Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கொழும்பு பங்குச் சந்தை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில் கொழும்பு பங்குச் சந்தை

[ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2010, 05:04 GMT ]

கொழும்பு பங்குச் சந்தையின் கிளை ஒன்று அடுத்த மாதம் யாழப்பாணத்தில் திறக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மக்களின் வருமானம் அதிகமானதாக இருப்பதாகவும், அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பெருந்தொகைப் பணம் கிடைப்பதாகவும் கொழும்பு பங்குச்சந்தை மேலாளர்கள் கூறியுள்ளனர்.

அதனால், அந்த வருமானங்களை முதலீடு செய்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத் தமது கிளையொன்றை அங்கு அமைக்கத் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது மாத்தறை, கண்டி, குருணாகல, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் பங்குச் சந்தையின் கிளைகள் இயங்கி வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் புதிய கிளையை அமைப்பதற்கான கட்டடத்தைத் தாம் தெரிவு செய்திருப்பதாகவும், அடுத்த மாதம் பங்குப் பரிமாற்ற செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என்றும் கொழும்பு பங்குச் சந்தை மேலாளர்கள் மேலும் கூறியுள்ளனர்.

http://www.puthinappalakai.com/view.php?20100124100367

கடந்த/ நிகழ் கால சுரண்டல்கள்

1. போரால் எமது பொருளாட்தார வளத்தை அழித்தனர்.

2. தொழிற்சாலைகள் பலவற்றை நீர் மின்சாரம் வினியோகத்தை நிறுத்தி செயலிழக்க செய்தனர்.

3. தமிழர்களின் கல்வி வளத்தை சூறையாடினர். 1971 இன் சட்டத்தின் மூலம்

4. தமிழர் பகுதிகளில் தொழில் புரியும் அரச அதிகாரிகள் பலர் வருட இறுதியில் ஒதுக்கப்பட்ட தொகைகளை மீள் திறைசேரிக்கு அனுப்புவதை தொழிலாக கொண்டுள்ளனர்.

5. வங்கிகள் உருவாக்கம்.

6. இந்த பங்கு சந்தை விவகாரம்.

ஆனால் நாம் புலம் பெயர் தமிழர்கள் எமது சகோதரங்களுக்கு அனுப்பும் பணம் இப்படி வீணாய் போகப்பொகிறதே

நெல்லுக்கு இறைத்த நீர் ............. என்ற பழமொழி போல

இப்படியே இன்னும் வரும் பார்த்து கொண்டிருங்கள்

முக்கியம் எமது தமிழர்கள் பலர் இதில் ஊக்கமாக உள்ளனர்

யாழ்ப்பாணம் இலங்கயில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று எடுத்துக்கொள்வோம்.

யாழ்ப்பாணம் இலங்கயில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று எடுத்துக்கொள்வோம்.

இல்லை இல்லை தமிழர்கள் இலங்கையின் வரலாற்றில் முக்கியமானவர்கள்

கட்டிகொடுத்தாலும் களவெடுத்துக்கொடுத்தாலும் ட்யமிழனால் முடியாதது ஒன்றும் இல்லை

இப்பொ நீங்கள் குலிரில் இருந்து உழைத்து அனுப்ப சிங்களவ அங்கே சும்ம கம்பியூட்டருக்கு முன்னால் இருந்து உழைப்பான்

குடுங்கோ குடுங்கோ

இல்லை இல்லை தமிழர்கள் இலங்கையின் வரலாற்றில் முக்கியமானவர்கள்

கட்டிகொடுத்தாலும் களவெடுத்துக்கொடுத்தாலும் ட்யமிழனால் முடியாதது ஒன்றும் இல்லை

இப்பொ நீங்கள் குலிரில் இருந்து உழைத்து அனுப்ப சிங்களவ அங்கே சும்ம கம்பியூட்டருக்கு முன்னால் இருந்து உழைப்பான்

குடுங்கோ குடுங்கோ

அப்ப, பங்குச் சந்தையில் முதலீடு செய்த தமிழருக்கு இலாபம் வராதோ? இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டு இருந்தால் எந்த விதத்திலும் முன்னேற்றம் காணமுடியாது.

அப்ப, பங்குச் சந்தையில் முதலீடு செய்த தமிழருக்கு இலாபம் வராதோ? இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டு இருந்தால் எந்த விதத்திலும் முன்னேற்றம் காணமுடியாது.

