Jump to content

என் கேள்விக்கென்ன பதில்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முற்பாதி போய்விட்டால், இருட்டே ஆகும்; :rolleyes:

முன் எழுத்து இல் லாவிட்டால், பெண்ணே யாகும்; (பு)தையல்

பிற்பாதி போய்விட்டால், ஏவற் சொல்லலாம்; புதை(யல்)

பிற்பாதி யுடன் முன் எழுத்து இருந்தால், மேகம்; பு(தை)யல்

சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி; பு(தைய)ல்

தொடர் இரண்டாம் எழுத்து,மா தத்தில் ஒன்றாம்;(பு)தை(யல்)

பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா!

புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே!

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

கறுப்பி

முற்பாதி போய்விட்டால், இருட்டே ஆகும்; :rolleyes:

கறுப்பி

புதையல் = புதை + அல் - அல் என்றால் இருட்டு

இப்படி வரும் என நினைக்கின்றேன். இனி உடையார் தான் வந்து சரி பிழை உரைக்கனும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி

கறுப்பி

புதையல் = புதை + அல் - அல் என்றால் இருட்டு

இப்படி வரும் என நினைக்கின்றேன். இனி உடையார் தான் வந்து சரி பிழை உரைக்கனும் :)

எல்லோரினதும் விடை மிகச் சரியானது, , நானும் தெரியாமல் முழிச்சனான், பிறகுதான் தெரியும்,

சூப்பர் தமிழினி,

அல்லும் பகலும் உழைத்து (இரவும் பகலும்)

= அல் (இரவு)+உம்+பகலும்

இவற்றின் எண் கணித பெறுமதிகள் என்ன?

மா = ...?

காணி =...?

வீசம் =...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றின் எண் கணித பெறுமதிகள் என்ன?

மா = ...?

காணி =...?

வீசம் =...?

:icon_mrgreen:

http://ta.wikipedia....%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் & தமிழினி, எனக்கு கன காலமா இதைப் பற்றி தெரியா,

அது சரி கீழே உள்ள பாட்டுக்கு என்ன அர்த்தம் என்று கண்டு பிடிக்கதான் மேலே கேட்டது உதவும், நீங்களும் இதற்கான பதிலை கண்டு பிடியுங்கள் விடை கீழே வெள்ளை எழுத்தில் உள்ளது , highlight பண்ணி பாருங்கே (ஏன் google தேடி நேரத்தை வீணடிப்பான்):

சரி இப்ப கீழே உள்ளதிற்கு விளக்கம் தருங்கோ;

எட்டொருமா எண்காணி மீதே இருந்தகலைப்

பட்டொருமா நான்மாவிற் பாய்ந்ததே - சிட்டர்தொழும்

தேவாதி தேவன் திருவத்தியூர் வரதன்

மாவேறி வீதிவரக் கண்டு

நன்றி - google group

விடை;

கொஞ்சம் கணக்குப்போட்டே இதில் உள்ள முடிச்சை விடுக்கவேண்டும்.

இதனை வடமொழிவல்லார் 'குட்டு' என்று சொல்வார்கள்.

'குட்டு உடைப்பது' என்பது இதைத்தான்.

முதலில் இதைப் பிடித்துவைத்துக்கொள்ளுங்கள்

மா = 1/20

காணி = 1/80

எட்டொருமா

8 X 1 X 1/20 = 8/20 அல்லது 2/5

எண்காணி

8 X 1/80 = 8/80 = 1/10 = 2/20

எட்டொருமா எண்காணி

8/20 + 2/20 = 10/20 = 1/2 அதாவது அரை

அடுத்ததுக்கு வருவோம்

பட்டொருமா நான்மா

ஒருமா = 1/20

நான்மா = 4/20

ஆகவே,

1/20 + 4/20 = 5/20 = 1/4 அதாவது கால்

இப்போது பார்ப்போம்...

