Jump to content

'பாதுகாப்பு வலய பகுதி' மீது அதிகாலை முதல் சிறிலங்கா படையினர் பாரிய தாக்குதல்


Recommended Posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு என சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மீது முழு அளவிலான பாரிய தாக்குதல் நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையிலேயே தொடங்கியிருக்கின்றனர்.

ஏற்கனவே இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் என அறிவித்துவிட்டு அக்காலப் பகுதியில் மக்கள் வதிவிடங்களை நோக்கி பாரியளவில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்த சிறிலங்கா படையினர், இன்று புதன்கிழமை அதிகாலை முதல் தரை வழியாக பாரிய தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர்.

தரைவழித் தாக்குதலுக்கு வசதியாக பெருமளவு இராணுவ வாகனங்களும் ஆயுதங்களும் கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நகர்த்தப்பட்டன.

இரண்டு நாள் தாக்குதல் நிறுத்தம் என்ற அறிவிப்பை இதற்கு வசதியாகவே சிறிலங்கா படையினர் பயன்படுத்தியிருந்தார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மாத்தளன் தொடக்கம் வலைஞர்மடம் உள்ளடங்கலான பகுதிகளை நோக்கி மிகச் செறிவான எறிகணைத் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள், தாங்கிகளின் தாக்குதல்களுடன் மற்றும் கனரக துப்பாக்கித் தாக்குதல்களையும் சிறிலங்கா படையினர் நடத்தி வருகின்றனர்.

படையினரின் எறிகணைகள் மக்கள் வாழும் பகுதிகளில் மிகவும் செறிவாக வீழ்ந்து வருவதால் பொதுமக்கள் தரப்பில் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடிய பேரபாயம் உருவாகியிருப்பதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களின் விபரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னிச்சையாகத் தானே அறிவித்த புத்தாண்டுகாலப் போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று அதி காலைமுதல் அதி உச்ச தாக்குதலைப் பாதுகாப்பு வலயத்தினுள் பாவித்தவண்ணம் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சிறிலங்காப் படைகள் உள் நுழைய முனைவதாக வன்னியிலிருந்து சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் போராளிகள் மறைந்திருப்பதாக் கூறிக்கொண்டு நிராயுதபாணிகளான மக்கள் மீது போர் தொடுத்து மாபெரும் இன அழிப்பொன்றினை சிறிலங்கா அரசு முன்னெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இம்முன்னெடுப்பில் அப்பாவி மக்கள் பாரிய அழிவுக்குள்ளாகியுள்ளார்கள் எனக் கருதப்படுகிற போதும். அது குறித்த மேலதிக விபரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

http://4tamilmedia.com/index.php/200904153...5-05-31-38.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமூச்சும் , ஏக்கமும் தான் வருகின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி

திகதி: 15.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்]

சிறிலங்கா பொது மக்களின் வாழ்விடம் மீது மேற்கொண்டுள்ள இன அழிப்புத் தாக்குதலில் இன்று காலை மட்டும் மூன்று மணி நேரம் மேற்கொள்ள்ப்பட்ட தாக்குதலில் 180 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் பெருமளவானவோர் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

இரண்டு நாள் போர் நிறுத்தத்தை அறிவித்து தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா தரப்பு இன்று காலை தொடக்கம் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது கடுமையான ஆட்டிலெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அத்துடன் மோட்டார் தாக்குதல்களும், ஆர்.பி.ஜி தாக்குதல்களும், எல்.எம்.ஜி, கலிபர் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்களை அழித்துக்கொண்டு இறுதியாக எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா தீவிரமாக இறங்கியுள்ளது. இன்று காலை 7.40 மணி தொடக்கம் 10.40 மணி வரை இடம்பெற்ற தாக்குதல்களில் 180 பொது மக்கள் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த பலர் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல் காரணமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்காவின் போலியான போர் நிறுத்த அறிவிப்பை உடனடியாக வரவேற்றிருந்த சர்வதேச நாடுகள், சிறிலங்காவின் இந்த இராணுவ நடவடிக்கை தொடர்பாக கருத்தெதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள தமிழ் மக்களின் எழுச்சி அந்தத்தந்த நாடுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த எழுச்சியை தணிப்பதற்கு சிறிலங்காவிற்கு அழுத்தங்களைப் பிரயோகித்தபோதும், எஞ்சியிருக்கும் பகுதியையும் கைப்பற்றி அங்கிருக்கும் மக்களை அகற்றிவிட்டால் புலம்பெயர்ந்த மக்கள் போராட வேண்டிய நிலை ஏற்பாடாது என எதிர்பார்க்கும் சில சர்வதேச நாடுகள் சிறிலங்காவின் இந்த இறுதித் தாக்குதலுக்கு மௌனமாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன், போரை முடித்துவிட்டு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப்போவதாக சிறிலங்கா அரசு கூறிவருகின்மையை இந்த நாடுகள் வரவேற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சங்கதி

