Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவளுக்கு ஒரு "வாரிசு " .....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவளுக்கு ஒரு "வாரிசு " ..........

அமைதியான அந்த கிராமத்தின் ....இளங்கதிரவன் மெல் ல ஒளி பரப்ப் தொடங்கிய அந்த காலை வேளையில் குயிலினமும் பறவை களின் ஆர்ப்பரிபுகளுடனும் பொழுது புலர்ந்தது . காலை பஸ் பயணத்துக்கு மகனை எழுப்ப தேநீர்க்குவளையுடன் செல்லம்மா .அவன் கணேசு அண்மையில் உள்ள நரகத்தில் மரக்கறி வியாபாரம் செய்பவன். எழுந்து காலை க்கடனை முடித்து தேநீரை குடித்து தாயிடம் விடைபெற்றான். அவள் தானும் தேநீர் பருகி ,கூட்டு மாறு எடுத்து முன் முற்றத்தை நீர் தெளித்து கூட்டுகையில் அவள் நினைவு ...கடந்த காலம் நோக்கி சென்றது .

செல்லம்மா , ஆசைப்பிள்ளை தங்கம்மா தம்பதியருக்கு மூத்த பெண் . இரண்டாவது பெண்ணியே எல்லோரும் திருமணதுக்காய் கேட்டனர் .

ஏன் எனில் இவள் செல்லம்மா மூத்தவள் பிறவி ஊமை . இரண்டாவது மகளின் கணவர் தலை நகரில் வேலை பார்த்து கொண்டிருந்தார். செல்லம்மா முழு வேலையும் செய்யும் . தந்தை ஆசை பிள்ளையாருக்கு மூத்தவள் இருக்க இரண்டாவது மகளை கட்டி கொடுக்க விருப்பமில்லை இருபினும் அவளுக்கும் வயது வந்து விட்டது . தங்கையின் கணவர் பயணத்தால் வரும் பொது கிணற்றில் தண்ணீர் அள்ளி கொண்டு இருந்தாலும் ஓடி வந்து .தங்கைஇடம் மீசையை முறுக்கி காட்டி ,கையில் பயணப்பையை காட்டி சேதி சொல்வாள் தங்கைக்கு .

கால ஓட்டத்தில் .அவர்களது தொட்ட வேலைக்கு வரும் செல்லக்கண்டு இவளின் உற்ற நண்பனானான் . ஊராரும் பேசிக்கொண்டனர்.

அவனும் இவளுடன் சைகையிலே ஆயிரம் கதை பேசிக்கொள்வர். இப்படியாக் தொடர்ந்த நட்பு ஒரு நாள் எல்லை மீறி சென்று விட்டது

.சில நாட்களாக செல்ல கண்டு தோட்டத்துக்கு வருவதும் நின்றது . அவன் தலை நகரம் போய் விடதாக சொன்னார்கள். ஒருநாள்

அவள் காலை வேளை...வாந்தி எடுக்கவே .தாய் தங்கம்மா திகைத்து விடாள். வற்புறுத்தி கேட்ட பின் அதற்கு காரணம்

செல்லக்கண்டு என்று சொனாள்.

காலம் தான் யாருக்காகவும் காத்திருபதிலையே . பத்தாம் மாதம் ஆண் குழந்தயை பெற்று எடுததாள். ஊராரின் வசை பேச்சுக்கல்தாங்காமல்..

ஒருவர் பின் ஒருவராக ஆசைப்பிள்ளையும் ..தங்கம்மாவும் போய் சேர்ந்து விட்டனர். தங்கையும் கணவருடன் தலை நகரம் சென்று விடாள். செல்லக்கண்டு ஊருக்கு வரவே இல்லை. தலை நகர் சென்ற ஊரவர்கள் சிலர் அவனை ஒரு ஆட்டோ சாரதியாக கண்டனர். சிறுவன் கனேசுவும் , சாதாரணமாய் பள்ளி சென்றான். சில கர்வம் பிடித்த சிறுவர்கள் அவனை எள்ளி நகையாடினர். இதனால் பத்தாம் வகுப்புடன் பாடசாலையை விடான்.

பின்ப வீட்டில் வரும் காய் கறி களை விற்க தொடங்கியவன் ,சற்று பணம் சேரவே , தாய்க்கு தேவையானவைகளை வாங்கி கொடுப்பான். செல்லம்மாவும் சிக்கனமாய் சேமித்து , ஒரு பெரிய தொகையை ,வங்கியில் இடாள். நகரத்தில் மரக்கறி கடை வைத்திருக்கும் ஊர் பெரியவர் , இவனின் பண்புகளை கண்டு , தன்னுடன் சேர்த்து கொண்டார். இடயில் தன தந்தையை பற்றி கேட்க மனம் வந்தாலும் தாயின் நிலை கண்டு ,மனதுக்குள் வரும் கேள்வியை , அடக்கி கொள்வான்.