ஒம் ஓம் அப்ப இலாபம் வருவதென்றால் எதுவும் செய்யலாம் இல்லையா ? அப்படித்தானே

ஆகையால் நான் எனது கருத்துக்களை வாபஸ் வாங்குகிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லாபம் வருவதால்தான் எல்லோரும் இப்போது மாற்று கருத்து எழுதுகிறார்கள் :lol: லாபம் வருவதால் தான் எல்லோரும் காட்டி கொடுத்தார்கள் :):lol: லாபம் வருவதால்தான் தன் இனமே அழிந்தாலும் எல்லோரும் சிங்களவனுக்கு வக்காளத்து வாங்குகிறார்கள். :lol::lol::lol: எமது தமிழர்களது வாழ்வாதாரம் அனைத்தையும் சிங்களம் அழித்தாலும் எமக்கு லாபம் வாந்தால் போதும் அதையும் நாம் அனுமதிப்போம். :(:(:(

லாபம் வருவதால்தான் எல்லோரும் இப்போது மாற்று கருத்து எழுதுகிறார்கள் :lol: லாபம் வருவதால் தான் எல்லோரும் காட்டி கொடுத்தார்கள் :):lol: லாபம் வருவதால்தான் தன் இனமே அழிந்தாலும் எல்லோரும் சிங்களவனுக்கு வக்காளத்து வாங்குகிறார்கள். :lol::lol::lol: எமது தமிழர்களது வாழ்வாதாரம் அனைத்தையும் சிங்களம் அழித்தாலும் எமக்கு லாபம் வாந்தால் போதும் அதையும் நாம் அனுமதிப்போம். :(:(:(

லாபம் வரும் எண்டதாலைதான் ஊரை விட்டு வெளிநாட்டுக்கு ஓடிவந்தனீங்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

தயா,

நீங்கள் இப்படிக் கேட்டது சரியா?? எம்மில் எத்தனை பேர் லாபம் கருதி புலம்பெயர்ந்திருக்கிறோம்?? அப்படியானால் லாபம் கிடைத்தவுடன் மீண்டும் எமது தாய்நாட்டிற்குச் செல்லக்கூடிய சூழ்நிலையா அங்கிருக்கிறது??

உயிருக்கு அஞ்சியல்லவா நாம் இங்கு வந்து ஒளிந்திருக்கிறோம்? இதில் லாப நோக்கம் எங்கிருக்கிறது ??

சிங்களம் யாழ்ப்பாணத்தில் கட்டுமாணங்களை நிறுவுவதன் மூலம் ஒரு மாயையான சுமூக நிலை அங்கு உருவாகி விட்டதாகக் காட்டுவது மட்டுமல்லாமல் பெருமளவில் சிங்கள ஆதிக்கத்தையும் சுரண்டலையும் அங்கே கொண்டுவருவதுதான் இதன் உள்நோக்கம் என்று நான் நினைக்கிறேன்.

லாபம் வேண்டுமென்று பார்த்தால் என்னவும் செய்யலாம், புறக்கணி சிறிலங்கா செய்த நண்பர்களே லாபம் வந்தால் எதுவும் செய்யலாம் என்று இப்போது கூறத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது.

தயா,

நீங்கள் இப்படிக் கேட்டது சரியா?? எம்மில் எத்தனை பேர் லாபம் கருதி புலம்பெயர்ந்திருக்கிறோம்?? அப்படியானால் லாபம் கிடைத்தவுடன் மீண்டும் எமது தாய்நாட்டிற்குச் செல்லக்கூடிய சூழ்நிலையா அங்கிருக்கிறது??

உயிருக்கு அஞ்சியல்லவா நாம் இங்கு வந்து ஒளிந்திருக்கிறோம்? இதில் லாப நோக்கம் எங்கிருக்கிறது ??

சிங்களம் யாழ்ப்பாணத்தில் கட்டுமாணங்களை நிறுவுவதன் மூலம் ஒரு மாயையான சுமூக நிலை அங்கு உருவாகி விட்டதாகக் காட்டுவது மட்டுமல்லாமல் பெருமளவில் சிங்கள ஆதிக்கத்தையும் சுரண்டலையும் அங்கே கொண்டுவருவதுதான் இதன் உள்நோக்கம் என்று நான் நினைக்கிறேன்.

