Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால் GSP நிரந்தரமாக ரத்து செய்யப்படும்

Featured Replies

சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால் GSP நிரந்தரமாக ரத்து செய்யப்படும்

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதும், நீதியானதுமாக நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரசல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எழுத்து மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் மீள வழங்கப்பட வேண்டுமாயின் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

அழுத்தங்களோ இடையூறுகளோ இன்றி சுதந்திரமான முறையில் மக்கள் தமக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் முடிவுகள் வெளியிடப்படும் வரையில் காத்திராது இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://parantan.com/pranthannews/srilankanews.htm

உந்த GSP+ இளவை வைச்சு இன்னும் எத்தினை நாளைக்குத்தான் பூச்சாண்டி காட்டுவியல்.

உத எப்பவோ நிப்பாட்டி இருக்கவேணும் இன்னும் வெருட்டல் தானே ஒழிய உருப்படியா ஒண்டையும் கானம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில் தேர்தல்கள் இதுவரைக்கும் நடந்ததுண்டா? அப்படியிருந்தும் அவர்களுக்கு தொடர்ந்து கிடைத்தனவே.. அந்த வகையில் GSP + கண்டிப்பாக அவர்களுக்கு கிடைத்தே தீரும், இருந்து பாருங்கள்.. :)

பொன்னரை வெற்றி பெறவைக்க வேண்டுமென்று முடிவே எடுத்துவிட்டார்கள்.

சுருக்கமாக சரத் வெண்றால் சிங்களவருக்கு GSP+ கிடைக்கும், மகிந்த வெண்றால் GSP+ தடை செய்யப்படும்.... எது எங்களுக்கு நல்லது....???

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாக சரத் வெண்றால் சிங்களவருக்கு GSP+ கிடைக்கும், மகிந்த வெண்றால் GSP+ தடை செய்யப்படும்.... எது எங்களுக்கு நல்லது....???

எங்களுக்கு நன்மை தீமையை விடுங்கோ

இந்த கேள்வியே சம்பந்தப்பட்டவைக்கு வெற்றிதானே....

சுருக்கமாக சரத் வெண்றால் சிங்களவருக்கு GSP+ கிடைக்கும், மகிந்த வெண்றால் GSP+ தடை செய்யப்படும்.... எது எங்களுக்கு நல்லது....???

யார் வென்றாலும் எங்களுக்கு அடி விழும், யார் அடித்தால் குறைவாக வலிக்குமோ அவருக்குத் தான் எனது வாக்கு, அப்படிப் பார்த்தால் மகிந்தவின் அடி குறைவாக இருக்கும்,ஏன் என்றால் அவருக்கு 4 வருடமாக அடித்து அழுத்துப் போய் இருக்கும் :):D

  • கருத்துக்கள உறவுகள்

யார் வென்றாலும் எங்களுக்கு அடி விழும், யார் அடித்தால் குறைவாக வலிக்குமோ அவருக்குத் தான் எனது வாக்கு, அப்படிப் பார்த்தால் மகிந்தவின் அடி குறைவாக இருக்கும்,ஏன் என்றால் அவருக்கு 4 வருடமாக அடித்து அழுத்துப் போய் இருக்கும் :):D

மகிந்த எங்க ஐயா அடித்தவர்

ஆளை வைத்து அடித்தவர்

இப்போ அடித்தவருக்கு அலுத்துப்போச்சு

இவன் சொல்லி நான் எத்தனை காலம் அடிப்பது

நானே நேரே அடிக்கலாமே என்று...

அவன்கள் தெளிவாகத்தான் இருக்கிறாங்கள் அடிப்பதில்

நமக்குள்தான் புடுங்குப்பாடு..............

Edited by விசுகு

எங்களுக்கு நன்மை தீமையை விடுங்கோ

இந்த கேள்வியே சம்பந்தப்பட்டவைக்கு வெற்றிதானே....

GSP+ கிடைக்க இல்லை எண்டால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏதும் வராதோ...??? அங்கை பாதிப்பு வராட்டால் உங்களுக்கு பறவாய் இல்லை... பாதிப்பு வந்து வருமானம் படுத்தால் நீங்கள் ( புலம்பெயர்ந்த தமிழர்தான்) இலங்கையின் வருமானத்தை தாங்கும் தூண்களாக இருப்பீர்கள்...

இதுதான் வரலாறு...

