Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாடகி மாயா தன் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதைப் பற்றி பேசுகிறார்.

Featured Replies

பாடகி மாயா தன் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதைப் பற்றி பேசுகிறார்.

Slumdog Millionare படத்தில் இடம்பெற்ற Paper Planes பாடலுக்கான Grammy awards கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. Grammy awards வழங்கப்படும் Feb 8ம் திகதிதான் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறதாம்.

National TVல் இடம்பெற்ற மாயாவின் நேர்காணலில் இலங்கையில் 27 வருசமாகத் தன் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள் ; பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் இலங்கை அரசு தான் பிறந்ததிலிருந்தே தன் மக்களை கொஞ்சம் கொஞ்சமா அழித்து வருகிறது என்று சொல்கிறார்.மிகுதியை நீங்களே கேளுங்கள்.

மானசீகமாக மாயாவுக்கு நன்றி.

http://www.vakthaa.tv/play.php?vid=2892

Edited by Snegethy

  • கருத்துக்கள உறவுகள்

தொடுப்பினைத் திருத்துங்கள்

பாராட்டுகள் : வாழ்த்துகள் மாயா

உலக வெற்றியிலும் தன் இனம் குறித்த கருத்துகளை அருமையாக முன்வைத்துள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழமாக உணர்ந்து பேசியிருக்கின்றார். நன்றி சகோதரி

  • கருத்துக்கள உறவுகள்

மாயாவிற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பைப் பற்றிக் குறிப்பிட்ட விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

ஆனால் விடுதலைப்புலிகள் பற்றிய அபிப்பிராயம்.. ஏற்கக் கூடியதாக இல்லை. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் இன அழிப்புக்கு எதிராக போராடுபவர்கள். ஆயுத முனையில் இன அழிப்பைச் செய்ய வரும் சிறீலங்கா சிங்கள பேரினவாத இராணுவத்தையும் அதனை ஏவிவிடுபவர்களையும் எதிர்க்கிறார்கள் என்ற செய்தியை தெளிவாகச் சொல்லி இருப்பின்.. வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். அதுதான் யதார்த்தமும் கூட..!

நாம் விடுதலைப்புலிகள் செய்வது தவறு அவர்கள் அழிக்கப்படலாம் என்று பயங்கரவாதிகள் என்று உச்சரிப்பவர்களை திருப்திப்படுத்த சொல்ல முடியாது. விடுதலைப்புலிகள் வேறு.. தமிழ் மக்கள் வேறு.. இவ்வாறான வாதங்கள்.. யதார்த்தப் புறநிலைக்கு அப்பாலானவையும் கூட..! மாயா எப்படி ஒரு தமிழிச்சியின் பிள்ளையோ.. அதேபோன்றவர்கள் தான்.. விடுதலைப்புலிகளும் தமிழிச்சிகளின் பிள்ளைகள்.

விடுதலைப்புலிகளும் அல்கொய்டாவும் ஒன்றல்ல..!

அல்குவைடா வை அழிப்பதானால்.. ஏன் ஆப்கானிஸ்தானை அழிக்க வேண்டும் என்று கேட்பது நியாயம். அதே எடுகோளை.. தமிழீழ விவகாரத்துக்குள் கொண்டு வருவது ஆபத்தானது.

விடுதலைப்புலிகள் அல்கொய்டா போன்றவர்கள் அல்ல. அவர்களின் இலக்கும் கொள்கைகளும் அல்கொய்டாவினது போன்றதல்ல. இதை குறிப்பாக விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்களை முன் வைப்பவர்கள் சரியாக இனங்கண்டு கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் உரிமைகள் மறுக்கப்படும் ஒரு இனத்தின் சுதந்திர அரசியல் உரிமைக்காக போராடுபவர்கள். அவர்கள் ஜனநாயக விரோத.. சக்திகளோ.. வன்முறை விரும்பிகளோ அல்ல. அமெரிக்கா இராணுவ முனையில்.. ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் எனின் ஏன் மறுக்கப்படும் மக்களின் உரிமைகளை.. ஆயுத முனையில் பெறக் கூடாது. இப்படி ஒரு கேள்வியை தொடுத்திருப்பின் அது வரவேற்கப்படக் கூடியதாக இருந்திருக்கும்..! :rolleyes:

