Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் இராணுவத்தின் படுகொலை உண்மையென ரைம்ஸ் உறுதிப்படுத்தியது

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் நல்லது.

சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காணொளிக் காட்சிகள் மோசடி செய்யப்பட்டவை அல்ல -ரைம்ஸ்

ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்வது தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காணொளிக் காட்சிகள் மோசடி செய்யப்பட்டவை அல்ல என்று ரைம்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட காணொளிகளை உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் அவை உண்மையானவை என்பதை தமது குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாக ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட காணொளிக் காட்சிகள் போலியானவை என்றும் மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரைம்ஸ் சஞ்சிகை குறிப்பிட்ட காணொளி தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றை நடத்தியுள்ளது.

கிரான் பெரடறிக் என்ற காணொளிக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர் மூலமாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவின் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராக கடமையாற்றி வரும் கிரான் குறிப்பிட்ட காணொளிகளில் மோசடிகள் இடம்பெற்றிருக்கவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த காணொளிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாவோ வேறு விடயங்கள் புகுத்தப்பட்டுள்ளதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த காட்சிகளை திட்டமிட்ட முறையில் நடிகர்கள் மூலமாக படம் பிடித்திருக்க முடியாது என்றும் துப்பாக்கி குண்டு துளைத்தவுடன் தலையில் இருந்த வெளியேறும் குருதி மற்றும் சூடு பட்டவர்கள் விழும் முறை போன்றவை இயற்கையானவை என்றும் காணொளி மாற்றங்கள் மற்றும் ஒளிக்கலவைகளை; இன்றி அவற்றை நிஜமானவை போன்று ஒருபோதும் படமாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிஜமாக ஒருவர் சுடப்பட்டு இறக்கும் போது ஏற்படும் அசைவுகளை நடிப்பில் வெளிப்படுத்தவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த காணொளிகாட்சியானது நொக்கியா கைத் தொலைபேசி மூலமாகவே படமாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதன் காரணமாக அந்த காணொளி நூறு சதவீதம் உண்மையானது என்றும் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் மாற்றுக் கருத்துகள் இன்ற நிஜமாகவே இடம்பெற்றிருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ரைமஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ரைம்ஸ் சஞ்சிகையினர் இந்த உறுதிப்படுத்தலானது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யுத்த குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கான சர்வதேசத்தின் குரரை மேலும் வலுப்படுத்தும் என்று அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

- பதிவு -

Edited by இணையவன்

இலங்கையில் இராணுவத்தினரால் சரண்டைந்த தமிழ் இளைஞர்களை கண்கட்டப்பட்ட நிலையில் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ காட்சியானது உண்மையெனவும் இலங்கை அரசு கூறுவது போன்று புனையப்பட்டதொன்று அல்ல எனவும் தெ ரைம்ஸ் இணைய தளம் கூறியுள்ளது. தாம் மேற்கொண்ட ஆய்வில் இது உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளதாக அந்த இணைய தளம் கூறியுள்ளது.

தெ ரைம்ஸ் பத்திரிகையின் சார்பாக ஒளிபட தடையவியல் நிபுணரான ப்ரெட்ரிக் அவர்கள் இந்த வீடியோ ஆவணத்தினை ஆய்வு செய்துள்ளார். இவர் அமெரிக்க மத்திய புலனாய்வு பணியகத்திற்கும் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் ஆய்வின் படி இந்த வீடியோ ஆவணம் எந்தவிதமான படகலவையும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். அதாவது சோடனை செய்யப்பட்டவை அல்ல என கூறியுள்ளார்.

சுடும்போது துப்பாக்கி குழாயின் இருந்து வரும் வாயு வெளியிடும் தன்மை நன்கு ஆராயப்பட்டதாகவும் அதன்படி இந்த வீடியோ புனையப்பட்டதொன்று அல்ல என்றும் கூறியுள்ளார். அதாவது சோடனை செய்யப்பட்ட ஒரு காட்சியில் இவ்வாறான பிரதிபலிப்பினை காணமுடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ காட்சியினை ரைம்ஸ் சார்பாக ஆய்வு செய்தவர் முன்பு வான்கூவர் பொலிஸ் பிரிவில் தடையவியல் ஆய்வாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர மேலும் இந்த விடியோ ஆவணம் பற்றி தெரிவிக்கையில் சுடப்படும் நபர் பின் நோக்கி விழும் காட்சி மிகவும் உண்மைதன்மை வாய்ந்தது. அத்துடன் இரண்டாமவர் சுடப்படும் போது அவரது தலையில் இருந்து வரும் இரத்தம் ஓர் உண்மை சம்பவத்திற்கு மட்டுமே பொருந்த கூடியதாக இருக்கின்றது.

ஆனால் படங்களில் இது போன்ற சம்பவங்கள் வந்தாலும் அவை நிச்சயமாக பலவித படகலவைக்கு உட்பட்டே உண்மை காட்சி போன்று வடிவமைக்க முடியும். ஆனால் இந்த ஆவணமோ அவ்வாறானதொரு படக்கலவைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார். திரு பிரெட்ரிக்

மேலும் அவர் கூறுகையில் இந்த வீடியோ நொக்கியா கைத்தொலைபேசியூடாக எடுக்கப்பட்டதனையும் ஒப்பீடு செய்து நிரூபித்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆகவே இந்த வீடியோ ஆவணமானது முற்று முழுதாக ஓர் உண்மைதன்மை கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக ரைம்ஸ் கூறியுள்ளதுடன் உடனடியாக போர்குற்ற விசாரணைகளை சர்வதேச சமூகம் தொடங்கவேண்டும் எனவும் கூறியுள்ளது.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள்,ஏன் புத்தரெ வந்து உண்மை என்று உறுதிப்படுத்தினாலும் மகிந்தா கோஷ்டியை ஒருத்தரும் ஒன்றும் செய்யமுடியாது

நீங்கள் புத்தன் என்றதால உங்களுக்குத்தேரியுது.

சரணடைந்த போராளிகளைச் சிறிலங்காப் படையினர் சுட்டுக் கொல்லும் காணொலிக் காட்சி போலியாகத் தயாரிக்கப்பட்டதல்ல என்பது தமது சொந்த ஆய்வில் உறுதியாகி இருப்பதாக பிரித்தானியாவின் ‘தி ரைம்ஸ்’ ஏடு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.