Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடாரத்திலும் மலர்கின்ற மலர்கள்......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூடாரத்திலும் மலர்கின்ற மலர்கள்

இளங்கவி - கவிதை

வதைமுகாம் கூடாரங்களில் அடைபட்டுக்கிடக்கும் குடும்பத்தின் குரலொன்றாய் இந்தக் கவிதை

அந்த இருண்ட இரவின்

இருளடைந்த கூடாரத்தில்....

சிறிதாக முனகிடும்

சிறுமியின் குரலொன்று....

''அம்மா வியர்க்கிறது

வெளியில் நிற்போம் வா....''

சும்மா கிடவடி சிங்காரி

சிலிர்த்துக்கிட்டு போறாவாம்

சிங்களவன் காத்திருக்கான்

உன்னை தூக்கிகிட்டே போவானாம்.....

நான் சின்னப்பொண்ணு தானே

எனக்கேது பயமம்மா....

உள்ளே கிடப்பதனால்

என் சட்டை நனையுதம்மா...

அடியேய்.. சொல்லுக் கேள்

உன் சட்டை வியர்வைக்காய்

சட்டென்று நீ வெளியே போனால்.....

சிறு பெட்டையென்றும் பார்க்காமல்

பிச்சிடுவான் ரொட்டியை போல்....

உன் சாமத்தியச் செய்தி கூட

சத்தியமாய் ஒருதருக்கும் சொல்லாமல்......

பைத்தியமாய் திரிகின்றேன்

உனக்கு பத்தியமும் கொடுக்காமல்.......

பல காலம் இங்கிருந்தால்

உன் பருவம் தெரிந்துவிடும்........

பாதகர் கண்களிலே

நீ பஞ்சுமிட்டாய் ஆகிடுவாய்........

போர் களத்துப் பூவொன்றை

பிணமாக ருசித்த இவன் ;வெடிக்காத ......

பருத்தியுனை கண்டுவிட்டால்

பஞ்சு பஞ்சாய் சிதைதிடுவான்......

நடுச் சந்தியிலே கிடப்பதற்கு

இது புலிகளின் கோட்டையல்ல

நடு வீட்டினிலே கிடந்தாலும்

நடுச் சந்திக்கு கொண்டருவான்..

கொஞ்ச நாள் பொறுத்திரடி

நாங்கள் காணிக்கே போயிடுவோம்

எங்களை விடுவிக்கும் பொறுப்புகளை

புலம்பெயர் தேசத்திலே

வைத்து விட்டோம்....

இளங்கவி

Edited by ilankavi

வணக்கம் இளங்கவி

மீண்டும் அருமையான கவிதை வரிகளோடு வந்திருக்கிறீர்கள்.

தேசத்தின் முரண்பாட்டை

ஒரு தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் சம்பாசணையோடு

எங்கள் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களை

ஏற்படுத்திய சம்பவங்களையும் இணைத்து

எழுதிய கவிதை மிகவும் நன்றாக இருந்தது.

இது கவிதை என்பதை விட அங்கு நடக்கும்

சமகால சம்பவங்கள் தான்.

quote name='ilankavi' date='Jun 17 2009, 11:59 PM' post='524217']

கூடாரத்திலும் மலர்கின்ற மலர்கள்

இளங்கவி - கவிதை

....

போர் களத்துப் பூவொன்றை

பிணமாக ருசித்த இவன் ;வெடிக்காத ......

பருத்தியுனை கண்டுவிட்டால்

பஞ்சு பஞ்சாய் சிதைதிடுவான்......

கொஞ்ச நாள் பொறுத்திரடி

எங்களை விடுவிக்கும் பொறுப்புகளை

புலம்பெயர் தேசத்திலே

வைத்து விட்டோம்....

புலம் பெயர் எம்மவர்கள் மத்தியிலே

இவ்வரிகள் கண்டிப்பாக சென்றடைய

வேண்டியவை.