தேர்தலிலை யார் வெல்லுகினமோ இல்லையோ பாதிப்பு புலம்பெயந்தவைக்கு மட்டும்தான்... இங்கை கனபேர் சொல்லுகினம் புலம்பெயந்தவை ஊரிலை இருக்கும் மக்களுக்கான முடிவை எடுக்க படாதாம்.... அவையை சொல்ல சொல்லுங்கோ ஊருக்கு புலம்பெயந்தவையின் காசு தேவை இல்லை எண்டு ஊரிலை இருக்கும் மக்கள் சொல்லுகினம் எண்டு...

ஊருக்கு போண் அடிச்சு மக்கள் மனநிலையை நாடி பிடிக்கும் விண்ணர்கள் இதை ஒருக்கா தெளிவு படுத்தினம் எண்டால் புண்ணீயமாய் போகும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்

நானும் பார்த்திருக்கின்றேன்

காலை நக்கும் நாய்மீதுதான் எந்த கோபத்தையும் காட்டுறவ ஊரில்....

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை கனபேர் சொல்லுகினம் புலம்பெயந்தவை ஊரிலை இருக்கும் மக்களுக்கான முடிவை எடுக்க படாதாம்.... அவையை சொல்ல சொல்லுங்கோ ஊருக்கு புலம்பெயந்தவையின் காசு தேவை இல்லை எண்டு ஊரிலை இருக்கும் மக்கள் சொல்லுகினம் எண்டு...

தாயக மக்களுக்கு காசு/உதவி தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் / சொந்தக்காரர்கள் செய்வதால், அவர்கள் நம் சொல்லைக் கேட்டு நடக்கவேண்டும் என்று வற்புறுத்தமுடியாது. தாயக மக்களுக்கும் அரசியல் கருத்துக்களைச் சொல்ல உரிமை இருக்கின்றது. அது எங்களின் கருத்துக்களோடு ஒத்துப் போகலாம், எதிராகவும் இருக்கலாம். எதிரான கருத்துக்களை வைத்தால் சொந்தங்களைக் கைவிட்டுவிடுவோமா? :)

சுருக்கமாக சரத் வெண்றால் சிங்களவருக்கு GSP+ கிடைக்கும், மகிந்த வெண்றால் GSP+ தடை செய்யப்படும்.... எது எங்களுக்கு நல்லது....???

சுக்கமா சொன்னால்

சரத் வென்றால் GSP+ , மகிந்த வென்றால் GSP- .

Edited by Sooravali

தாயக மக்களுக்கு காசு/உதவி தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் / சொந்தக்காரர்கள் செய்வதால், அவர்கள் நம் சொல்லைக் கேட்டு நடக்கவேண்டும் என்று வற்புறுத்தமுடியாது. தாயக மக்களுக்கும் அரசியல் கருத்துக்களைச் சொல்ல உரிமை இருக்கின்றது. அது எங்களின் கருத்துக்களோடு ஒத்துப் போகலாம், எதிராகவும் இருக்கலாம். எதிரான கருத்துக்களை வைத்தால் சொந்தங்களைக் கைவிட்டுவிடுவோமா? :unsure:

நாங்கள் எங்கட சுமையை குறைக்க முனைய கூடாது எண்டு யாரால் சொல்ல முடியும்... அங்கை ஒரு நிரந்தர தீர்வு வர வேண்டும் எண்று நினைப்பதை பிழை எண்று எப்படி சொல்கிறீர்கள்...???

தாயக மக்கள் கருத்தை சொல்லக்கூடாது எண்று நான் எங்கையும் சொல்லவில்லை... ஆனால் அந்த மக்களுக்கு என்ன தேவை என்பதை சொல்லும் தகுதி புலம்பெயர்ந்தவைக்கும் இருக்கிறது என்பதை தான் சொல்கிறேன்...

சுமையை தூக்குவது மட்டும் தான் என் வேலை அதை இறக்கி வைக்கும் வளியை நாடப்படாது எனும் தத்துவம் எப்படி சரியானது...???

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்கள் கருத்தை சொல்லக்கூடாது எண்று நான் எங்கையும் சொல்லவில்லை... ஆனால் அந்த மக்களுக்கு என்ன தேவை என்பதை சொல்லும் தகுதி புலம்பெயர்ந்தவைக்கும் இருக்கிறது என்பதை தான் சொல்கிறேன்...

