Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அயன்" திரைப்படத்தைப் புறக்கணிப்போமா?

Featured Replies

இவரிடம் சொல்லி அழுதார்கள் என்று எழுதவில்லை போங்கள்

என்ன ஒரு கரிசனை புல்லரிக்கின்றது

யார் முட்டாள் என்று சொல்லாமல் சொல்லுகின்றார்

சன் குழுமத்திற்கு எதிரான புறக்கணிப்பை ஒட்டு மொத்த சினிமாக் கெதிரான புறக்கணிப்பாக மாற்ற மிகவும் படாத படு படுகின்றது ஒரு தலைவன்

எனக்கு சண்ணும் - சூரியனும் வாழ வேண்டும் என்பது தேவையல்ல.

கடந்த காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தழிப்பு இப்போது சற்று அடங்கிவிட்டது போல உள்ளதே?

ஏன் என்று யோசித்தீர்களா?

வீதிகளில் இறங்கியவர்களைக் காணவில்லை? (முக்கியமானவர்களைத் தவிர)

பாடசாலை மாணவிகளைக் காணவில்லை?

அரசியல்வாதிகளின் ஆக்ரோசங்களைக் காணவில்லை?

ஏன்?

தலைவரைக் காப்பாற்ற சண்ணுக்கு தேவையில்லை.

தலைவனுக்கு தலைவர் பிரபாகரன் தேவை.

தலைவரோட தமிழனை ஆளும் தகமை தமிழரிடம் இல்லாமல் போய்விடும்.

இனி யார் சொன்னாலும் இந்தக் கூட்டம் கேட்காது.

இந்த தலைப்பை இட்டு சபேசன் வெற்றியடைந்து விட்டார் வாழ்த்துக்கள் இப்போது ஈழதமிழர்கள் திரைப்படம் பார்க்க செல்வது குறைவு சில திரையரங்குகளில் இந்திய தமிழர்கள்தான் அதிகம் இருக்க கண்டேன் இந்த தலைப்பால் பல ஈழதமிழர்களும் செல்ல போகிறார்கள் போல் உள்ளது நல்லதொரு வியாபார உத்தி :(:(

தினிசரி சினிமா தியெட்டுக்கு போறவர் நீங்கள்

இல்லையென்றால்

இந்தக் குப்பைகளை கொண்டு வந்து காசு சம்பாதிக்கிறவர் நீங்கள்?

என்று எடுத்துக் கொள்ளலாமா?

நாங்கள் போவதில்லை.

அதுவும் வந்த இந்திய தமிழர்கள் ஐடி காட்டிப் போட்டுத்தானே நுழைந்தார்கள்?

அப்ப டிக்கட் கிழிக்கிறீங்க போல இருக்கு :(

தமிழ் வாயிஸ் எல்லாம் விட்டதை எடுப்பதற்குத்தான். எஜமான விசுவாசம்.

சிலவேளை மா.க . வோ என்ன இழவோ

கொட்டினதை அள்ளப் போறீங்க. :lol:

  • Replies 146
  • Views 15.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தினிசரி சினிமா தியெட்டுக்கு போறவர் நீங்கள்

இல்லையென்றால்

இந்தக் குப்பைகளை கொண்டு வந்து காசு சம்பாதிக்கிறவர் நீங்கள்?

என்று எடுத்துக் கொள்ளலாமா?

நாங்கள் போவதில்லை.

அதுவும் வந்த இந்திய தமிழர்கள் ஐடி காட்டிப் போட்டுத்தானே நுழைந்தார்கள்?

