Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்கு வருடங்களில் மிகப்பெரிய ஈழ போராட்டம் வெடிக்கும்: சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்குநர் சீமான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது.

முன்னதாக அவர் புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், ’’தேசிய இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தைத்தான் பிரபாகரன் நடத்திவந்தார்.அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம்.

இனி போராடி பலனில்லை என்று சில அமைப்புகள் கொஞ்சம் அமைதி காக்கின்றன. ஆனால் நாம் தமிழர் இயக்கம் அமைதியாக இருக்காது.

பொதுவாக நேற்று வரை நடந்து வந்த ஈழ போராட்டத்தில் இப்போது சிறிது இடைவெளி இருக்கு. இன்னும் நான்கு மாதங்கள் அல்லது நான்கு வருடங்களில் ஈழ போராட்டம் முன்பை விட பெரிய அளவில் வெடிக்கும்.

தனித்தமிழ் ஈழம் தான் தீர்வு;அந்த தீர்வை நோக்கி போராட்டம் தொடரும்’’என்று தெரிவித்தார்.

http://www.nerudal.com/nerudal.10323.html

  • Replies 70
  • Views 5.8k
  • Created
  • Last Reply

எனக்கு என்னவோ இவர்கள் கொஞ்சம் அமைதி காத்தால் நல்லது என்றே தோன்றுகிறது. முகம்களில் உள்ள மக்களை வெளியே வரச்செய்துவிட்டு பிறகு பேசலாம். இப்படியான பேச்சுக்கள் அவர்களின் வாழ்வை மேலும் காயப்படுத்த வாய்ப்புண்டு.

சீமான் போன்றவர்கள் மீண்டும் தமிழர்களை உசுப்பேற்றி தம்மை அரசியல் ரீதியாக வளர்க்கவே வேசம் போடுகின்றார்கள். ஏற்கனவே உசுப்பேற்றி உசுப்பேற்றி பாதி மக்களை அழித்தாயிற்று, எனி மீதி மக்களுக்கும் வேட்டு வைக்க வேண்டுமல்லவா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் போன்றவர்கள் மீண்டும் தமிழர்களை உசுப்பேற்றி தம்மை அரசியல் ரீதியாக வளர்க்கவே வேசம் போடுகின்றார்கள். ஏற்கனவே உசுப்பேற்றி உசுப்பேற்றி பாதி மக்களை அழித்தாயிற்று, எனி மீதி மக்களுக்கும் வேட்டு வைக்க வேண்டுமல்லவா??

சீமான் , அய்யா நெடுமாறன் போன்றவர்களை நீங்கள் சொல்லும் கூட்டத்துடன் சேர்க்க முடியாது..... இருந்தாலும் தலைவர் உள்ளார் என்று மேடைக்கு மேடை பேசுவதை கொஞ்ச காலத்திற்கு தவிர்த்து வருவது நல்லது என்பதே என் கருத்தும் கூட...

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் போன்றவர்கள் மீண்டும் தமிழர்களை உசுப்பேற்றி தம்மை அரசியல் ரீதியாக வளர்க்கவே வேசம் போடுகின்றார்கள். ஏற்கனவே உசுப்பேற்றி உசுப்பேற்றி பாதி மக்களை அழித்தாயிற்று, எனி மீதி மக்களுக்கும் வேட்டு வைக்க வேண்டுமல்லவா??

உங்களுடைய கருத்து தவறானதா சரியானதா..... என்பதிலும்விட. மக்கள் உசுப்பேறாமல் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் மறைமுகமாக சொல்கின்றீர்கள். உசுப்பேறி எமக்கு தேவையான தீர்வுக்கு நாமே போராடாது இருந்துகொண்டு. றோட்டால் போகின்றவர்களை நொந்து பயனில்லை. யாரிலாவது பிழையை கண்டுபடித்து அவர்களின் மீது பழியை போட்டுவிட்டு அப்படியே உட்கார்வதால்தான் நாம் அழிகின்றோமே தவிர. சும்மா சீமான்களாலும் சீதாக்களாலும் அல்ல. குறைந்தபட்சம் அவர்கள் அந்த மக்களுக்கா மூன்றுக்கு மேற்பட்ட தடவை சிறையாவது சென்றிருக்கிறார்களே?

