Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நாங்கள் ஆள்வதற்காக அல்ல மக்களாகிய நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகவே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்" ‐ கூறுகிறார் டக்ளஸ் தேவானந்தா:

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றியைத் தரும் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு கட்சிகளும் வௌ;வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் குறித்த இலக்கை அடைய வேண்டும் என்ற பொதுநோக்கில் ஒன்று திரண்டு நிற்கின்றன. "நாங்கள் ஆள்வதற்காக அல்ல மக்களாகிய நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகவே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை தாம் ஏற்றிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யாழ் நகர் ஸ்ரீதர் திரையரங்கில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் மக்கள் மத்தியில் யாழ் மற்றும் நகரசபைத் தேர்தலுக்கான தமது சின்னம் தொடர்பான கருத்தை வெளியிட்டார். அவ்வேளையிலேயே வெற்றிலைச் சின்னத்தில் தாம் போட்டியிடுவது தொடர்பாக எடுத்த முடிவு தொடர்பாக இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈபிடிபியினராகிய நாம் தமிழ் பேசும் மக்களுக்காக உள்ள ஒரேயோரு தனித்துவமான கட்சி என்ற வகையில் எமது தனித்துவங்களோடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு தோழமைக் கட்சியாக இணைந்து எமது மக்களின் லட்சியக் கனவுகளை விரைவாகவும் இலகுவாகவும் எட்டுவதற்காக இந்தத் தீர்மானத்தை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கில் திரண்டிருந்த கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலேயே வெற்றிலைச் சி;ன்னத்தில் யாழ் மற்றும் நகரசபைத் தேர்தலுக்காக போட்டியிடும் அறிவிப்பினை அவர் வெளியிட்டார். யாழ்ப்பாணம் மாநாகர சபைக்காக 29 வேட்பாளர்களின் பட்டியல் நாளைய தினம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இணைந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. 29 வேட்பாளர்கள் கொண்ட கட்சியில் 20 பேர் ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி எனவும் ஏனைய 9 பேர் பொதுசன ஐக்கிய முன்னணியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று வவுனியாவில் 6 பேர் ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தப்படவுள்ளனர். எனினும் இந்தக் கட்சியில் வேட்பாளராக இணைந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுவதாகவும் எனவே இன்றிரவே கட்சியின் முதன்மை வேட்பாளர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.

குறிப்பாக இந்தத் தோத்தலில் போட்டியிடும் கட்சிகளில் கூடுதலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்களே தலைவர் என்ற அடிப்படையிலேயே இந்த வெற்றிலைச் சின்னத்தில் தாம் போட்டியிட முடிவெடுத்ததாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். தற்போது யாழ் நகரில் தங்கியிருக்கும் டக்ளஸ் தேவானந்தா மக்கள் நலத் திட்டம் தொடர்பாக பல அறிவிப்புகளையும் பிரசன்னங்களையும் மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் இன்று காலை கோண்டாவில் டிப்போவிற்கு 5 பேரூந்து வண்டிகளை உள்ளுர் சேவைகளுக்கா வழங்கிய அவர் பிற்பல்; யாழ் செயலகத்தில் விவசாயிகளுக்காக உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

http://www.globaltamilnews.net/tamil_news....11009&cat=1

உனக்கே சுதந்திரமில்லை. உன்ர சின்னத்தில போட்டியடவே உன்னை மகிந்த விட்றானில்லை. அதுக்க எங்களுக்கு சுதந்திரம் வேண்டிந்தரப்போறாயோ எச்சில் பொறுக்கி நாயே.

