Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வதை முகாமில் வாடும் நம் உயிர்கள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வதை முகாமில் வாடும் நம் உயிர்கள்.....

கவிதை - இளங்கவி

அம்மா இந்த இடம் வேண்டாம்

நாங்கள் போவம் வாங்கோ....

சிணுங்கிறது ஓர் சிட்டு...

மலராத அம் மொட்டு.....

உன் அண்ணாவை காணவில்லை

அவன் சென்ற இடமும் தெரியவில்லை....

அவனின்றி நாம் மட்டும்

எங்குமே செல்வதில்லை........

...............................................

பெரும் முற்றுகையில் நடுவினிலும்

பெற்றோரின் முகம்பார்த்து சில காலம்....

சிரித்திட்ட மழலைகள்; இன்று

சிந்திய முத்துக்களாய்.....

பல முகங்களை பார்க்கவில்லை

தம்மை பார்ப்போரையும் கண்டதில்லை...

பாதியாய் பட்டினி வாழ்க்கையிலே

வழியின்றி தவிக்கின்றன.......

...................................................

குளித்திடும் வேளையிலே

மறைத்திடும் மானத்தை

எதிரியின் விறைத்திட்ட கண்கள்

விருந்தாகப் பார்ப்பதும்...................

அதற்காய் விம்மி விம்மி அழுவதும்......

விருப்பங்கள் ஏதுமின்றி

எதிரிக்கு விருந்தாகப் போவதும்........

அவர் பாய்ச்சிய நீரினால்

பாதியாய் நிறைவதும்.........

பழிகொண்ட அவள் உடலை

மண்ணுக்கு பலியாகக் கொடுப்பதும்.........

................................................................

வாலிப வயதினரை; அவனுக்கு

வலி தந்த புலிகளாய் அள்ளிச்சென்று..........

அங்கமெல்லாம் புடுங்கி

அதை காசுக்கு விற்பதும்............

அதை வாங்க வெளி நாட்டார்

பந்தியிலே நிற்பதும்......

.................................................

பல உறவு சுற்றி நிற்க

பாடைகட்டி எடுத்துச் சென்று..........

பக்குவமாய் எரித்து எங்கள்

பழங்கால பொக்கிஷங்கள்.........

பார்ப்பார் ஏதுமின்றி

வீதியிலே பிணங்களாய் கிடப்பதும்...........

அதை அனாதை பிணங்களாய்

எதிரிகள் எரிப்பதும்........

......................................................

தாகத்துக்கு நீரில்லை......

பசிபோக்க சோறில்லை.....

படுக்கையிலே படுத்து விட்டால்

உயிர் காக்கக் கூட மருந்தில்லை.......

ஒரு நேர உணவுக்கு

ஓர் நீண்ட வரிசை அங்கே.........

வரிசைகள் தவறவிட்டால்

பலருக்கு உண்ணாவிரதமங்கே......

...........................................................

எத்தனை சோதனைகள்....!

ஏன் இந்த வேதனைகள்...?

அழியும் எங்கள் இந்தத்துக்குள்

ஏன் ஐயா பிரிவினைகள்....?

..................................................

காத்திருந்த வீரர்கள்; இன்று

களத்திலே இல்லையடா ; அதனால்..........

நீர்த்துவிட்ட நெருபெல்லாம்

நின்று புகையுதடா..........!

போலியான நம் வாழ்வு

புதை குழியில் புதையுதடா........

நாம் புறந்தள்ளி நின்றுவிட்டால்

தமிழ் எழுத்துக்கூட இறக்குமடா....!

........................................................................

விதைத்த விதைகலெல்லாம்

முளைத்திடும் காலம் வரும்.......

அதுவரை மூச்சை நிறுத்தாமல்; புலத்திலே

போரிடு உன் நேரம் வரும்.......

விடுதலைத் தீ எரிவதற்கு

நீ எண்னையாய் இருப்பாயா.....?

உன் தூக்கம் கெடுத்தாலும்

விடுதலைக்காய் உருகி எரிவாயா....?

இளங்கவி

மீண்டும் ஒரு அற்புதமான கவிதையை உணர்வு வரிகளை

அள்ளி தந்த இளங்கவியே..............

தொடரட்டும் உங்கள் கவி திறன்..........தாய் மண்ணின் அவலத்தை

தெரியாமல்

புலத்தில் இருக்கும் எம்மவர்க்கு உங்கள் கவி

தெளிவாக பல உண்மைகளை உணர்த்தி நிற்கிறது.........

அன்புடன்

தமிழ்மாறன்

வதை முகாமில் வாடும் நம் உயிர்கள்.....

கவிதை - இளங்கவி

........................................................................

விதைத்த விதைகலெல்லாம்

முளைத்திடும் காலம் வரும்.......

அதுவரை மூச்சை நிறுத்தாமல்; புலத்திலே

போரிடு உன் நேரம் வரும்.......

விடுதலைத் தீ எரிவதற்கு

நீ எண்னையாய் இருப்பாயா.....?

உன் தூக்கம் கெடுத்தாலும்

விடுதலைக்காய் உருகி எரிவாயா....?

இளங்கவி

வதைமுகாமில் வதைபடும் எம்மினத்தின் அவலத்தைக் கவிவடிவில் இங்கே உருக் கொடுத்து இருக்கிறீர்கள்...

