Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் வசந்தமும் வேலைத்திட்டங்களும்

Featured Replies

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களுள் 22டோஸர்கள், 37 மோட்டர் கிறேடர்கள், 9ரோலர்கள், 14 எக்ஸ்கிலவேட்டர்கள், 19 வீல் லோடர்கள் என்பன மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு ஏதுவாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாம் என தெரியவருகிறது. இவை அனைத்தும் வடக்கின் அபிவிருத்திக்கு என கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இவை அனைத்தும் உண்மையில் மக்களுக்கான அபிவிருத்திக்கா அல்லது இராணுவ தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகினதா அவ்வாறாயின் முன்னுரிமை எதற்கு? இந்த கேள்விகளுக்கு காரணம் என்னவெனில் இதுவரை செய்யப்பட்ட அபிவிருத்திகள் என பார்க்கும் போது அவற்றை கீழ்வருமாறு பட்டியல் படுத்தலாம்.

1 . ஆனையிறவு பரந்தன் தட்டுவன் கொட்டி பகுதிகளில் அமைக்கப்பட்ட மீழ்குடியேற்ற கிராமங்களை நிர்மூலமாக்கியது

2. கிளினொச்சியில் புனர்வாழ்வு கட்டடம் , கனிஸ்ட வித்தியாலயம், மற்றும் தனியார் கட்டடங்களை இடித்தது

3. பரவி பாஞ்சான் பகுதி- கிளினொச்சி குழ வாய்க்கல் பகுதிக்கு இடையேயான வீடுகள் கட்டடங்களை தரைமட்டமாக்கியது

4. வெண்புறா கட்டடத்தினை இடித்து பெளத்த விகாரை அமைப்பது

5. சந்திரன் மழலைகள் பூங்காவை இடித்து தரைமட்டமாக்கி சிங்கள இராணுவத்தினருக்கு நினைவு சிலை அமைத்து வருவது

6. டிப்போ சந்தி மற்றும் கரடிபோக்கு சந்தி பகுதிகளில் இராணுவ தலைமயகங்கள் அமைத்து வருவது

7. முல்லைத்தீவு நகரம் தரைமட்டமாகி அங்கு இராணுவ தலைமையகம் மற்றும் சிங்கள இராணுவத்தினருக்காக சிலை அமைத்து வருவது.

8. முள்ளீவாய்க்கால் , பொக்கணை, மாத்தளன் பகுதிகளில் கொல்லப்பட்ட மக்களின் எச்சங்களை எடுத்து எரிப்பது அல்லது கடலிற்குள் கொண்டு போய் வீசுவது.

9. மாவீரர் துயிலும் இல்லங்களை தரைமட்டமக்கி அங்கு சிங்கள சிப்பாய்கள் தூபிகளை கட்டுவது

10. கரையோர மீனவர் அபிவிருத்தி என சிங்கள மீனவர்களை மீன்பிடிக்க அனுமதித்து இருப்பது.

11. இராணுவ தலைமையகங்களுக்கான பாதைகளை இணைப்பது.

இவையே தற்போதய வடக்கின் வசந்த அபிவிருத்தி திட்ட வேலைகளாக இருக்கின்றன. எனவே இந்த வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தவே சீன இயந்திரங்கள் முதலில் அவசர அவசரமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன எனவும் கருத இடமிண்டு.

நன்றி ஈழ நாதம் http://www.eelanatham.net/news/important

  • கருத்துக்கள உறவுகள்

மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு என வெளிநாடுகளில் பணம் வாங்கப்பட்டு தமிழரை நாசமாக்க தான் பயன்படுத்தப்படுகிறது.

... சில தினங்களுக்கு முன் ஒரு மெயில் வந்தது .... பவர்பொயின்ரில் போட்டு தடவி .... வருங்கால யாழாம் ... விறைத்து விட்டது, பார்த்தவுடன் .... லண்டனோ, வாசிங்ரனோ இனி யாழ்ப்பாணத்துக்கு கிட்ட நிற்க முடியாது போலுள்ளது!!! ... உதை எங்கட சிலதுகள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்!!!! ... கேட்கிறது கேணிகள் என்றால் .....

