Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் காங்கிரஸிற்கு இந்தக் கொலை வெறி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: திமுக எம்பி்க்களுடன் இலங்கை சென்று திரும்பிய காங்கிரஸ் எம்.பிக்கள், தங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் [^] ஆகியோரை சந்தித்து தமிழர்கள் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.

திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பிக்கள் குழு 5 நாள் இலங்கை பயணம் மேற்கொண்டு முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை அளித்தது.

இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பிக்கள் சுதர்சன நாச்சியப்பன், கே.எஸ். அழகிரி, என்.எஸ்.வி. சித்தன், ஜே.எம். ஆருண் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவுடன் ஆலோசனை நடத்தினர்.

அதில், குழு அறிக்கையை சோனியா மற்றும் பிரதமரிடம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

'ராஜபக்சேவுக்கு அறிமுகமான ஒரே நபர் திருமா'..

இந் நிலையில் இக் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பி. அழகிரி அளித்துள்ள ஒரு பேட்டியில்,

முகாம்களில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் தங்கள் சொந்த இடத்துக்கு செல்வதையே விரும்புகின்றனர். அதே போல் இந்தியாவால் மட்டும்தான் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

அவர்களது குறைகளையும் அதிபர் ராஜபக்சேவிடம் எடுத்துக் கூறினோம். அவற்றை நிறைவேற்றுவதாகவும் அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பதாகவும் ராஜபக்சே தெரிவித்தார்.

இந்த விவரங்களை எல்லாம் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரிடம் எடுத்துக் கூற உள்ளோம்.

இலங்கையில் நம்ம ஊர் எதிர்க்கட்சிகளை போல் இல்லாமல் ரணில் தலைமையிலான எதிர்க்கட்சி சிறப்பாக செயல்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுங்கள். உங்கள் வருகையால் அவர்களது வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்று பொறுப்பை உணர்ந்து ரணில் பேசினார்.

மேலும் விரைவில் இலங்கையில் அதிபர் தேர்தல் வர இருக்கிறது. தமிழர்கள் [^] தொடர்ந்து முள்வேலி முகாம்களில் இருந்தால் ராணுவத்தை வைத்து மிரட்டி 2.5 லட்சம் தமிழர்களின் ஓட்டுக்களையும் ராஜபக்சே தனக்கே போட்டுக் கொள்வார். எனவே உடனடியாக அங்கிருந்து தமிழர்களை அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

இலங்கையில் மலையக தமிழர்களை சந்தித்தபோது அவர்கள் யாழ்ப்பாண தமிழர்களால் பட்ட துன்பத்தை குறையாகத் தெரிவித்தனர். எங்களை தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்றும், அவர்கள் நிரந்தர குடிமக்கள் என்றும் மதிப்பு குறைவாக நடத்தினார்கள் என்று ஆதங்கப்பட்டனர். - இந்தியாவின் தமிழர்களைப் பிரித்தாளும் நோக்கம் தெளிவாக வெளிப்படுகிறது.

எங்கள் குழுவில் இடம் பெற்றிருந்த எம்.பிக்களில் ராஜபக்சேவுக்கு அறிமுகமான ஒரே நபர் திருமாவளவன் [^] மட்டும்தான்.

ராஜபக்சேவுக்கு முதல்வர் கருணாநிதி [^] ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் ஒன்றை கனிமொழியிடம் கொடுத்து அனுப்பியிருந்தார். அதை அவர் ராஜபக்சேவிடம் வழங்கினார்.

ராஜபக்சே அனைத்து எம்.பிக்களுக்கும் பரிசுப் பொருட்களை கொடுத்தார். எனக்கு தரப்பட்ட பரிசுப் பொருளில் கப் அன்ட் சாசர்கள் இருந்தன என்று கூறியுள்ளார் அழகிரி.

தட்ஸ்தமிழ்.கொம்

Edited by nedukkalapoovan

இலங்கையில் மலையக தமிழர்களை சந்தித்தபோது அவர்கள் யாழ்ப்பாண தமிழர்களால் பட்ட துன்பத்தை குறையாகத் தெரிவித்தனர். எங்களை தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்றும், அவர்கள் நிரந்தர குடிமக்கள் என்றும் மதிப்பு குறைவாக நடத்தினார்கள்

தட்ஸ்தமிழ்.கொம்

உண்மைகள் கசப்பானவை...ஐயா, உண்மையை சொல்லுங்கள் நாம் மட்டக்களப்பு சனத்தை சரி சமமாகா நடாத்தினோமா,சக மட்டக்களப்பு தமிழன் தவிச்ச வாய்க்கு சிறட்டையில் தண்ணி குடுத்த பெருமை கொண்ட இனமல்லவா நாம்...

