Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் துரோகிதான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னைமண் காக்க ஆசைகள் துறந்து

ஆயுதம் ஏந்திய போராளிகளை....

சதிவலையால் சிதைக்கப் பட்ட போது

சரணடைந்த போராளிகளையே..

துரோகிகளாக்கும் சமூகத்தில்

நானும் ஒரு துரோகிதான்....

மூன்றுலட்சம் மக்களையும்,போராளிகளையும்

முட்கம்பி வேலிக்குள்ளிருந்து...

மீட்க பேய்களின் கால்களில் விழுந்தேனும்

காக்கத் துடிக்கும் இதயங்களும்...

அவர்களுக்காக ஒலிக்கும் ஓரிரு குரல்களும் துரோகியானால்

நானும் ஒரு துரோகிதான்...

சோற்றுப்பாசலும் காசும் கொடுத்துவிட்டு

சொல்லித்திரியும் உள்ளங்களின் மத்தியில்..

சொந்தங்களையும் சொத்துக்களையும்

இழந்து அநாதையாக நிற்கும் மக்களும்..

சொந்த சகோதரனைப்போல் ஒவ்வொரு புலிவீரனையும்

நெஞ்சில் சுமந்ததால் சொல்லாமல் கொள்ளாமல்...

சிறையில்வாடும் உறவுகள் துரோகிகள் என்றால்

நானும் துரோகிதான்...

இருபது,முப்பது ஆண்டுகளாய்

புலம்பெயர் மண்ணில் இருந்துகொண்டு...

ஈழத்தில் நடப்பவற்றை

இணையத்தில் பார்த்து விட்டு..

கோடைவிடுமுறைக்கு

குழந்தை குட்டியுடன் சென்று விட்டு...

தமிழ்த்தேசியம் பேசி

தமிழ்த்தேசியத்தின் முதலாளிகளாகும் போது...

தமிழ்த்தேசியத்திற்காய்

உயிரை அர்ப்பணித்து உழைத்த..

உழைக்கின்ற அனைவரும் துரோகிகளாயின்

நானும் துரோகிதான்...

துரோகி வெட்டி வீரம் பேசுபவர்களின் எச்சம்

தமிழ்த்தேசியவாதிகள் சிலரின் திமிர்..

காட்டியும் கூட்டியும் கொடுப்பவனும் துரோகி

காலை மாலை பாராது களமாடி...

சரணடைந்த போராளிகளும் துரோகி

இனி இதிலும் நல்ல துரோகி...

கெட்ட துரோகி என்பார்கள்

எம் தமிழ்த் தேசியவாதிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பியோ ........விதிவசமோ .......புலம் பெயர் அனைவ்ரும் துரோகிகளே......நானும் கூடத்தான். ஜீவா கவிதை எழுத முயற்சிக்கிறீர்கள் ........தொடருங்கள் சித்திரமும் கை பழக்கம் எழுத எழுத மேலும் தேர்ச்சி பெறும் முன்னேற வாழ்த்துக்கள்.அக்கா நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

இருபது,முப்பது ஆண்டுகளாய்

புலம்பெயர் மண்ணில் இருந்துகொண்டு...

ஈழத்தில் நடப்பவற்றை

இணையத்தில் பார்த்து விட்டு..

கோடைவிடுமுறைக்கு

குழந்தை குட்டியுடன் சென்று விட்டு...

................................................................................

.........

முற்றிலும் உண்மையான கவிவரிகள் ஜீவா நன்றி.

சொந்த சகோதரர்கள துன்பத்தில்

சாதல் கண்டும் சிந்தையிரங்காரடி....

கிளியே வாய் சொல்லில் வீரரடி.

பிரியமுடன் யாயினி

Edited by yagini

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவுக்கு

உங்கள் வரிகள் அழகு ஆனாலும் எதோ ஒரு கோவமும் தெரிகிறது..! யாரிடம் இந்தச் சமூகத்திடமா....?

எத்தனையோ சவால்களை எங்கள் இனம் இப்போ எதிர் நோக்கவேண்டிய நேரம் எல்லாத்தையும் எதிர்கொண்டு இலட்சியத்தில் வெற்றிகொள்வோம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பா. நீங்கள் எழுதின அத்தனையும் உண்மைகள்..