லாபம் வேண்டுமென்று பார்த்தால் என்னவும் செய்யலாம், புறக்கணி சிறிலங்கா செய்த நண்பர்களே லாபம் வந்தால் எதுவும் செய்யலாம் என்று இப்போது கூறத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது.

நான் வேறு யாரையும் பற்றி சிந்திக்க வில்லை... ஆனால் என்னை பற்றி சொல்ல தகுதி இருக்கும் தானே...??

நான் ஏதோ கெட்டிக்காறத்தனம், செய்து போட்டு வந்ததாக தான் வரும் போது தோண்றியது... ஆனால் இண்று அதை நினைக்கும் போது உள்ளுக்கை வலிக்கும்... என்னை மாதிரி எத்தினை பேருக்கு சொல்லமுடியாமல் வலி இருக்கும் எண்டதையும் எனக்கு புரியும்...

நான் இங்கை இருந்து செய்வதை விட அங்கை இருந்து இருந்தால்... ?? அப்படியே விலகாமல் எல்லாரும் நிண்டு இருந்தால்....?? எல்லாருமாய் சேர்ந்து ஒரு இரண்டு வருசம் கஸ்ரப்பட்டு தூக்கி முன்னாலை தள்ளி இருந்தால்....??? இந்த நிலையும் கவலையும் தேவை இல்லாதது...

தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை... கண்ணீர் கொண்டல்லவா காத்தோம்... இப்படித்தான் பாரதி பாடினான்.... நாங்கள் (தமிழர்கள்) கண்ணீர் கொண்டும் அல்ல சென்னீர் கொண்டு காத்தோம்...

இண்டைக்கு ஐஞ்சுக்கும் பத்துக்குமாக சரத் பொன்சேகாவுக்கு வித்து கொண்டு இருக்கிதுகள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நாம்தான்

புலத்து தமிழன்

தாயகத்தமிழன் என்று பட்டிமன்றம் வைத்து எறிபடுகின்றோம்

சிங்களவனுக்கு தெரியும்

எமது இரக்ககுணம்

அவன் அதைவைத்தே தொழிலை பெருக்குகின்றான்

இதெல்லாம் வியாபாரத்தில் சகசமப்பா...?

லாபம் வேண்டுமென்று பார்த்தால் என்னவும் செய்யலாம், புறக்கணி சிறிலங்கா செய்த நண்பர்களே லாபம் வந்தால் எதுவும் செய்யலாம் என்று இப்போது கூறத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது.

தமிழர்கள் இன்றிருக்கும் சூழலில் கண்டிப்பாக பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும். பொருளாதார பலம் அற்ற எவரையும் எவரும் திரும்பிப் பார்க்கப் போறதில்லை. இன்றிருக்கும் நிலையில் பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஒன்றுதான் மீண்டும் எங்களை மீண்டும் வலுவுள்ளவர்களாக மாற்றும். யாழில் இன்று கடைகளும் வர்த்தக நிலையங்களும் திறந்து தான் இருக்கின்றன, வர்த்தகம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் பங்குச் சந்தையில் மட்டும் ஏன் தமிழர்கள் பங்கு கொள்ள கூடாது என்கின்றீர்கள்? கொழும்பில் இருக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த / சேராத தமிழர்களின் பலர் பங்குச் சந்தை வர்த்தகத்தை மேற்கொண்டு வருகையில் அந்த வாய்ப்பு நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கும் போது ஏன் அது மட்டும் தவறாக போகின்றது?

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இறால் போடுகிறான் சிங்களவன் என்றும் சொல்லமுடியவில்லை

முத்து கிடக்கிறது எடு என்றும் சொல்லமுடியவில்லை

முட்டாள் சிங்களவனா இவன்......?

மூன்றுவகை எதிரி நாடுகளை ஒன்றாக்கி வென்றவனவல்லவா???

இங்கு பலர் இலங்கையில் இருக்கும், தமிழர் குறிப்பாக வட,கிழக்கு தமிழர்- அடுத்தகட்டப் போராட்டம் தொடங்கும் வரையிலோ அல்லது புலம் பெயர்ந்த தமிழர் ஏதோ ஒரு தீர்வு கொண்டுவரும் வரையிலோ ஒன்றும் செய்யாமல் இருக்கவேண்டும் என்றவிதத்தில் கருத்துகள் அமைவது நகைப்புக்கிடமானது.

