Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'ஜாக்கெட்': அரசின் கட்டுப்பாடு-ஆசிரியைகள் கடும் அதிருப்தி

Featured Replies

சென்னை: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடை அணிவது குறித்து அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆசிரியைகள் கண்டிப்பாக புடவையில்தான் வர வேண்டும். ஆசிரியர்கள் டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. நாகரீகமான முறையில் உடையணிய வேண்டும் என இந்த கட்டுப்பாடு கூறுகிறது.

இருப்பினும் சில பள்ளிக்கூட ஆசிரியைகள் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியைகள் விதம் விதமான டிசைன்களில் ஜாக்கெட் அணிந்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்து புகார்கள் போய்க் கொண்டிருந்ததால், உடைக் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தி சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை விடுத்திருந்தது.

இதற்கு ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒரு அரசு ஆசிரியை கூறுகையில், எங்களது ஆசிரியப் பணி குறித்து அரசு தீவிரமாக கண்காணிப்பதையும், அதுதொடர்பான நடவடிக்கைகளையும் நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம்.

அதை விடுத்து, நாங்கள் எப்படி ஜாக்கெட் போட வேண்டும் என்று அரசு கூறுவது நல்ல டேஸ்ட்டில் இருப்பதாக தெரியவில்லை. பள்ளிக்கு வரும்போது சேலைதான் அணிய வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்த நாள் முதலே இதை நாங்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறோம்.

ஆனால் நாகரீகமான முறையில் என்ற வார்த்தையை அரசு பயன்படுத்துவது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்போது நாங்கள் அநாகரீகமான முறையில் வருவது போல மக்களுக்கு தோற்றத்தை ஏற்படுத்துகிறது அரசின் சர்க்குலர்.

குறிப்பிட்ட ஆசிரியைகள் கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட் அணிந்து வருவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஒட்டு மொத்த ஆசிரியைகளுக்கும் நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணியுங்கள் என்று சொல்வது எங்களை அவமானப்படுத்துவது போல உள்ளது என்றார்.

ஆனால் உடைக் கட்டுப்பாட்டு உத்தரவு புதிதாக பிறப்பிக்கப்பட்டதல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே இது அமலுக்கு வந்து விட்டது என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.

மேலும், ஆசிரியக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடையே உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. மேலும் இந்த இயக்குநரகத்தில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் பெண்களைத் தனித்துக் காட்டுவதற்காக அவர்களுக்கென்று தனி சீருடையும் கடந்த 70களில் அமல்படுத்தப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.

அரசு நாகரீகம் என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் சொல்ல வருகிறது, அதுகுறித்து விளக்க வேண்டும் என் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியு்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொருளாளர் ஜான்சிராணி கூறுகையில், ஒரு பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும். அவரால் எந்த உடையை வாங்க முடியுமோ அதைத்தான் வாங்கி அவர் அணிய முடியும். தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது.

எது நாகரீகமான உடை என்பது பெண்களுக்கு தெரியாதா? என்கிறார் அவர்.

நன்றி : ThatsTamil

  • கருத்துக்கள உறவுகள்

.

rani-sari.jpg

மிகவும் வெப்பமான நாட்டில் ஜாக்கெட் , பிறகு அதுக்குள்ளை பிரேசியர் எல்லாம் போட்டு, ரீச்சர்மாரை வேர்க்கப்பண்ணாதீங்கப்பா ........

ரீச்சர் எல்லாத்தையும் மூடிக்கட்டிக் கொண்டுவந்தால் ..... பாடசாலைக்கு வரும் மாணவரின் வருகை குறைந்துவிடுமே...... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகள் படிக்கும் புத்தகங்களிலும்..

அவர்களுக்குக்காக நடாத்தும் போட்டிநிகழ்ச்சிகளிலும் சினிமாவை புகுத்திவிட்டு...

ஆசிரிய ஆசிரியைகளை நாகரீகமானமுறையில் உடைகளை அணிந்துவருமாறு சட்டம் விதிப்பது எந்தவிதத்தில் நியாயம்?

