Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் இன்று 12 சிறுவர்கள் உட்பட 50 தமிழர்கள் சிறிலங்காவால் கொலை; 169 பேர் படுகாயம்; சுதந்திரபுரம் "மக்கள் காப்பு வலயம்" கொலைக் களமாகியது: அவலப்பட்டு மக்கள் சிதறி ஓட்டம்

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 50 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 169 பேர் படுகாயமடைந்துள்ளனர் என "புதினம்" செய்தியாளர் சுதந்திரபுரத்தில் இருந்து தகவல் தருகின்றார்.

சுதந்திரபுரம்

சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய"த்திற்குள் இடம்பெயர்ந்து திரளாகத் தங்கியிருந்த பொதுமக்கள் மீது இன்று சனிக்கிழமை காலை 9:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதே பகுதி மீது, மீண்டும் பிற்பகல் 12:30 நிமிடமளவிலும், மீண்டும் பின்னர் பிற்பகல் 2:00 மணியளவிலும் பொதுமக்களை இலக்க வைத்து சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதில் 12 சிறுவர்கள் உட்பட 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில், அப்பகுதி மக்களின் குடியிருப்புக்கள் பெருமளவு அழிந்துள்ளதுடன் உடமைகள் மற்றும் ஊர்திகளும் நாசமாக்கப்பட்டுள்ளன.

உடையயார்கட்டு

உடையயார்கட்டுப் பகுதி நோக்கி இன்று சனிக்கிழமை காலை 5:30 நிமிடத்தில் இருந்து தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதில் இதுவரை 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கியும் இன்று காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதில் இதுவரை 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தேவிபுரம்

தேவிபுரம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி இன்று காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதில் இதுவரை ஒரு தமிழர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தேராவில்

தேராவில் பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி சிறிலங்கா படையினர் இன்று நடத்திய அகோர பீரங்கித் தாக்குதல் நடத்தினர்.

இதில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மூங்கிலாறு

மூங்கிலாறு பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி இன்று சிறிலங்கா படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர்.

வலைஞர்மடம்

வலைஞர்மடம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி இன்று சிறிலங்கா படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர்.

இதில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

கடுமையான பீரங்கித் தாக்குதல் எல்லா இடங்களிலும் தொடர்வதாலும், மக்கள் நாலா பக்கமும் உயிரைப் பாதுகாக்க சிதறி ஓடுவதாலும், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த தமிழர்களின் பெயர் விபரங்களை சேகரிக்க முடியாதிருப்பதாக "புதினம்" செய்தியாளர் சுதந்திரபுரத்தில் இருந்து தெரிவிக்கின்றார்.

puthinam

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை கொல்வதில் யார் சொன்னாலும் மகிந்த நிற்பாட்டப்போவதில்லை என்பது மட்டும் தெரிகிறது.

ஒம்னி ரிவி பூல் கருத்துக்கணிப்பு நடாத்துகின்றது அதற்க்கு உங்களுக்கு தெரிந்த கனடாவில் வசிக்கும் மக்கள் யாவருக்கும் சொல்லி இன்று இரவு 12 மணிக்கு முன்பு உங்களால் முடிந்த அளவு நிரப்பி எமக்கு பலம் சேர்க்க எமது மக்களுக்காக குரல் தர வேண்டுவோம் கனடாவை!!!!!!!!!!!!!

தொலை பேசி இலக்கம் (416)260-4005 அதன்பின்பு ஒன்று (1) அழுத்தி எமது மக்களுக்கு பதிவாக்குக்கள்!

நன்றியுடனும் ஏக்கத்துடனும் தாழ்மையுடனும் வேண்டி நிக்கின்றேன்

நன்றி

நாதன் தோமஸ்

Edited by Inathant

  • கருத்துக்கள உறவுகள்

48 மணி நேர அவகாசம் முடிந்து விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

31/01/2009, 19:58 [ வன்னி நிருபர் செந்தமிழ் ]

படையினரின் தாக்குதலில் மக்கள் பாதுகாப்பு வலய பகுதியில் 12 சிறுவர்கள் உட்பட 34 பேர் பலி! 129 பேர் காயம்!

சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், 12 சிறுவர்கள் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 129 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் இடம்பெயர்ந்து திரளாகத் தங்கியிருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மீண்டும் அப்பகுதியில் பிற்பகல் 12:30 மணியளவிலும், பின்னர் பிற்பகல் 2:00 மணியளவிலும் பொதுமக்களை இலக்க வைத்து சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் 12 சிறுவர்கள் உட்பட 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில், அப்பகுதி மக்களின் குடியிருப்புக்கள் பெருமளவு அழிந்துள்ளதுடன் உடமைகள் மற்றும் ஊர்திகளும் நாசமாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை உடையயார்கட்டுப் பகுதி நோக்கி இன்று சனிக்கிழமை காலை 5:30 மணியளவில் இருந்து தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், இதுவரை 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கியும் இன்று காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதுவரை 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடுமையான பீரங்கித் தாக்குதல் எல்லா இடங்களிலும் தொடர்வதாலும், மக்கள் நாலா பக்கமும் உயிரைப் பாதுகாக்க சிதறி ஓடுவதாலும், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த தமிழர்களின் பெயர் விபரங்களை சேகரிக்க முடியாதிருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு

என்னுடைய ஒன்று விட்ட அண்ணனின் 16 வயது மகனும் நேற்று முந்தினம் நடந்த படுகொலைத் தாக்குதலில் வன்னியில் கொல்லப்பட்டு விட்டதாக இப்போது தான் அறிந்தேன். ஒன்று விட்ட அண்ணனின் (அப்பாவின் மூத்த சகோதரியின் மூத்த மகன்) நிலையும் அண்ணியின் நிலையும் தெரியவில்லை. சில தகவல்கள் அண்ணன் இறந்து விட்டதாகவும் அண்ணி என்ன ஆனார் என்று தெரியாதெனவும் சொல்கின்றன

  • தொடங்கியவர்

என்ன சொல்வதென்றே தெரியவில்லை நிழலி....................... என்னதான் முடிவு???????????????????????

நிழலி ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஒம்னி ரிவி பூல் கருத்துக்கணிப்பு நடாத்துகின்றது அதற்க்கு உங்களுக்கு தெரிந்த கனடாவில் வசிக்கும் மக்கள் யாவருக்கும் சொல்லி இன்று இரவு 12 மணிக்கு முன்பு உங்களால் முடிந்த அளவு நிரப்பி எமக்கு பலம் சேர்க்க எமது மக்களுக்காக குரல் தர வேண்டுவோம் கனடாவை!!!!!!!!!!!!!

தொலை பேசி இலக்கம் (416)260-4005 அதன்பின்பு ஒன்று (1) அழுத்தி எமது மக்களுக்கு பதிவாக்குக்கள்!

நன்றியுடனும் ஏக்கத்துடனும் தாழ்மையுடனும் வேண்டி நிக்கின்றேன்

நன்றி

நாதன் தோமஸ்

நான் இப்போது தொலைபேசியில அழைச்சு வாக்கு பதிஞ்சுட்டன். தகவலுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ஒன்று விட்ட அண்ணனின் 16 வயது மகனும் நேற்று முந்தினம் நடந்த படுகொலைத் தாக்குதலில் வன்னியில் கொல்லப்பட்டு விட்டதாக இப்போது தான் அறிந்தேன். ஒன்று விட்ட அண்ணனின் (அப்பாவின் மூத்த சகோதரியின் மூத்த மகன்) நிலையும் அண்ணியின் நிலையும் தெரியவில்லை. சில தகவல்கள் அண்ணன் இறந்து விட்டதாகவும் அண்ணி என்ன ஆனார் என்று தெரியாதெனவும் சொல்கின்றன

:unsure::lol: சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி :lol::(

யாருக்கு யார் ஆறுதல் சொல்வது... எங்கும் துயரம்...ஒவ்வொரு வீட்டிலும் பாடை தூக்க ஆளின்றி பிணங்கள் பாடை தூக்கும் காலம் இது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.