Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி முருகனுமா எமக்காக குரல் குடுக்க தயங்குகின்றார்?

Featured Replies

நேற்றைய தினம் சிட்னியில் இருந்து கன்பெராவுக்கு வாகனப்போராட்டம் எம்மக்களால் நடத்தப்பட்டது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு பக்கம் தமிழீழ கொடியும், மறுபுறம் ஒஸ்திரேலிய கொடியும் பறக்கவிட்டபடி 3 மணித்தியால பயணம் ஒஸ்திரேலிய தலைநகராம் கன்பெராவில் இருக்கும் பார்லிமன்ற் ஹவுஸை நோக்கி நகர்ந்தது. இப்போராட்டத்தில் மற்றைய மாகண மக்களும் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் இன்றோடு 12 நாளாக உண்ணாநிலையில் இருக்கும் சகோதரர் சுதாவும் பங்கெடுத்தார். மிகவும் முடியாத நிலையில் உள்ள சுதாவை ஒரு வாகனத்தில் படுக்க வைத்தே எடுத்து செல்ல முடிந்தது. தொடர்ந்து வாந்தி எடுத்தாலும் மனம் தளராது கொள்கையே முக்கியம் என சுதா போராட்டத்தில் பங்கெடுத்தார்.

எப்போதும் போல எம்பிகள் 'பார்த்திட்டு தான் இருக்கோம், செய்வதை செய்திட்டு தான் இருக்ககோம்' என சொன்னார்கள். பின்னர் உண்ணாநிலையில் இருக்கும் சுதா அவர்கள் தன்னை மக்கள் பார்க்கும் இடத்தில் தன்னை இருக்க விடுமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோள் மக்களை நோக்கியே இருந்தது. மக்கள் 'சிட்னி முருகன் ஆலயம்' தான் சரியான தேர்வு என முடிவு செய்தார்கள். அங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகியது...

3 மணித்தியாலங்கள் பயணம் செய்து முருகன் ஆலயத்திற்கு மக்கள் சுதாவை கொண்டு வந்தால் 9 மணிக்கு பூட்ட வேண்டிய கோவில் கதவு 8.30 மணிற்கே பூட்டப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகத்தினர் கவுன்ஸிலால் தமக்கு 9 மணிக்கு மேல் இருக்க அனுமதியில்லை என கூறி மறுத்தார்கள்.

வந்திருந்த மக்கள் ஈழத்தில் எம் மக்களில் நிலையை சொல்லி, சுதாவின் நிலையையும் சொன்ன பின்னரும் கோவில் நிர்வாகத்தினர் அசைந்து குடுப்பதாக இல்லை. அங்கிருந்த இளையோர் அனைவரும் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தார்கள். அவர்களை கட்டுப்படுத்தவே பெரியோருக்கு பெரும்பாடாக இருந்தது. மணித்துளிகள் செல்ல செல்ல மக்கள் கோவில் வீதியிலேயே இருந்து இடம் தருமாறு போராட தொடங்கிவிட்டார்கள். இறுதியில் இன்று மதியம் வரை தங்கலாம் என்றும் பின்னர் கவுன்ஸிலால் சொல்வதை கேட்க வேண்டும் என்றும் கூறி அனுமதித்தார்கள்.

வெறும் ஒரு கொட்டிலில் குளிர் தரையில் இந்த நிமிடம் வரை சகோதரன் சுதா தன் கொள்கையில் பிடிவாதமாக உள்ளார். குளிர் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது...சிட்னி மக்கள் காரணங்கள் சொல்லாது ஒரு சில நிமிடங்களாவது சுதாவோடு சிலவழிக்க வேண்டும். உண்ணாநிலை என்பது இலகுவான காரியமா? சுதா ஒரு போராட்ட வீரன்....அவருக்கு நிச்சயம் எம்மால் முடிந்த ஆதரவை வழங்க வேண்டும்.

இன்னும் சிறிது நேரத்தில் சுதாவை காண என் நண்பர்கள் இருப்பதால் சுதாவுக்கு நீங்கள் ஏதும் சொல்ல விரும்பினால், உடனே இந்த பதிவில் மறுமொழியாக எழுதுங்கள். பதிவை படித்து விட்டு சென்றுவிடாதீர்கள்....இது வழமையான பதிவல்ல..ஒரு தன்மானமிக்க தமிழனின் போராட்டத்தை பற்றியது....அவனுக்கு சில வரிகளை மறக்காமல் விட்டு செல்லுங்கள்...

http://thooya.blogspot.com/2009/05/blog-post_13.html

Edited by தூயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதம் இல்லாவிடில் கடவுளூம் இல்லை

  • தொடங்கியவர்

ம்ம்ம்ம்ம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதனை மதித்தால் மதங்கள் தேவையில்லை கடவுளுக்குக்கூட கட்டளை இடுகின்றார்கள் ஒருவிதத்தில கடவுளை வழிநடத்துகிறார்களோ என்ன

  • கருத்துக்கள உறவுகள்

இப்போராட்டத்தில் இன்றோடு மூன்றாவது நாளாக

பன்னிரண்டாவது நாள் தூயா....ஜயோ கோயிலுக்குள்ள அரசியல கொண்டுவராதயுங்கோ என்று சொல்லியிருப்பினமே...தேவை ஏற்படின் புத்த சிலையையும் வைப்பம் என்று சொல்லியிருப்பினமே...

