Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் வாக்குகளில் தான் சரத்பொன்சேகா வென்றார் என்று பேசப்படவேண்டும்: சுரேஸ் பிறேமச்சந்திரன்

Featured Replies

தமிழ் மக்களின் வாக்குகளில் தான் சரத்பொன்சேகா வென்றார் என்று பேசப்படவேண்டும்: சுரேஸ் பிறேமச்சந்திரன்

தமிழ் மக்களின் வாக்குகளில் தான் சரத்பொன்சேகா வென்றார் என்று பேசப்படவேண்டும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஆண்டுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. இன்நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சரத்பொன்சோகா மீதுள்ள அக்கறையால் நாங்கள் அவரை ஆதரிக்கவில்லை. ஒரு எதிரியினை இன்னெரு எதிரியால்தான் எதிர்கொள்ளமுடியம் என்ற கொள்கையில்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரிக்கின்றது.

தந்தை செல்வாகாலத்தில் இருந்து தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாணப்பட்டதில்லை. 60 ஆண்டுகளாக போராடியும் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. கிழக்கில் அம்பாறை உள்ளிட்ட சிலபகுதிகள் சிங்கள மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சிங்களப் பிரதேசமாக மாற்றப்படுகின்றது. வடக்கு கிழக்கு பகுதிகளில் சம்மந்தமில்லாத அமைச்சர்கள் அமர்த்தப்பட்டுள்ளர்கள். ஏ 9 வீதியில் உள்ள அனைத்து படைக் காவலரண்களும் சீமேந்து ஓடு பேன்றவற்றினால் நிலையாக அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் மக்கள் ஓலைக்குடிசைகளிலும் தறப்பாள்களிலும் வாழ்கின்றார்கள். மக்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் சிறீலங்காப்படை காவலரண்களுக்கு அருகில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மக்கள் இனியும் கொழும்பிடம் கையேந்தாமல் வாழ ஒரு தீர்வு நோக்குடன் செல்வோம். அதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் உழைத்துக்கொண்டிருக்கும் என்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2896&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

அதாவது நாளைக்கு ஐயோ அடிக்கிறான் எண்டு கத்திக் கொண்டு வீதிக்கு இறங்கினால் மேற்குலக ஊடகங்களிலை சொல்வார்கள்.... "இலங்கையிலை தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மீது புலம்பெயர்ந்த தமிழர்கள் குற்றம் சாட்டினர்" ...

பிறகு என்ன தமிழர்களுக்கு ஊரிலை பிரச்சினை இருக்கு எண்டு கற்பூரத்தை அடிச்சு சொன்னாலும் ஒரு வெள்ளையும் நம்பாது... ஜனாதிபதி சரத்தை வோட்டு போட்டு தெரிவு செய்தது தமிழர்கள் தானே எண்டு பதில் அடி கிடைக்கும்...

Edited by தயா

  • தொடங்கியவர்

நெத்தியடியான பதில்.அமைச்சர் கனவு எம்மவர்களின் கண்ணை மறைத்துவிடும்.

ஹக்கீமும்,கணேசனும் உசுப்பேத்திவிட இவர்கள் ஆட்டத்தை,நிறுத்த யாரால்தான் முடியுமோ.இது முள்ளிவாய்க்காலுக்கு பிந்திய யுகமாயிற்றே..

பொறுத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இருக்கிற அரசியல்வாத்திகளை நினைச்சு?

குப்புற படுக்கவோ?

நிமிர்ந்து படுக்கவோ?

சரிஞ்சு படுக்கவோ?

அண்டுதொடக்கம் விதம்விதமாய் அதாவது பல கோணங்களில் ஈழத்தமிழன் அழிஞ்சும்

தங்கடை பானைவண்டியை வளர்க்க அப்பப்ப ஒருத்தன் இருந்துகொண்டுதான் இருக்கிறான்

பன்னாடை பரதேசியள்

உவங்கள் மக்கிறோட்டுக்கூட போட அதிகாரமில்லாத ஜடங்கள்

இலங்கை பெளத்த மத, ஒற்றையாட்சி அரசமுறையையும் அரசியலமைப்பையும் தமிழ் மக்கள் வெளிப்படையாக ஏற்று, தமிழர்கள் மீண்டும் தம் தலையில் தீயை மூட்டிக்கொண்டார்கள் என்றும் பேசிக்கொள்ளவர்.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

.

mahinda-rajapaksa-sarath-fonseka-2009-5-18-16-52-1.jpgsarath-fonseka-2009-11-27-9-10-40.jpg

தமிழ்நாட்டு, அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று உண்மையை வெளிப்படையாக சொல்லிய சரத்துக்கே மக்கள் வாக்களிப்பார்கள்.

