Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிச்சை வேண்டாம்! நாயைப் பிடி!

Featured Replies

நாங்கள் எங்களின் வீட்டில் மகிழ்வோடு வாழ்ந்து வந்தோம். எங்களின் மூச்சுக் காற்று வீட்டோடு கலந்து போயிருந்தது. வீடு எங்களுக்கு எல்லாமுமாக இருந்தது.

திடீரென்று ஒரு நாள் அவர்கள் எங்கள் முற்றத்தில் வந்து நின்றார்கள். அவர்களின் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து நின்றார்கள். வரவேற்பது எங்கள் பண்பு. அவர்களுக்கும் இடம் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகினார்கள்.

ஒரு நாள் வீடு முழுவதும் எங்களுக்கே சொந்தம் என்றார்கள். எங்களை எங்களின் வீட்டை விட்டு அடித்து விரட்டினார்கள். நாங்கள் தெருவுக்கு வந்தோம். எங்களின் வீட்டைத் தாருங்கள் என்று நயமாகக் கேட்டோம். அவர்களிடம் பொல்லாத நாய் ஒன்று இருந்தது. அதை எம் மீது ஏவினார்கள். "நாயைப் பிடி! எங்களோடு பேசு! எங்களின் வீட்டைத் தா!" என்று மீண்டும் அன்போடு கேட்டோம். அவர்கள் மீண்டும் நாயை ஏவினார்கள்.

நாங்கள் எங்களின் வீட்டைக் கேட்பதும், அவர்கள் நாயை ஏவுவதுமாக காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நேரத்தில் நாம் எதுவுமே செய்யாது இருக்கின்ற போது கூட நாய் கடிக்கத் தொடங்கியிருந்தது. எம்மைக் காணுகின்ற போதெல்லாம் நாய் துரத்தித் துரத்தி கடித்தது.

எங்களில் சிலர் நாயை அடித்து விரட்ட புறப்பட்டார்கள். எங்களுக்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது. எங்களுக்கு யாரையும் அடித்துப் பழக்கம் இல்லை. இந்தப் பொல்லாத நாயை அடிப்பதைப் பற்றி கற்பனை செய்வதற்கே நாம் தயாராக இருக்கவில்லை. ஆனால் எங்களில் சிலர் "அடிப்போம்" என்று கற்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்கள்.

எம்மவர்கள் நாயை அடித்தார்கள். என்ன ஆச்சரியம்? நாய் மெது மெதுவாக பின்வாங்கியது. நாய் ஓடுவதைக் கண்டதும் கற்களை எடுக்கின்ற கரங்கள் அதிகரித்தன. ஆயினும் எம்மில் சிலர் நாயின் கடி தாங்காமலும், கடித்து விட்டது என்று சொல்லியும், கடிக்கலாம் என்று சொல்லியும் தூரமாய் இருந்து வேறு வீடுகளுக்குள் போய் அடைக்கலம் ஆனார்கள்.

உண்மையைச் சொல்வது என்றால் நாயை அடிக்கப் புறப்பட்டவர்களை விட நாயைக் காரணம் காட்டி ஓடிப் போனவர்கள்தான் அதிகம். அதே வேளை ஓடிப் போனவர்களும் நாய் அடித்து விரட்டப்படுவதை விரும்பினார்கள். ஆகவே கற்களை பெறுவதற்கு உதவி செய்து திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.

எம்மவர்களின் அடி தாங்காமல் நாய் ஓடினாலும், பின்பு மீண்டும் வந்து எங்கள் மீது பாய்ந்தது. ஒருநாள் எம்மவர்கள் சரியான அடி கொடுத்தார்கள். இனிமேல் நாய் மீண்டும் வராது என்று நாங்கள் நம்பியிருந்தோம்.

அந்த நேரம் பார்த்து யார் யாரோவெல்லாம் வந்தார்கள். அவர்களோடு மீண்டும் பேசுங்கள் என்றார்கள். நாங்களும் அவர்களோடு பேசினோம் "எங்களைக் கடிக்க வருகின்ற உன்னுடைய நாயைப் பிடி! எங்களை எங்களின் வீட்டினுள் வாழ விடு!" என்று மீண்டும் பேசினோம். காலம் பேச்சோடு உருண்டு போனது.

