Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலமான விடுதலைப்புலிகள் அமைப்பை உடனடியாக அழிப்பது கடினமானதாகும் - அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு 3/25/2009 10:50:48 PM - விடுதலைப்புலிகள் பலமாக இருந்த ஓர் அமைப்பு என்பதனால் அவர்களை உடனடியாக அழிப்பது என்பது கடினமான காரியமாகும்.

புலிகளை முற்றாக அழிப்பதற்கு சில காலம் எடுக்கும் அவர்களை அழித்ததன் பின்னரே இந்நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்த முடியும் அது வரையிலும் சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்று அமைச்சர் விநாகய மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பழமைகளை மறந்து புதுமையை பற்றி செல்லவேண்டும் அதன் மூலமாகவே ஏற்பட்டிருக்கும் கசப்புணர்வை இல்லாதொழிக்க முடியும். இந்நிலையில் தமிழ் மக்களின் நலனில் கூட்டமைப்பு விருப்பம் கொண்டிருக்குமாயின் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மூவின மக்களையும் மதிக்கின்ற போதுதான் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் ஏற்படும். கிழக்கு மாகாண சபையில் இடம்பெறுகின்ற தவறுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். அதிகாரங்கள் தேவையாகும் எனினும் சகல மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய அதிகாரங்களே தேவையானதாகும்.

வடக்கு கிழக்கு இணைப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பிற்காக கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளை தெரிந்துக்கொள்ளவேண்டும். அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்கின்ற போது இடம்பெயர்வுகள் நகர்தல்கள் இடம்பெறும் உலக மாற்றத்திற்கு ஏற்றவகையில் கிழக்கில் தொழில் கிராமங்கள் ஏற்படுத்தப்படுகின்றன இதன் போது இடப்பெயர்வுகள் ஏற்படுமாயின் அவர்களுக்கு தேவையான சிறந்த வளங்களை ஏற்படுத்த கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருக்கின்றது.

மாகாண சபை முறையின் ஊடாக பொலிஸ் அதிகாரம் தேவையில்லை அவற்றை கொண்டுவந்தால் மீண்டும் பிரச்சினை வரும். அதிகாரங்களை பகிர்ந்தளிக்கின்ற போது சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கவேண்டும் .

பயங்கரவாத பிச்சினை தற்போது முடியும் தருவாயில் இருக்கின்றது என்றாலும் விடுதலைப்புலிகள் ஓர் பலமான அமைப்பு என்பதனால் அவர்களை உடனடியாக அழிப்பது கடினமாக விடயமாகும் அவர்களை அழிப்பதற்கு சில காலம் எடுக்கும் என்பதுடன் முழுமையாக அழித்தால் மட்டுமே நிரந்தர அமைதியை காணமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
சிறீலங்காவின் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிப்பு

நாய் என்று சொன்னால் நாய்கள் கோபப்படும், பச்சோந்தி என்றால் பச்சோந்திகளுக்கே அவமானம் ஈனப்பிறவியை இதை எப்படி சொல்ல

  • கருத்துக்கள உறவுகள்

நாய் என்று சொன்னால் நாய்கள் கோபப்படும், பச்சோந்தி என்றால் பச்சோந்திகளுக்கே அவமானம் ஈனப்பிறவியை இதை எப்படி சொல்ல

எட்டப்பன், காக்கை வன்னியன்....

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இது ஏன் மாத்தி மாத்தி கதைக்குது???

இப்படி கதைச்சாத்தான் வன்னி முதலமைச்சர் பதவி கிடைக்கும் :icon_idea:

அவர் தமிழில் பேசினாரா அல்லது சிங்களத்திலா ? ஏனெனில் அவர் ஸ்ரீலங்கா அமைச்சராயிற்றே . அதனால் தான் கேட்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வன்னி புலிகள் பற்றி சொல்லவில்லையாம். தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் என்று கிழக்கு மாகாணத்தில் ஒர் அமைப்பு இருந்து கொண்டு இவருக்கு ஆப்பு வைக்கின்றதாம். அதற்கு இவர்தான் முன்னாள் தலைவர். அதை பற்றித்தான் அண்ணாச்சி சொன்னவராம்.

Sorry NO comments.. Bcoz there is no such bad words to scold him...

Plz don't bother his statements . he is a dead body .. i concern..

இவர் வன்னி புலிகள் பற்றி சொல்லவில்லையாம். தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் என்று கிழக்கு மாகாணத்தில் ஒர் அமைப்பு இருந்து கொண்டு இவருக்கு ஆப்பு வைக்கின்றதாம். அதற்கு இவர்தான் முன்னாள் தலைவர். அதை பற்றித்தான் அண்ணாச்சி சொன்னவராம்.

முன்ன எங்க இருந்தார் என்று உங்களுக்கு தெரியுமோ?

நாய் என்று சொன்னால் நாய்கள் கோபப்படும், பச்சோந்தி என்றால் பச்சோந்திகளுக்கே அவமானம் ஈனப்பிறவியை இதை எப்படி சொல்ல

துரோகிகளுக்கே துரோகி,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிகிகிகிகிகிகிகிகிகிகி சப்பா இப்பவே கன்;னகட்டுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.