உங்களின் மன கோவம் புரியுது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவுக்கு

உங்கள் வரிகள் அழகு ஆனாலும் எதோ ஒரு கோவமும் தெரிகிறது..! யாரிடம் இந்தச் சமூகத்திடமா....?

எத்தனையோ சவால்களை எங்கள் இனம் இப்போ எதிர் நோக்கவேண்டிய நேரம் எல்லாத்தையும் எதிர்கொண்டு இலட்சியத்தில் வெற்றிகொள்வோம்....

நன்றி அண்ணா இன்று துரோகி என்பது ஒரு நாகரிகம் போல ஆகிட்டுது.

யார் இந்த துரோகி பட்டம் குடுக்கிறாங்க? சொல்லிப்புட்டு செய்யலாம்ல??

அந்த பெரிய மனுசரை ^_^ எல்லாம் பார்க்கணும்னு ஆசை.

நண்பா. நீங்கள் எழுதின அத்தனையும் உண்மைகள்..

உங்களின் மன கோவம் புரியுது..

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் ஜீவா,

அற்புதமான கவிதை இரசிக்கவிலை பென்மன் வெட்கித்ததலை குனிகிறான்.

தன்நெஞ்சறிய பொய்யற்க பொய்த்த பின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

எம் இனத்திற்கு விடிவு வேண்டி உங்கள் ஆக்கங்களை சமர்ப்பணம் செய்யுங்கள்.

நன்றி

பென்மன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்னைமண் காக்க ஆசைகள் துறந்து

ஆயுதம் ஏந்திய போராளிகளை....

சதிவலையால் சிதைக்கப் பட்ட போது

சரணடைந்த போராளிகளையே..

துரோகிகளாக்கும் சமூகத்தில்

நானும் ஒரு துரோகிதான்....

மூன்றுலட்சம் மக்களையும்,போராளிகளையும்

முட்கம்பி வேலிக்குள்ளிருந்து...

மீட்க பேய்களின் கால்களில் விழுந்தேனும்

காக்கத் துடிக்கும் இதயங்களும்...

அவர்களுக்காக ஒலிக்கும் ஓரிரு குரல்களும் துரோகியானால்

நானும் ஒரு துரோகிதான்...

சிறையில்வாடும் உறவுகள் துரோகிகள் என்றால்

நானும் துரோகிதான்...

இருபது,முப்பது ஆண்டுகளாய்

புலம்பெயர் மண்ணில் இருந்துகொண்டு...

ஈழத்தில் நடப்பவற்றை

இணையத்தில் பார்த்து விட்டு..

கோடைவிடுமுறைக்கு

குழந்தை குட்டியுடன் சென்று விட்டு...

தமிழ்த்தேசியம் பேசி

தமிழ்த்தேசியத்தின் முதலாளிகளாகும் போது...

தமிழ்த்தேசியத்திற்காய்

உயிரை அர்ப்பணித்து உழைத்த..

உழைக்கின்ற அனைவரும் துரோகிகளாயின்

நானும் துரோகிதான்...

துரோகி வெட்டி வீரம் பேசுபவர்களின் எச்சம்

தமிழ்த்தேசியவாதிகள் சிலரின் திமிர்..

காட்டியும் கூட்டியும் கொடுப்பவனும் துரோகி

காலை மாலை பாராது களமாடி...

சரணடைந்த போராளிகளும் துரோகி

இனி இதிலும் நல்ல துரோகி...

கெட்ட துரோகி என்பார்கள்

எம் தமிழ்த் தேசியவாதிகள்...

ஒருவருக்கு அதகபட்ச தண்டனை துரோகியென்ற சொல். தமிழினம் மட்டும் துரோகியென்ற வார்த்தையை இலகுவாய் எல்லோருக்கும் சூட்டி மகிழ்ச்சியடைவதில் தியாகமாகிறது.

நம்பியிருந்தோரே எதிரியடம் சரணடைய அவர்களை நம்பியவர்களை மட்டும் துரோகிகள் விபச்சாரிகள் என்றெல்லாம் வீரம் பேசும் வல்லவர்கள் தேசியவாதிகள் வாழும் இந்தக்காலத்தில் வாய் மூடி வால்பிடிப்போரே தியாகிகள் ஆகின்றனர்.