வே.பாலகுமார் அடிக்கடி சொல்லுவார்

ஒரு கவிஞனுக்கு உள்ள அழகு

இறந்தகால,நிகழ்கால,எதிர்கால நிகழ்வுகளை

சமகால நிகழ்வுகளாக வரலாற்றில் பதிப்பதுதான்.

உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகிறேன்.

நன்றி.

Edited by marumakan

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாள் பொறுத்திரடி

எங்களை விடுவிக்கும் பொறுப்புகளை

புலம்பெயர் தேசத்திலே

வைத்து விட்டோம்...

.மீண்டும் நன்றி இளங்கவி ............எதிர்கால நம்பிக்கையுடன் முகாம்களில் வாழும் நம் இனத்தின் சோகம்

...சொல்லிச்சென்ற விதம் அழகு.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

marumakan

அந்த முகாங்களில் நாள் தோறும் நிகழும் சம்பவங்கள் என் நாளும் மனதைப் பாதித்த வண்ணமே உள்ளது. சாதரணமாக நாங்கள் வாழ்ந்த தெருக்களிலேயே ஒரு நாளுக்கு சில நல்ல காரியமும், சில கெட்ட காரியமும் நடந்துகொண்டிருந்த வேளையில், இந்த முகாமில் இங்கு பல ஊரே தங்கியிருக்கும் போது எத்தனை நல்லதும் கெட்டதுமான காரியங்கள் நடக்கும். நான் கவிதையில் குறிப்பிட்டதைப் போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அவை மறைக்கப்பட்டே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மேலும் நீங்கள் குறிப்பிட்ட பாலகுமாரன் அண்ணாவின் கருத்துப் போல் நானும் எங்கள் அவலங்களை என்னால் முடிந்தவரை எல்லோருக்கும் எடுத்துச் சொல்வேன்...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை பூக்கள்.......

தாங்கள் பூத்து விட்டது தெரியாமல்...

வயிறாற உண்ணமுடியாதவர்களாய்

தங்கள் செல்ல சிட்டு பூப்பெய்திய.....

செய்தியை நான்கு பேருக்கு சொல்லமுடியாமல்...

ஆயிரமாயிரம் உறவுகளின் நித்திய வாழ்வு

நித்தமும் களிகிறது....இல்லை

இல்லை கூடாரத்தில் மலர்கின்ற மலர்களாய்.......

மிகவும் நன்றி கவி உங்களுக்கு.புலம் பெயர்வாழ் உறவகள் எம்மால் ஏலுமானவற்றை எல்லாம் செய்வோம்.

பிரியமுடன்: யாயினி கனா.

இன்றைய ஈழத்து தாய்மாரின் உள்ளத்து ஏக்கத்தை அப்படியே சொன்ன வரிகள்

அழகு அழகு ............

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நன்றாகத் தான் எழுதியிருக்கிறிங்கள் இளங்கவி

தொடர்ந்து நல்ல படைப்புக்களாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் இளங்கவி. கவி மூலம் நிகழ்கால செய்தி சொல்லும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

நன்றி

தொடர்ந்து நல்ல படைப்புகளாகவே கொடுக்கிறிர்கள்... உங்கள் ஆக்கங்கள் தொடர வாழத்துக்கள் இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, எங்களுக்கு வாழ்க்கையே சோகமென்றான பிறகு அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

என் கவிக்கு உங்கள் கருத்தே ஓர் கவிதை போலாகிவிட்டது... மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nige

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, என்னால் முடிந்த வரைக்கும் எம் மக்களின் அவலங்களை சொல்லுவேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீயாவுக்கு

மிக்க நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு....

நிச்சயம் என்னால் முடிந்தளவுக்கு நல்ல படைப்புக்களைத் தருவேன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

என் கவிக்கு பாராட்டுச் சொல்லும் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி

உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்... என்னால் முடிந்தவரை நல்ல படைப்புக்களாகவே தருவேன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவிக்கு எனது மனமார்த பாராட்டுகள் உங்கள் படைப்புகள் யாவும் நன்றே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

analai theevaan

மிக்க நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.