திடீரென்று ஒருநாள் நாய் மீண்டும் எங்களைக் கடித்தது. எம்மவர்களும் மீண்டும் கற்களை எடுத்தார்கள். இம் முறை நாய் மிகவும் கொழுத்துப் போய் நின்றது. அதனுடைய பற்கள் கூர்மையடைந்திருந்தன. நாய் பாய்ந்து பாய்ந்து கடித்துக் குதறியது. அந்த நாயோடு வேறு சில நாய்களும் சோந்திருந்தன. எல்லா நாய்களும் சேர்ந்து எம்மை சுற்றிச சுற்றி கடித்தன. எம்மவர்களும் முடிந்த வரை கற்களை வீசினார்கள்.

கடைசியில் நாய் வென்றது. உதவிக்கு வந்த மற்ற நாய்கள் அந்த நாயை வெல்ல வைத்தன என்பதே உண்மை. அவைகளே எம்மவர்களை தோற்கடித்தன.

இப்பொழுது எங்களுக்குள் நிறையக் குழப்பங்கள். "எங்களுக்கு இனிமேல் வீடு வேண்டாம். நாங்கள் ஒரு வீட்டைப் பெறுவதை மற்றவர்கள் விரும்பவில்லை, எங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்க விடும்படி கேட்போம்" இப்படி சிலர் சொல்கிறார்கள். நாயின் கடியைத் தாங்க முடியாமல் சொந்த வீட்டில் வாடகைக்கு இருப்போம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

வேறு சிலரோ இன்னும் ஒரு யோசனையை சொல்கிறார்கள். "வீட்டை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். நாம் தினமும் வாசலில் போய் நின்று அவர்களிடம் பிச்சை எடுப்போம்" இது சிலரின் யோசனை. வீட்டை எம்மிடம் இருந்து பறித்தவர்களுக்கும் இந்த யோசனை மிகவும் பிடித்திருக்கிறது. அவர்களும் மிகக் குறைந்த பிச்சையை எங்களுக்கு வழங்குவது பற்றி ஆலோசிக்கத் தயாராக இருக்கிறார்களாம்.

ஆயினும் எங்களில் சிலர் இவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. "யாராவது சொந்த வீட்டில் போய் பிச்சை எடுப்பார்களா? இது எங்களின் வீடு! பிச்சை வேண்டாம்! நாயைப் பிடி! நாயைப் பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டை விட்டு வெளியேறு!" என்ற குரல்கள் கேட்கின்றன. இந்த உணர்வு இருப்பதனாலேயே எங்கள் வீடு எங்களுக்கு மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னமும் எங்களுக்கு இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து வீட்டு வயது போன அப்பு ஒருவர் 3 மணித்தியாலம் இருந்து உண்ணாவிரதம் இருந்ததினால் தான் நாய் கடிப்பதை நிற்பாட்டியது என்று சொல்லி எங்களை வைத்து இலாபம் தேட முயற்சித்ததும் , பலர் எங்களை வைத்து இலாபம் தேட முயற்சித்ததும் நடந்தது. ஆனால் எத்தனை கடிகள் கடித்தாலும் புதிய வழிகளில் இழந்த வீட்டை மீண்டும் பெறுவோம் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.

திடீரென்று ஒரு நாள் அவர்கள் எங்கள் முற்றத்தில் வந்து நின்றார்கள். அவர்களின் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து நின்றார்கள். வரவேற்பது எங்கள் பண்பு. அவர்களுக்கும் இடம் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகினார்கள்

அவர்களின் வீடு எது? எங்கு இருந்து துரத்தப்பட்டார்கள்?

அவன்கள் மற்ற மாதிரி சொல்லுறாங்கள் நாங்கள் அவன்களுடைய வீட்டை அகதியாக வந்து பிறகு உரிமை கேட்கிறோம் என்று.

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் வீடு எது? எங்கு இருந்து துரத்தப்பட்டார்கள்?

அவன்கள் மற்ற மாதிரி சொல்லுறாங்கள் நாங்கள் அவன்களுடைய வீட்டை அகதியாக வந்து பிறகு உரிமை கேட்கிறோம் என்று.

குற்றச் செயல் செய்ததற்காக விஜயனும் , அவனது தோழர்கள் 700 பேரும் ஈழத்துக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.

குற்றச் செயல் செய்ததற்காக விஜயனும் , அவனது தோழர்கள் 700 பேரும் ஈழத்துக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.