நல்ல துரோகி கெட்ட துரோகி....இனி பிரதேசவாரியான துரோகளும் இந்தத் தேசியவாதிகளால் உருவாக்கப்படுவார்கள்.

காலமறிந்து ஜீவா உங்கள் கவிதை. இலகுமொழி நல்ல ஆழுமை சுற்றி வளைத்துச் சொல்லாமல் நேரடியான விளக்கல் கவிதையின் சிறப்பாக அமைந்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா உங்கள் கவி வரிகளின் ஆழம் உண்மை எனினும்....

யாரும் யாரையும் துரோகி என்ற அடைமொழிக்குள் இட அதிகாரமற்றவர்களே! துரோகி.... என்று எல்லோரும் சொல்கின்றனர். ஆனால் அந்த சொல்லுக்குரியவர்களாக பலர் இன்னமும் இருக்கின்றனர். நீங்கள் ஒட்டுமொத்தமாக போராளிகள் என்று விழிப்பதால் யார் என்று சொல்ல முடியவில்லை. இன்று ஈ.பி.டி.பி, புளொட், ரொலே, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற அமைப்புக்களும் முன்னாள் போராளிகள் ஏன் கருணா குழு, பிள்ளையான் குழுவும் முன்னாள் போராளிகள் தான் அதற்காக அவர்களை துரோகிகள் என்று விழிப்பதை தவறு என்று கோடிட முடியாதே?

இன்னும் முகாம்களுக்குள் அமைப்புக்காய் பணியாற்றியோர், தீவிர ஆதரவாளர்கள், நாடகம் நடித்தோர், பாட்டுப்படித்தோர், கவிதை புனைந்தோர் என்று ஆயுதப்போருக்கு சம்பந்தமற்ற எத்தனையோ விடுதலை விரும்பிகளை காட்டிக்கொடுக்கும் போராளிகளும் உள்ளனரே அவர்களை துரோகி என்றில்லாமல் எப்படி விழிப்பது?

அது மட்டுமன்றி புலத்தில் இருக்கும் தமது தொடர்பாடர்களுடன் தொலைபேசி வழி பேசி, அவர் எங்கிருக்கின்றார், இவர் எங்கிருக்கின்றார் என்று கேட்டு வெளியிருப்பவர்கள் தகவல்களை பெற்றுக்கொடுப்பவர்களை சர்ந்தர்ப வாத துரோகிகள் என்று சொல்ல முடியாதா?

நான் ஒட்டுமொத்த போராளிகளையும் துரோகிகள் என்று சொல்ல வரவில்லை. உண்மையில் அந்த போராளிகளின் இந்த நிலைக்கு நமது துரோகமும் ஒரு காரணம்....

ஆனாலும் "துரோகி" என்ற பதம் இன்று ஈழத்தில் பலருக்கு பொருத்தமாகவே உள்ளது!

புலத்தில் நின்று நாம் யாருக்காக குரல் கொடுத்தோமோ அவர்களே தமது அந்த கோபத்தின் வெளிப்பாட்டில் 'இதுவரை நீங்கள் கொடுத்த பணம் அழிவுக்கு பயன் பட்டது இனியாவது வாழப்பயன் படட்டும்" என்று குறியீட்டு பேசும் போது அவர்களை எப்படிச் சொல்ல முடியும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் ஜீவா,

அற்புதமான கவிதை இரசிக்கவிலை பென்மன் வெட்கித்ததலை குனிகிறான்.

தன்நெஞ்சறிய பொய்யற்க பொய்த்த பின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

எம் இனத்திற்கு விடிவு வேண்டி உங்கள் ஆக்கங்களை சமர்ப்பணம் செய்யுங்கள்.

நன்றி

பென்மன்

நன்றி பென்மன் நான் யாரையும் சுட்டி எழுதவில்லை. நிஜத்தை என்னை வைத்தே எழுதினேன். உண்மையில் ஒருசிலரால் எந்த நிகழ்தகவுகளையும் புரிந்து கொள்ளாமல்

எடுத்ததற்கெல்லாம் துரோகி என்ற ஒற்றை வார்த்தையில் அவர்களின் தியாகங்களையும்,அர்ப்பணிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவருக்கு அதகபட்ச தண்டனை துரோகியென்ற சொல். தமிழினம் மட்டும் துரோகியென்ற வார்த்தையை இலகுவாய் எல்லோருக்கும் சூட்டி மகிழ்ச்சியடைவதில் தியாகமாகிறது.

