Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான் கீ மூன் இன்று கொழும்பு செல்கின்றார்: போர்ப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிடுகின்றார்

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்காவின் தலைநகர் கொழும்பை சென்றடைவார் என அறிவிக்கப்படுகின்றது. போருக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அவர் நேரில் பார்வையிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்குப் பயணம் செய்யும் இவர், முகாம் நிலைமைகளையும் அங்குள்ள தேவைகள் தொடர்பாகவும் ஆராய்வார். அதன் பின்னர் முன்னர் 'பாதுகாப்பு வலயம்' என அழைக்கப்பட்ட போர்ப் பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று பார்வையிடுவார் எனவும் ஐ.நா.வின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், பான் கீ மூனின் நிகழ்ச்சி நிரல், குறிப்பாக அவர் கொழும்பில் யார் யாரைச் சந்திப்பார் என்ற விபரங்கள் இதுவரையில் இறுதியாக்கப்படவில்லை எனவும் ஐ.நா.வின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்திருக்கின்றார்.

இருந்தபோதிலும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரை அவர் சந்திப்பார் எனத் தெரிகின்றது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் யாரைச் சந்திக்கிறாரோ இல்லையோ, தானும் சேர்ந்து நடத்தின இன அழிப்பில கொண்டுவந்த தமிழரின் குருதியைக் குடித்து, எலும்புகளைச் சுவைத்த பின் ஐநா திரும்பி எல்லாம் நன்றாக இருந்ததென அறிக்கை விடுவார். இவற்றை கணக்கில ஒரு கொண்டெயினர் அளவிலான தொகையைச் சிறிலங்கா போடும்.

இதுதான் இவரின்ரை பணி. இந்த மனிதநேயமற்ற பித்தர்களால் நாம் கடந்த ஐந்து மாதத்தில் அளப்பரிய உயிர்களை, 100,000 உயிர்களை இழந்திருக்கிறோம். அத்தோடு இலங்கையின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் செல்வதூடாக தமிழினத்தின் மனங்களை, ரணமாகியுள்ள மனங்களை, பிணமாக்குவதற்கே! 25000 ஆயிரம் உயிர்கள் துடித்த வேளையில், கோரிக்கை விட்டபோது மௌனமாக இருந்துவிட்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளச் செல்வதென்பது கிட்லரை விட மிக மோசமான மிருக மனம் படைத்தவனாகவே இவரைப்பார்க்க முடிகிறது.

Edited by nochchi

25000 ஆயிரம் உயிர்கள் துடித்த வேளையில், கோரிக்கை விட்டபோது மௌனமாக இருந்துவிட்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளச் செல்வதென்பது கிட்லரை விட மிக மோசமான மிருக மனம் படைத்தவனாகவே இவரைப்பார்க்க முடிகிறது.

கிட்லரை விட மோசமானவர்களின் பட்டியலில் நம்பியாரும் இடம் பெறுவான்.....கிட்லர் நல்லவன் என்று சொல்லவேண்டும் அவன் தன்னுடைய குணத்தை உலக்த்துக்கு காட்டினான் .ஆனால் இவர்கள் உலகுக்கு நல்லவர்களாக காட்டிக் கொண்டு மனிதாபிமானம் இல்லாமல் நடக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்லரை விட மோசமானவர்களின் பட்டியலில் நம்பியாரும் இடம் பெறுவான்.....கிட்லர் நல்லவன் என்று சொல்லவேண்டும் அவன் தன்னுடைய குணத்தை உலக்த்துக்கு காட்டினான் .ஆனால் இவர்கள் உலகுக்கு நல்லவர்களாக காட்டிக் கொண்டு மனிதாபிமானம் இல்லாமல் நடக்கிறார்கள்

தமிழின அழிவின் பிதாமகர்கள்,பாதகர்கள் . பதைபதைக்கத் தமிழினத்தை கொன்றுகொண்டிருக்கிறார்கள். மகிந்த - மன்மோகன்சிங்- சோனியா- விஜய் நம்பியார்- பான் கீமூன்.கூட்டணி

Edited by Valukkiyaru

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதாவது உலக நாடுகள் ,ஐக்கிய நாடுகளில் உள்ள தலைவர்களை தமிழ் மக்கள் புரிந்து கொண்டால் சரி :rolleyes:

கொடுமைக்காரர்கள் தான்.... வேறு கருத்தே இல்லை

ஆனால் நங்கள் எங்களின் பலத்தை கட்டியெழுப்பவேண்டும்.

காலம் சடுதியாக எங்களிடம் பாரத்தை ஒப்படைத்துள்ளது.

புலிகளின் ஆயுத பலத்துக்கு நிகராக எங்களின் அரசில் பலத்தை நாம் நிரூபிக்கவேண்டும்

உறவுகளே கடுமையாக உழைக்க தயாராகுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுமைக்காரர்கள் தான்.... வேறு கருத்தே இல்லை

ஆனால் நங்கள் எங்களின் பலத்தை கட்டியெழுப்பவேண்டும்.

காலம் சடுதியாக எங்களிடம் பாரத்தை ஒப்படைத்துள்ளது.

புலிகளின் ஆயுத பலத்துக்கு நிகராக எங்களின் அரசில் பலத்தை நாம் நிரூபிக்கவேண்டும்

உறவுகளே கடுமையாக உழைக்க தயாராகுங்கள்.

எந்த வழியில், எப்படி போராடவேண்டும்,யார் அதுக்கு தலைமை தாங்குவது என்று பொறுப்புள்ளவர்கள் மக்களுக்கு பதில் அளிக்கவேண்டுமே? சும்மா போய் கத்திட்டு வந்து என்ன பலன் எப்படி எல்லோரும் ஒன்று சேருவது? இப்படி நிறைய கேள்விகள் பதிலின்றி மக்களிடம் இருக்கே.......?

இணையத்தில் வந்து போராடுங்கோ என்று சொன்னவுடன் சரியா?

எங்களுக்கு தெரிந்ததை உங்களுக்கு தெரியாமல் நாங்கள் மறைக்கவில்லை

தொடரும் போராட்டத்தை நிறுத்தவும் தேவை இல்லை.

தலமை மற்றும் புதியமுறைகள் பற்றி விரைவில் தகவல்கள் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த வழியில், எப்படி போராடவேண்டும்,யார் அதுக்கு தலைமை தாங்குவது என்று பொறுப்புள்ளவர்கள் மக்களுக்கு பதில் அளிக்கவேண்டுமே? சும்மா போய் கத்திட்டு வந்து என்ன பலன் எப்படி எல்லோரும் ஒன்று சேருவது? இப்படி நிறைய கேள்விகள் பதிலின்றி மக்களிடம் இருக்கே.......?

இணையத்தில் வந்து போராடுங்கோ என்று சொன்னவுடன் சரியா?

ஆடறுக்கமுதல்...........அந்தரப்படாத

ையுங்கோ

போட்டிருக்கிறதைப் போய் எடுத்திட்டு வாறதில்லை போராட்டம். போராடவேணும்....

தகுந்தநேரத்தில் தகுந்தவர்கள் பதில் அளிப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.