Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒஸ்லோவில் ஐந்து இலங்கையர்களுக்கு கடூழியச் சிறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோவில் ஐந்து இலங்கையர்களுக்கு கடூழியச் சிறை

வீரகேசரி இணையம் 7/10/2009 11:18:06 AM - சமுராய் வகை வாள்களைப் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்ட ஐந்து இலங்கையர்களுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக நோர்வே இணைய தள செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரையில் குறித்த இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நோர்வேயின் கல்பெக்கன் பகுதியில் ரமணன் விவேகானந்தன் என்ற 20 வயது இளைஞரை வாளால் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கு ஒஸ்லோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கொலைக் குற்றச்சாட்டு நீரூபிக்கப்பட்டதை அடுத்தே குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மேற்படி சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலிருந்து இந்நபர்கள் ஒஸ்லோவின் கல்பெக்கன் பகுதிக்கு வந்தே ரமணன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.

ஒஸ்லோவில் இரு தமிழ் குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த முறுகல் நிலையின் விளைவே இந்த படுகொலைக்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ச்சீ........கேவலம் சொந்த நாட்டிலதான் நின்மதியல்லை இருக்க ஏலாது.அவல வாழ்க்கை தினமும் உயிரைக் கையில் பிடித்து கொண்டு வாழனும்.புலம் பெயர் நாட்டிலயாவது ஒழுங்காய் இருக்கலாம் தானே...கழுசறயள்.இப்படியானதுகள

  • கருத்துக்கள உறவுகள்
ச்சீ........கேவலம் சொந்த நாட்டிலதான் நின்மதியல்லை இருக்க ஏலாது.அவல வாழ்க்கை தினமும் உயிரைக் கையில் பிடித்து கொண்டு வாழனும்.புலம் பெயர் நாட்டிலயாவது ஒழுங்காய் இருக்கலாம் தானே...கழுசறயள்.இப்படியானதுகள
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் :):rolleyes:

இதில் சம்மந்தப்பவர்கள் யாரும் எனக்கு மாமனும் இல்லை, மச்சானும் இல்லை,குஞ்சி அப்பனும் இல்லை.எனக்கும் அவர்களுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.எங்களின் தமிழ் இளைஞர்கள் எதற்காக புலம் பெயர் நாட்டில் வந்து வன்முறையில் ஈடுபடுவான்?வாழ்க்கை முழுவதும் ஒன்று.....இரண்டு.......மூன்று.....நான்

கு என்று எண்ணிக்கொண்டு காலத்தை வீணடிப்பான் ஏன் என்றுதான் எழுதியிருந்தேன்.நன்றாக ஒரு விடயத்தை இரண்டு....மூன்று தடவை வாசித்து புரிந்து கொண்ட பின்னர் பதிலளிப்பது மற்றவர் மனதை புண்படுத்தாது.அவர்களின் திட்டங்கள்,செயல் பாடுகளுக்கு உங்களைப்போல் சல்லாரிபோடுபவர்கள் இருந்தால் நம்பிள்ளைகள் திருந்தின பாடுதான்.நன்றி :):lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் :):lol:

இதில் சம்மந்தப்பவர்கள் யாரும் எனக்கு மாமனும் இல்லை, மச்சானும் இல்லை,குஞ்சி அப்பனும் இல்லை.எனக்கும் அவர்களுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.எங்களின் தமிழ் இளைஞர்கள் எதற்காக புலம் பெயர் நாட்டில் வந்து வன்முறையில் ஈடுபடுவான்?வாழ்க்கை முழுவதும் ஒன்று.....இரண்டு.......மூன்று.....நான்

கு என்று எண்ணிக்கொண்டு காலத்தை வீணடிப்பான் ஏன் என்றுதான் எழுதியிருந்தேன்.நன்றாக ஒரு விடயத்தை இரண்டு....மூன்று தடவை வாசித்து புரிந்து கொண்ட பின்னர் பதிலளிப்பது மற்றவர் மனதை புண்படுத்தாது.அவர்களின் திட்டங்கள்,செயல் பாடுகளுக்கு உங்களைப்போல் சல்லாரிபோடுபவர்கள் இருந்தால் நம்பிள்ளைகள் திருந்தின பாடுதான்.நன்றி :lol::lol::D:)

கழுசறையள் என்றெல்லாம் எழுதிறதை மூன்று நாலு தரம் வாசிச்சு என்னத்த விளங்கிக் கொள்வது சொல்லுங்கோ. கழுசறை என்றால் என்ன என்றா..??!