இந்த கூற்றுக்கள் தாயக மக்களின் கருத்துக்களும், புலம்பெயர் மக்களின் கருத்துக்களும் ஒத்திசைவாக இருந்தால் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியன. தாயக மக்களின் விருப்பங்களை உணராமல் எம் விருப்பங்களும் அவர்கள் விருப்பங்களும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று கருதமுடியாது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தாயகத் தமிழர்கள் தமது விருப்பத்தை ஜன்நாயக வழிமுறையில் தெரிவிக்க ஒரு சந்தர்ப்பமே. அவர்களுடைய விருப்பங்களை அறிந்த பின்னர் புலம்பெயர்ந்தவைக்கு தாயக மக்களின் தேவை கருதி சொல்லும் தகுதி இருக்கின்றதா என்று விவாதிக்கலாம்.

இந்த கூற்றுக்கள் தாயக மக்களின் கருத்துக்களும், புலம்பெயர் மக்களின் கருத்துக்களும் ஒத்திசைவாக இருந்தால் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியன. தாயக மக்களின் விருப்பங்களை உணராமல் எம் விருப்பங்களும் அவர்கள் விருப்பங்களும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று கருதமுடியாது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தாயகத் தமிழர்கள் தமது விருப்பத்தை ஜன்நாயக வழிமுறையில் தெரிவிக்க ஒரு சந்தர்ப்பமே. அவர்களுடைய விருப்பங்களை அறிந்த பின்னர் புலம்பெயர்ந்தவைக்கு தாயக மக்களின் தேவை கருதி சொல்லும் தகுதி இருக்கின்றதா என்று விவாதிக்கலாம்.

முதலில் ஆயுத முனையின் இருக்கும் மக்கள் சுதந்திரமாக கருத்து சொல்கிறார்களா என்பதை பாருங்கள்... அதன் பின்னர் அவர்கள் தங்களின் கருத்தாக எதை சொல்கிறார்கள் எண்று பாருங்கள்...! எனக்கு தெரிந்த அனேகர் சொல்வது மௌனம்... காரணம் அவர்களிடம் சாத்தியமான தீர்வு எண்று எதுவும் இல்லை... காரணம் அவர்களால் நிரந்தர தீர்வை நோக்கி நகரமுடியாத வண்ணம் நசுக்கப்பட்டு இருக்கிறார்கள்...

ஒடுக்க பட்ட மக்களின் குரல் எப்போதும் வெளிவருவது இல்லை...

அங்கிருக்கும் மக்களிடம் கேழுங்கள் உங்களுக்கு நிரந்தரமான தீர்வான அமைதி வேண்டுமா.? அல்லது சகிப்பு தன்மையோடு சிங்கள இராணுவத்தின் மத்தியில் சிங்களவரோடு சேர்ந்து வாழ விரும்புகிறார்களா...???

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்... சிங்கள இராணுவத்தோடு சிறுபான்மையான சிலர் சேர்ந்து நிக்கும் நலன் அனுபவிக்கும் பிரச்சாரங்கள் முழுமையான தமிழ் மக்களின் உணர்வுகள் எண்று நிறுவி கைகழுவி விடுவது சரியானதா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு நான்கு தெரிவுகள் உள்ளன.

1. மகிந்த - டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் போன்றவர்களின் ஆதரவோடு உள்ளவர்

2. சரத் - ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவோடு உள்ளவர். ஆட்சி மாற்றம் வேண்டி சில தேசிய ஆதரவாளர்களும் மறைமுகமாக ஆதரவளிக்கின்றனர்.

3. சிவாஜிலிங்கம் - தமிழ் தேசியத்தை ஆதரவிப்பவரும், மகிந்த-சரத் இருவரையும் எதிர்ப்பவர்.

4. புறக்கணிப்பு - அகில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ்கூட புறக்கணிப்பைக் கோரியுள்ளது.

நிரந்தரமான தீர்வை வேண்டும் தமிழ்மக்கள் தமது தெரிவை சரியாகத் தேர்ந்த்டுப்பார்கள். ஆக்கிரமிப்புப் படைகள் சரத்-மகிந்த என்று பிரிந்துள்ளதால் அவர்களின் இடையூறு அதிகம் இருக்காது என நினைக்கிறேன். எனவே ஓரளவு சுதந்திரமாக வாக்களிக்கமுடியும்.