எமது மக்களுடன் சேர்ந்து நாமும் எமது உடன்பிறப்புகளும்தான் உசுப்பேறி போராடுவதுபற்றி சிந்திக்கவேண்டும் எமக்கான பாதையை நாம் தேர்வுசெய்ய வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்கு வருடங்களில் மிகப்பெரிய ஈழ போராட்டம் வெடிக்கும்: சீமான்

இதுவந்து இனி சிங்களவனுக்கும் அவனுக்கு மிண்டு குடுத்துக்கொண்டு நிக்கிறவங்களுக்கும் நல்ல சாட்டாய் போகப்போகுது :unsure:

சீமான் போன்றவர்கள் மீண்டும் தமிழர்களை உசுப்பேற்றி தம்மை அரசியல் ரீதியாக வளர்க்கவே வேசம் போடுகின்றார்கள். ஏற்கனவே உசுப்பேற்றி உசுப்பேற்றி பாதி மக்களை அழித்தாயிற்று, எனி மீதி மக்களுக்கும் வேட்டு வைக்க வேண்டுமல்லவா??

சீமான் ஒண்டும் உசுப்பேத்தி விட்டு குளிர்காயிற ஒருவரல்ல... சீமான் அரசியல் ரீதியாக தன்னை வளர்க்க ஓண்டும் உசுப்பேத்தவும் , வேசம் போடவும் தேவையில்லை...அதுவும் கேடுகெட்ட எம்மினத்துக்காக கதைத்து சிறை செல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அவருடைய பேச்சாற்றலுக்கும் , திறமைக்கும் ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்தோ , சினிமாவிலோ நல்ல நிலையில் இருந்திருப்பார்.

எஞ்சியிருக்கும் எமக்காக கதைக்கும் ஒரு சிலரையும் எதிரிகளாக்காமல் இருப்போம்...

உங்களுடைய கருத்து தவறானதா சரியானதா..... என்பதிலும்விட. மக்கள் உசுப்பேறாமல் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் மறைமுகமாக சொல்கின்றீர்கள். உசுப்பேறி எமக்கு தேவையான தீர்வுக்கு நாமே போராடாது இருந்துகொண்டு. றோட்டால் போகின்றவர்களை நொந்து பயனில்லை. யாரிலாவது பிழையை கண்டுபடித்து அவர்களின் மீது பழியை போட்டுவிட்டு அப்படியே உட்கார்வதால்தான் நாம் அழிகின்றோமே தவிர. சும்மா சீமான்களாலும் சீதாக்களாலும் அல்ல. குறைந்தபட்சம் அவர்கள் அந்த மக்களுக்கா மூன்றுக்கு மேற்பட்ட தடவை சிறையாவது சென்றிருக்கிறார்களே?

எமது மக்களுடன் சேர்ந்து நாமும் எமது உடன்பிறப்புகளும்தான் உசுப்பேறி போராடுவதுபற்றி சிந்திக்கவேண்டும் எமக்கான பாதையை நாம் தேர்வுசெய்ய வேண்டும்

வெறுமனே புலத்திலிருந்து உசுப்பேற்றலாலேயே, எல்லாவற்றையும் இழந்து இன்று எம்மக்கள் நட்டாற்றில் நிற்கின்றார்கள். கடந்தகாலத் தவறுகளிலிருந்து பலர் பாடம் கற்றுக் கொண்ட போதிலும், இன்னும் சிலர் இன்றும் கனவுலகிலேயே கற்பனையில் வாழ்ந்து விடலாமென்று நினைக்கின்றார்கள். சீமான் போன்றவர்கள் தமிழகத்திலேயே அகதிகளாகவுள்ள எம் மக்களுக்கு இன்றுவரை ஏதாவது நன்மை செய்திருக்கின்றார்களா ?? அருகிலிருப்பவனுக்கே ஒன்றும் செய்யாதவர்கள், ஆறு தாண்டி வந்து வெட்டிப் புடுங்குவேனென்றால் அதை எதில் அடக்குவது. 4 மாதத்திலோ 4 வருடத்திலோ மிகப்பெரிய ஈழ போராட்டம் வெடிக்கும் என்று வாய்ச் சவடாலாகப் பேசுகின்றார். இது நடைமுறைக்கு ஒத்துவராது எனத் தெரிந்தவர்களும் தம்மைத் தாமே தேற்றிக் கொள்ள தலையாட்டிப் பிதற்றுகின்றார்கள். இவர்களை நம்பி விசு போன்றவர்கள் மீது எம்மவர் சிலர் சேறடித்தனர். ஆனால் இன்றும் அந்த விசு தான் தனது மக்கள் அரங்கம் மூலம் வரும் பணத்தில், தமிழகத்திலுள்ள எமது அகதிச் சிறார்கள் படிக்க உதவுகின்றார்.