நீங்கள் இங்கையிருந்து இப்பிடி கத்துறியள் அங்கை 400 தமிழ் பெண்கள் பொலிஸிலை சேர விண்ணப்பிச்சிருக்காம்! போற போக்கிலை நாங்கள் மாரித்த தவளை மாதிரி கத்தி சாகவேண்டியது தான்! யாழ்ப்பாணம் யால்பாண ஆக மாறிவிடும்!

வட மாகாணத்தில் 500 பொலிஸாரை ஆட்சேர்க்க 6500 பேர் விண்ணப்பம் இன்றும் நாளையும் நேர்முகப் பரீட்சை 400 பெண்களும் விண்ணப்பம்

வடக்கில் 500 பொலிஸாரை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்றும் நாளையும் நடைபெறுமென யாழ்ப்பாணத்துக்கான பொலிஸ் சுப்ரின்டன்ட் ஜி. எச். மாரப்பன தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இந்நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.செப்டெம்பர் 19 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் 6 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 400 பெண்களினுடையதெனவும் யாழ். பொலிஸ் சுப்ரின்டன்ட் மாரப்பன கூறினார்.

கடந்த 03 தசாப்தங்களுக்குப் பின்னர் இப்போதே முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய அவர் அடுத்த கட்டமாக சப் இன்ஸ்பெக்டர் தெரிவுக்காக விரைவில் விண்ணப்பங்கள் கோரப்படுமெனவும் தெரிவித்தார்.

நீங்கள் இங்கையிருந்து இப்பிடி கத்துறியள் அங்கை 400 தமிழ் பெண்கள் பொலிஸிலை சேர விண்ணப்பிச்சிருக்காம்! போற போக்கிலை நாங்கள் மாரித்த தவளை மாதிரி கத்தி சாகவேண்டியது தான்! யாழ்ப்பாணம் யால்பாண ஆக மாறிவிடும்!

வட மாகாணத்தில் 500 பொலிஸாரை ஆட்சேர்க்க 6500 பேர் விண்ணப்பம் இன்றும் நாளையும் நேர்முகப் பரீட்சை 400 பெண்களும் விண்ணப்பம்

வடக்கில் 500 பொலிஸாரை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்றும் நாளையும் நடைபெறுமென யாழ்ப்பாணத்துக்கான பொலிஸ் சுப்ரின்டன்ட் ஜி. எச். மாரப்பன தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இந்நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.செப்டெம்பர் 19 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் 6 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 400 பெண்களினுடையதெனவும் யாழ். பொலிஸ் சுப்ரின்டன்ட் மாரப்பன கூறினார்.

கடந்த 03 தசாப்தங்களுக்குப் பின்னர் இப்போதே முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய அவர் அடுத்த கட்டமாக சப் இன்ஸ்பெக்டர் தெரிவுக்காக விரைவில் விண்ணப்பங்கள் கோரப்படுமெனவும் தெரிவித்தார்.

இது "தவிச்ச முயல் அடிக்கும் செயல்" ஒழிய வேறொன்றுமில்லை!! .... அங்கு வேலை வெட்டிகள் இல்லை, வெளிநாட்டு பணத்தில் வாழ்பவர்களை விட, மற்றவர்கள் ஒருவேளை சோற்றுக்கே படும்பாடு வேதனை!!

உதை வைத்து அரசியல் நடத்தும் மாற்றுக்கருத்து மாமணிகள், வவுனியா முகாங்களில் மக்கள் படும் பாட்டை, எங்கேயாவது கதைத்தார்களா?????

"றோட்டு போடுறான், கட்டிடம் கட்டி திறக்கிறான், பொலிஸுக்கு ஆளெடுக்கிறான் ...." ..... தமிழர்களின் பிரட்சனை முடிந்து விட்டது என்ன?????????

  • கருத்துக்கள உறவுகள்

... சில தினங்களுக்கு முன் ஒரு மெயில் வந்தது .... பவர்பொயின்ரில் போட்டு தடவி .... வருங்கால யாழாம் ... விறைத்து விட்டது, பார்த்தவுடன் .... லண்டனோ, வாசிங்ரனோ இனி யாழ்ப்பாணத்துக்கு கிட்ட நிற்க முடியாது போலுள்ளது!!! ... உதை எங்கட சிலதுகள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்!!!! ... கேட்கிறது கேணிகள் என்றால் .....