அப்ப டிக்கட் கிழிக்கிறீங்க போல இருக்கு :(

மப்புல எழுதீறீங்கள் போல :lol::lol::lol:

நண்பரே நான் தியட்டருக்கு போய் படம் பார்த்து சுமார் ஐந்து வருடங்கள் ஆகின்றன எனது இந்திய நண்பர்கள் சொல்வார்கள் இப்ப படத்திற்கு உங்கட ஆட்கள் வாரதில்லை ஏன் என்று கேட்பார் அப்போது எங்கட நிலமையை எடுத்து சொல்வேன் அப்போது அவர் ஒன்றும் சொல்லமாட்டார்

நான் இந்த குப்பைகளை கொண்டு வந்து இணைக்கவும் மாட்டேன் ஏனென்றால் நாங்கள் செல்ல போவது இல்லை பேந்து எதற்க்காக கொண்டு இங்கு இணைக்கவேணும் :(:(

Edited by முனிவர் ஜீ

மப்புல எழுதீறீங்கள் போல :lol::lol::lol:

நண்பரே நான் தியட்டருக்கு போய் படம் பார்த்து சுமார் ஐந்து வருடங்கள் ஆகின்றன எனது இந்திய நண்பர்கள் சொல்வார்கள் இப்ப படத்திற்கு உங்கட ஆட்கள் வாரதில்லை ஏன் என்று கேட்பார் அப்போது எங்கட நிலமையை எடுத்துசெல்வேன் அப்போது அவர் ஒன்றும் சொல்லமாட்டார்

நான் இந்த குப்பைகளை கொண்டு வந்து இணைக்கவும் மாட்டேன் ஏனென்றால் நாங்கள் செல்ல போவது இல்லை பேந்து எதற்க்காக கொண்டு இங்கு இணைக்கவேணும் :(:lol:

முன்னர் நீங்களே சொன்னது:

இந்த தலைப்பை இட்டு சபேசன் வெற்றியடைந்து விட்டார் வாழ்த்துக்கள் இப்போது ஈழதமிழர்கள் திரைப்படம் பார்க்க செல்வது குறைவு சில திரையரங்குகளில் இந்திய தமிழர்கள்தான் அதிகம் இருக்க கண்டேன் இந்த தலைப்பால் பல ஈழதமிழர்களும் செல்ல போகிறார்கள் போல் உள்ளது நல்லதொரு வியாபார உத்தி :(:(

உரக்கக் கத்தினாலும் பொய் உண்மையாவதில்லை.

மப்பில இருக்கிறது

நானா நீங்களா முனிவர்ஜீ?

முன்ன கண்டேன் என்றீங்க

இப்போது ஈழதமிழர்கள் திரைப்படம் பார்க்க செல்வது குறைவு சில திரையரங்குகளில் இந்திய தமிழர்கள்தான் அதிகம் இருக்க கண்டேன்

இப்ப இந்திய நண்பர்கள் சொன்னாங்க என்கறீங்க

எனது இந்திய நண்பர்கள் சொல்வார்கள் இப்ப படத்திற்கு உங்கட ஆட்கள் வாரதில்லை ஏன் என்று கேட்பார் அப்போது எங்கட நிலமையை எடுத்துசெல்வேன்

ஒன்று மப்பில்லாத நேரத்தில எழுதுங்க

இல்ல

நல்ல வைத்தியரா பாருங்க :lol:

உங்களில பலருக்கு ஷோட் மெமரி.

உடனடி மறதி.

முடிஞ்சா இதையும் சரி செய்யுங்க. :o

kadavul-01.jpg

(இது இலவச வைத்திய உதவி)

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்ரேலியாவில் அயன் திரையிடுவதற்கு தயார் யார் புறக்கணிக்க தாயர்???????????????ஃஃ???? நான் ரெடி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பை இட்டு சபேசன் வெற்றியடைந்து விட்டார் வாழ்த்துக்கள் இப்போது ஈழதமிழர்கள் திரைப்படம் பார்க்க செல்வது குறைவு சில திரையரங்குகளில் இந்திய தமிழர்கள்தான் அதிகம் இருக்க கண்டேன் இந்த தலைப்பால் பல ஈழதமிழர்களும் செல்ல போகிறார்கள் போல் உள்ளது நல்லதொரு வியாபார உத்தி :(:(