அதே நேரம், புலத்தில் உள்ளவர்களின் கடமையையும் உணர்த்தி இருக்கிறீர்கள்...

நன்றி இளங்கவி, உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும்....

மீண்டும் ஒரு நல்ல கவிதை தந்த இளங்கவிக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை முகம் காணும் முன்னே...

பத்துமாதங்கள் அங்கமேலாம் நோவேடுக்க

சுமந்த தாயவளின் கனகமுலை கண்டு...

தன்பசிதனை போக்குமுன்னே......

தொப்புள்கொடி அறுக்கும் முன்னே-மீண்டும்

மண்ணுக்கே உரமாகிப்போகும் அவலம் எங்கள்

நாட்டிலன்றிவேறு எந்த நாட்டிலும் இல்லை.

பெண்ணவளை தொட்டுதாலி கட்டியவன்-காணத

இடங்களெல்லாம் துலாவிப் பார்கிகிறான் -எதிரியவன்

இதுவும் எங்கள்நாட்டிலன்றி வேறு எந்த நாட்டிலும்-இல்லை

பெண் என்றால் பேயும் இரங்குமென்பார்-எங்கள் நாட்டில்

பேய்களும் வேடிக்கைதான் பார்க்குது..

பிரியமுடன்:யாயினி கனா.

  • கருத்துக்கள உறவுகள்

போலியான நம் வாழ்வு

புதை குழியில் புதையுதடா........

நாம் புறந்தள்ளி நின்றுவிட்டால்

தமிழ் எழுத்துக்கூட இறக்குமடா....!

இன்று நம் தமிழ் வாழ ..நம் இனம் வாழ எடுக்கும் முயற்சிகள் தான் நாளை நம் இனத்தின் இருப்பு க்கு கொடுக்கும் உத்தரவாதம் தமிழ்நிலைக்க இனம் நிலைக்க மொழி நிலைக்க இனத்துக்காய் குரல் கொடுப்போம்.நன்றி இளங்கவி

மீண்டும் ஒரு நல்ல கவிதை தந்த இளங்கவிக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thamilmaran

நன்றிகள் என் கவிதையையும் பாராட்டி கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டதற்காக, எங்கள் சொல்லமுடியாத சோகங்களை என்னால் முடிந்த வரைக்கும் தெரிவித்துக்கொண்டே இருப்பேன். மீண்டும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிக்கு

மிக்க நன்றிகள், என்னால் முடிந்தளவு மக்களின் அவலங்களையும் சொல்லி நம்மவரது கடமைகளையும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதனால் தான் இக்கவிதையை எழுதினேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, உங்களைப் போன்றோரின் விமர்சனங்கள் தான் என்னை மேலும் எழுத்தத் தூண்டுகின்றன......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

ஆம் நீங்கள் உங்கள் வரிகளில் சொன்னவைகளெல்லாம் ஈழத்தில் மட்டும் தான் நடக்கும், பால் குடித்தவண்ணம் இருந்த குழந்தை பலியாகிப்போனதும், பிறந்து தொப்புள் கொடி அறுக்கும் முன்னே எதிரியினால் அறுக்கப்பட்டதும், கணவனுக்கே காட்ட மறுக்கும் அழகெல்லாம் கண்டவர்கள் காண்பதும் இங்கு தான் நடக்கும்....

உங்கள் ஆதங்கங்களை வரிகளில் சொன்னவிதம் அழகு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, மேலும் என்னால் முடிந்தவரைக்கும் என் ஆக்கங்களைத் தந்துகொண்டேயிருப்பேன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனைக்குரிய விடயங்கள்... ஆனால் வாசிக்க தூண்டும் விதமாக எழுதி உள்ளீர்கள்..

வழக்கம் போல - அருமையான முயற்சி... பாராட்டுக்கள் இளங்கவி!

உங்களுக்கு கவிதை இலகுவாக, இயற்கையாக வருகிறது.... அது ஒரு ஆசிர்வாதம், ஆனால் அதை நீங்கள் நல்ல நோக்கத்துடன், நல்ல கருத்துக்களை சொல்ல பாவிப்பது தான் பாராட்ட பட வேண்டியது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ilayapillai

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, எனக்கு எழுத வேண்டுமென்ற ஆர்வம் வந்ததே எங்கள் தமிழீழத்தின் உணர்வுகளைப் பிரதி பலிப்பதற்காகவே. உதாரணத்துக்கு தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் எத்தனை வியக்கத்தக்க கவிஞர்கள் உருவாகிக்கொண்டிருக்க எங்கள் ஈழத்தைப் பொறுத்தவரை விரல் விட்டு எண்ணக்கூடிய கவிஞர்களே உள்ளனர்.

எங்கள் அவலத்தை, மல்லிகைபோல் மனம்வீசும் எங்கள் ஈழத்துக்காதலை, உலகமே வியந்து நின்ற எங்கள் வீரத்தை இப்படி எல்லாவிதமான உணர்வுகளையும் உண்மையிலே அனுபவித்த ஓர் ஈழத்து தமிழனால் தான் எங்கள் உண்மையான உணர்வுகளின் வெளிப்பாட்டை கொண்டுவர முடியும் என்ற நோக்கில் எழுதத் தொடங்கினேன் அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.