Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்களுக்கு இடையிலான சவால்களை ஆண்களால் எதிர் கொள்ள முடியுமா?????

Featured Replies

பெண்களுக்கு இடையிலான சவால்களை ஆண்களால் எதிர் கொள்ள முடியுமா?????

பெண்கள் ஆண்களை விட தம்மை வெகு குறைவாகவே மதிப்பிடுகிறார்கள். சமூகத்தில் பெண்கள் தாம் இரண்டாம் நிலையிலேயே இருப்பதாகத் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கின்றார்கள். ஆனால் பெண்களின் சக்தி பலம் வாய்ந்தது என்பதைஇ ஏனோ அவர்கள் மறந்து விடுவதுதான் வேதனைக்குரியது. ஆண்களை சவலாகப் பெண்களால் எதிர்கொள்ள முடியும். ஆனால் பெண்களின் சவால்களை ஆண்களால் எதிர்கொள்ள முடியுமா?

சமூகத்தில் பெண்களை விட ஆண்களே சக்திவாய்ந்தவர்கள் என்பது சமூகத்தின் கருத்து. அப்படியானால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர்கள் எதிர்கொள்வார்களா? அல்லது எதிர்கொள்ளத்தான் ஆண்களால் முடியுமா?

ஆண்கள் உடல் மன வலிமையில் சிறந்து விளங்குபவர்களாக இருக்கலாம். வாழ்க்கையில் சவால்கள் என்று வரும்போது அவற்றை எதிர்கொள்ள நிச்சயமாக அவர்களால் முடியாது.

இது தொடர்பாக அண்மையில் ஜேர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் இது நிரூபணமாகியிருக்கின்றது. இதோ அந்த ஆய்வில் வெளியான விடயங்கள் :

1 சாதரணமாகத் தனது வீட்டில் அன்றாட வேலைகளைச் செய்யும் பெண் நாள் ஒன்றுக்கு 30 மைல் தூரம் வரை வீட்டுக்குள்ளேயே நடக்கிறாள். ஆனால் ஆண்கள் 5 மைல் தூரம் நடக்கும்போது அந்த வேறுப்பாட்டை அவர்கள் உணர முடியும்.

2 இன்பம் - துன்பம் இரண்டையும் ஒரே அளவில் தாங்கும் சக்தி பெண்களுக்கு அதிகமாகவே உள்ளது. ஆனால் ஆண்கள் இன்பம் என்றால் துள்ளிக் குதிப்பார்கள்.துன்பம் என்றதும் துவண்டு விடுவார்கள்.

3 பிரசவ சமயத்தில் பெண்கள் படும் வேதனை... அப்பப்பா.... இதில் ஒரு துளியையாவது தாங்கிக் கொள்ளும் சக்தி ஆண்களுக்கு உள்ளதா என்றால்...? ஊஹூம்... அச்சமயம் பெண்களின் உடலிலிருந்து வெளியாகும் குருதியின் அளவு ஓர் ஆணின் உடலிலிருந்து வெளியேறுமாயின் அவர் தனது உயிரையே இழக்க வேண்டிய நிலைகூட ஏற்படலாம்.

4 கர்ப்பிணி பெண் ஒருவர் மாதாந்தம் வயிற்றில் உள்ள பிள்ளையின் நிறை அதிகரிக்க... அதிகரிக்க... சற்றும் மனம் கோணாமல் சகிப்புத் தன்மையுடன் அதை தாங்கிக் கொள்கின்றாள். அந்தக் குழந்தை இம்மண்ணில் பிறக்கும் வரை இந்தச் சகிப்புத் தன்மை தொடர்கின்றதல்லவா? ஆனால் ஆண் ஒருவருக்கு இவ்வாறான ஒரு சுமையைத் தாங்க முடியுமா? அப்படியே தாங்கினாலும் அவனுக்கு தனது வாழ்வின்மீது வெறுப்பு ஏற்பட்டுவிடுவது உறுதி.

ஜேர்மனியில் தெளிவுபடுத்தப்பட்ட விடயங்கள் இவைதாம்.