அப்ப எஙகன்ட ஆட்கள் அந்த காலத்திலயே குடும்பகட்டுப்பாடு செய்து இருந்தபடியால் பெரும்பான்மையாக வரமுடியல்ல அவர்கள் குடும்பகட்டுப்பாடு செய்யாதபடியால் பல்கிபெருகிட்டினமோ?

ஏன் சிங்களமொழி உலகின் ஏனைய பகுதியில் பாவனயில் இல்லை

  • தொடங்கியவர்

சிங்கள இனம் இலங்கையில் வந்தது பற்றி பலவிதமான விளக்கங்கள் இருக்கின்றன. எந்த விளக்கங்களும் முழுமையானவை இல்லாமல் இருக்கின்றன. சிங்கள இனத்தை மரபணு சோதனைக்கு உட்படுத்தியே பல உண்மைகளை அறிய முடியும்.

விஜயன் வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தான் என்கின்ற அவர்களின் கதையையும், தமிழர்கள் அதற்கு முன்னமேயே ஈழத்தில் வாழ்ந்தார்கள் என்ற எங்களின் வாதத்தையும் மட்டுமே இக் கதைக்கு பயன்படுத்தியிருக்கிறேன்.

கற்ற பாடம்...

எமக்கு எதிரி நாயில்லை.. நாயின் எஜமான்தான் பிரச்சினை..

இது தெரியாமல்...... ''தெரிய வைக்கப்படாமல்''....... முப்பது வருசமா நாயுடன் உருண்டுபிராண்டி கொண்டு இருந்திருக்கிறோம்.

:unsure:

:(

:huh:

:o

angry-smiley-196.gif

அப்ப எஙகன்ட ஆட்கள் அந்த காலத்திலயே குடும்பகட்டுப்பாடு செய்து இருந்தபடியால் பெரும்பான்மையாக வரமுடியல்ல அவர்கள் குடும்பகட்டுப்பாடு செய்யாதபடியால் பல்கிபெருகிட்டினமோ?

ஏன் சிங்களமொழி உலகின் ஏனைய பகுதியில் பாவனயில் இல்லை

90% சிங்களவர்கள் ஒரு காலத்தில் தமிழர்களே..

இப்போது மலையகதமிழர்களில்... தமில் எழுத வாசிக்க தெரிந்தவர்களைவிட சிங்களம் எழுத வாசிக்கதெரிந்தவர்களே அதிகம்..

இந்தக் கடையில என்னுடைய version னை நீலத்தில் போட்டுள்ளேன்.

நாங்கள் எங்களின் வீட்டில் மகிழ்வோடு வாழ்ந்து வந்தோம். எங்களின் மூச்சுக் காற்று வீட்டோடு கலந்து போயிருந்தது. வீடு எங்களுக்கு எல்லாமுமாக இருந்தது.

திடீரென்று ஒரு நாள் அவர்கள் எங்கள் முற்றத்தில் வந்து நின்றார்கள். அவர்களின் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து நின்றார்கள். வரவேற்பது எங்கள் பண்பு. அவர்களுக்கும் இடம் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகினார்கள்.

ஒரு நாள் வீடு முழுவதும் எங்களுக்கே சொந்தம் என்றார்கள். எங்களை எங்களின் வீட்டை விட்டு அடித்து விரட்டினார்கள். நாங்கள் தெருவுக்கு வந்தோம். எங்களின் வீட்டைத் தாருங்கள் என்று நயமாகக் கேட்டோம். அவர்களிடம் பொல்லாத நாய் ஒன்று இருந்தது. அதை எம் மீது ஏவினார்கள். "நாயைப் பிடி! எங்களோடு பேசு! எங்களின் வீட்டைத் தா!" என்று மீண்டும் அன்போடு கேட்டோம். அவர்கள் மீண்டும் நாயை ஏவினார்கள்.

நாங்கள் எங்களின் வீட்டைக் கேட்பதும், அவர்கள் நாயை ஏவுவதுமாக காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நேரத்தில் நாம் எதுவுமே செய்யாது இருக்கின்ற போது கூட நாய் கடிக்கத் தொடங்கியிருந்தது. எம்மைக் காணுகின்ற போதெல்லாம் நாய் துரத்தித் துரத்தி கடித்தது.

எங்களில் சிலர் நாயை அடித்து விரட்ட புறப்பட்டார்கள். எங்களுக்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது. எங்களுக்கு யாரையும் அடித்துப் பழக்கம் இல்லை.