எனி ஒரு ஆயுதப் போராட்டமென்பது மிஞ்சியுள்ள அந்த மக்களையும் புதைகுளிக்குள் அனுப்ப உதவுமேயன்றி, அவர்கள் வாழ்வை மேம்படுத்த உதவாது. எனியும் போராட்டம் தேவை தான். ஆனால் அது அரசியல் ரீதியான போராட்டமாகவே இருக்க முடியும். வெறுமனே திரும்பவும் கத்தியைத் தீட்டி புத்தியை மழுங்கடிக்காது, புத்தியைத் தீட்டி அந்த மக்களுக்கு எப்படி விடிவைக் கொடுக்கலாம் என்று சிந்தியுங்கள்.

சீமான் ஒண்டும் உசுப்பேத்தி விட்டு குளிர்காயிற ஒருவரல்ல. அவருடைய பேச்சாற்றலுக்கும் , திறமைக்கும் ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்தோ , சினிமாவிலோ நல்ல நிலையில் இருந்திருப்பார்.

:unsure:வை.கோவை விடவா ?? :rolleyes:

:unsure:வை.கோவை விடவா ??

அது இப்ப முக்கியமில்லை, முதலில சீமான் போன்றோர் உசிப்பேத்தி தான் இந்த நிலமை , அது இது எண்டு அடுத்தவர் மீது பழி சுமத்தாமல் இருப்போம்....

யார் உசுப்பேத்தி நாட்ட விட்டு ஓடினிங்கள்???

Edited by பல்லவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறுமனே புலத்திலிருந்து உசுப்பேற்றலாலேயே, எல்லாவற்றையும் இழந்து இன்று எம்மக்கள் நட்டாற்றில் நிற்கின்றார்கள். கடந்தகாலத் தவறுகளிலிருந்து பலர் பாடம் கற்றுக் கொண்ட போதிலும், இன்னும் சிலர் இன்றும் கனவுலகிலேயே கற்பனையில் வாழ்ந்து விடலாமென்று நினைக்கின்றார்கள். சீமான் போன்றவர்கள் தமிழகத்திலேயே அகதிகளாகவுள்ள எம் மக்களுக்கு இன்றுவரை ஏதாவது நன்மை செய்திருக்கின்றார்களா ?? அருகிலிருப்பவனுக்கே ஒன்றும் செய்யாதவர்கள், ஆறு தாண்டி வந்து வெட்டிப் புடுங்குவேனென்றால் அதை எதில் அடக்குவது. 4 மாதத்திலோ 4 வருடத்திலோ மிகப்பெரிய ஈழ போராட்டம் வெடிக்கும் என்று வாய்ச் சவடாலாகப் பேசுகின்றார். இது நடைமுறைக்கு ஒத்துவராது எனத் தெரிந்தவர்களும் தம்மைத் தாமே தேற்றிக் கொள்ள தலையாட்டிப் பிதற்றுகின்றார்கள். இவர்களை நம்பி விசு போன்றவர்கள் மீது எம்மவர் சிலர் சேறடித்தனர். ஆனால் இன்றும் அந்த விசு தான் தனது மக்கள் அரங்கம் மூலம் வரும் பணத்தில், தமிழகத்திலுள்ள எமது அகதிச் சிறார்கள் படிக்க உதவுகின்றார்.

எனி ஒரு ஆயுதப் போராட்டமென்பது மிஞ்சியுள்ள அந்த மக்களையும் புதைகுளிக்குள் அனுப்ப உதவுமேயன்றி, அவர்கள் வாழ்வை மேம்படுத்த உதவாது. எனியும் போராட்டம் தேவை தான். ஆனால் அது அரசியல் ரீதியான போராட்டமாகவே இருக்க முடியும். வெறுமனே திரும்பவும் கத்தியைத் தீட்டி புத்தியை மழுங்கடிக்காது, புத்தியைத் தீட்டி அந்த மக்களுக்கு எப்படி விடிவைக் கொடுக்கலாம் என்று சிந்தியுங்கள்.

