Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வசைபாடும் கவிக்குயில்கள்...!

Featured Replies

சூப்பரான கவிதையப்பு. இந்தக்கவிதையை யாழில் படைத்தமைக்காக உங்களுக்கு யாழ் காளமேகப்புலவர் என்கின்ற பட்டம் தந்து கெளரவிக்கின்றோம். :(

பல்லாயிரம் ஆண்டுகளாம் புகழ்பூத்த முற்குடியாம்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் நற்குடியாம்

தொல்தோன்றி மண்கண்டு மன்கண்டும் பயனில்லை

சொல்கொண்டு இணைவர்தம் சிரமெடுப்பர் காலமிதில்

ஒருவிரல் வெளிச்சுட்டி மூவிரல் தனைச்சுட்டி

தரையினிலே உடல்பரப்பி உமிழ்கிறார் சிரம்நிமிர்த்தி

வருவதுவும் பெயரல்ல தருவதுவும் புக‌ழ‌ல்ல‌

திரும்புவது உமிழதுவே மூவிரலும் குறிப்பதுவே

க‌ள‌ம‌த‌னில் உரையாட‌ல் க‌னிகின்றார் தின‌ம்தானும்

த‌ள‌ம்மாறித் த‌ட‌ம்மாறிப் புனைவாரே வ‌சையாட‌ல்

களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் ம‌றுபோக்கு

உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ

எண்ண‌த்தில் வந்தவுடன் கிண்ண‌த்தில் த‌ந்துவிட்டார்

உண்மைநிலை உணர்வின்றி வ‌சைபாடிச் சென்றுவிட்டார்

திண்ணையதன் உரைகொண்டு மறுபக்கம் அறிவீரோ

கண்கொண்ட மாயையினால் க‌ள‌ம்மாறிக் கொல்வீரோ

நீயென்ன‌ செய்தாய் என‌க்கேட்கும் க‌ண‌மதுவும்

தாயென்ன‌ செய்தாள் க‌ருக்கொள்ள‌ என்ப‌துவும்

பேயனைய மாந்தர்தம் வினவிவரும் மொழியலவோ

தீய‌னைய கீழ்ச்சொல் தனைத்தாழ்த்தும் அறிந்திலை‌யோ

:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரான கவிதையப்பு. இந்தக்கவிதையை யாழில் படைத்தமைக்காக உங்களுக்கு யாழ் காளமேகப்புலவர் என்கின்ற பட்டம் தந்து கெளரவிக்கின்றோம். :D

நன்றி மாப்பிளை..!

எல்லாப் புகழும்..?? :rolleyes::(:(

  • 3 years later...

இது தான் இசை அண்ணாவின் முதல் கவிதையா? பாராட்டுகள்.  :)  ஆனால் ஏதோ பிரச்சினை நடந்த பின் எழுதப்பட்டிருக்கிறது. என்ன பிரச்சினை, யாருக்கும் யாருக்கும் பிரச்சினை என்று புரியவில்லை. :unsure:

கருத்துகளை வாசிக்கும் போது சகாறா அக்காவும் ஏதோ பிரச்சினையில் மாட்டியிருந்திருக்கிறார் என்று ஊகிக்க முடிகிறது. ஆனால் மதயானை, பாகன் ஆகிய சொற்கள் யாரை குறிப்பிடுகிறது என்று புரியவில்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ல்லாயிரம் ஆண்டுகளாம் புகழ்பூத்த முற்குடியாம்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் நற்குடியாம்
தொல்தோன்றி மண்கண்டு மன்கண்டும் பயனில்லை
சொல்கொண்டு இணைவர்தம் சிரமெடுப்பர் காலமிதில்


ஒருவிரல் வெளிச்சுட்டி மூவிரல் தனைச்சுட்டி
தரையினிலே உடல்பரப்பி உமிழ்கிறார் சிரம்நிமிர்த்தி
வருவதுவும் பெயரல்ல தருவதுவும் புக‌ழ‌ல்ல‌
திரும்புவது உமிழதுவே மூவிரலும் குறிப்பதுவே


க‌ள‌ம‌த‌னில் உரையாட‌ல் க‌னிகின்றார் தின‌ம்தானும்
த‌ள‌ம்மாறித் த‌ட‌ம்மாறிப் புனைவாரே வ‌சையாட‌ல்
களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் ம‌றுபோக்கு
உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ


