Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவி கேட்டு சிறிலங்கா பிச்சை எடுக்கப் போவதில்லை: மத்திய வங்கி ஆளுநர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதியுதவி கேட்டு யாரையும் கெஞ்ச மாட்டோம் - இலங்கை

வெள்ளிக்கிழமை, ஜூன் 12, 2009, 14:13 [iST]

கொழும்பு: சர்வதேச நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டாலர் கடனுவதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற பதட்டத்தில் இருக்கும் இலங்கை, யாரிடமும் நிதி கேட்டு பிச்சை எடுக்க மாட்டோம் என கூறியுள்ளது.

இதுகுறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நிவர்ட் கப்ரால் கூறுகையில், பிச்சைப் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு எந்த நாட்டிடமும், எந்த நிதியத்திடமும் போய் பணம் கொடுங்கள் என நாங்கள் கெஞ்ச மாட்டோம்.

சொந்தக் காலில் நிற்கும் தகுதி எங்களுக்கு உண்டு. பங்குச் சந்தைகள் மூலம் பணம் திரட்டிக் கொள்ளும் வாய்ப்புகளும் எங்களிடம் அதிகமாகவே உள்ளன என்று கூறியுள்ளார் அவர்.

இலங்கை நிதி நிலைமை மகா மோசமாக உள்ளது. அந்த நாட்டின் வெளிநாட்டு நிதியிருப்பு படு வேகமாக குறைந்து விட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம், சர்வதேச நிதியத்திடம் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தது இலங்கை.

ஆனால் போர் நடந்து வந்த சூழலில் இவ்வளவு பெரிய நிதியை அளிப்பது சரியாக இருக்காது என அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் பிரேக் போட்டு விட்டதால் சர்வதேச நிதியம் நிதி வழங்குவதை நிறுத்தி வைத்து விட்டது.

தற்போது அப்பாவி மக்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் மனிதாபிமான மீறல்கள், இனப்படுகொலை, போர்க்குற்றம் உள்ளிட்டவற்றை நடத்தியுள்ளதாக இலங்கை மீது கடும் குற்றச்சாட்டுக்கள் சரமாரியாக வந்து கொண்டுள்ள நிலையில் சர்வதேச நிதியத்தின் நிதி கிடைக்குமா, கிடைக்காதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

சர்வதேச நிதியத்தில் முக்கிய பங்குதாரராக இருக்கும் நாடு அமெரிக்கா . இலங்கைக்கு நிதி அளிக்க வேண்டுமானால் அமெரிக்காவின் சம்மதம் மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கடும் கோபமாக உள்ளது இலங்கை. நிதியுதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக கப்ரால் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், சர்வதேச நிதியத்தின் நிதியுதவி எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இலங்கையின் வடக்கில் இடம் பெயர்ந்து வந்துள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குத் தேவையானதை செய்ய எங்களிடம் போதுமான நிதி உள்ளது. மேலும் பல தரப்பிடமிருந்து நிதி வந்து கொண்டுள்ளது. எனவே பிரச்சினை இல்லை.

உண்மையைச் சொல்வதாக இருந்தால் சர்வதேச நிதியத்தின் நிதியுதவி கண்டிப்பாக தேவை என்ற கட்டாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. எங்களுக்கு அந்த நிதியுதவி தேவையில்லை என்று நான் கூற மாட்டேன். அதேசமயம், யாரிடமும் போய் நாங்கள் பிச்சை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் என்றார் கப்ரால்.

இலங்கைக்காக நிதி திரட்டித் தருவோம்: ஜப்பான்

இதற்கிடையே, போரால் ஏற்பட்ட அமளிகள் அடங்கி, நிலைமை இயல்பாக திரும்பிய பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இலங்கையை கட்டமைக்க சர்வதேச அளவில் நிதி திரட்டித் தரப்படும் என ஜப்பான் அமைதித் தூதர் யுஷுஷி அகாஷி கூறியுள்ளார்.

கொழும்பு வந்த அகாஷி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையின் போர் நிலைமை விரைவில் ஆய்வு செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அப்போது வசதி படைத்த நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரும்.

ஆனால் அதற்குள் நம்பகத்தன்மை வாய்ந்த நாடாக இலங்கை மாறி விட வேண்டும்.

இலங்கை யின் வட கிழக்குப் பகுதியை புனரமைக்க சர்வதேச அளவில் ஜப்பான் நிதி திரட்டித் தரும்.

ஏற்கனவே ஜப்பான், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை இணைந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளன என்றார் அவர்.

thatstamil

((ஆனால் அதற்குள் நம்பகத்தன்மை வாய்ந்த நாடாக இலங்கை மாறி விட வேண்டும்.))

