிக்கட் வீரர் அவர் ஒரு அரசியல்வாதி இல்லை.பெரும்பான்மையான சிங்களவரிடையே தனது திறமையால் முன்னுக்கு வந்தவர் எவ்வளவு காலத்திற்கு விளையாடலாம் எவ்வளவு சாதனைகள் செய்யலாம் என்று தான் பார்ப்பார்.நீங்கள் உங்கள் பதவி,படிப்பு பெரிசில்லை தமிழ் மக்கள் தான் பெரிசு என்று தமிழ் மக்களுக்காக என்ன செய்தனீங்கள்?

சிம்பாவே நாட்டின் ஆட்சிக்கெதிராக பல கிறிக்கெட் வீரர்கள் கறுப்புப்பட்டி அணிந்து விளையாடினார்கள். அணியை விட்டு விலகினார்கள். ஆனால் முரளி ? என செந்தமிழான் கேட்டுருந்திருந்தார்

முரளி மட்டும் கறுப்பு பட்டி அணிந்து விளையாடினால் இலங்கை அரசு கண்டு கொள்ளுமா? உடனே கிரிக்கட்டில் இருந்து தடை செய்வதோடு அவரது உயிருக்கும் ஆபத்து. சிம்பாப்பே வீரர்கள் தாங்களாகவே அரசுக்கு எதிராக விளையாட்டில் இருந்து விலகவில்லை விலத்தப்பட்டார்கள்.அத்தோடு அவர்கள் ஓரு அணி 11,12 பேர் ஆனால் முரளி தனி ஆள்.

முதலில் எல்லோருக்கும் இது விளையாட்டுப் பகுதி அதில் தான் முரளியைப் பற்றி பதிந்தேன் இதில் முரளின் விளையாட்டு தொடர்பாக ஏதாவது கருத்துகள் இருந்தால் பதியவும்.வாழ்த்து சொல்வது தேவையற்றது என்றால் ஏன் எட்டிப் பார்த்தனீங்கள்? நீங்கள் எல்லாம் 24 மணி நேரமும் சாப்பிடாமல் குடிக்காமல் கொல்லப் படும் மக்களை நினைத்து கொண்டா இருக்கிறீர்கள்?

சுனாமியின் போது முரளி திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறைக்கு எல்லாம் சென்று அங்கு உள்ள தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்தார். முரளி ஒரு கிரிக்கட் வீரர் அவர் ஒரு அரசியல்வாதி இல்லை.பெரும்பான்மையான சிங்களவரிடையே தனது திறமையால் முன்னுக்கு வந்தவர் எவ்வளவு காலத்திற்கு விளையாடலாம் எவ்வளவு சாதனைகள் செய்யலாம் என்று தான் பார்ப்பார்.நீங்கள் உங்கள் பதவி,படிப்பு பெரிசில்லை தமிழ் மக்கள் தான் பெரிசு என்று தமிழ் மக்களுக்காக என்ன செய்தனீங்கள்?

சிம்பாவே நாட்டின் ஆட்சிக்கெதிராக பல கிறிக்கெட் வீரர்கள் கறுப்புப்பட்டி அணிந்து விளையாடினார்கள். அணியை விட்டு விலகினார்கள். ஆனால் முரளி ? என செந்தமிழான் கேட்டுருந்திருந்தார்

முரளி மட்டும் கறுப்பு பட்டி அணிந்து விளையாடினால் இலங்கை அரசு கண்டு கொள்ளுமா? உடனே கிரிக்கட்டில் இருந்து தடை செய்வதோடு அவரது உயிருக்கும் ஆபத்து. சிம்பாப்பே வீரர்கள் தாங்களாகவே அரசுக்கு எதிராக விளையாட்டில் இருந்து விலகவில்லை விலத்தப்பட்டார்கள்.அத்தோடு அவர்கள் ஓரு அணி 11,12 பேர் ஆனால் முரளி தனி ஆள்.

உங்கள் பதிவிலோ முரளியைப் பாராட்டுவதிலோ எந்தவித தவறுமில்லை. ஒருவரைப் பாராட்டுவதென்பது அவர் வாழும் காலத்தில் தான் செய்யப்பட வேண்டும். சிம்பாவே அரசாட்சியையும் இலங்கை இனப்பிரச்சினையும் ஒப்பிடுவதே தவறானது. ஒட்டுமொத்த மக்கள் ஒரு ஆட்சியை எதிர்பதும், ஒரு இனத்திற்கும் இன்னொரு இனத்திற்கும் இடையில் இடம்பெறும் போராட்டம் எவ்வகையில் செந்தமிழனுக்கு ஒன்றாகத் தெரிகின்றது என்பது எனக்குப் புரியவில்லை. முரளி எமக்கு என்ன செய்தார் என்று கேள்வி கேட்போர், முதலில் தமிழராக நாம் முரளியின் வளர்ச்சிக்கு என்ன செய்தோம் என்று விளக்குவார்களா ??

எடுத்ததற்கெல்லாம் மக்கள் வன்னியில் துன்பப்படும் போது இது நமக்குத் தேவையா என்பவர்கள், தமது அன்றாட நிகழ்வுகளில் எதைக் கைவிட்டார்கள். வழமைபோல் பிறந்தநாள் விழாக்களும், சாமத்தியவீடுகளும் களைகட்டத் தானே செய்கின்றன. திரைப்படங்களுக்கும், கலை நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பிற்கும் பஞ்மில்லைல. ஆனால் முரளியை பாராட்டுவதால்த் தான் எமது குலம் தாழ்ந்துவிடும் ?? நீங்கள் பாராட்டினால் என்ன பாராட்டாவிட்டால் என்ன முரளியின் சாதனைகள் தொடரத்தான் போகின்றது.

  • 3 months later...

என்னை பொறுத்த வரை, அந்த இனவெறி பிடித்த இலங்கை மட்டை பந்து அணியில் இந்த தமிழன் இல்லை என்றால் பல ஆட்டங்கள் இலங்கை மண்ணை கவ்வி இருக்கும். இதில் நமக்கு பெருமை தானே? மேலும் அவர் என்ன ஒரு சிங்கள பெண்ணையா திருமணம் செய்தார்? நண்பர்களே, நம் கள பணி நடுவில் இது ஒரு பொழுது போக்காக இதை எடுத்துகொள்வோம்.

அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

Edited by மனிதா

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.