Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொகுசு வாகனத்தில் ஏறிச்சென்ற ஜோர்ஜ் மற்றும் தயா மாஸ்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொகுசு வாகனத்தில் ஏறிச்சென்ற ஜோர்ஜ் மற்றும் தயா மாஸ்டர்

எழுதியவர்பகலவன் ழn ளுநிவநஅடிநச 12இ 2009

பிரிவு: சிறப்புச்செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரை நேற்று சிறிலங்கா நீதிமன்றம் ஒன்று நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுதலை செய்துள்ளது. சுமார் 25 லட்சம் ரூபா பிணையில் வெளிவந்த இருவரும் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இன்டர் கூலர் சொகுசு வாகனத்திலேறிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 3 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர்இ அரச தொலைக் காட்சியில் தோன்றி விடுதலைப் புலிகளே மக்களைத் தடுத்துவைத்திருந்தனர் எனவும் அவர்கள் மக்களைக் கொலைசெய்ததாகவும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அவர்கள் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே அவ்வாறு கூறியதாக சில ஊடகங்கள் கருத்துவெளியிட்டு தமிழ் மக்களை சாந்தப்படுத்தியது.

இன்டர் கூலர் போன்ற சொகுசு வாகனங்கள் சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியானவைஇ அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் பயணிக்கும் இந்த வாகனம் யாருக்குச் சொந்தமானது என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சொகுசு வாகனத்தை அனுப்பியது யார்இ மற்றும் பல விடுதலைப் புலி முக்கிய உறுப்பினர்கள் தடுப்புக்காவலில் இருக்கின்றபோது இவர்கள் மட்டும் ஏன் விடுதலையானார்கள் என்பதில் பல சிக்கலான சந்தேகங்கள் நிலவுகிறது.

அரசுடன் இணைந்து இவர்கள் செயல்ப்படவுள்ளதாக சில செய்திகள் கசிந்துள்ள நிலையில் பொறுத்திருந்துதான் நாம் பார்க்கவேண்டும்.

மீனகம்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 3 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் அரச தொலைக் காட்சியில் தோன்றி விடுதலைப் புலிகளே மக்களைத் தடுத்துவைத்திருந்தனர் எனவும் அவர்கள் மக்களைக் கொலைசெய்ததாகவும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

அடி,உதை உதவுவது போல அண்ணம் தம்பிகளே உதவமாட்டார்கள் என்ற கலையை சிங்களவன் நன்கு கற்றிருக்கிறான். ரொம்ப நல்லவர்கள், வயசுப்போன காலத்திலாவது சிறு சலுகையை அனுபவிக்கட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்

இன்டர் கூலர் போன்ற சொகுசு வாகனங்கள் சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியானவைஇ அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் பயணிக்கும் இந்த வாகனம் யாருக்குச் சொந்தமானது ?

கொஞ்ச ஆட்கள் இனி நித்திரையாலை எழும்பி வந்து , இது பிரபாகரனுக்கு சொந்தமான சொகுசு வாகனம் என்று சொல்வார்கள்.

Edited by தமிழ் சிறி

அப்ப அவையள் எப்பிடியான வாகனத்தில ஏறிப்போய் இருக்கவேணும் எண்டு சொல்லுங்கோ. மாட்டு வண்டிலில ஏறிப்போய் இருக்கலாமா? இல்லாட்டிக்கு இ.போ.ச பேரூந்தில ஏறிப்போய் இருக்கலாமா? இல்லாட்டிக்கு ஆட்டோவில ஏறி வீட்டபோய் இருக்கலாமா? நீங்கள் வெளிநாடுகளில ஏறாத சொகுசு வாகனத்திலையா அவையள் ஏறி இருக்கிறீனம்?

"கொஞ்ச ஆட்கள் இனி நித்திரையாலை எழும்பி வந்து , இது பிரபாகரனுக்கு சொந்தமான சொகுசு வாகனம் என்று சொல்வார்கள்."

சில சமயங்களில் ஊகங்கள் சில உண்மையான கதைகள் உண்டல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவையள் எப்பிடியான வாகனத்தில ஏறிப்போய் இருக்கவேணும் எண்டு சொல்லுங்கோ. மாட்டு வண்டிலில ஏறிப்போய் இருக்கலாமா? இல்லாட்டிக்கு இ.போ.ச பேரூந்தில ஏறிப்போய் இருக்கலாமா? இல்லாட்டிக்கு ஆட்டோவில ஏறி வீட்டபோய் இருக்கலாமா? நீங்கள் வெளிநாடுகளில ஏறாத சொகுசு வாகனத்திலையா அவையள் ஏறி இருக்கிறீனம்?