இங்கே ஐரோப்பாவில் எப்பிடி நடக்கிறோம், நாம் புதிதாக ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது நீர் எந்த இடம் எண்டு கேட்டுவிட்டு மட்டக்களப்பா?? என்று

நழுவிச் செல்லும் இனமல்லவா நாம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தராக்கி,

பெயரில் மட்டும் அல்ல கருத்திலும் தெளிவு வேண்டும். புதைந்து போன் ஒன்றை அல்லது இல்லாமல் போன ஒன்றை இன்று பேசுவதன் பொருள் என்ன? உண்மை சுடும் கசக்கும் என்று சொல்லிய படியே நீங்கள் உங்களை பிரித்து பார்க்க நினைப்பது யார் தவறு?

இந்திய தமிழார்களை பிரித்து பார்த்த ஈழத்தமிழினம் இன்று அவர்களோடு ஒட்டி உறவாடுவது தெரியாதா? ஏன் இன்று ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தில் நடக்கும் சில அநீதிகள் தெரியாதா? எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் சில சம்பவங்களை வரலாறாக்க முனையாதீர்கள். சம்பவங்கள் எப்போதுமே சம்பவி்பவை அல்ல எப்போதாவது சம்பவிப்பவை!

  • கருத்துக்கள உறவுகள்

தராக்கி,

பெயரில் மட்டும் அல்ல கருத்திலும் தெளிவு வேண்டும். புதைந்து போன் ஒன்றை அல்லது இல்லாமல் போன ஒன்றை இன்று பேசுவதன் பொருள் என்ன? உண்மை சுடும் கசக்கும் என்று சொல்லிய படியே நீங்கள் உங்களை பிரித்து பார்க்க நினைப்பது யார் தவறு?

இந்திய தமிழார்களை பிரித்து பார்த்த ஈழத்தமிழினம் இன்று அவர்களோடு ஒட்டி உறவாடுவது தெரியாதா? ஏன் இன்று ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தில் நடக்கும் சில அநீதிகள் தெரியாதா? எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் சில சம்பவங்களை வரலாறாக்க முனையாதீர்கள். சம்பவங்கள் எப்போதுமே சம்பவி்பவை அல்ல எப்போதாவது சம்பவிப்பவை!

நன்றாகச் சொன்னீர்கள் நிதர்சன்.

நன்றாகச் சொன்னீர்கள் நிதர்சன்.

இன்று ஐரோப்பாவில் மட்டக்களப்பான் எண்டால்...முதலில் துரோகி என்ற எண்ண ஓட்டமே பல உறவுகளிடம் உள்ளது இதை மாற்றத்தான் சொன்னேன்....

இன்றும் போராளிகள் கஞ்சிகுடியாறில்தான் இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்வோம்...

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஐரோப்பாவில் மட்டக்களப்பான் எண்டால்...முதலில் துரோகி என்ற எண்ண ஓட்டமே பல உறவுகளிடம் உள்ளது இதை மாற்றத்தான் சொன்னேன்....

இன்றும் போராளிகள் கஞ்சிகுடியாறில்தான் இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்வோம்...

"பல உறவுகளிடம்" என்பதை "சில உறவுகளிடம்" என்று மாற்றினால் சரியாக இருக்கும்..! நிச்சயமாக ஐரோப்பாவில் உள்ள பல லட்சம் சனங்களிடமும் நீங்கள் பேசி அவர்கள் கருத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவின் பிரிவினைவாத அரசியலை இன்னும் புரியாதவர்களாக நாங்கள் உள்ளோம் .. நாங்கள் தமிழர் எல்லோரும் ஒன்றிணைவதை தடுக்க என்ன எல்லாம் செய்யமுடியுமோ அதை எல்லாம் இந்தியா செய்யும் ..எங்களுக்குள் இருந்த சாதிய வேறுபாடுகள் மறைந்து தசாப்தங்கள் ஆகிவிட்டன..ஒருவனை வைத்து ஒரு பிரதேச மக்களை கணிக்க முடியுமா..