தமிழ் மக்களின் தேர்வை ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் இலகுவாக அறியமுடியும். அதன்மூலம் அவர்களின் தேவையை அறிந்து புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் ஒத்திசைவாக நடந்தாலே நிரந்தரமான தீர்வு கிட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாக சரத் வெண்றால் சிங்களவருக்கு GSP+ கிடைக்கும், மகிந்த வெண்றால் GSP+ தடை செய்யப்படும்.... எது எங்களுக்கு நல்லது....???

சில பேமாளிகளுக்கு எதனால் என்ன தாக்கம் வருமென்பது பற்றியெல்லாலம் அக்கறையில்லை. ரணில் முன்பு வந்திருந்தால் ஈழத்தை தாரை வார்த்திருப்பான் என்று கனவு காணும் ஒரு கூட்டம் இன்னமும் உள்ளது. உருப்படியான சிந்தனை என்பது இதுகளுக்கு ஏதும் இல்லை. ஆனால் எதையாவது எழுதி கொண்டே இருக்குதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு நான்கு தெரிவுகள் உள்ளன.

1. மகிந்த - டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் போன்றவர்களின் ஆதரவோடு உள்ளவர்

2. சரத் - ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவோடு உள்ளவர். ஆட்சி மாற்றம் வேண்டி சில தேசிய ஆதரவாளர்களும் மறைமுகமாக ஆதரவளிக்கின்றனர்.

3. சிவாஜிலிங்கம் - தமிழ் தேசியத்தை ஆதரவிப்பவரும், மகிந்த-சரத் இருவரையும் எதிர்ப்பவர்.

4. புறக்கணிப்பு - அகில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ்கூட புறக்கணிப்பைக் கோரியுள்ளது.

நிரந்தரமான தீர்வை வேண்டும் தமிழ்மக்கள் தமது தெரிவை சரியாகத் தேர்ந்த்டுப்பார்கள். ஆக்கிரமிப்புப் படைகள் சரத்-மகிந்த என்று பிரிந்துள்ளதால் அவர்களின் இடையூறு அதிகம் இருக்காது என நினைக்கிறேன். எனவே ஓரளவு சுதந்திரமாக வாக்களிக்கமுடியும்.

தமிழ் மக்களின் தேர்வை ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் இலகுவாக அறியமுடியும். அதன்மூலம் அவர்களின் தேவையை அறிந்து புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் ஒத்திசைவாக நடந்தாலே நிரந்தரமான தீர்வு கிட்டும்.

மகிந்த நடத்தபோகும் இந்த உல்லடா தேர்தலை வைத்து மக்களின் மனநிலையை அறியலாம் என்று நீங்கள் நம்ப கூடியவராக இதுவரை நான் உங்களை காணவில்லை. கொஞ்சம் புத்திசாலி தனமான கருத்துகளைதான் இதுவரை எழுதிவந்தீர்கள்.

இன்னமும் கிளிநொச்சி பகுதிகளில் மக்கள் குடியமர்த்படவேயில்லை...................... எத்தனை ஆயிரம் ஓட்டுகள் மகந்தவிற்கு கிளிநொச்சி பிரதேசத்தில் இருந்து விழுகின்றது என்று பொறுத்திருந்து பாருங்கள். காட்டு பன்றிகள் கூட அந்த எண்ணிக்கையில் வளாந்திருக்குமா என்று நான் நம்பவில்லை.

மக்களுக்கு நான்கு தெரிவுகள் உள்ளன.

1. மகிந்த - டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் போன்றவர்களின் ஆதரவோடு உள்ளவர்

2. சரத் - ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவோடு உள்ளவர். ஆட்சி மாற்றம் வேண்டி சில தேசிய ஆதரவாளர்களும் மறைமுகமாக ஆதரவளிக்கின்றனர்.

3. சிவாஜிலிங்கம் - தமிழ் தேசியத்தை ஆதரவிப்பவரும், மகிந்த-சரத் இருவரையும் எதிர்ப்பவர்.

4. புறக்கணிப்பு - அகில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ்கூட புறக்கணிப்பைக் கோரியுள்ளது.

நிரந்தரமான தீர்வை வேண்டும் தமிழ்மக்கள் தமது தெரிவை சரியாகத் தேர்ந்த்டுப்பார்கள். ஆக்கிரமிப்புப் படைகள் சரத்-மகிந்த என்று பிரிந்துள்ளதால் அவர்களின் இடையூறு அதிகம் இருக்காது என நினைக்கிறேன். எனவே ஓரளவு சுதந்திரமாக வாக்களிக்கமுடியும்.