புலம்பெயர் நாடுகளில் எமது இளைஞர்கள் வன்முறையால் கவரப்படக் காரணம்.. புலம்பெயர் நாடுகளின் உள்ள வாழ்க்கை முறைதானே தவிர.. அவர்கள் வன்முறையாளர்களாக வேண்டும் என்பதற்காக புலம்பெயரவில்லை. இதை முதலில் அவர்கள் மீது கழுசறைகள் என்று பேசித் திட்டிக் கொண்டு எங்களை சுத்தமானவையா காட்ட விளைவதிலும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இளைஞர்களை தவறான பாதைக்குச் செல்லாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினது. அதற்காக ஏதாவது ஒரு கட்டமைப்பை நிறுவி வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை. பிற இனத்தவர்கள் குழுக்களாக இயங்கும் நிலையில் அவர்களால் அச்சுறுத்தல் வரும் நிலையில் எமது இளைஞர்களும் அவ்வாறு நடக்க முயல்கின்றனர். பாடசாலைகளில் இருந்து ஆரம்பிக்கும் இந்த குழுக்கலாச்சாரமே பின்னர் வன்முறைக்கு இட்டுச் செல்கின்றது. அடிப்படையில் இது தாயகத்தில் இருந்து வந்த வன்முறையல்ல. இது புலம்பெயர்நாடுகளில் பொறுக்கப்பட்ட வன்முறைக்கலாசாரம். அவர்கள் அதைத் தேர்ந்தெடுக்க அனுமதித்ததும்.. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும்.. இன்று திட்டித்தீர்ப்பதும்.. இதே தமிழர்கள் தான். இந்தக் கேடு கெட்டதுகளைத்தான் நான் இந்த வேளையில் குற்றம்சுமத்துவனே அன்றி அந்த இளைஞர்களை குற்றம் சொல்லி எந்தப் பிரயோசனமும் இல்லை.

தனிமை.. ஏமாற்றங்கள்.. பெண்கள் பிரச்சனை.. காதல் பிரச்சனைகள்.. வேலைப்பழு.. போட்டிக் குழுக்கள்.. பிற இனத்தவருடனான தகாத நட்பு.. மோதல்கள்.. பாடசாலைக் குழுக்கள்.. போதைப்பொருள் பரிவர்த்தனை.. மதுபானப்பழக்கம்.. இவற்றின் வாயிலாகத்தான் இந்த இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்கின்றனர். இவர்கள் தவறான வழியில் இன்று செல்லாது தடுக்க வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களினது கடமை. எத்தனை தமிழர்கள் இவர்களுக்கு உதவி செய்கிறார்கள்...??! கவுண்சிலிங் செய்கிறார்கள்...??! திருந்தி நடக்க வழிகாட்டுறார்கள்...??! அவர்களுக்குரிய பிரச்சனைகளை செவிமடுத்து தீர்வு தேடிக் கொடுக்கிறார்கள்...??! அதைச் செய்ய யாரும் இல்லை. ஆனால்.. குறை சொல்ல மட்டும் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். இவர்களைக் குறை சொல்லி தம்மை உயர்த்திக் கொள்ள பலர் போட்டி போட்டிக் கொள்கின்றனர்.

இங்குள்ள பல இளைஞர்கள் வழிதவறிப் போக இளம் பெண்கள் காரணமாக இருக்கிறார்கள். காதல் என்று பல இளைஞர்களிடையே போட்டி.. வன்முறைகளை வளர்ப்பவர்களாக.. இளம் பெண்கள் இருக்கின்றனர். ஆனால்.. இறுதியில் அடிபட்டு சாவது இளைஞர்கள். அவர்களைத் தூண்டிய யுவதிகள்.. நல்ல பிள்ளைக்கு சமூகத்தில் ஒளித்துக் கொள்கிறார்கள். இப்படியானவர்களும்.. இந்த இளைஞர்களை தவறாக வழிநடத்தும் சமூகமுமே இந்த இளைஞர்களின் நிலைக்குக் காரணமே அன்றி அவர்கள் அல்ல..!

புதிய சூழலில்.. புதிய சமூகத்தாக்கத்துள்.. திசை மாறிப் போன அந்த இளைஞர்களுக்காக என்னால் பரிதாபப்பட முடிகிறதே அன்றி.. திட்டி எந்தப் பயனும் இல்லை என்பதையே முன்னைய கருத்திலும் இக்கருத்திலும் சொல்லிக் கொள்ள முனைந்திருக்கிறேன்.