ஜெயலலிதாவும் இப்படித்தான் சொல்கிறார்.. ஈழத்தமிழ்ர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண்டும். அப்போ விடுதலைப்புலிகள் யார்..??! அவர்கள் ஈழத்தமிழர்கள் இல்லையா..??! அந்த தமிழர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினர். ஆயுதம் ஏந்தியதற்காக அவர்கள் ஈழத்தமிழர்கள் இல்லை என்றாகிடுமா..??! அவர்கள் ஆயுதம் தூக்கியது.. சிங்கள இனத்தையோ.. பிற இனங்களையோ அழிக்க அல்ல. தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்.. இன அழிப்பில் இருந்து அவர்களை பாதுகாக்கவும். அவர்கள் வேறு யாருமல்ல. ஈழத்தமிழர்களின் பிள்ளைகளே..! இதைச் சொல்வதற்கு ஏன் தயக்கம். உண்மைக்குப் புறம்பா.. பெரிய குடிகள் சொல்லினம் என்றதற்காக நாமும்.. 4000 விடுதலைப்புலிகளை அழிப்பதில் தவறில்லை.. தமிழ் மக்களை அழிப்பதுதான் தவறு.. என்றால்.. அப்போ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்பதா சாரம். விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டின்.. தமிழ் மக்களும் கொல்லப்படவே செய்வர் என்பதுதான் சிங்களவனின் வாதமும்..???! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பேட்டிகளில் தானாகவே தமிழ் மக்கள் படும் அல்லல்களை தொலைக்காட்டிசியின் மூலம் உலகுக்கு கொண்டு வந்தது மிக வரவேற்றதக்க விடயம். நல்வாழ்த்துக்கள் கிராமி விருதுக்கும், வரப்போகும் குழந்தைக்கும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி கதைப்பதற்கு பயந்திருக்கலாம் ஏற்கனவே அவவை சிங்களவன் புலி என்று சொல்கிறான்.

பேட்டி தொடங்கு முன்னரே தொலைக்காட்சி நிலையத்தினர் சொல்லி இருக்கலாம் புலியை பற்றி கதைக்க கூடாது என இவ்வளவும் அவ சொன்னதே பெரிசு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி கதைப்பதற்கு பயந்திருக்கலாம் ஏற்கனவே அவவை சிங்களவன் புலி என்று சொல்கிறான்.

பேட்டி தொடங்கு முன்னரே தொலைக்காட்சி நிலையத்தினர் சொல்லி இருக்கலாம் புலியை பற்றி கதைக்க கூடாது என இவ்வளவும் அவ சொன்னதே பெரிசு.

ரதி,

மிகச்சரியானது உங்கள் கணிப்பு பேட்டி எடுக்க முன்னர் அதை வலியுறுத்தியே இருப்பார்கள் ஏனெனில் பேட்டியை எங்களுக்கான பிரச்சாரமாக்க விரும்ப மாட்டார்கள். பிறகு சிங்கள அரசு அந்த ஊடகத்துக்கும் ஊறு விளைவிக்கும்

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி கதைப்பதற்கு பயந்திருக்கலாம் ஏற்கனவே அவவை சிங்களவன் புலி என்று சொல்கிறான்.

பேட்டி தொடங்கு முன்னரே தொலைக்காட்சி நிலையத்தினர் சொல்லி இருக்கலாம் புலியை பற்றி கதைக்க கூடாது என இவ்வளவும் அவ சொன்னதே பெரிசு.

அப்படியாயின் ஒட்டு மொத்தமாகவே புலிகளைப் பற்றிக் கதைப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

இன்றைய நிலையில்.. விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி.. தமிழர்களின் போராட்டத்தைப் பலவீனப்படுத்தி நசுக்கி விடவே உலகில் இந்தியா தொடங்கி.. ஜப்பான் உட்பட்ட இணைத்தலைமை நாடுகளும் முயல்கின்றன.

எனவே விடுதலைப்புலிகள் தொடர்பான தவறான விமர்சனங்களை காவிச் செல்வது.. அவர்களை பயங்கரவாதிகள் என்று ஆக்கியதை தமிழர்களும் ஆதரிக்கின்றனர் என்ற ஒரு எண்ணப்பாட்டை ஏற்படுத்திவிடும்.

மாயா அவர்களின் செவ்வியில்.. தமிழர்கள்.. வேறு விடுதலைப்புலிகள் வேறு.. சதுரம்.. வட்டம் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். இவை அவசியமற்றவை என்பது எனது கருத்து. இவை விடுதலைப்புலிகளை ஏக பிரதிநிதிகளாக்கிக் கொண்ட தமிழ் மக்களின் அரசியல் கொள்கைக்கு ஆபத்தானது. அதுமட்டுமன்றி.. தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் புலிகள் என்ற கருத்தையும் இது.. தகர்க்க வல்லது.

மாயாவின் தமிழின அழிப்புத் தொடர்பான கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்கன. ஆனால் சிறீலங்கா அரசு மீது நேரடி விமர்சனத்தை தவிர்த்துக் கொண்டது போல.. விடுதலைப்புலிகள் பற்றிய கதைகளையும் தவிர்த்திருக்கலாம். ஏனெனில்.. அதில் அவர் அறியாத அல்லது தெளியாத சில அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அது அமெரிக்க மக்களை போய் சேர்ந்திருக்கும். அது அமெரிக்காவின் புலிகள் மீதான பயங்கரவாத உச்சரிப்பை நியாயப்படுத்துவதாகவும்.. அமைந்துவிடும்..! அது விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்த நினைக்கும் சக்திகளை பலமாக்கி விடும். தமிழர்களின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் கேள்விக்குறியாக்கி.. இன அழிப்பை ஊக்குவிக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.