Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டை விட்டு வெளியே சரத் பொன்சேகா முடிவு

Featured Replies

சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் தளபதியும் கூட்டுப்படைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா செல்வதற்கு தீர்மானித்துள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னை நடத்தும் விதம் குறித்து அதிருப்தி அடைந்திருப்பதாலேயே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரச படையினர் வெற்றி பெற்றதன் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்துப் பயந்த காரணத்தாலேயே மகிந்த, அவரை தரைப் படைத் தளபதி பதவியில் இருந்து நீக்கிவிட்டார் என்றும் அவரது பாதுகாப்பைக் குறைத்துவிட்டார் என்றும் ஆங்கில இணையத் தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்னும் ஒருபடி மேலே சென்றுள்ளார். பொன்சேகாவின் அறிக்கைகளைப் வெளியிடக்கூடாது என்றும் அவர் தொடர்பான ஒளிப்படங்களோ கட்டுரைகளோ அரச கட்டுப்பாட்டு ஊடகங்களில் வெளியிடப்படக்கூடாது என்றும் கோத்தபாய உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு குறைவு காரணமாகவே சரத் பொன்சேகா உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுவதற்குத் தீர்மானித்திருக்கிறார் என்று கூறப்படுகின்றது.

சிறிலங்காவில் உள்ள மூன்று மகாசங்கங்களையும் சேர்ந்த பிக்குகள் பிரதிநிதி குழு ஒன்று பொன்சேகாவைச் சந்தித்து அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு மகிந்தவிடம் தாம் எடுத்துக்கூறுவதாகவும் பிக்குகள் குழு உறுதியளித்துள்ளது.

அடுத்த முறை, நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாதம் நடக்கும்போது சரத் பொன்சேகா விவகாரம் குறித்து ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திசநாயக்க பேசவுள்ளார்.

கூட்டுப்படைத் தளபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பத் திட்டமிட்டுள்ளார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் நின்று கொல்லும் என்பதே பொய்த்துப்போய்விட்டது. லட்சக்கணக்கில் தமிழர்களை நரபலியெடுத்தவன்கள் உல்லாசமாய் ஊர்சுற்றவும் ஓடிப்பிடித்து விளையாடவும் வகைசெய்யும் விதியை என்ன சொல்வது? அவலங்கள் என்றும் ஒருபக்கத்தையே சார்ந்திருக்க எவ்வளவு நாட்கள்தான் பொறுத்துக்கொள்ள முடியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன,; தெய்வம் நின்று அறுக்கும். பொய்க்காது. :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத் அண்ணோய் உங்களின் சேவை நாட்டுக்கு இன்னமும் தேவை

நாளை பதிவு, சங்கதி, ஈழமுரசுக்காரங்கள் எழுதப் போறாங்கள் .... "எல்லாம் எங்கள் நிகழ்ச்சி நிரல்களின்படி நடக்கிறதென்று" ....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தை அவலப்படுத்தி, கொன்றொழித்து, எமது மண்ணை சுடுகாடாக்கி மகிந்திவின் பாதங்களில் சமர்பித்து விசுவாசமான கூலிப்படைத்தளபதியா நாய்! இன்று உனது நிலையை யோசித்தால் உனக்கு விளங்கும். அதிகார போதையும் ஆணவமும் மமதையும் இன்று கலைகிறது. இப்போது உனக்கே பாதுகாப்பில்லை. உனக்குமட்டுமல்ல இன்னும் பலருக்கு இதேகதிவரும். வெற்றிலையின் காலில் விழுந்து நக்குவோருக்கும் காலம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

:mellow:

என்ன ஆட்டம் போட்டான்

இண்டைக்கு உனக்கு இந்த நிலமை.. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் வினை தன்னைச்சுடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.