நீங்கள் சொல்வது யோசிக்கவேண்டிய ஒன்று தான்... தமிழகத்திலே முகாம்களில் உயிர் பயம் இல்லையே தவிர மற்ற எல்லாவற்றிலும் வவுனியா முகாம்களுடன் எந்தவிதத்திலும் குறைந்ததல்ல.........குறைந்தபட்சம

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் போன்றவர்கள் தமிழகத்திலேயே அகதிகளாகவுள்ள எம் மக்களுக்கு இன்றுவரை ஏதாவது நன்மை செய்திருக்கின்றார்களா ??

சீமான் தீவிர ஈழ ஆதரவாளர். உணர்ச்சிவசப்பட்டு பிழையாகக் கதைக்கலாம். ஆனால் எங்களுக்காகச் சிறை சென்றவர். தொடர்ந்து ஈழ மக்களுக்காகக் குரல் கொடுப்பவர். ஆனால் எங்களுக்காக் குரல் கொடுக்கும் சீமான் அகதி முகாம்களில் வாழும் எம்மவர்களுக்கு பலவிதமான உதவிகளை செய்து வருபவர். உங்களின் கருத்துக்களில் ஒன்று "புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது ". அவர் செய்த உதவிகளில் ஒன்று.(இத்தனைக்கும் அவர் பெரிய பணக்காரர் அல்ல).

தமிழ்நாடு அகதி முகாம்- சாரதா கல்லூரி சேலம்- 30 மாணவிகள்

நேற்று தமிழ்நாட்டு மக்கள் தொலைகாட்சி பார்த்தேன். அதில் ஒரு நேர்காணல். நேரு என்ற இலங்கை தமிழர் (தற்போது வசிப்பது தமிழ்நாடு அகதிகள் முகாம்) பேசிய கருத்துக்கள். அவர் சொல்வது தமிழ்நாடு அரசும், மத்திய அரசும், தனியார் கல்லூரி, பள்ளி களும் அகதிகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். நடிகர் சூர்யா தன சொந்த செலவில் ஆறு சிறுவர்களுக்கு பள்ளி உடை செலவுகளை ஏற்று உள்ளாராம், சீமான், மணிவண்ணன், இல கணேசன் (பா ஜ கா) போன்றோரும் ஏற்று உள்ளனராம். சேலம் சாரதா கல்லூரி (ஆர்ய நிறுவனம், பார்ப்பனீய நிறுவனம்) முப்பது பெண்களுக்கு இலவச உடை, தங்கும் விடுதி, உணவு, கலூரி படிப்பு வழங்குகிறதாம் . நன் சொல்லவருவது வலைபதிவில் தான் நாம் ஆர்யர், புலம் பெயர்ந்த தமிழர் என்று எல்லாம் அடித்து கொள்கிறோம், ஆனால் நிஜ வாழ்வில் எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக உள்ளனர்.

http://kuppan-yahoo.blogspot.com/2009/07/30.html

யார் உசுப்பேத்தி நாட்ட விட்டு ஓடினிங்கள்???

:unsure:நான் சொல்புத்தியை விட சுயபுத்திக்குத் தான் அதிக மதிப்பு கொடுக்கிறவனுங்க. நீங்க யாராவது உசுப்பேற்றிவிட ஓடி வந்ததற்காக, எல்லோரையும் அப்படி கணக்கு போடாதீங்க. :rolleyes:

:unsure:நான் சொல்புத்தியை விட சுயபுத்திக்குத் தான் அதிக மதிப்பு கொடுக்கிறவனுங்க. நீங்க யாராவது உசுப்பேற்றிவிட ஓடி வந்ததற்காக, எல்லோரையும் அப்படி கணக்கு போடாதீங்க. :rolleyes:

நான் நினைக்கிறேன் பிரபாகரன் சிங்களவனை உசுப்பேத்தி விட்டு இருக்காவிட்டால் உங்களை சிங்களவன் இலங்கையில் இருந்து அடித்து இருக்க மாட்டான் நீங்கள் உங்கை சுவிசுக்கு வந்து இருக்க வேண்டி இருக்காது எண்டு...

என்ன மாதிரி சிறப்பாய் இலங்கையில் வசதியாக வாழ்ந்து இருக்க முடியும்... எல்லாத்தையும் கெடுத்து போட்டாங்கள்...