தமிழ் மக்களின் தேர்வை ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் இலகுவாக அறியமுடியும். அதன்மூலம் அவர்களின் தேவையை அறிந்து புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் ஒத்திசைவாக நடந்தாலே நிரந்தரமான தீர்வு கிட்டும்.

பாராளுமண்ற தேர்தலைப்போல மக்கள் முண்டி அடித்து வாக்களிக்க போனார்கள் எண்று செய்தி படங்களோடு சொல்வார்களாக இருந்தால், ஊரில் உள்ள உறவுகள் சொல்வார்களாக இருந்தால் இந்த தேர்தலில் மக்கள் நியாய பூர்வமாக வாக்களிப்பில் ஈடுபட வைக்கப்பட்டார்களாக இருந்தால் நான் நீங்கள் சொல்லும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்...

குறைந்தது ஒரு 40- 50 வீதமான மக்களாவது வாக்களிப்பில் ஈடுபட்டு இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்...

சில பேமாளிகளுக்கு எதனால் என்ன தாக்கம் வருமென்பது பற்றியெல்லாலம் அக்கறையில்லை. ரணில் முன்பு வந்திருந்தால் ஈழத்தை தாரை வார்த்திருப்பான் என்று கனவு காணும் ஒரு கூட்டம் இன்னமும் உள்ளது. உருப்படியான சிந்தனை என்பது இதுகளுக்கு ஏதும் இல்லை. ஆனால் எதையாவது எழுதி கொண்டே இருக்குதுகள்.

இது தமிழரின் வரலாறு.... இதைத்தான் நீண்ட நெடிய காலமாக செய்தும் வந்தனர்... சிறு சிறு குழுக்களாக பிரிந்து நிண்று அடிபடுவது ஒண்றும் புதிது இல்லை...

ஒட்டு மொத்தமாக எல்லாரும் விரும்புவது யாராவது எங்களுக்கு எதையாவது தரவேண்டும்... அதை நாங்கள் நோகாமல் வாங்கி அனுபவிக்க வேண்டும்....

இப்ப அதிலையும் போட்டி யாரிடம் வாங்கி அனுபவிப்பது எண்டு... ஏன் எண்டால் சுயமாக எங்களாலை எதுவும் முடியாது...

Edited by தயா

யாரை வெல்ல வைக்கவேண்டும் என்பதை விடுத்து யாரை தோற்க்கடிக்க வேண்டும் என்று யோசித்தால் தெளிவான விடை கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

2 பேய்களை முன்னிறுத்தி அவர்களில் ஒருவரைத் தெரிவு செய்யும் தெரிவை மட்டும் தமிழ்மக்களிடம் கொடுத்துவிட்டு மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.தமிழ் மக்களின் கருத்து என்ன என்பதை ஒரு சுதந்திரமான சர்வசன வாக்கெடுப்புக்கு விட்டு அந்த முடிவை ஏற்றுக் கொள்ளச் சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம்.50 வுதத்திற்கும் மேலான தமிழ்மக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டாலும் ஓரளவுக்கு மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளலாம்.

இருக்கிற தலையிடி போதாதென்று ஐரோப்பிய ஒன்றியம் இப்பொழுது சொல்வது தமிழ் மக்களை மேலும் குழப்பப் போகின்றது.சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் கிடைக்காமல் தடுப்பதா? மகிந்தவைப் பழிவாங்குவதா?(மகிந்த தோற்றால் ஜிஎஸ்பி பிளஸ் கிடைக்கும்)தேர்தலைப் புறக்கணிப்பதா?சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிப்பதா?

புலம் பெயர் தமிழ்மக்களை இந்த விடயத்தில் தலையிடக்கூடாதென்று யாரும் சொல்ல முடியாது.நாங்கள் புலம் பெயர்ந்ததற்கு காரணமான பிரச்சனை இன்னும் தீராமல் இருக்கிறது.தாயக மக்களின் சுமையை இதுவரை தாங்கிவந்தது மட்டுமன்றி போராட்ட சுமையையும் பொருளாதார ரீதியில் தாங்கிய மக்களை அவர்களுக்கான தீர்வு விடயத்தில் தலையிடக்கூடாது என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை மேற்படி சுமைகளுக்கு எந்த உதவியும் வழங்காதவர்களுக்கு வேண்டுமானால்உரிமையில்லை என்று சொல்லலாம்.அவர்கள் கூட தங்கள் சொந்த பநதங்களின் சுமையையாவது தாங்கியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த நடத்தபோகும் இந்த உல்லடா தேர்தலை வைத்து மக்களின் மனநிலையை அறியலாம் என்று நீங்கள் நம்ப கூடியவராக இதுவரை நான் உங்களை காணவில்லை. கொஞ்சம் புத்திசாலி தனமான கருத்துகளைதான் இதுவரை எழுதிவந்தீர்கள்.

