Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு எதிராகப் போரிட அமெரிக்காவின் உதவியுடன் பாகிஸ்தான் ஆயுத குவிப்பு: பென்டகன் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்கு எதிராக ராணுவத்தை வலுப்படுத்திக் கொள்ளவே அமெரிக்காவின் ராணுவ உதவியை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. புஷ் நிர்வாகம் வெளிநாடுகளுக்கு ராணுவ உதவி அளிக்கும் திட்டத்தின்கீழ் பாகிஸ்தானுக்கு ராணுவ ஆயுதங்களை அளித்தது. 500 கோடி டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் அப்போது கையெழுத்தானதாக பென்டகன் தெரிவித்தது.

அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் பெற்ற ராணுவ உதவிகள் எதுவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படவில்லை. மாறாக ராணுவ வலிமையை அதிகரித்து இந்தியாவுடன் போரிடவே அது பயன்படுத்திக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் தீவிரவாதிகளை ஒழிப்பதற்காகவும் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று 8 பி-3சி ரக கடலோரக் காவல் விமானங்களை பாகிஸ்தான் பெற்றது. இது தவிர, 5,250 டோ ரக ஏவுகணைகளை 18 கோடி டாலர் மதிப்பில் பாகிஸ்தான் பெற்றது.

இதில் பெரும்பாலானவை 2007-ம் ஆண்டில் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் எஞ்சியுள்ளவற்றை அனுப்பி வைப்பதற்கான நடைமுறைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவை தவிர, 5,600 ராணுவ ரேடியோ சாதனங்களை 16 கோடி டாலர் மதிப்பில் பாகிஸ்தான் பெற்றுள்ளது. அத்துடன் அதி நவீன டிபிஎஸ்-77 ரக கண்காணிப்பு ரேடாரை ஒரு கோடி டாலர் மதிப்பிலும் 6 போக்குவரத்து விமானங்களுக்கான பாகங்கள் 7 கோடி டாலர் மதிப்பிலும் பாகிஸ்தான் பெற்றுள்ளது. இவை தவிர ஏஎச்-1எஃப் எனப்படும் அதிநவீன போர்திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் 20 பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த நிதி உதவி மூலம் தனது எஃப் 16-ஏ பி போர் விமானத்தை 9 கோடி டாலர் மதிப்பில் நவீனப்படுத்திக் கொண்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கான ராணுவ உதவியாக பாகிஸ்தானுக்கு மட்டும் 47 கோடி டாலர் அளவுக்கு அமெரிக்கா அளித்துள்ளது.

தானியங்கி ஹோவிட்ஸர் ரக பீரங்கி வாங்க 8.7 கோடி டாலருக்கு ஆர்டர் அளித்துள்ளது. இதில் 5.3 கோடி டாலர் அமெரிக்க நிதி உதவி மூலம் கிடைக்கும். பாகிஸ்தானின் நிதி நிலை மோசமடைந்த பின்னர் இவை அளிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிடமிருந்து 18 "எஃப்-16' ரக போர் விமானங்களை வாங்க 143 கோடி டாலரை பாகிஸ்தான் அளித்துள்ளது. இது தவிர விமான பாகங்களுக்கு 6 கோடி டாலரை பாகிஸ்தான் அளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்த ஆயுதங்களில் மிகவும் முக்கியமானவை வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், 2,000 பவுண்ட் எடை கொண்ட 500 வெடிகுண்டுகள், 500 அதிநவீன வெடிகுண்டுகள் மற்றும் லேசர் வழிகாட்டுதலில் செயல்படும் 1,600 குண்டுகள், எஃப்-16 போர் விமானங்கள் ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.

மேலும் 29 கோடி டாலருக்கு கப்பல்களை தாக்கும் ஏவுகணைகளை தடுக்கும் ஹார்ப்பூன் சாதனங்கள் 100, வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைக்குத் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் கப்பலில் உள்ள துப்பாக்கிகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் ஆகியவற்றையும் பாகிஸ்தான் கொள்முதல் செய்துள்ளது.

http://www.swissmurasam.net/world/14776-20...7-03-47-02.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம். விரைவாக நடக்க இறைவன் அருள் பாலிப்பாராக

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரூபர்களான வடகிந்திய அனியாயப் பிசாசுகளுக்கு ஆண்டவன் நல்ல பாடத்தை கற்பிப்பானாக.

நல்ல செய்தி சிக்கிரமாய் நடக்க கடவுளை வேண்டுகிறேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
<_< அடாது செய்வார் படாது படுவார்..எத்தனை துரோகத்தை எம் ஈழ தமிழர்களுக்கு செய்த இந்த ஆரிய பயங்கரவாதிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். புகட்டுபவர்கள் எம் எதிரியானாலும் சரி.
  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு உண்மை என்னவென்றால்

யுத்தம் என்று வந்தால் சீனா மற்றும் ரசியாவினது பங்கு முக்கியமான இருக்கும்

இதற்குள் நாமும் புகுந்து விளையாடணும்

இதன்மூலம்

தந்தவனுக்கே அதை நாம் திருப்பிக்கொடுத்தவர்களாவோம

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு எதிராகப் போரிட அமெரிக்காவின் உதவியுடன் பாகிஸ்தான் ஆயுத குவிப்பு: பென்டகன் தகவல்

யார் குற்றினாலும் அரிசியானால் சீ மாவானால் சரி. <_<

  • கருத்துக்கள உறவுகள்

யார் குற்றினாலும் அரிசியானால் சீ மாவானால் சரி. <_<

சீ.....மாவா?

சீமானா?????

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது புலநாய்வு வழிகளில் உதவ முடியுமானால் நிச்சயமாக நாம் இதற்கு உதவ வேணும். ஒரு சின்ன சைஸ் "அணு குண்டு" மாதிரி ஏதாவது போட்டு விட்டால் மகிழ்வோம்! <_<

  • கருத்துக்கள உறவுகள்

சீ.....மாவா?

சீமானா?????

அரிசியாக இல்லாமல் மாவாக வேண்டும். <_<

நல்ல செய்தி தந்தமைக்கு நன்றிகள் ஜீவா.

எல்லாம் வல்ல அல்லா பாக்கிஸ்தானோடு துனையிருப்பானாக.

பாக்கிஸ்தான் இராணுவத்துக்கும்,அரசுக்கும் இராஜதந்திர ரீதியில் உதவ நாம் தயாராக இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களை அழிக்க இந்தியா தனது பகைவர்களான சீனா, பாகிஸ்த்தானுடன் ஒரு அணியில் நின்று இலங்கைக்கு உதவி செய்யவில்லையா? இது போல் இனி மேல் நண்பன் போல் இருந்து குழி பறித்த இந்தியாவை உதறிவிட்டு சீனாவுடனும் பாகிஸ்த்தானுடனும் சேருவதற்கு, இலங்கையுள்; ஒருமைப்பாட்டின் மூலம் உறவை அவர்களுடன் விருத்தி செய்து இந்தியா என்ற பெயரை முதலில் உலக வரைபடத்திலிருந்து எடுக்கவேண்டும். அதன் பின் தான் தமிமீழம் சாத்தியமாக பாடுபடவேண்டும். இந்தியா என்றொரு நாட்டை பிரித்தானியாவே உருவாக்கியது. அதங்கு முன் அப்படி ஒரு நாடு இல்லை.

இதனால் தமிழகமும் மானம் மரியாதையுடன் வாழ வழி வகுக்கும். மாநில அரசுகளைத் தனியரசாக்க வேண்டும். அப்ஆபாது தான் எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். நாம் செய்ய வேண்டிய முதல் வேலை இது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.