முதல்லை முகாமில வாடுற மக்களுக்கு மூன்று நேர சாப்பாடாவது உன்னால கொடுக்க முடியுமே. அதை முதல்ல செய்து காட்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவன் பின்னே நாயும் போகாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி, தாடித்தம்பி வழக்கமான "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" புராணத்தை விட்டிட்டுது. மயில்சாமி (மன்னிக்கவும், பசில்) சொல்லிப்போட்டுது போலை இனிமேல் பேச்சுக்குக்கூட....அந்தச்சொற்

யாழ்ப்பாணத்தில் ஐந்து வருடமா உன்னுடைய ஆட்சியின் கீழ் நாம் வாழ்ந்த சுதந்திரத்தை என்னவென்று சொல்வது மாமாப்பயலே.இந்திய அட்டூழியப் படைகளுக்கு அன்று கூட்டிக் கொடுத்து வாழ்ந்தீர்கள். இன்று சிங்களவனுக்கும் அதையே செய்யப் போகின்றீர்களா?

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

மிருகாக்காட்சிசாலைக்கு ச்றுவன் ஒருவன் சென்றிருந்தான்,அங்கு மிருகங்கள் எல்லாம் சிரித்து சந்தொசமாக இருந்தது ஆனால் ஒரு களுதை மட்டும் தன்பாட்டில் அமைதியாக இருந்தது ஏன் களுதை மட்டும் அப்படி இருக்க மற்ற விலங்குகள் எல்லாம் சிரித்துக்கொண்டிருக்கின்றன என்று மேற்பார்வையாளரிடம் வினவினான் சிறுவன் அதற்கு மேற்பார்வையாளர் கூறினார் சிங்கம் ஒரு நகைசுவை ஒன்று சொன்னது அதனாலேயே மிருகங்கள் எல்லாம் சிரிக்கின்றன ஆனால் இந்த களுதை இப்படி அமைதியாக இருப்பதன் காரணம் ஏன் என்று தெரியாது என்று கூறினார்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் சிறுவன் மிருகக்காட்சிசாலைக்கு சென்றான்,அங்கு எல்லாமிருகங்களும் அமைதியாக இருக்க களுதை விழுந்து புரண்டு அனியாயத்துக்கு சிரித்துக்கொண்டிருந்தது வினா குறியுடன் பார்த்த சிறுவனிடம் மேற்பார்வையாளர் கூறினார் அது ஒன்றுமிலை போன வாரம் சிங்கம் கூறிய நகைசுவை இப்பொழுதுதான் களுதைக்கு புரிந்துள்ளது என்றார்.

எதிரியுடன் போட்டி போட்டுக்கொண்டு எமது மக்களுக்கு தாங்கொணா அழிவைக்கொடுத்தவன் எவ்வாறு அம்மக்களுக்கு எப்படி நன்மை செய்வான்,90 களில் தீவகத்தின் மொத்த சனத்தொகையே 4000 ஆக இருக்க 10000 வாக்குகளால் வெற்றி பெற்ற வீரன் இவரது ஜன நாயகம் கேள்விக்குறியாகி விடும் எதிர் காலத்தில் ஒட்டுக்குளுக்களிடமிருந்து ஆயுதங்களை மீளப்பெறுவதில் சிங்களம் ஆர்வம் காட்டுகிறது அதன் பின் பொதுமக்களின் வாக்குகளை எவ்வாறு பெற முடியும் இவர்களால்?

அமெரிக்காவில் பணியாளர்களாக வேலை செய்வதற்கு ஆபிரிக்காவில் இருந்து மக்கள் அடிமையாகக் கொண்டு வரப்பட்டு சந்தைகளில் விற்பார்கள் வெள்ளையர்கள் ஒரு விற்கப்படும் கறுப்பின மனிதனின் தாங்குதிறனை வாங்குவர்களுக்கு தெளிவுபடுத்தும் அளவுகோல் கசையடிதான் அதைப்பார்த்து மனம் தாளாமல் வெள்ளையின சிறுவன் ஒருவன் கதறியழுதான், அவன் பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகிய ஏபிரகாம் லிங்கன் வேற்றின மனிதனுக்கு ஏற்படும் அனியாயத்தைக்கூட தாங்க முடியாத மனிதம் அவரை உயர்ந்த மனிதனாக்கியது அப்படியான ஒரு சூழ் நிலை எமது தேசியத்தலைவருக்கும் சிறு பராயத்தில் ஏற்பட்டதாக அறிந்திருக்கின்றேன் எமது மக்களின் நிலை கண்டு அறியாப்பருவத்திலேயே துடித்த அந்த உயர்ந்த மனிதர் சுய வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் உயரிய நெறியைக்கடைப்பிடித்தவரை தமிழின தலைவனாகப்பெற்றதில் தமிழினத்திற்கே பெருமை.