இதை வாசித்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் தலைவன் மற்றும் உங்களுடன் சேர்ந்து தான் நாம் மீண்டும் மீண்டும் தவறு செய்கீரோமோ என்று கூறியிருந்தேன் தவிர இது சபேசன் அவர்கட்டு இப்ப இருக்கிர சூழ் நிலையில் யாரும் படம் பார்க்க போவானா?? அப்படியிருக்கும் போது இந்த புறக்கணிப்பு தேவைதானா இது சபேசனின் தனிப்பட்ட பிரச்சினையாக கூட இருக்கலாம் அல்லவா அதுதான் வியாபர உத்தி யென்றேன் மக்களை போகவைப்பதற்க்காக

இப்போது ஈழ தமிழர்கள் படம் பார்க்க செல்வது குறைவுதான் நான் சொன்னது சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்பு அப்போது சில திரையரங்குகளின் கண்டேன் அதைத்தான் இப்போது என்று சொல்லிவிட்டேன் ஐயா மன்னிக்கவேண்டும் நீங்கள் சொன்னது போல ஞாபக மறதிதான் போல இருக்கிறது :(

மற்றது இந்திய நண்பர்கள் கேட்பதற்க்கு நான் நமது எடுத்து நிலைமையை எடுத்து செல்வேன் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது எடுத்து சொல்வேன் எம்மவர் நிலமையை :lol:

இதை வாசித்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் தலைவன் மற்றும் உங்களுடன் சேர்ந்து தான் நாம் மீண்டும் மீண்டும் தவறு செய்கீரோமோ என்று கூறியிருந்தேன் தவிர இது சபேசன் அவர்கட்டு இப்ப இருக்கிர சூழ் நிலையில் யாரும் படம் பார்க்க போவானா?? அப்படியிருக்கும் போது இந்த புறக்கணிப்பு தேவைதானா இது சபேசனின் தனிப்பட்ட பிரச்சினையாக கூட இருக்கலாம் அல்லவா அதுதான் வியாபர உத்தி யென்றேன் மக்களை போகவைப்பதற்க்காக

இப்போது ஈழ தமிழர்கள் படம் பார்க்க செல்வது குறைவுதான் நான் சொன்னது சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்பு அப்போது சில திரையரங்குகளின் கண்டேன் அதைத்தான் இப்போது என்று சொல்லிவிட்டேன் ஐயா மன்னிக்கவேண்டும் நீங்கள் சொன்னது போல ஞாபக மறதிதான் போல இருக்கிறது :(

மற்றது இந்திய நண்பர்கள் கேட்பதற்க்கு நான் நமது எடுத்து நிலைமையை எடுத்து செல்வேன் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது எடுத்து சொல்வேன் எம்மவர் நிலமையை :(

இந்திய தமிழ் நண்பர்களை நம்பி

புலத்தில் யாரும் தமிழ் படங்களை எடுப்பதில்லை?

அவர்களது எண்ணிக்கை மிக மிக குறைவு.

திரைப்பட விநியோகஸ்தனும் ஈழத் தமிழன்

அதை பார்ப்பவனும் அதிகமாக ஈழத் தமிழன்

இதுகுறித்து

யார் யார் தியெட்டருக்கு வருகிறார்கள் என்பதற்கு விவாதமே தேவையில்லை.

அது அனைவரும் அறிந்ததே.

கவிதை எழுத முயலுங்கள்

உங்களுக்கு அது நல்லாவே வரும் ஐயா

கண்ணுக்கு மை அழகு

கவிதைக்கு பொய்யழகு

Edited by Thalaivan

வீதிகளில் இறங்கியவர்களைக் காணவில்லை? (முக்கியமானவர்களைத் தவிர)

எல்லோரையும் மாமியார் விட்டில் வைத்திருக்கின்றார் கொலைஞர்

பாடசாலை மாணவிகளைக் காணவில்லை?

பாடசாலைகளுக்கு விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியதே இதற்கு தானே கொலைஞர்

அரசியல்வாதிகளின் ஆக்ரோசங்களைக் காணவில்லை?
கூட்டணி பிரிப்பதில் பிசி

ஏன்?

