Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு ஓய்வு கொடு, உன் கையை நீ உயர்த்து....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு ஓய்வு கொடு, உன் கையை நீ உயர்த்து

இளங்கவி- கவிதை

கவலைகளை நீ நீக்கு

உன் கடமைகளை நீ நோக்கு

தமிழினத்தை கரை சேர்க்க

துடுப்புகளை நீ தூக்கு...

தோல்விகளா நீ பெற்றாய்

நம் தலைவனிடம் எதை கற்றாய்..?

தணலிலே எரிந்தால் தான்

ஜொலிக்கும் தங்கமாய் உருப்பெறுவாய்...

துவண்டுவிட நீ வாழை மரமா...?

இல்லை.! இரும்பு தெறிக்கும் வீர மரம்..!

உன் நிலத்தில் வாழ்வில்லையென்றால்

என் நிலத்தில் உன் வாழ்விருக்கும்....

கலங்கரை விளக்கத்தால்

உனக்கு வழிகாட்டத்தான் முடியும்...

அந்தவழி தொடராவிட்டால்

இருள்தானே உன் வாழ்வில் மிஞ்சும்...

எடுத்த உன் ஆயுதத்தால்

உன் வீரம் சொல்லி நின்றாய்...

இப்போது உன் கடமை

அகிம்சையில் உரிமை வென்றிடுவாய்....

இதை விட்டுவிட்டால் செத்திடுவாய்

உன் இனம் இனி மிஞ்சாது...

உன் உரிமை இழந்துவிட்டால்

உன் புதை நிலங்கூட மிஞ்சாது..

புலிப்படையின் பொறுப்பினிலே

நீ ஓய்ந்துவிட்டாய் பலவருடம்....

உன்கையில் பொறுப்பு இப்போ

புலிகள் ஓய்வெடுக்கட்டும் சிலவருடம்....

தருணத்தில் செய்யாத

கடமையதும் தோல்வியது.....

உன் கடமை முடித்துவிட்டு

அதன் பின்னர் ஓய்வு எடு...

அறிவில் சிறந்தவன் நீ...

அன்பிலும் சிறந்தவன் நீ...

அடையாளமாம் உன் இனத்தின்

அதரப்பழசு வாய்ந்தவன் நீ....

ஆனாலும் ஓர் குறை

ஒற்றுமையில் குறைந்தவன் நீ...

அதையும் சரி செய்துவிட்டால்

உலகத்திலும் சிறந்தவன் நீ...

அதன் பின்னால் திரும்பிப்பார்

உலகத்துக்கே முதல்வன் நீ...

துரோகிகளின் சமன் பாடு

உன் உரிமைப் போரிலே அதை நீக்கு

அவரை எதிரிகளே முடித்திடுவார்

அவர்பேச்சை நீ நீக்கு...

நிற்காதே உன் பின்னால்

நெருப்பு எரிகிறது....

அணைக்கத் தவறாதே

உன் அனைத்துரிமை எரிகிறது...

உன்னால் முடியுமென்று

உறுதியுடன் போராடு....

உன் உரிமை கிடைத்ததுமே

எழுச்சியுடன் நீ பாடு...

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக உள்ளது இளங்கவி...

"புலிப்படையின் பொறுப்பினிலே

நீ ஓய்ந்துவிட்டாய் பலவருடம்

உன்கையில் பொறுப்பு இப்போ

புலிகள் ஓய்வெடுக்கட்டும் சிலவருடம்

தருணத்தில் செய்யாத

கடமையதும் தோல்வியது

உன் கடமை முடித்துவிட்டு

அதன் பின்னர் ஓய்வு எடு..."

ஆர்ப்பாட்டங்களில் இந்த வரிகளை அடிக்கடி வாசிக்க சொல்லி சொல்லலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ilaiyapillai

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

ஒவ்வொரு வரிகளும் அருமையான, தெளிவான கருத்தை வெளிப்படுத்தயுள்ளது.

இன்றைய காலத்தின் கட்டாயக் கடமையைக் கவியாக்கி உணர்த்தியாமைக்கு நன்றி இளங்கவி.

  • கருத்துக்கள உறவுகள்

கலங்கரை விளக்கத்தால்

உனக்கு வழிகாட்டத்தான் முடியும்...

அந்தவழி தொடராவிட்டால்

இருள்தானே உன் வாழ்வில் மிஞ்சும்...........

..எமக்கு உள்ள கடமை தொடர்ந்து முன்னெடுப்பது அதை செய்ய ஒன்றுபடுவோம்.....

  • கருத்துக்கள உறவுகள்

தணலிலே எரிந்தால் தான்

ஜொலிக்கும் தங்கமாய் உருப்பெறுவாய்...

அருமையான வரிகள். நன்றி இளங்கவி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோல்விகளா நீ பெற்றாய்

நம் தலைவனிடம் எதை கற்றாய்..?

தணலிலே எரிந்தால் தான்

ஜொலிக்கும் தங்கமாய் உருப்பெறுவாய்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிக்கு

எனது தாய் நாட்டின் விடியலுக்கான அன்றாட நிகழ்வுகளில் கலந்து கொல்லும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளை எழுத முயற்சிக்கிறேன்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

மிக்க நன்றிகள்....

ஒற்றுமையாக எங்கள் கடமையைச் செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்

நன்றாக இருக்கின்றது கவிதை. தகுந்த வார்த்தைகளின் சேர்க்கை மிக இலகுவாக மனதில் பதிய வைக்கின்றது

குட்டிக்கு

எனது தாய் நாட்டின் விடியலுக்கான அன்றாட நிகழ்வுகளில் கலந்து கொல்லும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளை எழுத முயற்சிக்கிறேன்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

பலரின் வாழ்த்துக்களை பெறும் நீங்கள், உங்கள் முயற்சியில் வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nunavilan

நாங்கள் வேட்ட வெட்ட தழைப்போம் விடுதலை கிடைக்கும் வரை. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலிக்கு

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள். மக்கள் சக்திதான் எங்கள் விடுதலைக்கு வழி சமைக்கும், அந்த மக்கள் சக்தியை ஒன்றுசேர்க்கும் முகமாகவே இக்கவிதை எழுதத் தோன்றியது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.