பிச்சை, கேட்கமாட்டார்கள் மானம் ரோசமுள்ளவன் அதை செய்யமாட்டான், ஆனால் எங்கட மக்களைக் காட்டி அவசர நிவாரண" உதவி" கேட்கலாமல்லவா அது பிச்சையில்லையே.full idiots

Edited by sitpi

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் மாதத்தில் விண்ணப்பித்த நிதி கிடைத்து விட்டது போலும்.........அடுத்ததாக தமிழ் மக்களை காட்டி ...........போதுமென்ற அளவுக்கு வாங்கியாச்சு போல......

..என்ன இருந்தாலும் திமிர் பிடித்த கதைகளுக்கு லங்காபுரி விண்ணர்களை மிஞ்ச முடியாது .

நேரம் ஒரு கதையளப்பார்கள்.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத சொறிலங்க அரசாங்கம்!!!!

smiley-angry026.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத சொறிலங்க அரசாங்கம்!!!!

smiley-angry026.gif

:D

எங்க இருந்து situation க்கு ஏற்ற icons எடுத்து விடுறியள் குட்டி?

"ஒபாம சொல் கேளா சிங்களவன் IMF வெஃகின் குடிபொன்றி

போர்க்குற்றமும் ஆங்கே தரும். "

meaning - ஒபாமா சொல்லு கேளாத சிங்களவன் உலக நாணய நிதி உதவியை கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப்போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத போர்க்குற்றமும் வந்து சேரும்!!!

திருவள்ளுவர் இதை தான் IMF பாலில் சொல்லி உள்ளார்!!! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு மக்கள் இறந்த போது மௌனமாக ஆசி வழங்கியவர்கள் கடன் மட்டும் கொடுக்காமல் விடுவார்களா? தருணம் பார்த்து சிக்சர் அடிப்பார்கள் இந்த மேற்கத்தயர்கள்.smiley-ashamed006.gif

அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் தொகை தாமதமாகினாலும் சிறிலங்கா அரசாங்கம் வெளிநாட்டு உதவிகள் கேட்டு பிச்சை எடுக்கப்போவதில்லை என அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாம் கொடையாளி நாடுகளிடமோ அல்லது நிதி முகவர்களிடமோ பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்லப்போவதில்லை. அனைத்துலக நாணய நிதியம் 1.9 பில்லியன் டொலர் கடன் வழங்குவதை தாமதப்படுத்தினாலும் நாம் பிச்சை கேட்கப்போவதில்லை.

நாம் எமது சொந்தக் கால்களில் நிற்போம்; எமது சந்தை முதலீடுகள் மூலம் நாம் நிதியை பெற்றுக்கொள்வோம். எனினும் கடனை நாம் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

இருந்தபோதும் மத்திய வங்கி லிபியாவிடம் 500 மில்லியன் டொலர்களையும், வேறு ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத நாட்டிடம் மேலும் 500 மில்லியன் டொலர்களையும் பெற உத்தேசித்துள்ளது.

எனவே, அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் தேவையின் அவசரம் மெல்ல மெல்ல தற்போது குறைந்து வருகின்றது. ஆனால் அது தேவைப்படாது என நான் கூறமாட்டேன்.

ஓவ்வொரு தடவையும் நாம் யாருடன் பேசும் போதும் போர் நிறைவுபெற்றுவிட்டால் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என அவர்கள் தெரிவிப்பது உண்டு. ஆனால், தற்போது போர் முடிந்து விட்டது எனவே நாம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் எடுக்கவேண்டும் என்றார் அவர்.

புதினம்

:rolleyes:

எங்க இருந்து situation க்கு ஏற்ற icons எடுத்து விடுறியள் குட்டி?

நேரம் கிடைகேக்க இணையதில் கிண்டிப் பார்க்கிறது... smiley-computer005.gif

"ஒபாம சொல் கேளா சிங்களவன் IMF வெஃகின் குடிபொன்றி

போர்க்குற்றமும் ஆங்கே தரும். "

meaning - ஒபாமா சொல்லு கேளாத சிங்களவன் உலக நாணய நிதி உதவியை கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப்போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத போர்க்குற்றமும் வந்து சேரும்!!!

திருவள்ளுவர் இதை தான் IMF பாலில் சொல்லி உள்ளார்!!! :rolleyes:

இளையபிள்ளை நீங்கள் செய்திக்கு ஏற்றதுபோல் 'உங்கள்' குறள்களை அடிகடி எடுத்து விடுகிறீர்கள்... Thiruvalluvar.gif இவரின் பரம விசிறியோ...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவி அப்போ நக்கினதெல்லாம் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.