எவரையும் காயப்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல..! ஆனால் கழுசறைகள் என்று இன்னொருவரை பார்த்து பேச எமக்கு என்ன தகுதி இருக்கு என்று நாமும் பரிசீலிப்பது நன்று. அவர்கள் கழுசறைகளாக நாமும் ஒரு காரணம் என்பதை பலர் உணர மறந்துவிடுகிறார்கள்..! குறிப்பாக இளைஞர்களை ஏமாற்றி வாழும் பெண்கள்.. மற்றும் அவர்களின் குடும்பத்தினர்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

பாவம் யாகினி.. :lol:

யாகினி நீங்கள் எப்படி ஆண்களைப்பார்த்து கழுசறை என்று பேசலாம்..? இதுவே நீங்கள் பெண்களை அப்படி பேசியிருந்தால்

நெடுக்காலபோவான் உங்களை புகழ்வதோடு தானும் நாலு வசனம் பேசி எழுதியிருப்பார் அல்லவா!

இனியாவது பார்த்து எழுதுங்கோ :)

;இனம் இனத்தை சாரும் என்று பழமொழி கேள்விப்பட்டதில்லையா?

(நான் இங்கு இனம் என்று குறிப்பிட்டது ஆண் பெண் இனத்தை அல்ல.. கழுசறை இனத்தை )

:rolleyes:

அது சரி கழுசறைக்கு அர்த்தம் என்ன? தெரிந்தவர்கள் விளக்கவும்........

(என்னை ஏறி விளக்கிடாதீங்கோ) :)

அது சரி கழுசறைக்கு அர்த்தம் என்ன? தெரிந்தவர்கள் விளக்கவும்........

(என்னை ஏறி விளக்கிடாதீங்கோ) :lol:

ஆமாம் வசி சுதா ஏறிக்கூட விளக்குவார்களா? :rolleyes:

அதுசரி ஜேர்மனிலும் பல ரவுடி கும்பல்கள் இருகுதாம். அதில் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்களும் நோர்வேயில் சிறையில் இருக்கின்றன்னராம். இந்த ஜேர்மன் தமிழ் ரவுடிக்கும்பல்கள் தங்களுக்கு தாங்களே மாஸ்டர், டீச்சர் என பெயர்களும் வைத்துள்ளனராம். இந்த பட்டங்களை எந்த சர்வகலாசாலையில் வாங்கினார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் யாகினி.. :)

யாகினி நீங்கள் எப்படி ஆண்களைப்பார்த்து கழுசறை என்று பேசலாம்..? இதுவே நீங்கள் பெண்களை அப்படி பேசியிருந்தால்

நெடுக்காலபோவான் உங்களை புகழ்வதோடு தானும் நாலு வசனம் பேசி எழுதியிருப்பார் அல்லவா!

இனியாவது பார்த்து எழுதுங்கோ :lol:

;இனம் இனத்தை சாரும் என்று பழமொழி கேள்விப்பட்டதில்லையா?

(நான் இங்கு இனம் என்று குறிப்பிட்டது ஆண் பெண் இனத்தை அல்ல.. கழுசறை இனத்தை )

:lol:

அது சரி கழுசறைக்கு அர்த்தம் என்ன? தெரிந்தவர்கள் விளக்கவும்........

(என்னை ஏறி விளக்கிடாதீங்கோ) :)

ஏன் வசி.. பெண்களில் கழுசறையள் இல்லையோ. அவை எல்லாம்.. புனிதமான தெய்வீகப் பிறவிகள் என்றால் சொல்ல விளைகிறீர்கள்.

லண்டனில் பல குழுச்செயற்பாடுகளில் மோதல்களுக்கு காரணம்.. பெண்களும் அவர்களால் ஆண்கள் மத்தியில் ஏற்படும்.. இனவிடைப் போட்டியும்.