இப்ப பாருங்கோ எவ்வளவு கஸ்ரம்...

Edited by தயா

:unsure:நான் சொல்புத்தியை விட சுயபுத்திக்குத் தான் அதிக மதிப்பு கொடுக்கிறவனுங்க. நீங்க யாராவது உசுப்பேற்றிவிட ஓடி வந்ததற்காக, எல்லோரையும் அப்படி கணக்கு போடாதீங்க. :rolleyes:

என்னை யாரும் உசுப்பேத்தவும் இல்லை , நான் ஓடி போகவும் இல்லை....

அவர் செய்த உதவிகளில் ஒன்று.(இத்தனைக்கும் அவர் பெரிய பணக்காரர் அல்ல).

தமிழ்நாடு அகதி முகாம்- சாரதா கல்லூரி சேலம்- 30 மாணவிகள்

சீமான், மணிவண்ணன், இல கணேசன் (பா ஜ கா) போன்றோரும் ஏற்று உள்ளனராம்.சேலம் சாரதா கல்லூரி (ஆர்ய நிறுவனம், பார்ப்பனீய நிறுவனம்) முப்பது பெண்களுக்கு இலவச உடை, தங்கும் விடுதி, உணவு, கலூரி படிப்பு வழங்குகிறதாம் . நன் சொல்லவருவது வலைபதிவில் தான் நாம் ஆர்யர், புலம் பெயர்ந்த தமிழர் என்று எல்லாம் அடித்து கொள்கிறோம், ஆனால் நிஜ வாழ்வில் எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக உள்ளனர்.

பொதுவாகவே இந்திய வழக்கில் " என் ஆத்துக்காரரும் கச்சேரி பண்ணுறார் " என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். அது போலத்தான் நீங்கள் இணைத்த சீமான் போன்றவர்களும் உதவி பண்ணுகின்றார்கள் என்ற விபரம் உள்ளது. ஏனையவர்கள் குறிப்பாக இத்தனை பேருக்கு உதவி செய்கின்றோமென்று சொல்லியது போல் ஏன் இவர்களால் சொல்ல முடியாது போனது. நீங்கள் சொல்வது போல் சீமான் மிகமிக பின்தங்கிய குடும்பத்திலிருந்து சினிமாத்துறைக்கு வந்தவர் தான். அவர் இயக்கியது 2-3 படங்கள் தான். ஆனால் அவரது தற்போதைய நிலை மிகப்பெரிய மாடிவீடு மற்றும் விலையுயர்ந்த பஜிறா ஜீப்பிற்குச் சொந்தக்காரர். இதை நான் சொல்லவில்லை. ஐரோப்பிய ஊடகமொன்றிற்கு இந்தியச் செய்திகளை வழங்கும் ஊடகவியலாளரொருவர் வானலையிலேயே சொன்னது. வேண்டுமானால் மாடி வீட்டு ஏழை என்று வைத்துக் கொள்ளுவோமா ??

ஆமாம் சீமான் எமக்காக கோசம் போட்டுச் சிறை சென்றவர் தான். அங்கு கூட தமக்கு முதல்வகுப்புச் சிறை தான் தர வேண்டும் என்று போராடிப் பெற்ற தியாகி. ஈழத்தமிழன் வன்னியில் பரிதவிக்கின்றான் என்ற கவலையில் முதல் வகுப்புச் சிறை கேட்டார் என்று எடுத்துக் கொள்வோமா ?? பெரியாரின் சீடனென்று தன்னை பறைசாற்றும் சீமான் சமீபத்தில் கூட தமிழகத்தில் நடத்த கிறிஸ்தவ நிகழ்வொன்றில் அதிதியாகக் கலந்து கொண்டார் தானும் கிறிஸ்தவன் என்பதால்.

"புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது " என்பது என் தலையாய கருத்துத் தான். அதற்காக " தமிழா நீ இளிச்சவாயனாக இருந்து ஏமாந்து கொண்டிரு " என்பதை நான் ஏற்றுக் கொள்ளவா முடியும் ??

நீங்கள் இணைத்த தகவல்களின்படி பார்த்தாலே, மொத்தத்தில் ஈழத்தமிழனில் அக்கறை கொண்ட எத்தனையோ பேர் விளம்பரமில்லமலே உதவிகள் செய்து கொண்டிருக்க, சிலர் மட்டுமே தமது பிழைப்புகளுக்காக விளம்பரம் தேடுகின்றார்கள்.

