Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் மக்களிடம் சிலர் நிதி மோசடி

Featured Replies

வன்னி மக்களுக்கு உதவுவதற்கு என்ற பெயரில் புலம்பெயர் மக்களிடம் சிலர் நிதி மோசடி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி மக்கள் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் உண்மையாகவே மக்களின் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடம் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக இங்கிலாந்திலேயே இவ்வாறான சம்பவம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறலாம். எனவே உதவுபவர்கள் விழிப்புடன் இருங்கள்.

நிதி மோசடியில் வழங்கப்படும் பற்றுச்சீட்டு

b426f558.gif

இப்பற்றுச்சீட்டில் உள்ள பதிவுஇலக்கநிறுவனத்திற்கும் இப்பற்றுச்சீட்டுக்கும் எதுவித தொடர்பும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Edited by Aalavanthan

  • கருத்துக்கள உறவுகள்

TRO வினரே அங்குள்ள மக்களின் சகல தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியின் அடியாட்கள், கூலிகளும் புகுந்து விளையாட சந்தர்ப்பம் உள்ளது.

அதுதான் நான் அப்பப்போ கேட்கின்றேன், உண்மையான முறையில் நேரடியாக எப்படி பணத்தினைச் சேர்ப்பது? மக்கள் தெளிவற்று இருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பார்த்து உட்புகும் கயவர் முழுப்பணமும் அடிக்கின்றனர். அமைதிதான் எம்மை அடிமையிட வைக்கின்றன. இதிலாவது வெளிப்படையாக ஓர் கணக்கோ அல்லது வேறு ஏதாவது ஓர் முறையோ பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.........

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் இடத்தில் இவ்வாறு நடைபெற சந்தர்ப்பங்கள் இல்லையாயினும் முற்றாக அலட்சியமாக இருந்துவிட முடியாது. மோசடிகள் தனிப்பட்ட பண இலாப நோக்கத்திற்காக நடாத்தப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பினும் புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி வன்னிக்கு நிதியுதவிகள் சென்றடையாமல் தடுக்கும் மனிதநேயமற்ற மிலேச்சத்தனமான நோக்கம் கொண்டவை என்பது தான் இங்கு முக்கியம். நிதி உதவிகேட்டு வருவோரிடம் அவதானமாக நடந்து கொள்ளும்படியும் அறிமுகமற்றவர்களிடம் உரிய பற்றுச்சீட்டுகள் பெறாமல் பணம் கையளிப்பதை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்நிலவன் நீங்கள் TRO ஊடாக உங்கள் பங்களிப்பை செய்யலாம்.

யாழ்நிலவன் நீங்கள் TRO ஊடாக உங்கள் பங்களிப்பை செய்யலாம்.
அதுதெரியும் அந்த TROக்கு அனுப்புறது எப்பிடி எண்டு எனக்குச் சொல்லவேண்டாம் கேக்குற எல்லாருக்கும் சொல்லுங்கோ....... நான் கேக்கேல்ல கண்டிங்களே!!! எனக்குச் சரியான தகவல் இல்லாட்டி குடுக்க விருப்பமில்லை உங்களிட்ட நல்ல சரியான தகவல் இருந்தால் குடுக்கச் சொல்லித்தான் கேட்டுக்கொண்டு இருக்கின்றன்.

Edited by யாழ்நிலவன்

  • தொடங்கியவர்

நிதி மோசடியில் வழங்கப்படும் பற்றுச்சீட்டு

b426f558.gif

இப்பற்றுச்சீட்டில் உள்ள பதிவுஇலக்கநிறுவனத்திற்கும் இப்பற்றுச்சீட்டுக்கும் எதுவித தொடர்பும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இலக்கத்துக்குரிய உண்மையான நிறுவனம் https://www.help.co.uk/charities/240728

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த இணைப்பில் "GRESHAM VILLAGE SCHOOL PARENT TEACHER ASSOCIATION" என்று வருகிறதே. அங்கு தேடியதில் இந்த இணைப்பில் :

https://www.help.co.uk/charities/150641

TRO வருகிறது. இதுவே சரியான இணைப்பா என்று உறுதிப்படுத்துங்கள்

  • தொடங்கியவர்

செந்தில், வேறொரு நிறுவனத்தின் பதிவினைப் பாவித்து தமிழர்களுக்கு உதவப்போவதாக மோசடி செய்கின்றார்கள் என்பதையே குறிப்பிட்டுள்ளேன்.

இந்த இலக்கத்துக்குரிய உண்மையான நிறுவனம் https://www.help.co.uk/charities/240728

கனடாவில் சிலர் தாம் விடுதலைப்புலிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வீடுகளுக்கு வருவதாக சிலர் சொல்கிறார்கள்

அவதானம் தேவை மக்களே

  • கருத்துக்கள உறவுகள்

quote name='யாழ்நிலவன்' date='Mar 11 2009, 06:08 AM' post='496666']

அதுதெரியும் அந்த TROக்கு அனுப்புறது எப்பிடி எண்டு எனக்குச் சொல்லவேண்டாம் கேக்குற எல்லாருக்கும் சொல்லுங்கோ....... நான் கேக்கேல்ல கண்டிங்களே!!! எனக்குச் சரியான தகவல் இல்லாட்டி குடுக்க விருப்பமில்லை உங்களிட்ட நல்ல சரியான தகவல் இருந்தால் குடுக்கச் சொல்லித்தான் கேட்டுக்கொண்டு இருக்கின்றன்.

நிலவன் முதலில நாங்கள் செய்து காட்ட வேண்டும்.

மற்ற ஆட்களை கொடுங்கோ கொடுங்கோ என்று கத்திப் பயனில்லை..

மீரா நன்றி, நான் உங்களைக் கொடுக்கச் சொல்லியோ மற்றவர்களைக் குடுக்கச் சொல்லியோ நான் சொல்லவில்லை முடிந்தாற் கொடுங்கள் நான் உங்களிடம் கேட்டது தொடர்புகொள்ள அல்லது பணமோ உதவியோ அனுப்ப ஓர் சரியான வெளிப்படையான தொடர்பு ஒன்றினைத்தான். என்னிடம் ஓர் தொடர்பு இருக்கின்றது ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதனைக்கொடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர் அதனாற்தான் சொன்னேன்.

வன்னி மக்களுக்கு உதவுவதற்கு என்ற பெயரில் புலம்பெயர் மக்களிடம் சிலர் நிதி மோசடி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி மக்கள் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் உண்மையாகவே மக்களின் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடம் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக இங்கிலாந்திலேயே இவ்வாறான சம்பவம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறலாம். எனவே உதவுபவர்கள் விழிப்புடன் இருங்கள்.

இது ஒன்றும் புதுசு இல்லையே..இங்க இருக்குற சில சோம்போறிகளுக்கு வேலைக்கு போக களவு.. அதனாலே பாவம் அங்க இருக்குற சனத்தினோட இயக்கத்தினோட பெயரையும் சொல்லி இப்படியான் எரிச்சல் புடித்த வேலை பண்ணுதுகள்... இதுகள் எல்லாம் எப்பதான் திருந்த போகுதுகளோ தெரியாது? :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.