எண்ண‌த்தில் வந்தவுடன் கிண்ண‌த்தில் த‌ந்துவிட்டார்
உண்மைநிலை உணர்வின்றி வ‌சைபாடிச் சென்றுவிட்டார்
திண்ணையதன் உரைகொண்டு மறுபக்கம் அறிவீரோ
கண்கொண்ட மாயையினால் க‌ள‌ம்மாறிக் கொல்வீரோ


நீயென்ன‌ செய்தாய் என‌க்கேட்கும் க‌ண‌மதுவும்
தாயென்ன‌ செய்தாள் க‌ருக்கொள்ள‌ என்ப‌துவும்
பேயனைய மாந்தர்தம் வினவிவரும் மொழியலவோ
தீய‌னைய கீழ்ச்சொல் தனைத்தாழ்த்தும் அறிந்திலை‌யோ


அப்பா

இது எப்படி  இத்தனை நாள் என் கண்ணில்படவில்லை

 

இன்றிவரை இன்னுமொரு திரிதன்னில்  இழுத்து அறுத்ததனால் இதைக்கொணர்ந்து  நுகரச்செய்தார்

ஒத்துக்கொள்கின்றேன்.

நீவிர் கவிஞர்தான்.

தொடரட்டும் தங்கள் பணி.

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் இசை அண்ணாவின் முதல் கவிதையா? பாராட்டுகள்.  :)  ஆனால் ஏதோ பிரச்சினை நடந்த பின் எழுதப்பட்டிருக்கிறது. என்ன பிரச்சினை, யாருக்கும் யாருக்கும் பிரச்சினை என்று புரியவில்லை. :unsure:

கருத்துகளை வாசிக்கும் போது சகாறா அக்காவும் ஏதோ பிரச்சினையில் மாட்டியிருந்திருக்கிறார் என்று ஊகிக்க முடிகிறது. ஆனால் மதயானை, பாகன் ஆகிய சொற்கள் யாரை குறிப்பிடுகிறது என்று புரியவில்லை. :rolleyes:

 

எப்படியெல்லாம் கற்பனை பண்ணுறாங்கப்பா.... :lol:  :lol:  :lol:  :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீயென்ன‌ செய்தாய் என‌க்கேட்கும் க‌ண‌மதுவும்
தாயென்ன‌ செய்தாள் க‌ருக்கொள்ள‌ என்ப‌துவும்
பேயனைய மாந்தர்தம் வினவிவரும் மொழியலவோ
தீய‌னைய கீழ்ச்சொல் தனைத்தாழ்த்தும் அறிந்திலை‌யோ


ohmy.gif

 

நீங்கள் கவிதை எழுதுவிங்கள் எண்டு எனக்கு தெரியாது . உங்கடை கவிதை நல்லாய் இருக்கிது .உங்களுக்கு என்ரை பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடுப்பு வந்தால் நமக்கு இப்பிடி கலர் கலரா எழுதத் தூண்டும்..! :D

எப்படியெல்லாம் கற்பனை பண்ணுறாங்கப்பா.... :lol:  :lol:  :lol:  :lol:  :D

 

அக்கா, கவிதையில் உங்களை பற்றி எழுதியதாக நான் குறிப்பிடவில்லை. அது வேறு யாரையோ குறிக்கிறது.

 

ஆனால் கருத்துகளில் எழுதப்பட்டிருப்பதை வைத்து 2009 இல் அல்லது அதற்கு முன் யாழிலோ யாழிற்கு வெளியிலோ ஏதோ பிரச்சினைக்குள் மாட்டுப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைத்தேன். :rolleyes: உங்களை வசைபாடி என்று யாரோ சொல்கிறார்கள் என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அதையும் அதற்கு பின்னான கருத்தையும் வைத்து அவ்வாறு நினைத்தேன். :rolleyes:  பிழையாக இருப்பின் மன்னிக்கவும். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

க‌ள‌ம‌த‌னில் உரையாட‌ல் க‌னிகின்றார் தின‌ம்தானும்

த‌ள‌ம்மாறித் த‌ட‌ம்மாறிப் புனைவாரே வ‌சையாட‌ல்

களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் ம‌றுபோக்கு

உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ

 