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசுதான் எம்மீதான இனக்கொலையின் பிரதான சூத்திரதாரி என்று அறியப்பட்ட பின்னர் ஜெகத் கஸ்பாரும் கனிமொழியும் சுப வீர பாண்டியனும் மத்திய அரசிடம் எதைப்பற்றி இறுதிக்காலத்தில் கதைத்துக்கொண்டிருந்தார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலையை அரங்கேற்றிய இந்தியா எந்த விதத்தில் தமது பரம வைரியான புலிகளின் தலைவர்களை காப்பாற்றும் என்றோ அல்லது புலிகளுடனிருந்த லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றும் என்றோ இவர்கள் எதிர்பார்த்தார்கள்? கே பீ யுடன் தொடர்பிலிருந்ததாகக் கூறும் இவர்கள் இன்னொரு பக்கத்தில் மத்திய அர்சில் முக்கிய பதவியிலிருக்கும் தமிழ் அமைச்சர் (சிதம்பரம்) ஒருவருடன் தாம் கே பீ யுடன் கதைத்தவற்றை உடனுக்குடன் அறிவித்தோம் என்கிறார்களே, சிதம்பரம் எப்போது புலிகளுக்கு ஆதரவான ஒருவராக மாறினார் என்பதை இவர்களால் சொல்ல முடியுமா? இவர்களால் பரிமாறப்பட்ட தகவல்கள் மூலம்தான் புலிகளின் தலைவர்களின் சரணடைதல் நாடகமும் அதன் பின்னரான படுகொலையும் அரங்கேறியது எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறதா இல்லையா?? அன்றிரவு நிம்மதியாக தூங்கச் சென்றதாக சுபவீ சொன்னாலும் நடேசனும் புலித்தேவனும் முகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது அன்றிரவுதான் நடந்தது என்பது இவர்களுக்குத் தெரியாதா??

தமிழ்த் தேசியவாதியாக தன்னை அடையாலம் காட்டிய கனிமொழியும் திருமாவும் மகிந்தவிற்குப் பொன்னாடை போத்தி மகிழ்ந்த போதே இந்திய அரசினது நிஜ முகம் எமக்குத் தெரியவில்லையா??

பலரை துரோகிகளாக்கக் கூடாது என்பதற்காகவே சிலரைத் தொடர்ந்தும் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம்.

புலிகளை நோக்கி இலகுவாக சுட்டு விரலை நீட்டும் நாம் எம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றிக் கதைக்கப் பயப்படுகிறோம். எமது நம்பிக்கை இங்கு சிதைக்கப்பட்டிருக்கிறது. போராட்டமும் தேசியமும் காட்டிக்கொடுக்கப்பட்டு பிய்த்தெறியப்பட்டிருக்கிறது. ஆனால் அதைச் செய்தவர்கள் பற்றியும் உடந்தையாக இருந்தவர்கள் பற்றியும் கதைக்க எமக்குத் தைரியமில்லை. ஆனால் அழிக்கப்பட்ட எமது இயக்கத்தைப்பற்றி சந்தோசமாக குற்றம் சாட்டுவோம். ஏனென்றால் எமது போராட்டம் எம்மில் இல்லாது தமிழகத்தில்த்தானே தங்கியிருக்கிறது ?????????????

  • கருத்துக்கள உறவுகள்

பலரை துரோகிகளாக்கக் கூடாது என்பதற்காகவே சிலரைத் தொடர்ந்தும் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம்.

புலிகளை நோக்கி இலகுவாக சுட்டு விரலை நீட்டும் நாம் எம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றிக் கதைக்கப் பயப்படுகிறோம். எமது நம்பிக்கை இங்கு சிதைக்கப்பட்டிருக்கிறது. போராட்டமும் தேசியமும் காட்டிக்கொடுக்கப்பட்டு பிய்த்தெறியப்பட்டிருக்கிறது. ஆனால் அதைச் செய்தவர்கள் பற்றியும் உடந்தையாக இருந்தவர்கள் பற்றியும் கதைக்க எமக்குத் தைரியமில்லை. ஆனால் அழிக்கப்பட்ட எமது இயக்கத்தைப்பற்றி சந்தோசமாக குற்றம் சாட்டுவோம். ஏனென்றால் எமது போராட்டம் எம்மில் இல்லாது தமிழகத்தில்த்தானே தங்கியிருக்கிறது ?????????????