இதை அடக்கியதே கொலைஞர் தானே இதில் என்ன சந்தேகம்

சரி நீங்கள் என்ன காரணம் சொல்லுகின்றீர்கள் ???

மனித சங்கிலி என்று தனக்கு தானே போராட்டம் நாடாத்தி தனக்கு எதிரான போராட்டத்திற்கும் தலைவனாகி விட்டார் கொலைஞர் இது போல் குள்ளநரித்தனம் யாருக்கு வரும்

ஆனால் இதையும் தமிழக மக்கள் இன்னும் நம்புவது வேதனை ஆகும்

ஆனாலும் முத்துகுமாரின் வீரமரணத்தின் சாசனம் பலருக்கு தெளிவை ஏற்படுத்தி விட்டது பார்ப்பம் இவை ஓட்டுக்களாக மாறுமா ???

Edited by tamilsvoice

பெயரிலாவது தலமை பொறுப்பில் இருக்க ஆசைபடுபவர்கள் தயவுசெய்து பெயரளவிலாவது தமிழானக(தமிழன்) என்று பெயர்வைத்துக்கொண்டு வாழலாமே.

பெயரிலாவது தலமை பொறுப்பில் இருக்க ஆசைபடுபவர்கள் தயவுசெய்து பெயரளவிலாவது தமிழானக(தமிழன்) என்று பெயர்வைத்துக்கொண்டு வாழலாமே.

எவனும் தமிழனாக பெயர் வைப்பதில் பிரயோசனமில்லை

அவன் நடந்து கொள்ளும் விதத்தில் இவன்தான் தமிழன் என்று சொல்ல வேண்டும்.

சிலர் தான் வாழ சோழன் என்று வைக்கலாம்?

சோழன் ஒரு வடக்கத்தியான்.

நீங்கள் அதை வச்சுக் கொண்டே இது புரியாமல்

அதையே எதிர்க்கறீர்கள்? :lol:

சிலருக்கு இப்படிச் சொன்னால்தான் புரியுது?

அதுக்கு அதாச் சொன்னாத்தான் புரியும்? :mellow:

Edited by Thalaivan

எல்லோரையும் மாமியார் விட்டில் வைத்திருக்கின்றார் கொலைஞர்

பாடசாலைகளுக்கு விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியதே இதற்கு தானே கொலைஞர்

கூட்டணி பிரிப்பதில் பிசி

இதை அடக்கியதே கொலைஞர் தானே இதில் என்ன சந்தேகம்

சரி நீங்கள் என்ன காரணம் சொல்லுகின்றீர்கள் ???

மனித சங்கிலி என்று தனக்கு தானே போராட்டம் நாடாத்தி தனக்கு எதிரான போராட்டத்திற்கும் தலைவனாகி விட்டார் கொலைஞர் இது போல் குள்ளநரித்தனம் யாருக்கு வரும்

ஆனால் இதையும் தமிழக மக்கள் இன்னும் நம்புவது வேதனை ஆகும்

ஆனாலும் முத்துகுமாரின் வீரமரணத்தின் சாசனம் பலருக்கு தெளிவை ஏற்படுத்தி விட்டது பார்ப்பம் இவை ஓட்டுக்களாக மாறுமா ???

இப்ப தமிழ்நாட்டில ரெண்டு கட்சியும் சந்தோசமாயிருக்குது.

ஜெ யோட டாக்குத்தர் ராமதாஸ்.

கலைஞரோட திருமா.

நடுவில விரல் காட்ட விஜயகாந்.

ஈழப் பிரச்சனைக்கு சம சம பலம்.

மூன்றாவது அணியென்று யாரோ கனவு கண்டாங்க.

அதுக்கு என்ன ஆச்சு?

அது காதோடு போச்சா? இல்ல காத்தோடு போச்சா?

எவ்வளவு நல்ல சந்தர்ப்பம். அதைக் கூட கைவிட்டுட்டாங்க.

