Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிள்ளையான் அணி ஆயுதக் களைவு! இராணுவப் பிரிவு கலைக்கப்பட்டது!! விடுதலைப் புலிகள் வெற்றிகொள்ளப்பட்டதால் ஆயுதங்கள் தேவையில்லையாம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு (பிள்ளையான் அணி) தமது வசம் இருந்த ஆயுதங்களை நேற்றுக் களைந்து அவற்றை வைபவரீதியாக இராணுவத்திடம் கையளித்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இராணுவப் பிரிவும் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன் நிமித்தம் பிள்ளையான் அணியின் உறுப்பினர்களில் பெரும் பாலானோர் படையினருடன் இணைந்து கொண்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அரசாங்கப் படையினர் வெற்றி கொண்டு விட்டதால், தமக்கு இனிமேல் ஆயுதங்கள் தேவை இல்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் (பிள்ளையான்) நேற்றைய ஆயுதக் களைவு வைபவத்தில் பேசுகையில் தெரிவித்தார்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் (பிள்ளையான் அணி) தம்வசம் இருந்த ஆயுதங்களை நேற்றுப் படையினரிடம் வைபவரீதியாகக் கையளித்தனர்.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று இடம் பெற்ற ஆயுதக்கையளிப்பின் போது கட்சியின் இரு பிரதி நிதிகள் ஆயுதங்களை கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோவிடம் உத்தி யோகபூர்வமாகக் கையளித்தனர். பிள்ளையான் அணியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இராணுவத்தில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரசாந்தன், கிழக்குமாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் எட்வின் குணத்திலக, மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீர‹ரிய, மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவரங்கள் வருமாறு:

ரி 56ரக துப்பாக்கிகள் 52 அதற்கான மகசீன் 168 மற்றும் றவைகள் 2106, எஸ்.எம்.ஜி.ரக துப்பாக்கி 01, ரி 81ரக துப்பாக்கி 01, ஏ.கே.எல்.எம்.ஜி.ரக துப்பாக்கிகள் 02, ஆர்.பி.ஜி. உட்பட செல்கள் 46, வெளிச்சக் குண்டுகள் 16, பி.கே. ரவுண்ஸ் 4650, கைக்குண்டுகள் 02, உட்பட பல்வேறு வகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை அரசாங்கம் படையினர் வெற்றிகொண்டு விட்டனர். அதனால் எமக்கு இனிமேல் அயுதங்கள் தேவை இல்லை. தமிழ் மக்கள் விடுதவைலப்புலிகள் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இலங்கை இராணுவப் படையில் இணைந்துள்ளனர். எமது கட்சியிடம் இருந்த ஆயுதங்களை கையளித்துவிட்டோம் எமது உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் இராணுவத்தில் இணையவுள்ளனர். ஏனையோர் சுயதொழில் வாய்ப்பு பெறவுள்ளனர் எமது அங்கத்தவர்கள் பகலருக்கும் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படும். என்று வெபர் அரங்கில் நடைபெற்ற ஆயுதக்கையளிப்பு வைபவத்தில் பேசுகையில் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.

http://uthayan.com/pages/news_full.php?nid=1874

ஒப்படைச்ச ஆயுதத்தை பார்த்தா சிரிப்புத்தான் வருது...

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்படைச்ச ஆயுதத்தை பார்த்தா சிரிப்புத்தான் வருது...

குருவி சுடுற துப்பாக்கி :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ, ஜயோ இதைப்போய் யாருக்குச்சொல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

பாதாளக்குழுவே களைந்த ஆயுத்ங்களை விட கூட வைத்திருப்பாங்கள். இது ஒரு ஆயுதக்களைவு என ஒரு நாடகம் போடுகிறார்கள்.

ஒப்படைச்ச ஆயுதத்தை பார்த்தா சிரிப்புத்தான் வருது...

மிச்சம் எல்லாம் பதுக்கலில் இருக்குது.. பிறகு மகிந்த ஆப்பு வைக்கத் தொடங்கும்போது தேவைப்படும் அல்லவா? :wub:

தமிழ் மக்கள் மீது வன்முறையை எந்த வடிவத்திலும் பிரியோகிக்காமல் இருந்தால் புலிகளால் ஆபத்து வராது எண்று உணர்ந்து இருப்பார்கள்... அதானாலாக இருக்கலாம் ஆயுத ஒப்படைப்பு...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு சர்வதேச பிரச்சாரத்துக்காக இந்த ஆயூதக்களைவினை உபயோகிக்கப்போகிறது.

உண்மைதான் கந்தப்பு அண்னை, சும்மா உலகத்திற்கு இதனைக்காட்டி அத்துடன்

புலிகளையும் இதே மாதிரி ஆயுதம் களைய உலகம் உதவ வேண்டும் என்று வெறும் நாடகம்....சோழியன் குடும்பி சும்மா ஆடுமா?

குரங்கு தொப்பி எறிந்த கதை தெரியுமா?....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே முழுப்பூசனிக்காயை சோற்றுக்க மறைக்கிறது என்று தான் கேள்விப்பட்டிருக்கிறன் ஆனால் இவங்கள் பூசணிக்காய் தோட்டத்தையே மறைத்திட்டாங்களே :lol: ,உவங்களிட்ட ஒரு பிஸ்டல் (கைத்துப்பாக்கி) கூட இல்லாமலா இருந்தாங்கள்................. கைக்குண்டு ரெண்டோ கடவுளே அப்ப மிச்சத்துக்கு புடுங்கியே எறியிறனிங்கள்........ :unsure: ஆக ரவை 2106 ம் மிச்சமெல்லாம் வறுத்து சாப்பிட்டிங்களே ....... :o

  • கருத்துக்கள உறவுகள்

இனி எப்படிப் பிச்சை எடுக்கப் போறாங்கள்? இருக்கவே இருக்கிறா மட்டக்களப்பு மேயர், அவவை வைச்சு சம்பாதிக்கலாம் !!!!எப்படியெண்டும் மட்டும் நான் சொல்ல மாட்டன்.

இனி எப்படிப் பிச்சை எடுக்கப் போறாங்கள்? இருக்கவே இருக்கிறா மட்டக்களப்பு மேயர், அவவை வைச்சு சம்பாதிக்கலாம் !!!!எப்படியெண்டும் மட்டும் நான் சொல்ல மாட்டன்.

நட்டத்திலதான் போகும்,

கைக்குண்டு ரெண்டோ கடவுளே அப்ப மிச்சத்துக்கு புடுங்கியே எறியிறனிங்கள்........ :lol:

என்னத்தை? :lol::lol::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.