இதனால்தான் பெண்கள் ஒரு குதிரைக்கு சமமாகவும் ஆண்கள் சீட்டா என்ற மிருகத்திற்கு சமமாகவும் ஒப்பிடப்படுகின்றார்கள். காரணம் : சீட்டா தரையில் ஒரு மணித்தியாலயத்திற்கு 300 யார் மட்டுமே ஓடக்கூடியது. ஆனால் குதிரை அவ்வாறல்ல. சாதாரண வேகத்தில் சென்றாலும் 12-15 வரையிலான மைல் தூரம் அதனால் அதிவேகமாக ஓடமுடியும்; ஓடும். குதிரை நிற்காது ஓடக்கூடியது குதிரையின் மனம் நினைத்தால் மட்டும் அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

இதைத்தான் ஆங்கிலத்தில் பெண்கள் ' கொன்ஸ்ரன் ஏனேர்ஸி- ஆண்கள் புறுஸ்ட் ஏனேர்ஸி எனக் குறிப்பிடப்படுகிறது.ஒரு சிறு பிள்ளையின் தாயை எடுத்து கொண்டால்இ வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து பின்னர் அந்த சிறு பிள்ளையின் சுக துக்கத்தில் பங்கு கொண்டு பிள்ளைகளுக்கு சுகவீனம் ஏற்படும் போதெல்லாம் தவித்துப் போய் மருந்து புகட்டி இரவிரவாகக் கண் விழித்திருந்து பராமரிக்கின்றாள்.

மறுநாள் அதிகாலை விழித்தெழுந்து மீண்டும் வீட்டு வேலை மட்டுமன்றி அலுவலகம் செல்வதிலும் சுறுசுறுப்பாகி விடுகின்றாள். ஆனால் ஒரு ஆண் சாதாரணமாக 5 மணித்தியாளமாவது உறங்காவிட்டால் அவனால் எந்த வேலையையும் ஈடுபாட்டோடு ஒழுங்காகச் செய்ய முடியாது. பழக்கவழக்கத்தை எடுத்து கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பாரிய வேறுபாடு நிலவுவதைக் காண முடியும்.

பாலியல் தொடர்பான விடயத்தில் கூடஇ பெண்களால் தம் மனதைக் கட்டுப்படுத்தி வாழ்ந்துவிட முடியும்(ஒரு சிலர் இதற்கு விதி விலக்கு). ஆனால் ஆண்களால் அவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தி வாழ முடியாது; வாழவும் மாட்டார்கள். இந்த விடயத்தில் கூட ஒரு ஆண் அக்டீவ் பாட்டினர் ஆகக் கருதப்படுகிறார். பெண்களின் சிந்தனையில் எத்தனையோ விதமான மாற்றங்கள் உள்ளன. தனது பிள்ளைகள் மற்றும் கணவருக்காகப் பல தியாகங்களைச் செய்யும் - செய்யக்கூடிய மனப்பான்மை ஒரு பெண்ணுக்கு உண்டு.

ஒரு பிள்ளைக்குத் தாயானவள் தன் உதிரத்தையே பாலாக்கி ஊட்டுவது என்பது உலகில் உன்னதமானதாகவே கருதப்படுகின்றது. தாயானால் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது செய்யும் ஒரு அரிய தியாகமே இது என்றால் கூட அது மிகையல்ல. பெண்ணானவள் எல்லாவிதத்திலும் உலகில் உயர்ந்தே நிற்கிறாள். இதனை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

'அன்பு' எனும் ஊற்று பெருக்கெடுக்கும் உன்னதமான ஓரிடம் என்றால் அது ஒரு தாயின் இதயம் மட்டுமே. பெண்களின் அன்புக்காக ஆண்கள் பல கோணங்களில் ஏங்கித் தவிக்கின்றார்கள் என்பதே உண்மை. அதே அன்புக்காக எதையும் செய்யத் தயாராகும் நிலையில் ஆண்கள்... என்றால் அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இவ்வாறெல்லாம் நாம் குறிப்பிட்டாலும் உலகில் விசித்திரமானது என்ன தெரியுமா? இத்தகைய பெண்களிலும் ஆண்களிலும் கூட விசித்திரமானவர்கள் வித்தியாசமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதுதான்.ஆண்-பெண் என்ற இரு வேறுப்பட்ட கருத்துடையவர்கள் ஒன்றைணையும் போதுதான் ஒரு சமூதாயம் முழுமை பெறுகிறது.

