Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண கிழவனின் புலம்பல்......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாண கிழவனின் புலம்பல்

கவிதை - இளங்கவி

ராஜபக்க்ஷ மாத்தையா

அடிசிட்டாராம் புடிச்சிட்டாராம்

புலிகளையே மடக்கிட்டாராம்;என்று

வெடியெல்லாம் வெடித்து அங்கே

தமிழனை வீதியிலே போட்டிட்டாங்கள்....

வன்னி தமிழரெல்லாம்

வாழ்வு இழந்து நிற்கையிலே

அவசரமாய் தேர்தல் வைக்க

அந்தக் கூட்டம் அலையுறாங்கள்

அதுக்காய் வால்பிடிச்சு

அங்கே இடம்பிடிக்க

கறிக்கடை காகங்களாய்

கண்டதெல்லாம் அலையுதுகள்....

வட்டுக்கோட்டை தீர்மானத்தில்

ஈழமென்று தீர்வை வைக்க

தமிழர்கள் எதிர்கட்சியாகி; எங்கள்

ஈழத்தீர்வை சொல்லியிருந்தோம்...

பழைய குருடி கதவை திறடி;என்று

எங்கள் பழையவர்கள் மறுபடியும்

பதவிக்கு ஆசைப்பட......

தமிழனை காக்கவென்று

தரணியிலே அவன் உதிச்சான்....

தமிழனை வித்தவங்கள்

தானொன்றாய் சாய்ந்து விழ.....

தரித்திரமாம் எங்கள் சரித்திரம்

தானாகவே மாறிவிட.......

நாம் இங்கே அடங்கியிருக்க

தம்பி அங்கே ஆட்சிசெய்தான்...

அதுகூட பொறுக்கவில்லை

அ நியாயப் படுவாருக்கு.....

இரத்த ஆறுகளை; அங்கே

இரு நாளில் ஓடவைச்சான்

எண்ணில்லா செத்தவீடை

நாம் அழ முன்னே முடிச்சுவைச்சான்....

அல்பிரடு துரையப்பா

அதன் பின் சில அசிங்கங்கள்

அதன் பின்னர் பல குப்பை;எங்களை

இப்படி பாடாய் படுத்துறாங்கள்....

அடிமையாய் வாழ்ந்து வாழ்ந்து

அரைக்கூனல் ஆகிவிட்டேன்

அழக்கூட முடியாமல்

என் கண்ணிரெல்லாம் சிந்திவிட்டன்...

நயினா தீவு அம்மளாச்சி; இந்த

நாசமாய் போனாரை கேளாயோ....

நான் சாக முதலெனக்கு

என் சுதந்திரத்தை காட்டாயோ....

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாண கிழவனின் புலம்பல்

கவிதை - இளங்கவி[/

வன்னி தமிழரெல்லாம்

வாழ்வு இழந்து நிற்கையிலே

அவசரமாய் தேர்தல் வைக்க

அந்தக் கூட்டம் அலையுறாங்கள்

அதுக்காய் வால்பிடிச்சு

அங்கே இடம்பிடிக்க

கறிக்கடை காகங்களாய்

கண்டதெல்லாம் அலையுதுகள்....

......................................

நயினா தீவு அம்மளாச்சி; இந்த

நாசமாய் போனாரை கேளாயோ....

நான் சாக முதலெனக்கு

என் சுதந்திரத்தை காட்டாயோ....

இளங்கவி

மீண்டும் அற்புதமான கவிதை அண்ணா. யதார்த்தமான வரிகள்.

கறிக்கடை காகங்களாய் கண்டதுகளெல்லாம் அலையுதுகள்

இன்றைய நிதர்சனம்.

வாழ்த்துக்கள் தொடர்ந்து அற்புதமான கவிகளை படையுங்க.

'இரத்த ஆறுகளை; அங்கே

இரு நாளில் ஓடவைச்சான்

எண்ணில்லா செத்தவீடை

நாம் அழ முன்னே முடிச்சுவைச்சான்...."

பாராட்டுக்கள் இளங்கவி. உங்கள் ஆக்கங்கள் அணைத்தும் அருமை.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவி உங்களின் அற்புதமான கவிதைகளுக்கு.

இத்தனை ஆயிரம் மனித உயிர்களை

காக்கவில்லையாம் ஒரு அம்மாளச்சியும்

இனியாரை காக்கபோகினம்,அவையும்

முகமன் தான் பாக்கினம்...

பிரியமுடன்:யாயினி கனா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவுக்கு

மிக்க நன்றிகள்... முடியுமான நேரங்களில் எனது படைப்புக்களைத் தொடர்வேன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

மிக்க நன்றிகள் தொடர்ந்து எனது ஆக்கங்களை படித்து பாராட்டுவதற்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

வயோதிபர்கள் என்ன பிரச்சனையென்றாலும் கடவுளை நம்புவது அதிகம் தானே, எனது கவிதையிலும் வயோதிபர் புலம்புவதாக எழுதிய படியால் கடவுளையும் சேர்க்கவேண்டியதாயிற்று....

எங்கள் நம்பிக்கையைஇன்னொருவரிடம் திணித்துவிட்டு நாங்கள் சோம்பேறிகளாக இருந்ததின் பயனை இப்பத்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் உண்மைகள் அடங்கிய நல்ல ஓர் படைப்பு இளங்கவி!

பாராட்டுக்கள்

:huh:

வட்டுக்கோட்டை தீர்மானத்தில்

ஈழமென்று தீர்வை வைக்க

இவங்களை எதிர்கட்சியாக்கி

எங்கள் தீர்வை சொல்லியிருந்தோம்...

காலத்தின் கட்டாயம் .அவர்கள் வாக்கு கேட்டு நிற்கத்தான் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி உங்கள் எழுத்துநடை எனக்கு பிடிச்சிருக்குது.

உண்மையைச் சொன்ன கவி வரிகள்

தரமோ தரம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கவிதையை படித்த திருப்தி கிடைத்தது , வாழ்த்துக்கள் இளங்கவி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ilayapillai

மிக்க நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Jil

எனது கவிதையில் சிறு திருத்தம் செய்துள்ளேன்... நான் சொல்லவேண்டிய எங்கள் பழைய அரசியைவாதிகளை பற்றி அது என் வரிகளின் தவற்றால் அர்த்தம் மாறிவிட்டது. எனது கவிதையில் வரும் வயோதிபர் தனது கால அரசியல்வாதிகளை விமர்சித்து அவர்களின் தவறால் எங்கள் போராட்டம் அடுத்த நிலைக்குச் சென்றதாகவே சொல்லியிருந்தேன்...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தீயா உங்கள் பாராட்டுக்கு.....

ஒவ்வொரு முறையும் கவிதை எழுதும் போது தமிழரின் நிலமைகளை எப்படி வித்தியாசமான முறையில் சொல்லமுடியும் என்பதை யோசித்தே எழுதுவேன், உதாரணம் எங்கள் ஒப்பாரி முறை போன்றவை....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சிறிக்கு

உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.