என்னை யாரும் உசுப்பேத்தவும் இல்லை , நான் ஓடி போகவும் இல்லை....

:unsure:அடடா அப்ப வன்னிமுகாமில் இணைய இணைப்புகளுடன் வசதியாகவிருந்து, துன்பப்பட்டுக் கொண்டுள்ளீர்கள் போல. உங்களுக்கு விடிவு கிடைக்க நானும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். :rolleyes:

சீமானுக்கு சொந்த வீடு கிடையாது.....

இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்களுக்கு முதல் வகுப்பு சிறை கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும், அவ்வாறு மறுத்தால் அது நம் உரிமையை விட்டு விடுவதாகும்.

சீமான் பேசாமல் திரைப்படங்கள் எடுத்துக்கொண்டும் , பார்ட்டி கிளப் என்றும் திரிந்து, கிசுகிசுக்கள் என்று ஜாலியாக பொழுதைக்கழிக்கலாம் தான்!

2- 3 படங்கள் என்றாலும் வருமானம் இருக்காதா என்ன ??? நீங்கள் சொல்ல வருவது என்ன ??? புலிகளிடமோ அல்லது ஈழத்தமிழர்களிடமோ அவர் பணம் வாங்கி மாரடிக்கிறார் என்று சு.சாமி போல் கேவலப்படுத்துகிறீர்களா??

சீமானுக்கு சொந்த வீடு கிடையாது.....

இது மிகப்பெரிய பொய் என்பது உங்கள் மனச்சாட்சிக்கே தெரியும்.....

நான் நினைக்கிறேன் பிரபாகரன் சிங்களவனை உசுப்பேத்தி விட்டு இருக்காவிட்டால் உங்களை சிங்களவன் இலங்கையில் இருந்து அடித்து இருக்க மாட்டான் நீங்கள் உங்கை சுவிசுக்கு வந்து இருக்க வேண்டி இருக்காது எண்டு...

என்ன மாதிரி சிறப்பாய் இலங்கையில் வசதியாக வாழ்ந்து இருக்க முடியும்... எல்லாத்தையும் கெடுத்து போட்டாங்கள்...

இப்ப பாருங்கோ எவ்வளவு கஸ்ரம்...

:unsure:நீங்க எதையும் நினைத்துப் பார்க்கிறதிலை வல்லவரென்பது களத்திற்கே தெரிஞ்ச விசயமாச்சே. ஆனால் பலவேளைகளில் நினைப்புத் தானுங்க பிழைப்பைக் கெடுக்கிறதெண்டு பெரியவாள்கள் சொல்லுறதுமுண்டு. :rolleyes:

:unsure:நீங்க எதையும் நினைத்துப் பார்க்கிறதிலை வல்லவரென்பது களத்திற்கே தெரிஞ்ச விசயமாச்சே. ஆனால் பலவேளைகளில் நினைப்புத் தானுங்க பிழைப்பைக் கெடுக்கிறதெண்டு பெரியவாள்கள் சொல்லுறதுமுண்டு. :rolleyes:

அப்ப எதை நினைச்சு சீமான் கெட்டவர் எண்டு நல்லவரான நீங்கள் சொல்லுறீயள்....??? ஒண்டையும் நினைச்சு பாக்கமலே...??? நினைச்சு பாக்காமல் தான் எல்லாம் எழுதுறணீயளே.... உதைத்தான் எங்கட ஊரிலை மண்டைகும் வாய்க்கும் தொடர்பில்லாதவை எண்டு சொல்லுறவை.... மறை கழண்டவை என்டும் சொல்லாம்..

உங்கட நினைப்பு பிழைப்பை கெடுத்து போனது கவலைதான்... இனிமே`லாவது நல்ல வருமானம் தரும் வழிகளாக பாத்து சேருங்கோ... நக்க வெளிக்கிட்டவைக்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன...

சீமானுக்கு சொந்த வீடு கிடையாது.....

இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்களுக்கு முதல் வகுப்பு சிறை கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும், அவ்வாறு மறுத்தால் அது நம் உரிமையை விட்டு விடுவதாகும்.