ஓர் ஆண் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பாகவும் ஊக்கமளிப்பவராகவும் மட்டுமே இருக்க முடியும். கணவர் உழைக்கும் வேதனத்தைக் கொண்டு சிறந்த இல்லறத்தை நடத்துபவளே நல்லதொரு இல்லத்தரசியாகிறாள் ஒரு பெண். இரு மனங்கள் ஒன்றிணைந்த திருமண பந்தத்தைக்கூட சிறப்புடன் கட்டிக் காக்க வேண்டிய கடப்பாடு பெண்ணுக்கு உள்ளது.

மார்க்கிரட் தாட்சர் பிரதமராக இருந்த காலகட்டத்தில்இ அவர் அறிமுகப்படுத்திய பொருளாதார கொள்கைகளைக் கண்டு முழு உலகமுமே வியந்து போனது. முக்கியமான ஒரு விடயம் என்ன தெரியுமா? ஒரு பெண்ணின் சக்தி அந்தப் பெண்ணுக்கே தெரிவதில்லை என்பதுதான். அந்தச் சக்தியை அவள் உணர்ந்து கொண்டால் அவள் தனது பிழைகளையும் திருத்திக் கொள்ளவும் குறைகளை நிறைகளாக்கவும் முடியும். ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் எதிர்பார்ப்பது ஆறுதல் சந்தோஷம் நிம்மதி ஆகியவற்றைத்தான். இவை அனைத்தும் மனைவி - தாய் என்ற இரு உன்னதமான உறவுகளில் தான் அவனுக்குக் கிடைக்கின்றன என்பதை அவன் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் ஒரு பெண் - தாய் அனைத்தையும் தாங்கும் 'பூமி மாதா' என அழைக்கப்படுகின்றாள். இதில் தவறேதும் இல்லையல்லவா?

படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொள்கிறேன்

அன்புடன் தமிழ்மாறன்

அத்தனையும் உண்மையான ஆழமான கருத்துக்கள் .....தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் தமிழ் மாறன் அண்ணா. பெண்களை ஒரு போதும் குறைத்து மதிப்பீடக்கூடாது என்பது தெட்டத்தெளிவாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொருபதிவு.....தென் பூட்டும் விடயங்கள் உள்ளன. .பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவை ஆண்,பெண் இருபாலரும் கண்டிப்பாக படிக்கவேண்டும்...நல்லதொரு தரமான பதிவு...பதிந்தவருக்கும் மிகவும் நன்றி.

  • தொடங்கியவர்

உங்களுடைய பதிவுகளிற்கு நன்றிகள்...............

பார்த்தீர்களா சகோதரிகளே பெண்களைப் பற்றி புகழ்வாகவும் உண்மை

நிறைந்த பதிவுகளையும் பார்த்து விட்டு யாழ்கள ஆண் சிங்கங்கள்

கர்ச்சிக்கவில்லை............அது மட்டுமல்லாமல் எல்லோருமே தாங்கள் ஆணாதிக்க வாதிகள் என்று

ஒத்துக் கொண்டு விட்டார்கள்...............

என்னைத் தவிர.........................

Edited by thamilmaran

பெண்களின் கால்களுக்கு இடையிலான சவால்களை எதிர்கொள்வது கடினமானது எண்டு யாரோ யாழில எழுதி வாசிச்ச ஞாபகம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய பதிவுகளிற்கு நன்றிகள்...............