நானும் பார்த்தன்... புலம்பெயர்வாசிகளை கவிழ்க்க நல்ல பிரச்சாரமா தெரிஞ்சது..! :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்தன்... புலம்பெயர்வாசிகளை கவிழ்க்க நல்ல பிரச்சாரமா தெரிஞ்சது..! :)

நானும் யாரையோ கவிழ்க்கப் படாத பாடுபடுகிறார்கள் என்று யோசித்துப்பார்த்தேன் இப்போதுதான் தெரிகிறது டங்குவார் போன்றவர்களைத்தான் குறி வைத்திருக்கிறார்கள். டங்குவார் வலு கவனமாக..... அலுவல்களைப் பாருங்கள். :D

ஒரு விடுதலைப் போராட்டம் மக்களின் அரசியல் கண்களை திறந்து தொடரந்த போராட்டத்திற்கு வழிசமைத்திருக்க வேண்டும்! மாறாக நமது மக்களை இன்று பாழுங்கிணத்தில் தள்ளியது மட்டுமல்லாது சஷ்டையின்றி அமைதியாக இருப்பதே மேல் தமது சுதந்திரம் என்று சிந்திக்கும் வகையில் நமது தேசிய விடுதலைப் போராட்டம் அமைந்தது இனி ஒரு 100 வரியம் சென்றாலும் தமிழர்களின் பிரச்சனை தீர வழியற்று போய்விட்டது.

யாழ் குடா நாட்டில் அண்மையில் நடை பெற்ற கூட்டம் ஒன்றில் மக்கள் இராணுவ காவல் அரண்களை அகற்ற வேண்டாம் என் இராணுவத்திடம் கேட்டுள்ளனர். காரணம் கொள்ளைக்கார்களின் பயம். இரவில் குழுக்களாக பயணிக்கும் கொள்ளைக்காரர்கள் வீடுகளுக்குள் புகுந்து கட்டிவைத்து விட்டு கொள்ளையடித்த சம்பவங்கள் தினமும் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதற்கு தீர்வு என்ன என்பது தான் இன்றைய அவர்களின் பிரச்சனை.

தொழில் இன்மை வறுமை இந்த கொள்ளை காரர்கரள சமூகத்தில் உருவாக்கிறது. அதை தடுக்க என்ன செய்வது? இது தான் இன்று அவர்களின் பிரச்சனை.

அன்றாடம் பிழைப்பு நடாத்துபவர்கள் கூலி வேலை செய்பவர்கள் வறுமையில் வாடுபவர்கள் இவர்களுக்கு அன்றைய தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்வது தான் இன்று அவர்களின் பிரச்சனை.

இது ஒரு புறம் மறுபுறத்தில் தமிழ் இளைஞர்கள், பெண்களை பகிடிவதைக் குள்ளாக்குவதை நிறுத்த தமிழ் பெண்கள் இராணுவத்தினருடன் நட்பு கொண்டாடுவது தான் ஒரு தீர்வாக அவர்களுக்கு தெரிகிறது. இது அவர்களின் பிரச்சனை.

வசதி படைத்த தமிழ் இளைஞர்கள் இராணுவத்துடன் கதைத்தது நட்புறவாடி அந்த இராணுவம் விடுமுறையில் கொழும்பு செல்கையில் ஏராளமான பணத்தை அவர்களிடம் கொடுத்து தமக்கு தேவையான புதிய மோபைல் மற்றய இலத்திரனியல் பொருட்களை மலிவாக பெறுவது இந்த தமிழ் இளைஞர்களின் தற்போதைய பிரச்சனை.

14 வருடகாலமாக யாழ் குடா இராணுவத்தின் கைகளில்! அங்கு நடைபெற்ற கலாச்சார மாற்றங்கள் நம்மை அதிரவைப்பதாக இருக்கும்!

இன்றைய தேவை தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்பதை உணர்ந்தாலும் அவர்களின் தேவை அமைதியான வாழ்வு! அதன்பின் மற்றவை அவர்களுக்கு ஆடம்பரம்! அரசயலும் உட்பட!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.