சீமான் பேசாமல் திரைப்படங்கள் எடுத்துக்கொண்டும் , பார்ட்டி கிளப் என்றும் திரிந்து, கிசுகிசுக்கள் என்று ஜாலியாக பொழுதைக்கழிக்கலாம் தான்!

2- 3 படங்கள் என்றாலும் வருமானம் இருக்காதா என்ன ??? நீங்கள் சொல்ல வருவது என்ன ??? புலிகளிடமோ அல்லது ஈழத்தமிழர்களிடமோ அவர் பணம் வாங்கி மாரடிக்கிறார் என்று சு.சாமி போல் கேவலப்படுத்துகிறீர்களா??

எலும்பை போட்டால் எல்லா நாயும் தான் வாலை ஆட்டும்... சிலர் போடும் எலும்புக்காய் வழமையாக வாலை ஆட்டி கொன்டு திரியும் வசம்புக்கு உங்கட விளக்கம் ஏறாது கண்டியளோ.... காரணம் அவைக்கு வெளியாலை சிந்திக்க வராது....

அடிச்ச சிங்களவனுக்கு வாய்கிளிய நிண்ட காலமாக வக்காலத்து வாங்குபவர் வசம்பு.... அடிவாங்கின தமிழன் அடங்கிதான் போகவேணும் எண்டதுதான் அவர்களின் வழமையான வியாக்கியானம்...

இந்திராவை கொண்ற சீக்கியனிடம் நடந்த்துக்காய் இந்தியா மன்னிப்பு கேட்டது சரி நியாயம் எண்று சொல்வார்கள்... ஆனால் தமிழரை கொண்ற ராஜிவை கொண்ற தமிழர்கள் தண்டிக்க படவேணும் எண்டு துடிப்பார்கள்... உந்த வீரர்கள்...

கேடு கெட்ட தமிழ குணம் கொண்டவர்களில் உவர்கள் ஒருவகை....

இது மிகப்பெரிய பொய் என்பது உங்கள் மனச்சாட்சிக்கே தெரியும்.....

:unsure:நீங்க எதையும் நினைத்துப் பார்க்கிறதிலை வல்லவரென்பது களத்திற்கே தெரிஞ்ச விசயமாச்சே. ஆனால் பலவேளைகளில் நினைப்புத் தானுங்க பிழைப்பைக் கெடுக்கிறதெண்டு பெரியவாள்கள் சொல்லுறதுமுண்டு. :rolleyes:

மனசாட்சிப்படி சொல்கிறேன் .......

சீமானுக்கு சொந்த வீடு இல்லை அவர் தாயாரும் மிகவும் எளிமையாகத்தான் வாழ்கிறார்..

தன் இன மக்கள் தவறே செய்தாலும் மற்ற இன மக்கள் விட்டுக்கொடுப்பதில்லை....

ஆனாலும் அநீதி இழைக்கப்பட்ட தமிழின .... மிகவும் அடிபட்ட ஈழத்தமிழ் மக்கள்(புலம் பெயர்ந்து சொகுசாக வாழ்ந்து கொண்டு.... ) நடந்து கொள்ளும் விதம் ,மிகவும் அதிர்ச்சியளிக்கிறது!!!

தமிழனுக்கு முதல் எதிரி தமிழனே தான்......

ஆனாலும் அநீதி இழைக்கப்பட்ட தமிழின .... மிகவும் அடிபட்ட ஈழத்தமிழ் மக்கள்(புலம் பெயர்ந்து சொகுசாக வாழ்ந்து கொண்டு.... ) நடந்து கொள்ளும் விதம் ,மிகவும் அதிர்ச்சியளிக்கிறது!!!

தமிழனுக்கு முதல் எதிரி தமிழனே தான்......

இதை வெளிப்படையாக உங்களுக்கு ஒருதடவை சொல்ல முடியாமல் கடினப்பட்டு இருக்கிறேன்... இப்போ காலம் அதுக்கு வளிவகை செய்து இருக்கிறது...

தமிழன் அடிமையாகவே இருக்க போவது மட்டும் உண்மை... வெளியால் வர வேண்டும் எனும் எண்ணமே இல்லாது செய்து வைத்து கொண்டு வாழ்கிறார்கள்...