எமது மக்களின் இன்றைய இழி நிலையை மாற்ற முடியாத இந்த பாராளுமன்ற பதவிகளை வைத்திருப்பதால் யாருக்கு நன்மை என்று அனவருக்கும் தெரியும்.பிறகும் இந்த மக்கள் இவர்களுக்கு எதற்காக வாக்கு போடவேண்டும்

இந்திய அரசியல் தலைவர்கள் போன்ற கேவலமான அரசியல்வாதிகள் இவர்கள்,

துரோகிகளை தலைவர்கள் ஆக்க முடியாது,ஆதலால் தமிழர்கள் இந்த தேர்தலை முற்று முழுதாகப்புறக்கணிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை விரும்பி ஒன்றை விட்டிட்டீங்க..

நெடுந்தீவில் தனியாட்சி :)

சிராந்தி ராசபக்சவுக்கு புடவை தோய்க்கும் நிலைக்கு உன்னை இட்டுச் செல்வார்கள்.

Edited by sitpi

  • கருத்துக்கள உறவுகள்

வீணையை மகிந்த பறித்துவிட்டாரா? இது என்ன புதுசா வெத்திலை.... அரச இலை சின்னத்திலேயே கேட்டிருக்கலாம் ஆளுவோரை மகிழ்வித்தாகவும் இருக்கும் இனி மாற்ற வேண்டிய அவசியமும் இல்லாதிருந்திருக்கும். இனி வெத்திலைக்கு எப்ப ஆப்போ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீணை உடைந்தது வெற்றிலை துளிர்த்தது. :huh::unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினம் இவருக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் அரசு இந்த ஒட்டுக்குழுக்கள் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக உலகுக்கு மேற்கொள்ள இருக்கும் பிரச்சாரம் முறியடிக்க பட வேண்டும். அதாவது பார் தமிழரை அழித்தோம் என்று குறை கூறுகிறீர்கள். ஆனால் எனது கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளார்கள். எமது நடவடிக்கைக்கு தமிழ் மக்கள் ஆதரவு தந்துள்ளார்கள் என்ற மகிந்த குடும்பத்தின் பொய்ப்பிரச்சாரம் முறியடிக்கப்பட வேண்டும். டக்ளஸ் கோயிலை கட்டலாம், குளத்தை கட்டலாம் தனது சுயநலத்துக்காக மட்டுமே. இது வரை வவுனியாவில் வாடும் மக்களுக்கு எந்த உதவியும் இவரால் வழங்கப்படவில்லை. "மன்னிப்போம் மறப்போம்" என்று அறிக்கை மட்டும் விட்டுவிட்டு மகிந்தவின் காலடியில் விழுந்து விட்டார்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு தமிழக தேர்தல் பிரதிபலிப்பு போல ஆகாமல் இருந்தால் சரி..!

இதுவும் ஒரு தமிழக தேர்தல் பிரதிபலிப்பு போல ஆகாமல் இருந்தால் சரி..!

அங்கு தேர்தல் நடக்க போவதில்லை. அவர்களே பயமுறுத்தி வோட்டுகளை போடு விக்க போறார்கள்.

உண்மையான தேர்தலாக ஒரு போதும் இருக்க போவதில்லை

நம்பி பயன் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.