பார்த்தீர்களா சகோதரிகளே பெண்களைப் பற்றி புகழ்வாகவும் உண்மை

நிறைந்த பதிவுகளையும் பார்த்து விட்டு யாழ்கள ஆண் சிங்கங்கள்

கர்ச்சிக்கவில்லை............அது மட்டுமல்லாமல் எல்லோருமே தாங்கள் ஆணாதிக்க வாதிகள் என்று

ஒத்துக் கொண்டு விட்டார்கள்...............

:lol:என்னைத் தவிர .........................

என்னையும் தவிர :wub:

  • தொடங்கியவர்

அது சரி சஜீவன் வந்தது மட்டுமல்ல பெண்களின் மனம் குளிர ஏதாவது எழுதி விட்டு போகலாம் எல்லோ!!!!

நீங்கள் எதுவும் எழுதாததால் இன்னும் அந்த பட்டியலில் தான் இருக்கிறீர்கள் :lol::wub::)

  • தொடங்கியவர்

மாப்பிள்ளை இப்ப எழுதினதையும் கண்டது கேட்டது எண்டு சொல்ல மாட்டியள் தானே!!!!!!!! :):D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக அண்மையில் ஜேர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் இது நிரூபணமாகியிருக்கின்றது. இதோ அந்த ஆய்வில் வெளியான விடயங்கள் :

1 சாதரணமாகத் தனது வீட்டில் அன்றாட வேலைகளைச் செய்யும் பெண் நாள் ஒன்றுக்கு 30 மைல் தூரம் வரை வீட்டுக்குள்ளேயே நடக்கிறாள். ஆனால் ஆண்கள் 5 மைல் தூரம் நடக்கும்போது அந்த வேறுப்பாட்டை அவர்கள் உணர முடியும்.

பெண்கள் வேற ஏதாவது பிராக்கு பார்த்துக்கொண்டு 30 மைல் நடந்து செய்யிற வேலையை ஆண்கள் 5 மைல்களிலயே முடிச்சு விடுவினம்..! அதாலதான் அந்த வேறுபாடு..! :)

2 இன்பம் - துன்பம் இரண்டையும் ஒரே அளவில் தாங்கும் சக்தி பெண்களுக்கு அதிகமாகவே உள்ளது. ஆனால் ஆண்கள் இன்பம் என்றால் துள்ளிக் குதிப்பார்கள்.துன்பம் என்றதும் துவண்டு விடுவார்கள்.

பெண்களே அதிகம் துன்பங்களை விளைவிப்பதால் அவர்கள் துவண்டுபோக வாய்ப்பில்லை..! :D

3 பிரசவ சமயத்தில் பெண்கள் படும் வேதனை... அப்பப்பா.... இதில் ஒரு துளியையாவது தாங்கிக் கொள்ளும் சக்தி ஆண்களுக்கு உள்ளதா என்றால்...? ஊஹூம்... அச்சமயம் பெண்களின் உடலிலிருந்து வெளியாகும் குருதியின் அளவு ஓர் ஆணின் உடலிலிருந்து வெளியேறுமாயின் அவர் தனது உயிரையே இழக்க வேண்டிய நிலைகூட ஏற்படலாம்.

ஆணின் படைப்பிலேயே குருதி வெளியேற வேண்டிய அவசியமில்லை..! ஆனால் பெண்களுக்கு உள்ளது..! இது எப்படி ஒரு ஆணின் குறைபாடு ஆகும்? :D

4 கர்ப்பிணி பெண் ஒருவர் மாதாந்தம் வயிற்றில் உள்ள பிள்ளையின் நிறை அதிகரிக்க... அதிகரிக்க... சற்றும் மனம் கோணாமல் சகிப்புத் தன்மையுடன் அதை தாங்கிக் கொள்கின்றாள். அந்தக் குழந்தை இம்மண்ணில் பிறக்கும் வரை இந்தச் சகிப்புத் தன்மை தொடர்கின்றதல்லவா? ஆனால் ஆண் ஒருவருக்கு இவ்வாறான ஒரு சுமையைத் தாங்க முடியுமா? அப்படியே தாங்கினாலும் அவனுக்கு தனது வாழ்வின்மீது வெறுப்பு ஏற்பட்டுவிடுவது உறுதி.