அப்ப எதை நினைச்சு சீமான் கெட்டவர் எண்டு நல்லவரான நீங்கள் சொல்லுறீயள்....??? ஒண்டையும் நினைச்சு பாக்கமலே...??? நினைச்சு பாக்காமல் தான் எல்லாம் எழுதுறணீயளே.... உதைத்தான் எங்கட ஊரிலை மண்டைகும் வாய்க்கும் தொடர்பில்லாதவை எண்டு சொல்லுறவை.... மறை கழண்டவை என்டும் சொல்லாம்..

உங்கட நினைப்பு பிழைப்பை கெடுத்து போனது கவலைதான்... இனிமே`லாவது நல்ல வருமானம் தரும் வழிகளாக பாத்து சேருங்கோ... நக்க வெளிக்கிட்டவைக்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன...

நான் இங்கு எதையும் நினைச்சுப் பார்த்து எழுதலை. அப்ப செய்தியை இணைச்சவர் என்ன ஊடகங்களில் வந்ததை இணைச்சவரோ அல்லது கற்பனையில் நினைச்சு இணைச்சதோ ?? வந்த செய்திகளைத் தான் நானும் எழுதினேன். நான் எனது சொந்த உழைப்பில் தான் பிழைப்பைப் பார்க்கின்றேன். அதனால்த் தான் எதையும் கெளரவமாக நாகரீகமாக எழுதுகின்றேன்.

மறை கழண்டவைக்கும், மண்டைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாதவைக்கும் தான் நக்கிப் பிழைக்கிறரதும், அநாகரீகமாக கருத்துகளைக் கையாள்வதும் கைவந்த கலையென்பது தங்கள் கருத்திலிருந்தே புரியாதா என்ன ??

Edited by Vasampu

மனசாட்சிப்படி சொல்கிறேன் .......

சீமானுக்கு சொந்த வீடு இல்லை அவர் தாயாரும் மிகவும் எளிமையாகத்தான் வாழ்கிறார்..

தன் இன மக்கள் தவறே செய்தாலும் மற்ற இன மக்கள் விட்டுக்கொடுப்பதில்லை....

ஆனாலும் அநீதி இழைக்கப்பட்ட தமிழின .... மிகவும் அடிபட்ட ஈழத்தமிழ் மக்கள்(புலம் பெயர்ந்து சொகுசாக வாழ்ந்து கொண்டு.... ) நடந்து கொள்ளும் விதம் ,மிகவும் அதிர்ச்சியளிக்கிறது!!!

தமிழனுக்கு முதல் எதிரி தமிழனே தான்......

வேலவன்

இந்த விடயமாக எனது இந்திய நண்பரொருவரும் நான் எழுதிய செய்தியை, எனக்கு முன்பே உறுதிப்படுத்தியிருந்தார். அந்த நண்பரிடமிருந்து எவ்வித ஆதாரத்தை உங்களுக்கு பெற்றுத் தர வேண்டுமெனத் தாங்கள் தெரிவியுங்கள். முடிந்தால் நான் அதைப் பெற்று களத்திலேயே இணைக்கின்றேன். அப்போது தெரியும் யார் பொய் சொல்வதென்று. மேலும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புவதே எம்மக்களைச் சாட்டி பலபேர் பிழைப்பு நடாத்த முயல்வதையே. ஐரோப்பாவிலேயே பல அமைப்புகள் வன்னி மக்களைச் சாட்:டி சேர்த்த பல கோடிகளை எப்படி கபளீகரம் செய்துள்ளார்கள் என்ற செய்திகளை தங்களைப் போன்றவர்கள் பார்க்கவில்லையா ?? தன் இன மக்கள் தவறே செய்தாலும் இன மக்கள் விட்டுக்கொடுப்பதில்லை என வாய்மூடி மெளனம் காக்கின்றீர்களா ??

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் மாடி வீடு வச்சிருந்தா என்ன? வச்சிருக்கா விட்டால் என்ன? எங்களுக்காக அவர் ஏன் குரல் கொடுக்க வேண்டும் . தானுண்டு தன் தொழில் உண்டு என்று இருக்க வேண்டியவர்தானே? சீமான் மற்றைய சினிமாக் காரர்களைப் போல இல்லை.தமிழரின் அவல நிலையச் சொல்லி அகதிப் பாஸ்போட் எடுத்துப் போட்டு அந்த தமிழர்களின் அழிவை ரசிக்கிற உங்களைப் போன்றவர்களை விட சீமான் எவ்வளவோ மேல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.