Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரனை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை சிறிலங்கா முறியடித்தது: பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள்

Featured Replies

பிரபாகரனை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை சிறிலங்கா முறியடித்தது: பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள்

.வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து சகல முனைகளையும் சிறிலங்கா இராணுவம் முற்றுகையிட்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்கள் ஐம்பது பேர் உட்பட நூறு பேரை அங்கிருந்து அகற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை சிறிலங்காவும் இந்தியாவும் இணைந்து இரகசியமாக முறியடித்தன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இறுதிநேரத்தில் மேற்கொண்ட இந்த அவசர நடவடிக்கைகள் தொடர்பாக அந்த தகவல் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

கிளிநொச்சியை கைப்பற்றிய சிறிலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் இறுதிநிலைகளை நோக்கி முன்னகர்ந்து தமது நடவடிக்கைகளை விஸ்தரித்க்துகொண்டு சென்றபோது விடுதலைப்புலிகள் அமைப்பு பாரிய ஆபத்துக்குள் சிக்கியுள்ளதாக இணைத்தலைமை நாடுகளுக்கு நோர்வே அறிவித்திருந்தது. ஆகவேஇ விடுதலைப்புலிகளின் தலைமையை அங்கிருந்து அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அங்கு நோர்வே வலியுறுத்தியது.

இதனையடுத்துஇ சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபேர்ட் ஓ ப்ளாக் உடனடியாக தனது நாட்டின் அரசு உயர்மட்டத்தினருடன் தொடர்புகொண்டு பேச்சுக்களை நடத்தினார். இந்த பேச்சுக்களின்படிஇ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்இ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டுஅம்மான்இ கடற்புலிகளின் தளபதி சூசை உட்பட விடுதலைப்புலிகளின் 50 முக்கியஸ்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட நூறு பேரை போர் பிரதேசத்திலிருந்து அகற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

வெளியேற்றல் நடவடிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுரகத்தில் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டன. நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய வேலைகளை ஒருங்கமைப்பதற்கு ஹவாயிலிருந்து அமெரிக்க படைஅதிகாரிகள் மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைக்கு பொறுப்பான குழுவினர் விசேட விமானத்தில் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்து இறங்கினர். இந்த விமானம் வருவதற்கான அனுமதி சிறிலங்கா அரசிடம் பெறப்படவில்லை. கட்டுநாயக்கவில் வந்து இறங்கிய பின்னர்தான் சிறிலங்கா அரசுக்கு அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர்இ சிறிலங்கா அரசுக்கும் தமது திட்டம் குறித்து கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ ப்ளாக் எடுத்துக்கூறினார். தாம் தமது நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர்இ குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என்று அமெரிக்க தரப்பினரால் சிறிலங்கா அரசுக்கு எடுத்துக்கூறப்பட்டது. முல்லைத்தீவு கடற்பரப்புக்கு கொண்டுவரப்படும் அமெரிக்க கப்பலுக்கு அழைத்துவரப்படும் விடுதலைப்புலிகள் அனைவரும் பின்னர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் வெளியேற்றப்படுவது என்பதே அமெரிக்காவின் திட்டமாக இருந்ததினால்இ முல்லைத்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்தும்படி கோரப்பட்டது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கேட்ட சிறிலங்கா தரப்புஇ இது குறித்து புதுடில்லிக்கு தெரியுமா என்று கேட்டுள்ளது. உயர்மட்டக்கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாக அமெரிக்க தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது - மார்ச் மாதம் இரண்டாம் வாரமளவில் - சிறிலங்கா படையினர் முல்லைத்தீவு பிரேதேசத்தில் 45 கிலோமீற்றர் பகுதியை கைப்பற்றிவிட்டனர். அதனைதொடர்ந்துஇ தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட படைநடவடிக்கைகளின் மத்தியில் அமெரிக்காவின் திட்டத்தை நடைமுறைப்படுத்தமுடியாமல் போய்விட்டது - என்று தகவல்கள் தெரிவித்தன.

ஆனால்இ அமெரிக்காவின் இந்த திட்டம் சிறிலங்காவால் அறிவிக்கப்பட்டதை அடுத்துஇ போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்ட இந்தியாஇ அமெரிக்காவின் திட்டங்கள் எதுவும் அங்கு நிறைவேறுவதற்கு முன்னரே படையினரை முல்லைத்தீவினுள் ஊடறுப்பை மேற்கொண்டுஇ எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் படைநடவடிக்கையை நிறுத்தவேண்டாம் என்று சிறிலங்காவுக்கு அறிவுறுத்தியதாகவும் -

இந்த உடன் படை நடவடிக்கையில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பலவும் பயன்படுத்தப்பட்டதாகவும் இன்னொரு தகவல் ஒன்று தெரிவித்தது.

