Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கந்தகப் புகையிலும் கருவொன்று....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தகப் புகையிலும் கருவொன்று....

கவிதை - இளங்கவி

அவலத்தின் ஓட்டத்திலும்

அவர் எனக்கு தந்த சொந்தம்....

நாட்டுக்காய் உயிர் போக்குமுன்னர்

அவரால் என் அடிவயிற்றில் வந்த சொந்தம்.....

முற்றுப் புள்ளிபோல

நீ தோன்றினாய் என் கருவினிலே......

வளர்ந்துவிட்டாய் வண்ணத்திபோல்

சிறகடிப்பாய் என் வயிற்றினிலே.....

கருவிலே உன் நிறம் வெளுக்க

பாலில் நான் குங்குமப்பூ சேர்க்கவில்லை......

நீ சுவாசித்த காற்றினிலே

கந்தகப் புகையல்லா சேர்த்திருந்தேன்....

காலை முதல் மாலை வரை

உணவின்றி என் வாழ்க்கை செல்ல....

இரவு முதல் காலை வரை

பதுங்கு குழியினிலே என் இரவு செல்ல....

என் உயிரோ தேய்ந்து செல்ல

உன் உயிரோ வளர்ந்ததடா....

ஏன் என்று யோசித்தேன்

எனக்கு அது இப்போ புரியுதடா....

நீ சுவாசத்திலும் விடுதலையை

நேசித்தவனின் விந்தல்லவா...?

கந்தகப் புகையென்ன

அது கதிரியக்கத்திலுமே வளருமடா...!

உன் உலகம் வளர்ந்து வர

என் உலகம் சிறுத்ததடா....

உலகச் சதிகளினால்

நானும் ஓர் அடிமையடா.....

நான் இன்று மனிக் ஃபாம் எனும்

மரணப் படுக்கையிலே.....

மலிந்த மரணத்துக்கு

பதிலான இந்தச் சிறையினிலே.....

கற்பிணிப் பெண்னென்றாலும்

கடுகளவும் இரங்கமாட்டான்.....

ஈருயிரின் பசியென்றாலும்

உணவு ஒழுங்காகத் தரமாட்டான்.....

என் உயிரை உருக்கி

உன் உயிரை வளர்ப்பேனடா.....

உன் அப்பன் போன மண்ணில்

நீ பிறப்பதற்காய் தொழுவேனடா....

உன் துடிப்புத்தான் என் சுவாசத்தை

ஓட வைக்கும் உந்துசக்தி....

என் அவலங்கலைக் கேட்டுக்கொள்

அது உனை ஓடவைக்கும் குதிரைச்சக்தி....

நீ பிறந்து வளர்ந்ததுமே

உன் அப்பாவின் பணிதொடர்வாய்.....

கருவிலேயே நீ புலிதானே; நம்

விடுதலைக்காய் நீ துணிந்துசெல்வாய்....

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி,

ஆகா:மிகவும் நன்றாக உள்ளது உங்களின் கவிதை.தொடருங்கள் உங்கள் பணியை.

பேண்களின் பேனாக்கள் ஒடிக்கப்பட்டாலும்.ஆண்களின் பேனாக்களாவது உண்மையை பேசிச்செல்லட்டும்.

யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

கருவினில் வளரும் குழந்தைக்கு கவி புனையும் கவியே .........இளங் கவியே ...கற்பனை அபாரம் கருப்பொருளும் .பிரமாதம் .

கரு தாங்கிய பெண்மை யின் , கருத்தும் , கவிதையும் .ஆயிரம் உனர்வுகளை சொல்கின்றன. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அண்ணா உங்கள் கவிதை அருமை.

ஈழத்தாயின் இன்றைய நிலையை சுமந்த வரிகள் கந்தகப்புகை தான் அவற்றின் பிராணவாயு போல.. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

எங்கள் இனத்தின் வலிகள் எவ்வளவு என்று சொல்லமுடியாதோ அந்த அளவுக்கு அதைச் சொல்லவரும் வரிகளின் எண்ணிக்கைக்கும் முடிவில்லை அதில் ஓரிரு வரிகள் தான் இவை..

நன்றிகள் உங்கள் கருத்துக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் எண்ணிலடங்கா வலிகளில் இப்படி கற்பிணித் தாய்மார்களும் எத்தனையோ பேர் எவ்வளவோ துயரங்களை அனுபவிப்பதாக வரும் செய்திகளால் தான் இந்த வரிகள் தோன்றின...

நன்றி அக்கா உங்கள் கருத்துக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

மனதைத் தைத்தது தங்கள் கவிதை. வாழ்த்துக்கள் இளங்கவி..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கவிதைகளில் இருந்து வெளிப்படுத்தும் நம் இனத்தின் வலியைப் உலகப் பெருமொழிகளில் மொழிபெயர்க்கப்படவேண்டும். அதற்கும் முயற்சியெடுங்கள். உங்கள் முயற்ச்சிகள் வீண்போகாது.