குப்பாடித் தமிழர்களின் முன் கழுசறையாகவோ.. கழுதையாகவோ இருப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

ஆனால் இந்த சமூகத்தில் உள்ள குற்றவாளிகள் அவர்களாக உருவாகவில்லை. இந்தச் சமூகத்தால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதுதான் யதார்த்தம்...! அதை இந்தச் சமூகம் உணராத வரை.. அதற்கு விடை தேடாதவரை.. இப்படிச் செய்திகளை.. வெளியிட்டு.. எம்மை நாமே பெருமைப்படுத்த.. கழுசறை என்று அடுத்தவனை திட்டி.. அவன் இந்த இனம்.. கூட்டம் என்று பிரிவுகாட்டி.. அதில் இணைத்துக்காட்டி நாம் அவர்களை விட உசத்தியானவர்கள் என்று பெருமைப்பட நாலு வார்த்தை பேசி.. சுய இன்புற வேண்டியதுதான். இதைத்தானே பரம்பரை பரம்பரையா தமிழர்கள் செய்தார்கள்.. செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

இந்த இளைஞர்களுக்கு அல்லது இப்படியான இளைஞர்களுக்கு ஒரு நல்வழியைக் காட்ட எவராவது இங்கு கருத்துப் பகிர்ந்திருக்கிறார்களா என்றால்.. அது இல்லை. ஏனெனில்.. இவர்களை வைத்துத்தானே எங்களை நாங்கள் எடைபோட்டுக்கச் செய்ய வேண்டிய பலவீனமான சமூகக் கட்டமைப்பை எம்மைச் சுற்றி உருவாக்கி வைத்திருக்கிறம்.

தமிழன் திருந்தவே மாட்டான். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் எமது இளைஞர்கள் வன்முறையால் கவரப்படக் காரணம்.. புலம்பெயர் நாடுகளின் உள்ள வாழ்க்கை முறைதானே தவிர.. அவர்கள் வன்முறையாளர்களாக வேண்டும் என்பதற்காக புலம்பெயரவில்லை

லொரி ஒட்டுனர் ஒருத்தர் பஸ் ஒட்டுனரை முந்தி ஒடிவிட்டார் என்று ,துரத்தி சென்று வாளால் வெட்டிய சம்பவம் ஒன்று வல்வை வெளியில் நடந்தது 75 களில் என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

லொரி ஒட்டுனர் ஒருத்தர் பஸ் ஒட்டுனரை முந்தி ஒடிவிட்டார் என்று ,துரத்தி சென்று வாளால் வெட்டிய சம்பவம் ஒன்று வல்வை வெளியில் நடந்தது 75 களில் என்று நினைக்கிறன்.

சிறிய சிறிய வன்முறைகள் எந்த நாட்டிலதான் இல்லை. மேற்கத்தேய காலணித்துவம் எமக்கு விட்டுச் சென்ற எச்சங்களின் வன்முறைக்குழுக்களும் அடங்கும்.

மேற்கு நாடுகள் தான் கட்டமைக்கப்பட்ட மாபியா அதுஇதென்று.. வன்முறைக்கும்பல்களை உருவாக்கி வைத்திருக்கின்றன வன்முறைக்குழுக்களின் தாக்கம் என்பது மேற்குலக நாடுகளின் வாழ்வியல் முறைகளில் அதிகம் என்பதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன்..!

கொலிபூட் படங்களிலும் அதனைப் பிரதிபண்ணும் இந்தியப் படங்களிலும் எது விஞ்சி இருக்கிறது. வன்முறைதானே. கணணி மற்றும் பிஎஸ் கேம்களில் எது அதிகம் இருக்கிறது. வன்முறைகள் தானே. ஏன் முதலாளித்துவமே போட்டி பொறாமையை மையப்படுத்தித்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது.! :icon_idea:

Edited by nedukkalapoovan

உதுகள் எல்லாம் பெட்டை பிடிக்கிற சண்டைகளும் காங் போட்டியும் தான். நோர்வேயில் வெட்டு குத்து அளவு காங் இல்லை. அது தான்

இறக்குமதி செய்தவை. இந்த சண்டையை தான் அந்த நேரத்தில் சிரிலங்கா ஒற்றர்கள் புலிகளுக்குள் வெட்டுக்குத்து என்று செய்தி எல்லாம் வெளியிட்டவை.

இறந்தவர் பெரிய பெரிய காங் சண்டியர் இல்லை. ஆபத்தில் மாட்டு பட்டு சாமு வாளால் வெட்டு வாங்கியதாக அறியப்பட்டது.

என்னவோ நோர்வே அரசு சட்டத்தின் படி தண்டனை கொடுத்ததால் ஆறுதல் தான்.

இனி எல்லாம் குறையும், அகதி அந்தஸ்து கேட்க கூடிய தார்மீக உரிமையையும் இழந்து விட்டோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.