எங்களுக்கு பிறத்தியாரை அடிச்சுப் பழக்கம் இல்லை. யாரின் அறை பெரிது, பெரிய அறைதான் எனக்கு வேண்டும் என எமக்குள்ளேயே அடிபட்டு சகோதரர்களைக் கூட வீட்டுக்கு வெளியே வைத்து இருந்தனாங்கள்

இந்தப் பொல்லாத நாயை அடிப்பதைப் பற்றி கற்பனை செய்வதற்கே நாம் தயாராக இருக்கவில்லை. ஆனால் எங்களில் சிலர் "அடிப்போம்" என்று கற்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்கள்.

எம்மவர்கள் நாயை அடித்தார்கள். என்ன ஆச்சரியம்? நாய் மெது மெதுவாக பின்வாங்கியது. நாய் ஓடுவதைக் கண்டதும் கற்களை எடுக்கின்ற கரங்கள் அதிகரித்தன. ஆயினும் எம்மில் சிலர் நாயின் கடி தாங்காமலும், கடித்து விட்டது என்று சொல்லியும், கடிக்கலாம் என்று சொல்லியும் தூரமாய் இருந்து வேறு வீடுகளுக்குள் போய் அடைக்கலம் ஆனார்கள்.

இன்னும் சிலர் யார் நாயை அடிக்க வேண்டும் என புடுங்குப் பட்டு தமக்குள்ளேயே அடிபடத் தொடங்கினர். நாயை அடிக்க புறப்பட்டவர்ளை நாயின் எசமானனே கூட்டிக் கொண்டு சில கற்களையும் தந்து ஆசை காட்டி எப்படி தமக்குள் அடிபடுவது என்றும் சொல்லித் தந்தான். ஏற்கனவே தமக்குள் அடிபட்டு பழகிப் போன வீட்டில் இருந்தவர்கள் நாயினது எசமானனின் சொல்லைக் கேட்டு பழைய மாதிரியே தமக்குள்ளும் அடிபடத் தொடங்கினர். கற்களை எடுத்துக் கொண்டு போனவர்களில் சிலர், நாயின் காலடிதான் உண்மையான கதவு என்று நக்கிப் பிழைக்கவும் தொடங்கினர்.

உண்மையைச் சொல்வது என்றால் நாயை அடிக்கப் புறப்பட்டவர்களை விட நாயைக் காரணம் காட்டி ஓடிப் போனவர்கள்தான் அதிகம். அதே வேளை ஓடிப் போனவர்களும் நாய் அடித்து விரட்டப்படுவதை விரும்பினார்கள். ஆகவே கற்களை பெறுவதற்கு உதவி செய்து திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.

எம்மவர்களின் அடி தாங்காமல் நாய் ஓடினாலும், பின்பு மீண்டும் வந்து எங்கள் மீது பாய்ந்தது. ஒருநாள் எம்மவர்கள் சரியான அடி கொடுத்தார்கள். இனிமேல் நாய் மீண்டும் வராது என்று நாங்கள் நம்பியிருந்தோம்.

அந்த நேரம் பார்த்து யார் யாரோவெல்லாம் வந்தார்கள். அவர்களோடு மீண்டும் பேசுங்கள் என்றார்கள். நாங்களும் அவர்களோடு பேசினோம் "எங்களைக் கடிக்க வருகின்ற உன்னுடைய நாயைப் பிடி! எங்களை எங்களின் வீட்டினுள் வாழ விடு!" என்று மீண்டும் பேசினோம். காலம் பேச்சோடு உருண்டு போனது.

திடீரென்று ஒருநாள் நாய் மீண்டும் எங்களைக் கடித்தது. எம்மவர்களும் மீண்டும் கற்களை எடுத்தார்கள். இம் முறை நாய் மிகவும் கொழுத்துப் போய் நின்றது. அதனுடைய பற்கள் கூர்மையடைந்திருந்தன. நாய் பாய்ந்து பாய்ந்து கடித்துக் குதறியது. அந்த நாயோடு வேறு சில நாய்களும் சோந்திருந்தன. எல்லா நாய்களும் சேர்ந்து எம்மை சுற்றிச சுற்றி கடித்தன. எம்மவர்களும் முடிந்த வரை கற்களை வீசினார்கள்.