இன்னமும் கிளிநொச்சி பகுதிகளில் மக்கள் குடியமர்த்படவேயில்லை...................... எத்தனை ஆயிரம் ஓட்டுகள் மகந்தவிற்கு கிளிநொச்சி பிரதேசத்தில் இருந்து விழுகின்றது என்று பொறுத்திருந்து பாருங்கள். காட்டு பன்றிகள் கூட அந்த எண்ணிக்கையில் வளாந்திருக்குமா என்று நான் நம்பவில்லை.

பாராளுமண்ற தேர்தலைப்போல மக்கள் முண்டி அடித்து வாக்களிக்க போனார்கள் எண்று செய்தி படங்களோடு சொல்வார்களாக இருந்தால், ஊரில் உள்ள உறவுகள் சொல்வார்களாக இருந்தால் இந்த தேர்தலில் மக்கள் நியாய பூர்வமாக வாக்களிப்பில் ஈடுபட வைக்கப்பட்டார்களாக இருந்தால் நான் நீங்கள் சொல்லும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்...

குறைந்தது ஒரு 40- 50 வீதமான மக்களாவது வாக்களிப்பில் ஈடுபட்டு இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்...

மக்கள் வாக்களிக்காவிட்டால் கூட அதில் ஒரு செய்தி உள்ளது. சிங்களவர்களின் தேர்தலில் நாட்டம் இல்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம். அல்லது அரசின் ஜனநாயகச் செயற்பாட்டின்மீது அக்கறை இல்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டாலும், மக்கள் சென்று வாக்களிக்கும் நிலையில் இல்லை என்பதால் மோசடி இருக்கவே வாய்ப்பு உள்ளது.

ஆனால் வடக்கு-கிழக்கில் உள்ள மற்றைய தொகுதிகளில் மக்கள் 50% வீதத்திற்கு அதிகமாக வாக்களிக்கச் சென்றாலும் அல்லது புறக்கணித்தாலும், அவர்களின் மனநிலையை ஓரளவு உணர்ந்துகொள்ளலாம்.

புலம்பெயர் நாடுகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது. இதன் முடிவுகள் பெரும்பான்மை தமிழரின் சிந்தனையை வெளிக்காட்டுவதாக எடுத்துக்கொண்டால், இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்கும் முறையும் அவர்களின் சிந்தனையை ஓரளவு வெளிக்காட்டுவதாகவே எடுத்துக்கொள்ளலாம். எனினும் தமிழ்மக்களின் சரியான முடிவுகளை ஐ.நா. வின் மேற்பார்வையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்துவதன் மூலமே அறியமுடியும். ஆனால் அது என்றைக்குமே நடக்காது போலத்தான் தெரிகின்றது.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் நடக்கிறது அங்கை, யாருக்கு வோட்பண்ணவேனுமெண்டு டிசைட் பண்ணுறாக்கள் இங்க. :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடக்கிறது அங்கை, யாருக்கு வோட்பண்ணவேனுமெண்டு டிசைட் பண்ணுறாக்கள் இங்க. :unsure::lol:

உங்களைப் போன்றவர்களை மகிழ்வூட்ட இப்படியான டிஸ்கசன்கள் தேவைதானே. இல்லாவிட்டால் ஏக்கத்திலேயே நெஞ்சு வீங்கி வெடித்துவிடுவீர்கள் அல்லவா.. :lol:

தேர்தல் நடக்கிறது அங்கை, யாருக்கு வோட்பண்ணவேனுமெண்டு டிசைட் பண்ணுறாக்கள் இங்க. :unsure::lol:

சிங்களவர்களின் தலைவனை தெரிவு செய்ய தமிழர்க்கு என்ன முடிவு வேண்டிக்கிடக்கு....??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.