நம்பியிருந்தோரே எதிரியடம் சரணடைய அவர்களை நம்பியவர்களை மட்டும் துரோகிகள் விபச்சாரிகள் என்றெல்லாம் வீரம் பேசும் வல்லவர்கள் தேசியவாதிகள் வாழும் இந்தக்காலத்தில் வாய் மூடி வால்பிடிப்போரே தியாகிகள் ஆகின்றனர்.

நல்ல துரோகி கெட்ட துரோகி....இனி பிரதேசவாரியான துரோகளும் இந்தத் தேசியவாதிகளால் உருவாக்கப்படுவார்கள்.

காலமறிந்து ஜீவா உங்கள் கவிதை. இலகுமொழி நல்ல ஆழுமை சுற்றி வளைத்துச் சொல்லாமல் நேரடியான விளக்கல் கவிதையின் சிறப்பாக அமைந்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி அக்கா. உங்கள் கருத்தே எனது கருத்துமாகும். இதுதான் இன்றைய யதார்த்தம் கொடி பிடித்தவன் தியாகியாகும் போது

உயிரைக்கொடுத்தவர்கள் துரோகிகளாக்கப்படுகின்ற கேவலம் எம்மினத்தில் தான் இருக்கின்றது.

தீவிர தமிழ்த்தேசியவாதிகள் அல்லது அந்த மாயையில் கட்டுண்டு இருப்பவர்கள் இருக்கும் வரை தமிழினம் ஒற்றுமைப் படாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா உங்கள் கவி வரிகளின் ஆழம் உண்மை எனினும்....

யாரும் யாரையும் துரோகி என்ற அடைமொழிக்குள் இட அதிகாரமற்றவர்களே! துரோகி.... என்று எல்லோரும் சொல்கின்றனர். ஆனால் அந்த சொல்லுக்குரியவர்களாக பலர் இன்னமும் இருக்கின்றனர். நீங்கள் ஒட்டுமொத்தமாக போராளிகள் என்று விழிப்பதால் யார் என்று சொல்ல முடியவில்லை. இன்று ஈ.பி.டி.பி, புளொட், ரொலே, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற அமைப்புக்களும் முன்னாள் போராளிகள் ஏன் கருணா குழு, பிள்ளையான் குழுவும் முன்னாள் போராளிகள் தான் அதற்காக அவர்களை துரோகிகள் என்று விழிப்பதை தவறு என்று கோடிட முடியாதே?

இன்னும் முகாம்களுக்குள் அமைப்புக்காய் பணியாற்றியோர், தீவிர ஆதரவாளர்கள், நாடகம் நடித்தோர், பாட்டுப்படித்தோர், கவிதை புனைந்தோர் என்று ஆயுதப்போருக்கு சம்பந்தமற்ற எத்தனையோ விடுதலை விரும்பிகளை காட்டிக்கொடுக்கும் போராளிகளும் உள்ளனரே அவர்களை துரோகி என்றில்லாமல் எப்படி விழிப்பது?

அது மட்டுமன்றி புலத்தில் இருக்கும் தமது தொடர்பாடர்களுடன் தொலைபேசி வழி பேசி, அவர் எங்கிருக்கின்றார், இவர் எங்கிருக்கின்றார் என்று கேட்டு வெளியிருப்பவர்கள் தகவல்களை பெற்றுக்கொடுப்பவர்களை சர்ந்தர்ப வாத துரோகிகள் என்று சொல்ல முடியாதா?

நான் ஒட்டுமொத்த போராளிகளையும் துரோகிகள் என்று சொல்ல வரவில்லை. உண்மையில் அந்த போராளிகளின் இந்த நிலைக்கு நமது துரோகமும் ஒரு காரணம்....

ஆனாலும் "துரோகி" என்ற பதம் இன்று ஈழத்தில் பலருக்கு பொருத்தமாகவே உள்ளது!