நாயின் காலடியை நக்க சென்றவர்களும் அவர்களில் இருந்தனர். சொந்த வீட்டின் கூரையை விலத்தி உள்ளே இருந்த சகோதரிகளைக் கூட கூட்டிக் கொடுத்தனர். வெளித் தோற்றத்தில் உறுதியாக தெரிந்தாலும் ஏற்கனவே தமக்குள் புடுங்குப் பட்டு அடிபட்டு பலகீனமாகிப் போன நாம் கொளுத்த நாயின் கடியால் சிதறுண்டு சின்னாபின்னமாகிப் போனோம்.

கடைசியில் நாய் வென்றது. உதவிக்கு வந்த மற்ற நாய்கள் அந்த நாயை வெல்ல வைத்தன என்பதே உண்மை. அவைகளே எம்மவர்களை தோற்கடித்தன.

இப்பொழுது எங்களுக்குள் நிறையக் குழப்பங்கள். "எங்களுக்கு இனிமேல் வீடு வேண்டாம். நாங்கள் ஒரு வீட்டைப் பெறுவதை மற்றவர்கள் விரும்பவில்லை, எங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்க விடும்படி கேட்போம்" இப்படி சிலர் சொல்கிறார்கள். நாயின் கடியைத் தாங்க முடியாமல் சொந்த வீட்டில் வாடகைக்கு இருப்போம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

வேறு சிலரோ இன்னும் ஒரு யோசனையை சொல்கிறார்கள். "வீட்டை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். நாம் தினமும் வாசலில் போய் நின்று அவர்களிடம் பிச்சை எடுப்போம்" இது சிலரின் யோசனை. வீட்டை எம்மிடம் இருந்து பறித்தவர்களுக்கும் இந்த யோசனை மிகவும் பிடித்திருக்கிறது. அவர்களும் மிகக் குறைந்த பிச்சையை எங்களுக்கு வழங்குவது பற்றி ஆலோசிக்கத் தயாராக இருக்கிறார்களாம்.

ஆயினும் எங்களில் சிலர் இவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. "யாராவது சொந்த வீட்டில் போய் பிச்சை எடுப்பார்களா? இது எங்களின் வீடு! பிச்சை வேண்டாம்! நாயைப் பிடி! நாயைப் பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டை விட்டு வெளியேறு!" என்ற குரல்கள் கேட்கின்றன. இந்த உணர்வு இருப்பதனாலேயே எங்கள் வீடு எங்களுக்கு மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னமும் எங்களுக்கு இருக்கின்றது.

வீடு கிடைக்கும் என நம்பிக்கொண்டு எமக்குள் இன்னமும் புடுங்குப் பட்டுக்கொண்டு இருக்கின்றோம். வீடு கிடைக்க முன்னமே யாருக்கு பெரிய அறை வேண்டும் என சண்டை பிடிக்காமலும், நாயிற்கும் அதன் எசமானுக்கும் வீசும் கற்களை மீண்டும் தமக்குள்ளேயே வீசாமலும் இருந்தால் மீண்டும் வீடு நிச்சயம் கிடைக்கும் என்றும் சிலர் சொல்லுகினம்.

சபேசன்....கதை நன்றாக இருக்கு, எளிமையான வடிவில், சிலேடையில் சொல்லப்பட்ட விதம் நன்றாக இருக்கு.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள இனம் இலங்கையில் வந்தது பற்றி பலவிதமான விளக்கங்கள் இருக்கின்றன. எந்த விளக்கங்களும் முழுமையானவை இல்லாமல் இருக்கின்றன. சிங்கள இனத்தை மரபணு சோதனைக்கு உட்படுத்தியே பல உண்மைகளை அறிய முடியும்.

விஜயன் வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தான் என்கின்ற அவர்களின் கதையையும், தமிழர்கள் அதற்கு முன்னமேயே ஈழத்தில் வாழ்ந்தார்கள் என்ற எங்களின் வாதத்தையும் மட்டுமே இக் கதைக்கு பயன்படுத்தியிருக்கிறேன்.

இன்னும் பத்துவருசத்திலை தமிழரின்ரை துருதும்புக்களையும் சிங்களவன் அழிப்பான் அழிக்கிறான் அழிக்கப்போறான் அழிச்சுப்போட்டான்

ஆனால் நாங்கள் இன்னும்

பழசையே துழாவிக்

கிண்டிக்கொண்டிருப்பம்

ஏனெண்டால் அடிப்பிடிக்கக்கூடாதேல்லோ :unsure:

ஜெய்கிந்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.