பெண்கள் 10 மாதம் சுமப்பது மட்டும்தான் அவர்களின் வலி..! அந்தக் குழந்தையை வளர்த்தெடுப்பதில் ஆண் தன் காலம் முழுவதையுமே செலவிடுகிறான். :D

மிருகங்களில் பார்த்தீர்கள் என்றால்கூட சில மீன் வகைகளில் பெண் மீன் முட்டை போட்ட பிறகு ஆண் மீனால் துரத்தி விடப்படும். ஏனெண்டால் பெண் மீன் அப்பப்ப சில ஆம்லெட்டுகள் போட்டு சாப்பிட்டுவிடும். :D

ஆண் மீன் பிறகு தான் உண்ணாமல் உறங்காமல் முட்டைகளைப் பாதுகாத்து பொரிக்க வச்சு பிள்ளைகளைக் கரையேத்தி விடும்..! இப்பிடி இருக்கு உலகம். நிஜத்தை பேசுங்கப்பா..! :D

தமிழ்மாறன் விடமாட்டீங்கள் போல இருக்கிது. இதுவும் கண்டது கேட்டதுதான். சொந்த அனுபவத்தில பேசுறதுக்கு இன்னமும் காலம் கனிய இல்லை. :)

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்

செல்வத்து ளெல்லாந் தலை.

  • தொடங்கியவர்

மா.............பிள்ளையாக இருந்து கொண்டு சில விடயங்களில் சின்னப்பிள்ளையாக இருக்கிறீர்களே!!!!!!

பாவம் நீங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே...................... :):D :D :D :D

தமிழ் மாறன் பெண்களிற்கிடையிலான சவாலை ஆண்கள் எதிர்கொண்டாலும்...பெண்களின் ..இடையிலான சவாலை எந்த ஆணும் எதிர்கொள்ளமுடியாது..மற்றபடி எல்லாம் வாய்வீரம் மட்டும்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மாறன் பெண்களிற்கிடையிலான சவாலை ஆண்கள் எதிர்கொண்டாலும்...பெண்களின் ..இடையிலான சவாலை எந்த ஆணும் எதிர்கொள்ளமுடியாது..மற்றபடி எல்லாம் வாய்வீரம் மட்டும்தான்.

எங்கடை மங்களம் இன்னும் நல்ல கடையிலை சாப்பிடேல்லை போலை கிடக்கு :D

  • தொடங்கியவர்

தமிழ் மாறன் பெண்களிற்கிடையிலான சவாலை ஆண்கள் எதிர்கொண்டாலும்...பெண்களின் ..இடையிலான சவாலை எந்த ஆணும் எதிர்கொள்ளமுடியாது..மற்றபடி எல்லாம் வாய்வீரம் மட்டும்தான்.

என்ன உப்புடி சொல்லிப் போட்டியள்!!!!!

ஆண்களை கேட்டால் தங்களுக்கு ஏற்றால் போல அசைந்து இசைந்து நெளிந்து கொடுக்கேலை

எண்டினம்!!!!! (நானும் அப்பிடித்தான் சொல்லுறன்)பெண்களை கொஞ்சம் நடிக்கிறதை விட்டுப் புட்டு

கை வரிசையை காட்டச் சொல்லுங்கோ!!!!!! பேந்து பாருங்கோ.............மிச்சத்தை...................இந்த விசயத்தில

நாங்கள் எல்லாரும் சிங்கங்கள் பாருங்கோ.....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை மங்களம் இன்னும் நல்ல கடையிலை சாப்பிடேல்லை போலை கிடக்கு :D

அது தானே!.. அதுவும் வருசக்கணக்கா சக்ஸஸ்புள்ளா கடை நடத்துற எங்கட குமாரசாமி அண்ணன் கடை இருக்க ...

அண்ணே! மறைமுகமா மங்களத்துக்கு கடைகான விளம்பரத்தையும் செய்யிறியள் போல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.