நன்றியுடன்

பென்மன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவுக்கு

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.... தாய் சுவாசிக்கும் கந்தகப் புகையில் தானே கருவும் வளரவேண்டிய நிலமை எங்கள் ஈழத்தில்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்குவாருக்கு

மிக்க நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nypenmann

நன்றிகள் உங்கள் கருத்துக்கும் யோசனைக்கும்.... நான் எனது கவிதைத் தொகுப்பு ஒன்றை விரைவில் வெளியிடுகிறேன். அந்த விடயங்கள் முடிந்ததும் நிச்சயம் நிழலியும், நீங்களும் சொன்ன ஒரே கருத்தை நிச்சயம் பரிசீலிப்பேன்.

இளங்கவி உங்கள் கவிதையை பாராட்ட கூட வார்த்தை தேடவேண்டியிருக்கு........... ஒரு தாய்மையின் ஏக்கம் கவலை கஷ்டம் துணிவு என்று பலதரப்பட்ட விடயங்களை இந்த சிறிய கவிக்குள் தந்திருக்கும் விதம் அழகு. பாராட்டுக்கள்.

கந்தகப் புகையிலும் கருவொன்று....

கவிதை - இளங்கவி

...

கருவிலே உன் நிறம் வெளுக்க

பாலில் நான் குங்குமப்பூ சேர்க்கவில்லை......

நீ சுவாசித்த காற்றினிலே

கந்தகப் புகையல்லா சேர்த்திருந்தேன்....

....

நீ சுவாசத்திலும் விடுதலையை

நேசித்தவனின் விந்தல்லவா...?

கந்தகப் புகையென்ன

அது கதிரியக்கத்திலுமே வளருமடா...!

இளங்கவி

உண்மையில் இன்றைய ஒரு வன்னித் தாயின் உள்ளக் குமுரல்களகவே இந்த வரிகள் பிரதிபலிக்கிறது.... உங்கள் கவிதைக்கு நன்றி இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

மிக்க நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு...

கருவில் இருக்கும் குழந்தை முதல் முதியவர்கள் வரை எம்மினம் படும் துன்பத்தை விவரிக்க வார்த்தகள் இல்லை... இருந்தும் என்னால் முடிந்த வரிகளில் எங்களின் அவலத்தை சொல்லியிருக்கிறேன்....

Edited by ilankavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிக்கு

மிக்க நன்றிகள்... முகாமில் கற்பிணித் தாய்மார்கள் படும் அவலங்கலைக் கண்டு இதை எழுதத் தோன்றியது.....

  • கருத்துக்கள உறவுகள்

" நீ சுவாசத்திலும் விடுதலையை

நேசித்தவனின் விந்தல்லவா...?

கந்தகப் புகையென்ன

அது கதிரியக்கத்திலுமே வளருமடா...! "

முகமறியாத மாவீரர்கள் தம்முயிரை மண்ணுக்காக ஈந்தளித்துவிட்டு தங்கள் மகவுகளை இந்த நிலையிலேயே விட்டுச் சென்றுள்ளார்கள் என்பது உண்மையானது.

படைப்புகள் வரலாற்றைப் பதிவு செய்து செல்கிறது. பல மொழிகளில் இவை வரவேண்டும். எங்கள் துயரங்கள் எங்கும் சொல்லப்பட வேண்டும். இளங்கவிக்குப் பாராட்டுகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nochchi

மிக்க நன்றி உங்களுக்கு.....

என் நாட்டுக்காகச் செய்யும் கடமைகளில் எங்கள் அவலங்களைச் சொல்வதும் ஒரு கடமையாகச் செய்கிறேன்.....

நீங்கள் கூறியது போல நிச்சயம் எனது அடுத்த முயற்சி வேற்று மொழிகளில் பதிவதாய் தான் இருக்கும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன் துடிப்புத்தான் என் சுவாசத்தை

ஓட வைக்கும் உந்துசக்தி....

என் அவலங்கலைக் கேட்டுக்கொள்

அது உனை ஓடவைக்கும் குதிரைச்சக்தி....

அருமையான வரிகள், கற்பனையிலும் சரியான சொல் பதத்தை ( குதிரை சக்தி் - ஹோர்ஸ் பவர்) அருமையாக பயன் படுத்தி உள்ளீர்கள்.

உங்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

யோகன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Dr Yogan

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும்.....

நான் விஞ்ஞானத்துறையைச் சேர்ந்தவன் என்பதாலோ என்னவோ இடைக்கிடையே பெளதீக, இரசாயனவியல் சொற்களும் என் கவிதையில் எட்டிப்பார்க்கின்றன...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.