புலத்தில் நின்று நாம் யாருக்காக குரல் கொடுத்தோமோ அவர்களே தமது அந்த கோபத்தின் வெளிப்பாட்டில் 'இதுவரை நீங்கள் கொடுத்த பணம் அழிவுக்கு பயன் பட்டது இனியாவது வாழப்பயன் படட்டும்" என்று குறியீட்டு பேசும் போது அவர்களை எப்படிச் சொல்ல முடியும்?

நன்றி உங்கள் கருத்துக்கு.

நாம் எதனை சுட்டும் போதும் அந்த மூன்று விரலும் எம்மைத்தான் சுட்டுகிறது என்பதை உணர்ந்து தான் எனது கருத்தை எழுதினேன். நீங்கள் சொல்வது போல இன்று யாரும் யாரையும் துரோகி என சொல்ல முடியாது ஏனென்றால் தெரிந்தோ தெரியாமலோ இந்த நிலமைக்கு நாம் ஒவ்வொருவரும் காரணமே.

நான் இறுதிக்களத்தில் நின்று சமராடி சரணடைந்த போராளிகளையே சொல்லவருகிறேன். அவர்களைக்கூட இயக்கத்தின் கொள்கையை மறந்து சயனைட்டைக்கடிக்காது சரணடைந்துள்ளார்கள் அவர்களும் துரோகிகள் தான்

என சிலர் கூறிவருகின்றனர்..இது எந்த விதத்தில் நியாயம் அவர்களையே குறை சொல்ல யாருக்கு அருகதை இருக்கு?

விடுதலைப்புலிகள் கூட ஆரம்பத்தில் துரோகிகள் என்றாலும் பின்னர் ஒட்டுக்குழுக்கள் என்றார்களே தவிர துரோகிகள் என்று சொல்லவில்லை.

நாம் ஒவ்வொருவருமே துரோகியாக இருக்கும் போது யார் யாரை துரோகி என்பது.? இதுதான் இன்றுள்ள மில்லியன் டொலர் கேள்வி????

எங்களை நாங்களே ஏமாற்ற முயல்கின்றோமா? கூடாது துரோகிகளை சரியாக இனங்காணுங்கள். அப்பதான் துரோகங்களை முறியடிச்சு நாங்கள் முன்னேற முடியும்.

புலம்பெயர் உறவுகள் எங்கட போராட்டத்தின் பங்காளிகள், அவயள துரோகிகளாக்கி களத்தில் உள்ள உறவுகள யாரும் இல்லாத எதிளிகளா ஆக்கிப்போடாதிங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களை நாங்களே ஏமாற்ற முயல்கின்றோமா? கூடாது துரோகிகளை சரியாக இனங்காணுங்கள். அப்பதான் துரோகங்களை முறியடிச்சு நாங்கள் முன்னேற முடியும்.

புலம்பெயர் உறவுகள் எங்கட போராட்டத்தின் பங்காளிகள், அவயள துரோகிகளாக்கி களத்தில் உள்ள உறவுகள யாரும் இல்லாத எதிளிகளா ஆக்கிப்போடாதிங்க?

நன்றி உங்கள் கருத்துக்கு.

நான் யாரையும் துரோகி என்று சொல்லவில்லை. யாரும் யாரையும் துரோகி என்று சொல்லக்கூடாது என்று தான் சொன்னேன்.

திரும்ப ஒருதடவை வாசித்து தெளிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா உங்கள் கவிதைக்குப் பாராட்டுகள். பலரைப் பேச வைப்பதுதான் கவிதைக்கான வெற்றி நீங்கள் எடுத்த கருப்பொருள் நீண்ட வாத, விவாதங்களுக்கு உரியது.

துரோகிகள் எல்லாச் சமூகத்திலும் இருப்பார்கள். எமக்கு மட்டும் பிரத்தியேகமானது அல்ல. ஒருவரின் பேச்சை வைத்து உடனடியாக துரோகிப்பட்டம் கட்டிவிட முடியாது. சில சமயங்களில் யதார்த்தத்தைப் பேசுபவர்களை எமக்குப் பிடிக்காது போகிறது. உடனே நண்பர்களையே துரோகிகள் என்ற அடைமொழிக்குள் போட்டு விடுகிறோம். அநேகமாக எம்மவரிடையே ஒரு விடயத்தை தெளிவாக, நிதானமாக விளங்கிக் கொள்ளும் பக்குவம் குறைவாகவே உள்ளது. எப்போதுமே மேலோட்டமாகப் பார்த்து முடிவெடுப்பது வாடிக்கையாகி விட்டது. அதாவது உடனடி உணர்வுக்கு ஏற்றபடி முடிவெடுப்பது.