கொழும்பிடம் கையேந்தாமல் தீர்வை நோக்கிச் செல்வதென்றால் எப்படி? தமிழர் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தமிழர்களுக்கு தீர்வினைக் கொடுப்பாரா? சுரேஷ் பிரேமச்சந்திரன் எந்த அமைச்சர் பதவியை ஏற்கப்போகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன, வீரவசனம் பேசும் தமிழ்ப்படமா?? வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு " தமிழந்தாண்டா சரத்தை வரப்பண்ணினான்" என்று தொடை தட்டி சினிமா ஸ்டைலில் பிரேமச்சந்திரன் சொல்லியிருக்கிறார். அடப்பாவிகளா, நீங்களெல்லாம் சேர்ந்து அவனை வரப்பண்ணுங்கோ, அவனும் நன்றிக்கடனாக உங்களுக்குச் செய்ய வேன்டியதை எல்லாம் செய்வான்.

மகிந்தவைத் தோற்கடிப்பதுதான் நமது இப்போதைய தேவை, சரத்துக்கும் மகிந்தவுக்கும் இடையில் வேறு எந்த வித்தியாசமும் கிடையாது என்று உண்மையைச் சொல்லி ஆதரவளியுங்கள். உங்கள் நாற்காலிகளுக்காக தமிழரை ஏமாற்ற வேண்டாம்.

இதென்ன, வீரவசனம் பேசும் தமிழ்ப்படமா?? வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு " தமிழந்தாண்டா சரத்தை வரப்பண்ணினான்" என்று தொடை தட்டி சினிமா ஸ்டைலில் பிரேமச்சந்திரன் சொல்லியிருக்கிறார். அடப்பாவிகளா, நீங்களெல்லாம் சேர்ந்து அவனை வரப்பண்ணுங்கோ, அவனும் நன்றிக்கடனாக உங்களுக்குச் செய்ய வேன்டியதை எல்லாம் செய்வான்.

மகிந்தவைத் தோற்கடிப்பதுதான் நமது இப்போதைய தேவை, சரத்துக்கும் மகிந்தவுக்கும் இடையில் வேறு எந்த வித்தியாசமும் கிடையாது என்று உண்மையைச் சொல்லி ஆதரவளியுங்கள். உங்கள் நாற்காலிகளுக்காக தமிழரை ஏமாற்ற வேண்டாம்.

ரகுநாதன்,

சரத்தை மகிந்தவை திட்டுறீங்க நியாயம் இருக்கு,

அட நம்ம சிவாஜிலிங்கத்தையும் விட்டுவைக்கவில்லை!

தமிழ்தேசியகூட்டமைப்பையும் பின்னி எடுக்கிறீங்க!!

இதுக்கு என்னதான் முடிவு? மக்கள் யாருக்குதான் ஓட்டு போடுவது!?

எல்லோரையும் காய்ச்சி எடுக்கும் உங்களை போன்றோரிடம் சரியான பதில் இருக்கும்!! ம்ம் எங்களுக்கும் செப்புங்கோவன்?

ரகுநாதன்,

சரத்தை மகிந்தவை திட்டுறீங்க நியாயம் இருக்கு,

அட நம்ம சிவாஜிலிங்கத்தையும் விட்டுவைக்கவில்லை!

தமிழ்தேசியகூட்டமைப்பையும் பின்னி எடுக்கிறீங்க!!

இதுக்கு என்னதான் முடிவு? மக்கள் யாருக்குதான் ஓட்டு போடுவது!?

எல்லோரையும் காய்ச்சி எடுக்கும் உங்களை போன்றோரிடம் சரியான பதில் இருக்கும்!! ம்ம் எங்களுக்கும் செப்புங்கோவன்?

உங்களுக்கு அப்ப நம்பிக்கை இருக்கு சிங்களவன் சரத் ஆட்ச்சிக்கு வந்தால் தீர்வு கிடைக்கும் எண்டு....??? அப்படியா...??

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவைத் தோற்கடிப்பதுதான் நமது இப்போதைய தேவை, சரத்துக்கும் மகிந்தவுக்கும் இடையில் வேறு எந்த வித்தியாசமும் கிடையாது என்று உண்மையைச் சொல்லி ஆதரவளியுங்கள். உங்கள் நாற்காலிகளுக்காக தமிழரை ஏமாற்ற வேண்டாம்.

உங்கள் நாற்காலிகளுக்காக தமிழரை ஏமாற்ற வேண்டாம்.

இப்படி எழுந்தமான ரீதியில் குற்றம் சாட்டுவது சரியல்ல ரகு அண்ணா

எவ்வளவோ சிக்கல்களுக்கு மத்தியில்

மிகவும் ஆழ்ந்து சிந்தித்து

தங்களால் தற்போதைக்கு முடிந்ததைத்தான் அவர்கள் செய்கின்றனர்

அவரது பேச்சின் அர்த்தம் பத்திரிகைகாறர்களால் திரிவுபடுத்தப்பட்டிருக்கலாம்

என்னைப்பொறுத்தவரை

தமிழர்ககளால்தான் அவர் வென்றார் என்று சொல்வது

தமிழரது பேரம்பேசும் சக்தியை நிர்ணயிக்கவே....