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே..பிள்ளைகளை நல்வளிப் படுத்தும் ஆசிரியர்களே இப்படி எண்டால் பிள்ளைகள் எம்மாத்திரம்.நாகரீகம் முத்திப் போச்சுது தான். :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் படிக்கும் புத்தகங்களிலும்..

அவர்களுக்குக்காக நடாத்தும் போட்டிநிகழ்ச்சிகளிலும் சினிமாவை புகுத்திவிட்டு...

ஆசிரிய ஆசிரியைகளை நாகரீகமானமுறையில் உடைகளை அணிந்துவருமாறு சட்டம் விதிப்பது எந்தவிதத்தில் நியாயம்?

சரியாகச் சொன்னீர்கள் குமாரசாமி அண்ணை.

பிரச்சினை எங்கேயோ இருக்க , அப்பாவி ஆசிரியர்களை குற்றம் சாட்டி லாபம் சம்பாதிப்பது தான்...... அரசியல்வாதிகளின் வழக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

மிகவும் வெப்பமான நாட்டில் ஜாக்கெட் , பிறகு அதுக்குள்ளை பிரேசியர் எல்லாம் போட்டு, ரீச்சர்மாரை வேர்க்கப்பண்ணாதீங்கப்பா ........

ஆம் உண்மைதான்.

வெப்பநிலையை உதாரணம் காட்டி..

இனிவரும் காலங்களில் ஆசிரியர்களும் கோமணக்கோலத்துடன் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருவார்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் உண்மைதான்.

வெப்பநிலையை உதாரணம் காட்டி..

இனிவரும் காலங்களில் ஆசிரியர்களும் கோமணக்கோலத்துடன் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருவார்கள் :rolleyes:

யார் கண்டது, சிலவேளை ...... பெண் பிள்ளைகளும் பாடசாலைக்கு கல்வி கற்க முண்டி அடித்துக்கொண்டு வருவார்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு சீருடை உள்ள போது ஆசிரியர்க்ளுக்கும் சீருடை இருக்கவேண்டும்.ஆனால் எய்தவன் இருக்க அம்பை நோவதை ஏற்க முடியாது. படுகாவாலி படங்களை மக்கள் மத்தியில் விடுகிறார்கள். அப்போ மட்டும் கலாச்சாரம் எங்கு போய்விட்டது.கருணாநிதி போன்றவர்களுக்கு சோமாலியர்கள் செய்தது போல் செய்தால் தான் தமிழ் நாடென்ன தமிழே உருப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு சீருடை உள்ள போது ஆசிரியர்க்ளுக்கும் சீருடை இருக்கவேண்டும்.ஆனால் எய்தவன் இருக்க அம்பை நோவதை ஏற்க முடியாது. படுகாவாலி படங்களை மக்கள் மத்தியில் விடுகிறார்கள். அப்போ மட்டும் கலாச்சாரம் எங்கு போய்விட்டது.கருணாநிதி போன்றவர்களுக்கு சோமாலியர்கள் செய்தது போல் செய்தால் தான் தமிழ் நாடென்ன தமிழே உருப்படும்.

சோமாலியர்கள் என்ன செய்தவர்கள் நுணா.

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியர்கள் என்ன செய்தவர்கள் நுணா.

பல வருடங்களுக்கு முன் பெரிய எடுப்பில் சோமாலியாவில் அமெரிக்க துருப்புக்கள் கெலிகொப்டர் மூலம் இறக்கப்பட்டு சோமாலிய கெரில்லாக்களுடன் சண்டை இட்டனர்.இறுதியில் சோமாலிய கெரில்லாக்கள் இரு அமெரிக்க படையினரை உயிருடன் பிடித்து வாகனத்தின் பின்புறமாக கட்டி தெரு தெருவாக இழுத்தே (மக்கள் முன்) சாகடித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன் பெரிய எடுப்பில் சோமாலியாவில் அமெரிக்க துருப்புக்கள் கெலிகொப்டர் மூலம் இறக்கப்பட்டு சோமாலிய கெரில்லாக்களுடன் சண்டை இட்டனர்.இறுதியில் சோமாலிய கெரில்லாக்கள் இரு அமெரிக்க படையினரை உயிருடன் பிடித்து வாகனத்தின் பின்புறமாக கட்டி தெரு தெருவாக இழுத்தே (மக்கள் முன்) சாகடித்தார்கள்.