நல்லா இருக்கு இசைக்கலைஞன். அந்தக் குயில்களின் கூட்டத்தில் தாங்களும் சேர்ந்திடாமல் இருக்க வாழ்த்துகின்றேன். :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு இசைக்கலைஞன். அந்தக் குயில்களின் கூட்டத்தில் தாங்களும் சேர்ந்திடாமல் இருக்க வாழ்த்துகின்றேன். :):lol:

 

நான் குயில்கூட்டம் அல்ல.. குரங்குக் கூட்டம்.. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் குயில்கூட்டம் அல்ல.. குரங்குக் கூட்டம்.. :D

 

 

அப்ப இது குரங்குக் கூட்டம் பிச்சுப் போட்ட பூமாலையா.. கலர் கலரா இருக்குது...??! :lol:

Spoiler
(ஜோக்ஸ் இசை) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

க‌ள‌ம‌த‌னில் உரையாட‌ல் க‌னிகின்றார் தின‌ம்தானும்
த‌ள‌ம்மாறித் த‌ட‌ம்மாறிப் புனைவாரே வ‌சையாட‌ல்
களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் ம‌றுபோக்கு
உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ


எண்ண‌த்தில் வந்தவுடன் கிண்ண‌த்தில் த‌ந்துவிட்டார்
உண்மைநிலை உணர்வின்றி வ‌சைபாடிச் சென்றுவிட்டார்
திண்ணையதன் உரைகொண்டு மறுபக்கம் அறிவீரோ
கண்கொண்ட மாயையினால் க‌ள‌ம்மாறிக் கொல்வீரோ


நீயென்ன‌ செய்தாய் என‌க்கேட்கும் க‌ண‌மதுவும்
தாயென்ன‌ செய்தாள் க‌ருக்கொள்ள‌ என்ப‌துவும்
பேயனைய மாந்தர்தம் வினவிவரும் மொழியலவோ
தீய‌னைய கீழ்ச்சொல் தனைத்தாழ்த்தும் அறிந்திலை‌யோ


ohmy.gif

கவிதை நல்லாத்தான் இருக்கீது

உணர்ச்சியின் உச்ச கட்டத்திற்குச் சென்ற இசையை

இன்று தான் பார்க்கின்றேன். :)

.

  • கருத்துக்கள உறவுகள்

க‌ள‌ம‌த‌னில் உரையாட‌ல் க‌னிகின்றார் தின‌ம்தானும்

த‌ள‌ம்மாறித் த‌ட‌ம்மாறிப் புனைவாரே வ‌சையாட‌ல்

களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் ம‌றுபோக்கு

உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ

எண்ண‌த்தில் வந்தவுடன் கிண்ண‌த்தில் த‌ந்துவிட்டார்

உண்மைநிலை உணர்வின்றி வ‌சைபாடிச் சென்றுவிட்டார்

திண்ணையதன் உரைகொண்டு மறுபக்கம் அறிவீரோ

கண்கொண்ட மாயையினால் க‌ள‌ம்மாறிக் கொல்வீரோ

நீயென்ன‌ செய்தாய் என‌க்கேட்கும் க‌ண‌மதுவும்

தாயென்ன‌ செய்தாள் க‌ருக்கொள்ள‌ என்ப‌துவும்

பேயனைய மாந்தர்தம் வினவிவரும் மொழியலவோ

தீய‌னைய கீழ்ச்சொல் தனைத்தாழ்த்தும் அறிந்திலை‌யோ

ohmy.gif

கவிதை நல்லாத்தான் இருக்கீது

உணர்ச்சியின் உச்ச கட்டத்திற்குச் சென்ற இசையை

இன்று தான் பார்க்கின்றேன். :)

.

 

வாத்தியார் அவர் உணர்ச்சியின் உச்சக்கட்டுத்துக்கும் போய் 3.. 4 வருசமாகுது.

 

இந்தக் கவிதை 2009 இல் புனையப்பட்டுள்ளது..! :):lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அவர் உணர்ச்சியின் உச்சக்கட்டுத்துக்கும் போய் 3.. 4 வருசமாகுது.

 

இந்தக் கவிதை 2009 இல் புனையப்பட்டுள்ளது..! :):lol:

 

 

இன்று தான் பார்க்கின்றேன்

 

 

தெரியும் நெடுக்ஸ்

அதை இன்று தான் வாசித்தேன் என்பதை அப்படி எழுதினேன் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.