இது தங்களுக்கு தெரியாததல்ல....

இலங்கை பெளத்த மத, ஒற்றையாட்சி அரசமுறையையும் அரசியலமைப்பையும் தமிழ் மக்கள் வெளிப்படையாக ஏற்று, தமிழர்கள் மீண்டும் தம் தலையில் தீயை மூட்டிக்கொண்டார்கள் என்றும் பேசிக்கொள்ளவர்.

அதைவிட இன்றைய நிலையில்தாயகத்திலுள்ளவர்கள் ஏதாவது பேசமுடியுமா? நிழலி....

கொழும்பிடம் கையேந்தாமல் தீர்வை நோக்கிச் செல்வதென்றால் எப்படி? தமிழர் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தமிழர்களுக்கு தீர்வினைக் கொடுப்பாரா? சுரேஷ் பிரேமச்சந்திரன் எந்த அமைச்சர் பதவியை ஏற்கப்போகிறார்?

நீங்களுமா இறைவன்..........???

உங்களுக்கு அப்ப நம்பிக்கை இருக்கு சிங்களவன் சரத் ஆட்ச்சிக்கு வந்தால் தீர்வு கிடைக்கும் எண்டு....??? அப்படியா...??

தயா,

எனது விருப்பமே சரத் வரனும் என்பதே!

காரணம் சிங்கள அரசியல்வாதிகள் எல்லோருமே ஒரே

குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

போரை முன்நின்று நடத்தியவர் என்ன செய்யபோகிறார் என்று நாங்க மட்டுமல்ல சர்வதேசமே பார்க்கனுமில்லையா? :D

தயா,

எனது விருப்பமே சரத் வரனும் என்பதே!

காரணம் சிங்கள அரசியல்வாதிகள் எல்லோருமே ஒரே

குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

போரை முன்நின்று நடத்தியவர் என்ன செய்யபோகிறார் என்று நாங்க மட்டுமல்ல சர்வதேசமே பார்க்கனுமில்லையா? :D

முன் நிண்டு நடத்தினவர் பின் நிண்டு நடந்தினவை இருவருக்கும் வித்தியாசம் ஏதும் இருக்கிறதா...?? இல்லை செயற்பாட்டிலை...??? மகிந்த வின் அழிவு படைகளை வளி நடத்தினவர் எண்ட வகையில் மகிந்த மாறிச்செண்றாலும் மகிந்தவின் கையாட்கள் சரத்துக்கு பரீட்ச்சயமான கூட்டம் தான்... எப்போதும் ஆட்ச்சியாளர்களுடனே இருந்து சலுகைகளை அனுபவித்த கூட்டம் மீண்டும் சரத்துடன் ஒட்டி கொள்வதில் பிரச்சினை ஏதும் கிடையாது...

இங்கை உங்களுக்கு மாற்றம் எண்டு ஒண்டு வர வேணும் எண்டால் குறைந்தது சர்வதேசத்தால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையாவது அங்கீகரிக்கப்படவேண்டும்... சரத் ஆட்ச்சிக்கு வந்தால் அப்படி ஒரு தேவை ஒரு நாட்டுக்கும் கிடையாது...

  • தொடங்கியவர்

போரின் ஒரு கட்டத்தில் அகாசி சிறீ லங்காவந்திருந்தபோது (எல்லோருமெதிர்பார்த்தது போரை நிறுத்துவதற்கு வந்தார் எண்டு)பத்திரிகையாளர் மாநாட்டில் மனுசன் சொன்னது,"புலிகளுடன் இணக்கதிற்கு வருவற்கு தான் எவ்வளவோ முயன்றார் எண்டு".

மகிந்தவிற்கு நோகாமலும், தமிழரை புலிகளிடமிருந்து அன்னியப்ப்டுதுவது போலுமிருந்தது கருத்து.இன்று பார்வைக்கு புலிகள் இல்லை.அதனால்,சரத் வந்ததும் த.தே.கூ வின் வாயை சுலபமாக அடக்கி(தமிழர் தேசியம்,பாரம்பரியபூமி,சுயநிர்ணயம் போன்ற வார்த்தைகளை தங்களிடம் தவிர்க்குமாறு வேண்டி),ஏதேதோ சிங்கள-தமிழ் மக்கள் உடன்பாடு அவசியமென்ற தோரணையில்காலத்தை ஓட்டி,தேவையானவற்றை சரத் மூலமாக அமெரிக்க அந்நிய சக்திகள் அடைய முயலும் என்பது மட்டும் இப்போதைக்கு வெள்ளிடை மலையாக புரிகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.