ஜெ தமிழருக்கு எதிரானவர்?

கலைஞர் முடிஞ்சும் செய்யாதவர்?

புரட்டியிருக்கலாம்.

புண்ணாக்கும் வைக்கோலும் திண்டதுகள் உம்பா எண்டு சொல்ல

திரும்பவும் கியுவில நிக்குதுகள். கொடுமை.

முத்துக்குமாரை அவங்க எப்பவோ மறந்துட்டாங்க.

அவங்க எத்தனை சீட்டு கிடைக்குமென்றுதான் இப்போ ஏங்கிக்கிட்டு இருக்காங்க.

சன் தொலைக்காட்சியின் „அயன்“ திரைப்படத்தை புறக்கணிப்போம்!

அன்பான தமிழ் மக்களே

தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு கொடிய போரை ஏவி விட்டுள்ளது. தினமும் பல நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடிய இன அழிப்பு யுத்தத்தை இந்தியாவின் காங்கிரஸ் அரசு வழி நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் சிறிலங்காவின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை எமது மக்கள் தன்னெழுச்சியோடு முன்னெடுத்து வருகின்றார்கள். அதே வேளை சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுத்து யுத்தத்தை வழிநடத்தும் காங்கிரஸ் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்கும் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கும் எமது எதிர்ப்புகளை நாம் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் புலம்பெயர் நாடுகளிலும் தமது ஒளிபரப்பை நடத்தி வருகின்றன. இந்தத் தொலைக்காட்சிகள் தமிழர்களுக்கு எதிரான செய்திகளை காவி வருவதோடு தமிழின எதிரிகளை நியாயப்படுத்தும் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. எமது மக்களின் அவலங்களை வெளிப்படுத்த வேண்டிய கடமையுள்ள தமிழ் ஊடகங்கள் எமது மக்களை அழிப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தத் தொலைக்காட்சிகளுக்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். சன் தொலைக்காட்சி "சன் பிக்ஸர்" என்ற பெயரில் திரைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றது. இந்தத் திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்படுவதன் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை சன் தொலைக்காட்சி பெறுகின்றது. எமக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு எம்மிடம் இருந்தே பெருந் தொகை வருவாயையும் பெறுகின்றது. சன் தொலைக்காட்சி கலைஞர் தொலைக்காட்சி போன்றவற்றையும் இவைகளின் சார்பில் வெளிவரும் திரைப்படங்களையும் புறக்கணித்து நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

சன் தொலைக்காட்சியின் வெளியீடாக அடுத்து வரவுள்ள "அயன்" திரைப்படத்தை புறக்கணித்து நாம் எமது எதிர்ப்பை தெரிவிப்போம். இந்தத் திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை நாம் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இந்த நடவடிக்கை அயன் திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கோ தமிழ் திரையுலகத்திற்கோ எதிரானது அன்று என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைக்கு எமக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழ் திரையுலகத்திற்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ரஜனிகாந்தின் ரசிகர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கே வாக்களிப்பதாக தீர்மானித்துள்ளதையும் நாம் மிகவும் பாராட்டி அவர்களுக்கும் எமது அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். "அயன்" திரைப்படப் புறக்கணிப்பு என்பது சன் குழுமம் மற்றும் கலைஞர் குடும்பத்திற்கு எமது அதிருப்தியையும் வேதனையையும் கோபத்தையும் தெரிவிக்கும் ஒரு நடவடிக்கையே தவிர வேறு யாருக்கும் எதிரானது அன்று.

சன் மற்றும் கலைஞர் குழுமத்தின் இன்றைய நிலைப்பாட்டிற்கு எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் சன் தொலைக்காட்சியின் "அயன்" திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும்படி அனைத்து தமிழ் மக்களையும் உரிமையோடும் அன்போடும் வேண்டிக் கொள்கிறோம்.