அரசியல் தீர்வு ஒன்றை அவர்கள் வேண்டி நின்றாலும் அதுவரை அவர்கள் தமது இயல்பு வாழ்க்கை எதுவிட தடங்கலும் இல்லாமல் சிங்கள அரசுடன் சேர்ந்திருப்பதையே விரும்புவார்கள்.

வேறு ஒரு இணைப்பில் தயா எழுதியிருந்தார் "தமிழீழம் சில வருடங்கள் நடைமுறையில் இருந்ததென்று".அப்போதும் சிங்கள அரசில் முற்று முழுதாக தங்கித்தான் தமிழீழம் இருந்தது.வேலை,சம்பளம்,பென்சன்,உணவு,உடை அத்தனையும்.

சிறி-லங்கா பொருட்கள் புறக்கணிப்பு பற்றி ஒரு முறை புதுவை இரத்தினதுரையிடம் கேள்வி கேட்டதற்கு அவர் சொன்னார் இன்றுவரை தலைவர் கூட இலங்கை அரசாங்கதில்தான் தங்கி இருக்கின்றார் என்று.

புலம்பெயர்ந்தவர் ஆர்.ஆர்.எஸ்.பீ,ஸ்டொக்,பொண்ட்,என்று தமது தூரநோக்கு சேமிப்பில் வெகு கவனமாக இருக்கினார்கள்.பலர் கொலிடே வருசம் வருசம் போவதற்கு கிளப்புகளில் மெம்பர்களாக இருக்கின்றார்கள்.நாங்கள் இங்கிருந்துகொண்டு சீனன் றோட்டு போடுகின்றான்,பங்கு சந்தைவருது,இந்தியா பெற்றோல் ஸ்ரேசன் கட்டுகின்றான் என அலுத்துக்கொள்கின்றோம்.

உண்மைதான் அவர்கள் சந்தோசமாக இருந்தால் எப்படி போராடும் எண்ணம் வரும்.முடிந்தவரை முதலீடுகளை தடுத்து அவர்களை பஞ்சத்திலும்,பட்டினியிலும் எதுவித வசதியுமில்லாமலும் வாட விடவேண்டும்

வாழ்க புலம் பெயர் போராட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இன்றிருக்கும் சூழலில் கண்டிப்பாக பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும். பொருளாதார பலம் அற்ற எவரையும் எவரும் திரும்பிப் பார்க்கப் போறதில்லை. இன்றிருக்கும் நிலையில் பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஒன்றுதான் மீண்டும் எங்களை மீண்டும் வலுவுள்ளவர்களாக மாற்றும். யாழில் இன்று கடைகளும் வர்த்தக நிலையங்களும் திறந்து தான் இருக்கின்றன, வர்த்தகம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் பங்குச் சந்தையில் மட்டும் ஏன் தமிழர்கள் பங்கு கொள்ள கூடாது என்கின்றீர்கள்? கொழும்பில் இருக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த / சேராத தமிழர்களின் பலர் பங்குச் சந்தை வர்த்தகத்தை மேற்கொண்டு வருகையில் அந்த வாய்ப்பு நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கும் போது ஏன் அது மட்டும் தவறாக போகின்றது?

நாங்கள் பொருளாதார ரீதியாக பலமில்லாததால் தான் உலக நாடுகள் எங்களுக்கு உதவ முன் வரவில்லை... ஆனால் தற்போதைய சூழ்நிலையில் புலம் பெயர் நாடுகளில் இருந்து கொண்டு நாங்கள் சிங்கள தேச பொருட்களை புறக்கணித்து கொண்டு வட கிழக்கை அபிவிருத்தி செய்ய முடியுமா...நாங்கள் வட கிழக்கில் மூலதனம் இடும் போது அரசுக்கும் இதனால் லாபம் ஏற்படுகிறது....எனவே புறக்கணிப்பு மூலம் ஏற்படும் நட்டத்தை அரசு நாங்கள் அங்கு போடும் பணத்தை வைத்து ஈடு செய்யப் போகிறது...பிறகு நாங்கள் ஏன் இங்கு மினக் கெட்டு புறக்கணிப்பு செய்ய வேண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.