வாழ்ந்தாலும் ஏசும்

தாழ்ந்தாலும் ஏசும்

குறுட்டு உலகமடா

தமிழா

தறி கெட்ட உலகமடா....

முழுப்ப+சனிக்காயை சோத்துக்கை மறைச்சதுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: இவர்களைக் குறை கூறுவதால் எந்தப் பயனுமில்லை. தமிழ்த் தேசியத்தை இறுதிவரை ஆதரித்து கொல்லப்படுவதைக் காட்டிலும் சிங்களவன் சொல்வதைக் கேட்டு தப்பி வாழலாம் என்கிற நிலை இருப்பதால் அவர்கள் அப்படி நடந்துகொள்ள நேருகிறது.

வேறு வழியின்றி இதைச்செய்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். மற்றும்படி அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க முடியாது.

வன்னியில் போர்க்காலத்தில் பணியாற்றிய 5 வைத்தியர்களுக்கும் நடந்த கதி என்னவென்று நாம் அறியாததா??

முழுப்ப+சனிக்காயை சோத்துக்கை மறைச்சதுக்கு நன்றி!

புலிகள் பலமா இருக்கேக மட்டும் அவர்கள் புகழ் பாடிட்டு அவை அழிஞ்சா பிறகு நீர் மட்டும் பச்சோந்தி மாதிரி சிங்களவன்ட கால நக்கலாம்..அவர்கள் சொகுசு வாகனத்தில போனது தான் பிழையோ??

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பலமா இருக்கேக மட்டும் அவர்கள் புகழ் பாடிட்டு அவை அழிஞ்சா பிறகு நீர் மட்டும் பச்சோந்தி மாதிரி சிங்களவன்ட கால நக்கலாம்..அவர்கள் சொகுசு வாகனத்தில போனது தான் பிழையோ??

எரிக்கும் கேள்வி

ஆனால் உதுகளுக்கு சுணைக்காது

  • கருத்துக்கள உறவுகள்

முழுப்ப+சனிக்காயை சோத்துக்கை மறைச்சதுக்கு நன்றி!

[/quote

சோத்துக்குள் கிடந்த பூசணிக்காயை கண்டுபிடித்து உங்களின் அறிவை போலவே உலகிற்கு பிரகாசமாக காட்டியதற்கு. பாராட்டுக்கள்

:( இவர்களைக் குறை கூறுவதால் எந்தப் பயனுமில்லை. தமிழ்த் தேசியத்தை இறுதிவரை ஆதரித்து கொல்லப்படுவதைக் காட்டிலும் சிங்களவன் சொல்வதைக் கேட்டு தப்பி வாழலாம் என்கிற நிலை இருப்பதால் அவர்கள் அப்படி நடந்துகொள்ள நேருகிறது.

வேறு வழியின்றி இதைச்செய்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். மற்றும்படி அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க முடியாது.

வன்னியில் போர்க்காலத்தில் பணியாற்றிய 5 வைத்தியர்களுக்கும் நடந்த கதி என்னவென்று நாம் அறியாததா??

இந்த நிலை தமிழருக்குள் புதிது என்டது போல பலர் புலம்புவதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது...

இந்திய இராணுவம் தமிழீழம் முழுவதையும் ஆக்கிரமித்த போது சில நூறு போராளிகள் காடுகளில் பதுங்கி கொண்டார்கள்... ஒரு 1000 வரையான புலிகளில் இருந்து விலகிய போராளிகளையும் தீவிர ஆதரவாளர்களையும் இந்திய இராணுவம் கைது செய்தது... அப்போதைய இந்திய இராணுவ சித்திரவதைகளுக்கு அஞ்சி பல போராளிகள் தலையாட்டிகளாகவும் இருந்தனர், இந்திய படைகளுக்கு ஆதரவாக செயற்பட்டனர்... ... அதையும் விட முக்கியமாக மாற்று குழுக்கள் எல்லாம் வெளிப்படையாக புலிகளை வேட்டையாடி திரிந்தன.... காட்டி கொடுத்தவையும் எதிர் பக்கம் போன புலிகளின் பிரபல உறுப்பினர் தொகையும் அப்போதும் குறைவு இல்லை...

அப்பவும் எங்கட சனம் எல்லாம் முடிஞ்சு போச்சுது எண்டு புலம்பினவை... இப்பவும் புலம்புகினம்...

அப்பவுக்கும் இப்பவும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்ன எண்டால் இப்ப எங்கட பிரச்சினை சர்வதேச மயப்பட்டது மட்டும் தான்... அப்ப அடிச்சால் கேக்க ஆள் இருக்க இல்லை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.