ஒற்றுமையே வலிமை

-தமிழர் விழிப்பு இயக்கம்-

thamilarvilippuiyakkam2009@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

சன் தொலைக்காட்சியின் „அயன்“ திரைப்படத்தை புறக்கணிப்போம்!

-தமிழர் விழிப்பு இயக்கம்-

thamilarvilippuiyakkam2009@gmail.com

http://img162.imageshack.us/img162/7651/ayanboycotth.pdf

  • தொடங்கியவர்

http://www.pathivu.com/news/1090/54//d,view.aspx

ஐரோப்பாவின் முக்கிய சில நாடுகளில் "அயன்" திரைப்படத்தை திரையிடுவது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்றைய நாடுகளிலும் இது பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன் குழுமத்திற்கும், கலைஞர் குடும்பத்திற்கும் எமது எதிர்ப்பை பதிவு செய்ய நினைக்கும் உறவுகள், உங்கள் நாட்டில் திரைப்படங்களை திரையிடுவோர்களுடன் தொடர்பு கொண்டு எமது போராட்டத்திற்கு அவர்களின் ஒத்துழைப்பைக் கேளுங்கள்!

நன்றி சபேசன் புலத்தில் பலர் குத்துற அரிசியெல்லாம் தாங்கள் குத்தினதாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். .இதை அவர்கள் களத்திற்கு கொண்டு வந்திருந்தால் பிரச்சைன இல்லை. அதுதான் பேர்களை மாற்றி மாற்றி கருத்துக்களை கக்கி தள்ளுகினம். எங்களுக்கு தேவை அரிசிதான். போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

அன்பான தமிழ் மக்களே!

தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு கொடிய போரை ஏவி விட்டுள்ளது. தினமும் பல நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடிய இன அழிப்பு யுத்தத்தை இந்தியாவின் காங்கிரஸ் அரசு வழி நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் சிறிலங்காவின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை எமது மக்கள் தன்னெழுச்சியோடு முன்னெடுத்து வருகின்றார்கள். அதே வேளை சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுத்து யுத்தத்தை வழிநடத்தும் காங்கிரஸ் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்கும் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கும் எமது எதிர்ப்புகளை நாம் தெரிவிக்க வேண்டும்

தமிழ் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் புலம்பெயர் நாடுகளிலும் தமது ஒளிபரப்பை நடத்தி வருகின்றன. இந்தத் தொலைக்காட்சிகள் தமிழர்களுக்கு எதிரான செய்திகளை காவி வருவதோடு, தமிழின எதிரிகளை நியாயப்படுத்தும் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன.

எமது மக்களின் அவலங்களை வெளிப்படுத்த வேண்டிய கடமையுள்ள தமிழ் ஊடகங்கள் எமது மக்களை அழிப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தத் தொலைக்காட்சிகளுக்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

சன் தொலைக்காட்சி 'சன் பிக்ஸர்' என்ற பெயரில் திரைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றது. இந்தத் திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்படுவதன் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை சன் தொலைக்காட்சி பெறுகின்றது. எமக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு, எம்மிடம் இருந்தே பெருந் தொகை வருவாயையும் பெறுகின்றது.

சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றவற்றையும் இவைகளின் சார்பில் வெளிவரும் திரைப்படங்களையும் புறக்கணித்து நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

சன் தொலைக்காட்சியின் வெளியீடாக அடுத்து வரவுள்ள 'அயன்' திரைப்படத்தை புறக்கணித்து நாம் எமது எதிர்ப்பை தெரிவிப்போம். இந்தத் திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை நாம் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நடவடிக்கை அயன் திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கோ, தமிழ் திரையுலகத்திற்கோ எதிரானது அன்று என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைக்கு எமக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழ் திரையுலகத்திற்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ரஜனிகாந்தின் ரசிகர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கே வாக்களிப்பதாக தீர்மானித்துள்ளதையும் நாம் மிகவும் பாராட்டி அவர்களுக்கும் எமது அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

'அயன்' திரைப்படப் புறக்கணிப்பு என்பது சன் குழுமம் மற்றும் கலைஞர் குடும்பத்திற்கு எமது அதிருப்தியையும், வேதனையையும், கோபத்தையும் தெரிவிக்கும் ஒரு நடவடிக்கையே தவிர வேறு யாருக்கும் எதிரானது அன்று.