சிட்னி முருகனுக்கு எங்க நேரம் எங்களுக்காக கண்திறக்க?...அவரும் அரசியல்வாதி போல பொறுமையாகத்தான் அறிக்கை விடுவார்...

சுதாவை உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சொல்லுங்கோ.....இவரின் உண்ணாவிரதத்தால் அவுஸ்திரலியா தனது மெளனத்தை கலைக்காது

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

சுதாவுக்கு என் பாராடுக்கள். உங்கள் தாயகத்துகான முயற்சி வெற்றி பெறட்டும் ஆனால் ..............மனிதம் மரணித்து விட்ட நாட்டில் இனதுவேசியின் ஆட்சியில் எதற்கும் அசைந்து கொடா சர்வாதிகாரி , உலகநாடுகளுக்கே தலை வணக்க மறுக்கிறான்........அஹிம்சை தோற்று விட்டது .நீதி தூங்குகிறது .........உலகம் தயங்கு கிறது எனவே உன் உயிரை காத்து வேறு வழியில் தாயகத்தை நோக்கி செயற்படு ...........

Edited by நிலாமதி

புலம் பெயர் நாடுகளில் கோயில் என்பது பணம் கொள்ளையிடும் உயரிய நோக்கங்களுக்காக கட்டப்பட்ட நிறுவனம்

அங்கு கடவுளையும் தேடாதீர்கள்

மனிதாபிமானம், இனமானம் என்பதனையும் தேடாதீர்கள்

  • தொடங்கியவர்

சுதா தன் முடிவின் மிகவும் உறுதியாக உள்ளார்.

மக்கள் நாம் தான், அவர் ஆரம்பித்த போராட்டத்தை வெளி கொண்டுவர வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் ஆலயம் வேற்று இனத்தவர்களால் நடாத்தப்படுகின்ற ஆலயமா?? அதாவது வெள்ளையர்களால்.. அல்லது தமிழர்களால் நடாத்தப்படுகின்றதா?? வேற்று இனத்தவர்களால் என்றால்.. அவர்களிடம் நிலைமையை விளங்கப்படுத்தி அதற்கான அனுமதியை கோருங்கள் ... தமிழர்களால் அது நடாத்தப்படுவதாக இருந்தால்.. கோயில் நிருவாகத்தினரிற்கு பல்லை உடைத்து கையில் கொடுங்கள்...ஏனென்றால் தமிழர்களிற்கு இனி விளங்கப்படுத்தத் தேவையில்லை..

நீங்கள் சொல்வதின்படி பார்த்தால் சுத்தமாக இது கோயிலே இல்லை. கோயில்கள் என்பது உண்மையில் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அந்தக்காலத்தில் உருவாக்கப்பட்டன என்று நான் சிறுவயதில் படித்து இருக்கின்றேன். இதனாலேயே கோயில்களில் மடங்கள் கட்டப்பட்டன, காணப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனால்... இன்றைய காலத்தில் கோயிலை வியாபாரமாக்கி வயிறுவளர்க்கும் கும்பல்கள் தமது வியாபார வர்த்தக நிலையமாக கோயில்களை பயன்படுத்துகின்றன. இப்படியான கோயில்களில் கடவுள் குடியிருப்பாரா? சிட்னி முருகன் சிட்னி முருகன் என்று எல்லாரும் ஊட்டி ஊட்டி வியாபாரிகளை வளர்த்துவிட்டீங்கள். இப்ப அனுபவியுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோயில்மணியகாரனை கூப்பிட்டு மறைவிடத்திலை வைச்சு பஞ்சபுராணத்தை நல்லவடிவாய் கொட்டனாலை சொல்லிக்குடுங்கோ.

சிங்களவனை விட உப்புடியான நாய்களைத்தான் முதலிலை அழிச்செடுக்கோணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொருவனிடம் கேட்டால் நல்ல பொல்லு ஒண்டு தருவார்.... நிறைய அள்ளி குடுத்து கொண்டு இருந்தவர் கொஞ்சம் முன்ன தான்...

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry514361

:o

அவர்களிடம் நிலைமையை விளங்கப்படுத்தி அதற்கான அனுமதியை கோருங்கள் ... தமிழர்களால் அது நடாத்தப்படுவதாக இருந்தால்.. கோயில் நிருவாகத்தினரிற்கு பல்லை உடைத்து கையில் கொடுங்கள்...ஏனென்றால் தமிழர்களிற்கு இனி விளங்கப்படுத்தத் தேவையில்லை..

நல்லாச்சொன்னீங்கள் அண்ணா !!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.