கருணா திருந்த சான்ஸ் உண்டா....?

Edited by தமிழ் சிறி

பேசாமல் பிகினியில் வந்து சொல்லிக்கொடுத்தால் மாண்வர்களதும் வருகை அதிகரிக்கும், மாணவிகளும் தாமும் அப்படியே வர தொடங்குவர்..எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும்

தமிழ்நாட்டு நண்பர் சொன்னார் "எம்.ஜி.ஆர்,கருணாநிதிக்கெல்லாம் தாங்கள் மாத்திரம் தான் பார்க்க வேண்டுமாம் மற்றவர்கள் பார்க்கக் கூடாதாம்.அதுதான் சண்கிளாஸ் அணிவதின் இரகசியம் கூட என்றார்.எம்.ஜி.ஆர் முதலமச்சாராய் வந்ததும் தமிழ்படங்களில் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் இருக்க கூடாதென்றார்,அதே பொலிசி. தனக்கு இல்லாதது மற்றவனுக்கும் கூடாது.

எனது பிள்ளைகளுடன் இருந்து பார்க்கும் போது நான் பயப்படும் ஒரே படங்கள் எம்.ஜி.ஆர் படங்களே. உதாரணம்,நாளை நமதே,ரிக்சாகாரன்,நினைததை முடிப்பவன் இன்னும் பலான பல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் வேலையை தவமாய் எண்ணி வருபவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை. இன்றைய நிலையில் ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று தடம் மாறி vaaravarkalukkuththaan ithu pirachchanai!

  • கருத்துக்கள உறவுகள்

எட்டிரண்டு முழத்துணி தன்னையே

கட்டுகின்ற நம் கன்னியர் அஃதினை

விட்டுக் கட்டைக் கவுணை அணிந்திடல்

வேண்டும் அஃதொரு சிக்கனச் செய்கையாம்

முட்டுக் காலதன் மேற் தெரிந்தாற்குடி

மூழ்கிப் போவதோர் நாளிலும் இல்லையாம்

கெட்ட நோக்கில் எதனையும் பார்த்திடும்

கேடர்க்கே இது கேவலமாகுமாம்

ஆதலால் எமதன்புடைத் தங்கைகாள்

தீது கட்டைக் கவுண் எனச் சொல்பவர்

ஓதலுக்குச் செவியளியாமலே

உடை குறைத்தொரு சிக்கனம் பேணுவீர்

பேதமுற்ற களங்க மனத்தொடு

பெண்மை தன்னை இகழ்கிற காமுக

காதகக் குண மாந்தர் முகத்திலே

காறி எச்சில் உமிழ்ந்து துரத்துவீர்!

பண்டைக்காலப் பருவ மகளிர்கள்

பண்பு கெட்டுத் தவறிடவில்லையோர்

துண்டைத்தான் இள மார்பினிற் கட்டினர்

தூய கற்பிற் துலங்கினர் ஆதலால்

கெண்டைக் காலதன் மேற் தெரிந்தாலது

கேடென்றெண்ணும் உலத்தர் தம் தீக்குணச்

சுண்டைக் காய்த்தலை சுக்கெனத் தூள்பட

தூய மாதர் அணி நடை செய்குவீர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரைவில்!!

எதிர்பாருங்கள்!!!

ஆசிரியைகள் குறுக்குக்கட்டுடனும்....

ஆசிரியர் கோவணத்துடனும்......

ஏனெனில்:::::....

நாங்கள் பழைமைவாதிகள் :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.