சன் மற்றும் கலைஞர் குழுமத்தின் இன்றைய நிலைப்பாட்டிற்கு எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் சன் தொலைக்காட்சியின் 'அயன்' திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும்படி அனைத்து தமிழ் மக்களையும் உரிமையோடும் அன்போடும் வேண்டிக் கொள்கிறோம்.

ஒற்றுமையே வலிமை

தமிழர் விழிப்பு இயக்கம்

thamilarvilippuiyakkam2009@gmail.com

http://www.tamilseythi.com/tamilar/suntv_300309.html

ஒன்றுபடுவோம், புறக்கணிப்போம். பாடம் புகட்டுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இணைப்பு ஒன்று

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=315886

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இணைப்பு ஒன்று

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=315886

ச்சா..... முனிஜீ! நீங்கள் அகழ்வாராய்ச்சி செய்யிறதிலை வலு கெட்டிக்காரர் போலை கிடக்கு :(

நாளை வூட் சைட் சினிமாவில் அயன் பண்ணுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா..... முனிஜீ! நீங்கள் அகழ்வாராய்ச்சி செய்யிறதிலை வலு கெட்டிக்காரர் போலை கிடக்கு :(

கு .சா பழைய ஓலை சுவடிகளை நான் முன்னர் வாசித்ததுண்டு அந்த ஆராய்ச்சியில் கண்டு பிடித்து கொண்டுவந்து சேர்த்தது எப்படி நம்ம ஆராய்ச்சி :(:unsure:

நாளை வூட் சைட் சினிமாவில் அயன் பண்ணுகிறார்கள்

தகவலுக்கு, விளம்பரத்திற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு போராட்டமும் அதன் விளைவு வெற்றி தருவதில் இருந்து தான் தங்கியுள்ளது. இந்தப் புறக்கணிப்பு எவ்வகை வெற்றியியைத் தந்துவிடும் என்று தெரியவில்லைல.

குறுக்காலபோவன் சிறிலங்காவைப் புறக்கணிப்போம் என 2 வருடங்களுக்கு மேலாக நாயாக, பேயாகக் கத்தியபோது கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, இப்போது ஏதோ கனவில் எழுந்தவர் போல இந்தச் செய்கையைச் செய்வதும், கருணாநிதி இப்போது காலம் கடந்த ஞானமாக 89, 90களில் நடந்து பேசுவதற்கும் வித்தியாசம் ஏதும் தெரியவில்லை.

இப்போது குறுக்காலபோவனையும் காணவில்லை. அவர் அடுத்த நிலைக்குப் போய்விட்டார் போலும்.

இன்றைக்கு மக்கள் பட்டினியாக வாடுகின்றபோது, தினமும் 100 பேர் எனச் சாகடிக்கின்றபோது, இந்த மாதிரிச் செய்வதை விட, பெரியளவில் பிரச்சாரம் செய்யலாம்.

இண்டைக்கு சன்ரீவி இப்படிச் செய்தவுடன் செய்யும் என்று பார்ப்பதிலும் பார்க்க, எத்தனையோ தமிழக உறவுகள், கிராமம், கிராமமாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் என்னமும் அதிகமாக இருந்தால் அவர்கள் கிராமங்கள் அனைத்தையும் நாடும் அளவுக்கு வளர்வார்கள்.

அயனைப் புறக்கணியுங்கள். அது உங்களின் விருப்பம். ஆனால் இதனால் கிடைக்கும் பெறுபேறுகள் என்னவென்றால் ....0.00001??

சபேசனின் தமிழர் விழிப்புணர்வு இயக்கத்திற்கு என் வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.