முற்றத்தை கூட்டி முடித்தவள் ,காலை உணவை முடித்து மதிய உணவுக்காக தயாரானாள். வாசலில் தபாறகாரனின் மணிச்சத்தம் கேட்க , சென்று பார்த்தவளுக்கு அதர்ச்சி ........ஒரு தந்தி அவள் பெயருக்கு வந்து இருந்தது . செல்லக்கண்டு விபத்து ஒன்றில் காலமாகி விடான் என்று . அந்த ஊர் வாசி ஒருவர் அறிவித்து இருந்தார். இருந்த போதும் தன்னை கவனிக்க வராதவன் . இறந்தென்ன இருந்தென்ன . கிணரடிக்கு சென்றவள் தலையில் நான்கு வாளி நீரை அள்ளிக்கொட்டியவள் , மாலயில் வரும் தன் வாரிசுக்காக ,மகனுக்காக சமைக்க தொடங்கினா. இனி எல்லாமுமே அவன் தான். தன் தள்ளாத காலத்திலும் , தன்னை தாங்குவான் என்ற மன உறுதியுடன் , விரைவாக செயல் படாள். தான் பிறவி ஊமையாய் இருந்தாலும் ...தன்னை திருமணம் செய்ய யாரும் முன் வராத போதும்....தனக்கு கிடைத்த வாரிசு ...........தன்னை காப்பான் என்ற நிம்மதியில் அவன் வரும் பாதை நோக்கி , பஸ் வண்டி வரும் வேளை நோக்கி ....

.காத்து கொண்டிருக்கிறாள். .

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி உங்களுடைய கதைசொல்லும் நடை நன்றாகஉள்ளது.சுருக்கமாகவும் உண்மையாகவும் உள்ளது.உங்களின் ஏனைய கதைகளையும் படிக்கும் ஆர்வத்தை இது தூண்டியுள்ளது. - வல்வைக்கடல் - (அலையாய் இரு)

நல்ல கதை நிலாமதி அக்கா. ஒருவகையில் செல்லக்கண்டு செல்லம்மாவுக்கு நல்லதே செய்துள்ளான். இல்லையென்றால், மகனும் இல்லாமல் அந்த ஊமைப்பெண் ஆதரவின்றி நின்றிருப்பாள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வைக்கடல் .....ஈஸ் உங்களின் கருத்து பகிர்வுக்குஎன் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்கா....என்னக்கா எழுதும் கதைகள் எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் கவலைகள் தருபவையாகத்தான் இருக்கிறது.அதற்காக நான் குறை சொல்லவில்லை.நன்றாக இருக்கிறது உங்களின் கதை.உலகத்தில் இப்படியும் நடக்கிறது தானே...இப்படியானவர்களால்....உண்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையோடு கூடிய உங்கள் கதை அழகு நிலாமதி.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நடந்து பின்பு தற்கொலை செய்த சம்பவம் உண்டு.....தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி .....கறுப்பி ...........புத்தன் உங்கள் கருத்து ப்பகிர்வுக்கு நன்றி ..........

வாய் ஒழுங்காய் பேசத்தெரிந்தவங்களையே சுத்துறாங்கள். வாயும் பேசாமல் இருந்தால்....

  • கருத்துக்கள உறவுகள்

இருந்த போதும் தன்னை கவனிக்க வராதவன் . இறந்தென்ன இருந்தென்ன . கிணரடிக்கு சென்றவள் தலையில் நான்கு வாளி நீரை அள்ளிக்கொட்டியவள் , மாலயில் வரும் தன் வாரிசுக்காக ,மகனுக்காக சமைக்க தொடங்கினா. இனி எல்லாமுமே அவன் தான். தன் தள்ளாத காலத்திலும் , தன்னை தாங்குவான் என்ற மன உறுதியுடன் , விரைவாக செயல் படாள். தான் பிறவி ஊமையாய் இருந்தாலும் ...தன்னை திருமணம் செய்ய யாரும் முன் வராத போதும்....தனக்கு கிடைத்த வாரிசு ...........தன்னை காப்பான் என்ற நிம்மதியில் அவன் வரும் பாதை நோக்கி , பஸ் வண்டி வரும் வேளை நோக்கி ....

.காத்து கொண்டிருக்கிறாள். .

செல்லம்மாவின் நியாயமான காத்திருப்பு வீண்போகக் கூடாது .

கணேசு அந்த தாயின் கனவை நிறைவேற்றுவான் என்னும் நம்பிக்கை எனக்குள்ளது .

சோகமான நல்ல கதை நிலாமதி அக்கா .

  • கருத்துக்கள உறவுகள்

எளிய உரை நடையில் கதையை கொண்டு போனமைக்கு பாராட்டுகள் அக்கா...மேலும் தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

....மாப்பிள்ளை ...........தமிழி ஸ்ரீ ..................ரதி ..........உங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.