சிட்டர்களாகிய பக்தர்களால் தொழப்படும் தேவாதிதேவனாகிய

திருவத்தியூர் - திரு + அத்தி + ஊர் - காஞ்சிபுரத்தில் உள்ள அத்திகிரி என்னும் திருப்பதியில் குடிகொண்ட வரதராசப் பெருமாள்(of கஞ்சி வரதப்பா fame)

மா ஏறி - யானையின்மீது(மா என்பது யானையையும் குறிக்கும்) வீதியில்

உலா வருகின்றான்('திருவரதன் உலா' என்று ஆழ்வார்க்கடியார் கண்ணனாரோ

அல்லது முருகனாரோ புதிய நாவலை எழுதக்கூடும்).

அப்போது அக்காட்சியைக்கண்ட இளம்பெண்ணொருத்திக்குக்

காதல் மேலிட்டு, 'அவள் அரையில் உடுத்தியிருந்த ஆடை நழுவி

காலடிக்கு 'டொபுக்'கென்று வந்துவிட்டதே' என்று அங்கலாய்க்கிறார்

காளமேகப் புலவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பையனும் பெண்ணும் வீட்டைவிட்டு ஓடிப்போறாங்க, லாட்ஞ்க்கு போனவுடன் என்ன வாங்கு வாங்க?

Link to comment
Share on other sites

சொல்லுவேன் உடையார். வெட்டு விழும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூச்சு வாங்குவாங்க...smiley.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பழத்துக்கு போட, பலூன் வாங்கினால் தான்.... வெட்டுவார்கள். iStock_000012984631XSmall.jpg?1299772738

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுவேன் உடையார். வெட்டு விழும்!

அதுக்குதானே கேள்வியே :lol:

வாழைப்பழத்துக்கு போட, பலூன் வாங்கினால் தான்.... வெட்டுவார்கள். iStock_000012984631XSmall.jpg?1299772738

அந்த மாதிரி சிறி, சூப்பர் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூச்சு வாங்குவாங்க...smiley.gif

யாருடைய மூச்சை யார் வாங்க போறங்க :icon_mrgreen:

அதுக்குதானே ஓட வெளிக்கிட்டவங்க, பாவம் அந்த பையன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பழ மொழிகளுக்கான விளக்கம் என்ன?

01) முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு

02) மீ தூண் விரும்பேல்.

03) மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம் .

04) நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.

05) கோயில் சோத்துக்கு குமட்டிண தேவடியா காடிச் சோத்துக்குக் கரணம் போடுறா

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கிளி வளர்ந்து பூத்திடும் பூ மல்லிகை போல ,கிஞ்சிற்றும் வாசமில்லை முகர்ந்தோமானால் நிறமது பிஞ்சுப்பச்சை, நெல்லி ரூபம்,காய் சிவப்பு, பழமது கறுத்திருக்கும்.பழத்தினுள் கொட்டை இரட்டை,இனிப்புண்டு,பழத்தை தின்னார்,கொட்டை உண்பார்?

Link to comment
Share on other sites

தேக்கம் பழமா நுணா? இரண்டு கொட்டை இல்லையே? ஹ்ஹ்ம் :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கோ என்று நினைக்கிறன்... :rolleyes:

பதில் சரி பார்க்கும் போது விடைக்கு உரிய சரியான விளக்கத்தையும் நுணா அண்ணா சொன்னால் நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பி அல்லது மிளகு ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கயூ???? :rolleyes:

கயூப் பழத்தைத் சாப்பிட‌லாம் தமிழினி சுவையாய் இருக்கும் :lol:

கிளி வளர்ந்து பூத்திடும் பூ மல்லிகை போல ,கிஞ்சிற்றும் வாசமில்லை முகர்ந்தோமானால் நிறமது பிஞ்சுப்பச்சை, நெல்லி ரூபம்,காய் சிவப்பு, பழமது கறுத்திருக்கும்.பழத்தினுள் கொட்டை இரட்டை,இனிப்புண்டு,பழத்தை தின்னார்,கொட்டை உண்பார்?

பாதாம் பருப்பு :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குளப்புறீங்கள்............. :rolleyes: காலையில் தேனீர் தானே குடிப்போம் அப்படி இருக்கையில் எப்படி இது உற்சாகத்தைத் தரும் நுணா அண்ணா...? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பற்பசை.

கொட்டாவி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.