மிக நல்ல கருத்துக்கள் ரகுநாதன்..!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மலையக தமிழர்களை சந்தித்தபோது அவர்கள் யாழ்ப்பாண தமிழர்களால் பட்ட துன்பத்தை குறையாகத் தெரிவித்தனர். எங்களை தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்றும், அவர்கள் நிரந்தர குடிமக்கள் என்றும் மதிப்பு குறைவாக நடத்தினார்கள் என்று ஆதங்கப்பட்டனர். - இந்தியாவின் தமிழர்களைப் பிரித்தாளும் நோக்கம் தெளிவாக வெளிப்படுகிறது.

இது தமழகத்தமிழரையும் ஈழத்தமிழரையும் பிரிக்க இந்தியாவால் திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும்.

அன்றிரவு நிம்மதியாக தூங்கச் சென்றதாக சுபவீ சொன்னாலும் நடேசனும் புலித்தேவனும் முகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது அன்றிரவுதான் நடந்தது என்பது இவர்களுக்குத் தெரியாதா??

தமிழ்த் தேசியவாதியாக தன்னை அடையாலம் காட்டிய கனிமொழியும் திருமாவும் மகிந்தவிற்குப் பொன்னாடை போத்தி மகிழ்ந்த போதே இந்திய அரசினது நிஜ முகம் எமக்குத் தெரியவில்லையா??

பலரை துரோகிகளாக்கக் கூடாது என்பதற்காகவே சிலரைத் தொடர்ந்தும் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம்.

புலிகளை நோக்கி இலகுவாக சுட்டு விரலை நீட்டும் நாம் எம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றிக் கதைக்கப் பயப்படுகிறோம். எமது நம்பிக்கை இங்கு சிதைக்கப்பட்டிருக்கிறது. போராட்டமும் தேசியமும் காட்டிக்கொடுக்கப்பட்டு பிய்த்தெறியப்பட்டிருக்கிறது. ஆனால் அதைச் செய்தவர்கள் பற்றியும் உடந்தையாக இருந்தவர்கள் பற்றியும் கதைக்க எமக்குத் தைரியமில்லை. ஆனால் அழிக்கப்பட்ட எமது இயக்கத்தைப்பற்றி சந்தோசமாக குற்றம் சாட்டுவோம். ஏனென்றால் எமது போராட்டம் எம்மில் இல்லாது தமிழகத்தில்த்தானே தங்கியிருக்கிறது ?????????????

இந்தியா தன்னையறியாமலே தனது செயலை தனது தமிழர் விரோதப் போக்கை ஒப்புக் கொண்ட விடயம் இது. இந்தியாவோ சரி இந்தியாவின் தமிழ் நாடோ சரி தமது பிடியினை இலங்கையில் இறுக்க தமிழனை எவ்வாறு பாவிக்கப் போகிறார்கள் என்பதை இந்திய தூதுக் குளு மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தி ஈழத் தமிழர்களை பாடையேற்றிய விடயமும் ஈழத் தமிழர்கள் மேல் தாம் கரிசனை பற்று பாசம் கொண்டவர்கள் என இதுவரை தம்மை அடையாளம் காட்டிய இந்த முதுகெலும்பில்லாத இந்திய தலைவர்கள் நன்கு வெளிக் காட்டியுள்ளார்கள்

இனியாவது இந்தியாவை புரிந்துகொண்டு எமக்கான எமது மக்களிக் எதிர் காலத்துக்கான வரலாற்று முடிவை நாம் ஒவ்வொருவரும் எடுப்பதன் மூலமே இந்தியாவினது நகர்வுகளை நாம் முறியடிக்க முடியும்.

இவர்கள் எப்போது முதுகில் தடவிக் கொடுப்பார்கள் எப்போது முதுகில் குத்துவார்கள் என்ற வரலாற்று படிப்பினையை உணர்ந்தவர்கள் நாம். இதனை உணர்ந்து நாம் விரைவாக செயற்படுவதன் மூலம் விடிவை அடைவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.