வேகம் என்பது விவேகம் உள்ள வினைத்திறனாக இல்லாவிடத்தில் தோற்றுப் போகிறது. சமீபகாலத்தில் நமக்குள் நாமே நிறையப்பேரைத் துரோகிகளாக முத்திரை குத்திப் பேசுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. உண்மையில் தாயகக் கோட்பாட்டில் நிதானமாக இருக்கும் எவரும் எவரையும் துரோகி என்று முத்திரை குத்த மாட்டார்கள். ஒரு பொது நோக்கிற்கு இலக்கெடுத்து ஒவ்வொருவரும் பயணிக்கும் பாதைகள் வேறுபடலாம் எனக்குத் தெரியாத பாதையில் ஒருவர் பயணிக்கிறார் என்றால் உடனே நான் அவருக்குத் துரோகிப்பட்டம் கட்டிவிடக்கூடாது.

இப்போது உள்ள சூழலில் புலம்பெயர்ந்த மக்கள் உறவுகளை தொலைத்தும், மீட்க முடியாத அதிர்ச்சியிலும் குழம்பி இருக்கிறார்கள். இயல்பு நிலை குன்றிய நிலையில் அவர்களுக்குள் இருக்கும் இயலாமைக் கோபம் என்பது தம்மைத் தாமே துரோகி எனும் உணர்வுகளைத் தோற்றுவித்திருக்கின்றன. எனக்கு உங்கள் கவிதையை இயலாமையில் தவிக்கும் தமிழினத்தின் குரலாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

உண்மையிலேயே துரோகிகள் யாரென்றால் தெளிந்த சூழலில் இருக்கும் போதே காட்டிக் கொடுப்பவர்கள், கூட இருந்து இனத்திற்கு வேட்டு வைப்பவர்கள், தனிப்பட்ட விரோதங்களுக்காக இனத்தைக் காவு கொடுப்பவர்கள், பொருளாதார ஆசையில் இடம்மாறி சேவகம் செய்பவர்கள் என்ற வகையராக்களுக்குள் அடங்குவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா உங்கள் கவிதைக்குப் பாராட்டுகள். பலரைப் பேச வைப்பதுதான் கவிதைக்கான வெற்றி நீங்கள் எடுத்த கருப்பொருள் நீண்ட வாத, விவாதங்களுக்கு உரியது.

துரோகிகள் எல்லாச் சமூகத்திலும் இருப்பார்கள். எமக்கு மட்டும் பிரத்தியேகமானது அல்ல. ஒருவரின் பேச்சை வைத்து உடனடியாக துரோகிப்பட்டம் கட்டிவிட முடியாது. சில சமயங்களில் யதார்த்தத்தைப் பேசுபவர்களை எமக்குப் பிடிக்காது போகிறது. உடனே நண்பர்களையே துரோகிகள் என்ற அடைமொழிக்குள் போட்டு விடுகிறோம். அநேகமாக எம்மவரிடையே ஒரு விடயத்தை தெளிவாக, நிதானமாக விளங்கிக் கொள்ளும் பக்குவம் குறைவாகவே உள்ளது. எப்போதுமே மேலோட்டமாகப் பார்த்து முடிவெடுப்பது வாடிக்கையாகி விட்டது. அதாவது உடனடி உணர்வுக்கு ஏற்றபடி முடிவெடுப்பது.

சமீபகாலத்தில் நமக்குள் நாமே நிறையப்பேரைத் துரோகிகளாக முத்திரை குத்திப் பேசுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

உண்மையிலேயே துரோகிகள் யாரென்றால் தெளிந்த சூழலில் இருக்கும் போதே காட்டிக் கொடுப்பவர்கள், கூட இருந்து இனத்திற்கு வேட்டு வைப்பவர்கள், தனிப்பட்ட விரோதங்களுக்காக இனத்தைக் காவு கொடுப்பவர்கள், பொருளாதார ஆசையில் இடம்மாறி சேவகம் செய்பவர்கள் என்ற வகையராக்களுக்குள் அடங்குவர்.

நன்றி அக்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.