Link to comment
Share on other sites

பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது படையினர் எறிகணை பீரங்கித் தாக்குதல் நூற்றுக்கணக்கானோர் பலி பலர் காயம் :

vannishellattack.png

முல்லைத்தீவில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது இலங்கைப் படையினர் இன்று எறிகணை, பீரங்கி, 40 எம்.எம்.கெனோன், 50 கலிபர் இயந்திர துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 7.40 முதல் 10.40 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதுடன் காயமடைந்த பலர் வீதிகளில் தனிமையில் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இலங்கைப் படையினர், எறிகணை மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தி வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் மற்றும் பொக்கனைப் பகுதிகளில் மூன்று மணித்தியாலங்களில் சுமார் 180 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சேதவிபரங்கள் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமத்தாளன் வைத்தியசாலைக்கு அருகில் தமது நிலைகளில் இருந்து படையினர் மேற்கொள்ளும் துப்பாக்கிப் பிரயோகங்கள் காரணமாக காயமடைந்தவர்களை மருத்துமனைக்கு கொண்டு செல்வது தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவ பணியாளர்களால் வெள்ளைக் கொடிகளுடன் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட படுகாயமடைந்த பொதுமக்கள் பலர் வழியில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை வெள்ளைக் கொடியுடன் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற மருத்துவப் பணியாளர் ஒருவர் படையினரின் துப்பாக்கித் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். அவரின் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து உழவு இயந்திரம் மூலம் வெள்ளைக் கொடியுடன் ஏற்றிச்செல்லப்பட்ட பொதுமக்கள் 9 பேர் படையினரின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் தாக்குதல்கள் காரணமாக காயமடைந்த பொதுமக்கள் பலர் உதவிகளின்றி வீதிகளில் வீழ்ந்து கிடப்பதாகவும் இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் குடில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். வளைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தங்கியிருந்த மக்களே இதில் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கைப் படையினர் பல முனைகளில் இருந்து எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். முள்ளியவளை, நெடுங்கேணி, ஒட்டுச்சுட்டான், புதுக்குடியிருப்பு, தேவிபுரம், மற்றும் சாளைப் பகுதியில் இருந்து படையினர் பாதுகாப்பு வலய பகுதி மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை புதுமத்தாளன் வைத்தியசாலையில் இருந்து முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு செல்லும் வீதியை இலக்கு வைத்து 44 எம்.எம் கெனோன், மற்றும் 50 கலீபர் துப்பாக்கிகள் மூலம் படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு வலயப் பகுதிக்கு அருகில் உள்ள முன்னரங்கப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், படையினர் பொதுமக்கள் மீது தமது தாக்குதல்களை திருப்பியுள்ளனர்.

இதனிடையே செவ்வாய்க் கிழமை முதல் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள மக்கள் உணவு எதுவும் உட்கொள்ளாத நிலையிலேயே இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. பட்டினியால் குழந்தைகள் வாடுவதாகவும் இதனை வார்த்தைகளால் கூறமுடியாது எனவும் கூறப்படுகிறது.

அதேவேளை புதுமத்தாளன் வைத்தியசாலைக்கு காயமடைந்த 38 பொதுமக்கள் அவர்களின் உறவினர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தனர். எடுத்துச் செல்லப்பட்டவர்களில் 12 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக வைத்தியசாலை தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/tamil_news....=8423&cat=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(2ம் இணைப்பு)மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இன்று சிறிலங்கா உலங்குவானூர்தி- எறிகணை தாக்குதல்கள்: 219 தமிழர்கள் படுகொலை; 408 பேர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை, வான், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 219 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 408 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலயங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று புதன்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை, பல்குழல் வெடிகணை, வான், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் முள்ளிவாய்க்கால் மக்கள் குடியிருப்பு பகுதி மீது இன்று முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளையில் மாத்தளன், வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்று மாலை 6:00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி பீரங்கி, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்க பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களையும் சமநேரத்தில் படையினர் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல்களில் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 326 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றைய தாக்குதல்களில் 219 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 408 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டோரின் பெயர், விபரம்:

மருதமலை செவ்வானம் (வயது 05)

கனகையா பார்த்தீபா (வயது 10)

கதிரமலை மருதன் (வயது 11)

கருணை கோபிதாஸ் (வயது 13)

மூர்த்தி முகுந்தன் (வயது 14)

பேபிறோசா (வயது 34)

ரகுதாஸ் சுபோதினி (வயது 19)

மகாலிங்கம் கற்பகாதேவி (வயது 58)

பாலசுப்பிரமணியம் இலக்குமி (வயது 42)

மயில்வாகனம் புவனேஸ்வரி (வயது 53)

மகேந்திரன் தெய்வானை (வயது 50)

கறுப்பையா சத்தியகலா (வயது 24)

செல்வரட்ணம் கலாவதி (வயது 55)

செல்வராசா டயஸ்குமார் (வயது 20)

சிங்கராசா பிரதீபன் (வயது 27)

சிவகணேசமூர்த்தி பிரதீட்சா (வயது 02)

செல்வகதிர் பலோமினி (வயது 18)

சின்னராசா (வயது 70)

கனகரட்ணம் பானுமதி (வயது 38)

மயில்வாகனம் செபமாலை (வயது 58)

தங்கராசா பழனி (வயது 68)

பேச்சிமுத்து கண்ணாயி (வயது 48)

சோதரன் மருதமலை (வயது 45)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர், விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Link to comment
Share on other sites

ஒவ்வொரு நாளும் கொத்து கொத்தாக மக்களை அழித்தே ஒட்டு மொத்த மக்களையும் கொல்லப் போகின்றனர். தப்பித் தவறி மிஞ்சுகின்றவர்களும் அங்கவீனர்களாகவும் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவும் ஆகப்போகின்றனர்.

இறுதி யுத்தக் கனவில் நாமிருக்க, ஈற்றில் ஒட்டு மொத்த சிலுவையையும் சுமக்கின்றது வன்னி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
    • உந்த‌ இஸ்கோர‌ பார்த்து  ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது   கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை......................................... ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.