நன்றி

ஈழநேசன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை சிறிலங்கா முறியடித்தது: பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள்

இது முன்னரும் வேறு மட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்தி. ஈழத்தமிழ் மக்கள் தமக்கென ஒரு தெளிவான வெளிநாட்டுக்கொள்கையை வரையறுத்துக்கொள்ள வேண்டும். நாடுகடந்த அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்திய சார்பு கொள்கையை தமிழ் மக்களின் தலைவர்கள் தொடர்ச்சியாக பின்பற்றி வந்திருக்கிறார்கள். அதன் பாதிப்பு இன்றாவது தெரியாவிட்டால் ஈழத்தமிழ் மக்கள் தமக்கென ஒரு ஆட்சியை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் அற்றவர்கள் என்று கருதுவது தவறாகாது. அமெரிக்க அரசை தொடர்ச்சியாக ஆதரித்து வரும் நாடுகள், குறிப்பாக இஸ்ரேல், அமெரிக்காவினால் என்றுமே கைவிடப்பட்டதில்லை. ஆகவே, இஸ்ரேல் நாட்டுக்காக யூதர்கள் அமெரிக்காவுக்கு அணுக்குண்டு செய்து கொடுத்தது போல, அமெரிக்க, ஐரோப்பிய எதிரிகளை அழிப்பதற்கும், அமெரிக்க, ஐரோப்பிய நலன்களை பேணவும், ஈழத்தமிழ் மக்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி முன்வந்து செயற்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது முன்னரும் வேறு மட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்தி. ஈழத்தமிழ் மக்கள் தமக்கென ஒரு தெளிவான வெளிநாட்டுக்கொள்கையை வரையறுத்துக்கொள்ள வேண்டும். நாடுகடந்த அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்திய சார்பு கொள்கையை தமிழ் மக்களின் தலைவர்கள் தொடர்ச்சியாக பின்பற்றி வந்திருக்கிறார்கள். அதன் பாதிப்பு இன்றாவது தெரியாவிட்டால் ஈழத்தமிழ் மக்கள் தமக்கென ஒரு ஆட்சியை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் அற்றவர்கள் என்று கருதுவது தவறாகாது. அமெரிக்க அரசை தொடர்ச்சியாக ஆதரித்து வரும் நாடுகள், குறிப்பாக இஸ்ரேல், அமெரிக்காவினால் என்றுமே கைவிடப்பட்டதில்லை. ஆகவே, இஸ்ரேல் நாட்டுக்காக யூதர்கள் அமெரிக்காவுக்கு அணுக்குண்டு செய்து கொடுத்தது போல, அமெரிக்க, ஐரோப்பிய எதிரிகளை அழிப்பதற்கும், அமெரிக்க, ஐரோப்பிய நலன்களை பேணவும், ஈழத்தமிழ் மக்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி முன்வந்து செயற்பட வேண்டும்.

யூட்டின் கருத்தை நான் வரவேற்கிறேன்.இந்து சமுத்திரத்தின் இஸ்ரேலாக ஈழம் வரவேண்டும்.அமெரிக்காவுடன் வெளிப்படையான பேச்சுக்களை நடத்த வேண்டும்.பரஸ்பர விட்டுக் கொடுப்புக்களைச் செய்தாவது இது நடக்க வேண்டும்.திருமலைத் துறைமுகத்தில் அமெரிக்கா தளம் அமைக்க கேட்டாலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒத்துக் கொள்ள வேண்டும்.அமெரிக்கா தன் தளத்தைக் காப்பாற்றுவதற்காக எம் மண்ணைப் பாதுகாக்கும்.பிச்சைக்கார நாடுகளான இந்தியா சீனா பாகிஸ்தான் சிறிலங்காவுக்கு எவ்வளவு காலத்திற்கு உதவப் போகின்றன.இந்தியாவை உடைக்க எந்தப் பிசாசுடனாவது கூட்டுச் சேர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை தான். ஒரு b2 bomber வருகிறது என்று வெருட்டு விட்டிருந்தாலே இலங்கை படை என்ன இந்திய படையே ஓடி தள்ளி இருக்கும்.அமெரிக்காவுக்கும் இந்த இனப்படுகொலையில் மிக முக்கிய பங்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமும் அவனுக்கு தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை தான்.

அமெரிக்க பசிபிக் தளம் இலங்கையின் போர்ப்பிரதேசத்தில் இருந்து மக்களை வெளியேற்ற தயாராகி வருவதாக மே 18க்கு முதல் பிரபல ஆங்கில ஊடகங்கள் அந்த நேரத்திலேயே செய்திகள் வெளியிட்டிருந்தன. சிங்கள இனவாத அமைப்புகள் அதற்கெதிராகவும் நோர்வேயின் எரிக் சொல்ஹெயிமுக்கும் அமெரிக்காவின் தூதுவராக இருந்த ரோபட் பிளேக்குக்கு எதிராகவும் இந்த காலத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். இந்த செய்தி உண்மையாக இருக்க கூடிய சாத்தியம் அதிகம்.

ஒரு b2 bomber வருகிறது என்று வெருட்டு விட்டிருந்தாலே இலங்கை படை என்ன இந்திய படையே ஓடி தள்ளி இருக்கும்.

இவ்வாறான காத்திரமான நடவடிக்கையை அமெரிக்கா இந்தியாவை எதிர்த்துக்கொண்டு மேற்கொள்ளும் அளவுக்கு ஈழத்தமிழர்கள் தம்மை அமெரிக்காவின் நண்பர்களாக இதுவரை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லையே? இனிமேலாவது ஈழத்தமிழர்கள் தமது வெளிநாட்டு உறவை தெளிவாகவும் காத்திரமாகவும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவுக்கும் இந்த இனப்படுகொலையில் மிக முக்கிய பங்கு உண்டு.

இலங்கையில் இனப்படுகொலையில் பங்குகொள்வதில் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் போர்க்குற்ற விசாரணைகள் கோரி கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியாவும், பாகிஸ்தானும், சீனாவும் ஒன்றாக இணைந்து தமது நட்புநாடுகளின் உதவியுடன் முறியடித்ததையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.