Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தைப் பெற முடியுமா?

Featured Replies

திகதி: 20.02.2010 // தமிழீழம்

அன்புடையீர்,

நாம் தெளிவாகச் சிந்தித்து அதன் அடிப்படையில் செயலாற்றும் காலம் வந்துள்ளது. நமக்கு என்ன வேண்டும்?

தமிழீழம். அதைவிடக் குறைவான எதுவும் வேண்டாம்.

தமிழீழத்தைப் பெற முடியுமா?

நிச்சயமாக நம்மால் முடியும். நிச்சயமாக நம்மால் முடியும்.

எந்த நம்பிக்கையில் அப்படிச் சொல்கிறீர்கள்?

யூதர்களிடம் இருந்துபடிப்பினை தான் ! முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர், அவர்களது மொழி கிட்டத்தட்ட வழக்கற்றுப் போகும் தருவாயில் இருந்த போதும் அவர்கள் சாம்பல் மேட்டில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்தார்கள்!

நாம் என்ன செய்ய வேண்டும்?

யூதர்களின் வரலாற்றைப் படிப்போம் ! அது எந்தப் பதிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அவை ஒரேமாதரியான வரலாற்றைத்தான் சொல்கின்றன. ஒருமுறை படித்து முடித்த பின்னர் செயலில் இறங்குங்கள்!

நாம் யூதர்களாக முடியுமா?

நம்மிடம் ஒற்றுமையில்லையே !

நாம் யூதர்களைப் போல் வரவேண்டும். அவர்கள் அய்க்கியமாக இருந்தார்கள் என்று யார் சொன்னது?

நாம் வேறு வேறு நாடுகளில் வாழும் 7 கோடி மக்கள். நம்மிடம் எல்லா வளமும் இருக்கின்றன. நான் என்ன செய்ய வேண்டும்?

வீண் பேச்சுப் பேசுவதையும் எதிர்மறையாகப் பேசுவதையும் சிந்திப்பதையும் நிறுத்த வேண்டும். உங்களிடமும் மற்றவர்களிடமும் நம்பிக்கையை ஊட்டுங்கள்! இலக்கில் கண் வையுங்கள். ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிகளை உருவாக்குங்கள்! பாதைகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் நமது இலக்குத் தவறக்கூடாது.

பிரான்சுதமிழீழமக்கள்பேரவை , ஐரோப்பியதமிழ்மக்கள்அவை , அமெரிக்க தமிழர்களின் அரசியல் செயல் அவை, உலகளாவியதமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் அவை, கனடிய தமிழர் பேரவை, பேர்ல் உள்ள அமைப்புக்கள் மற்றும் உள்ளுர் அமைப்புக்களை ஆதரியுங்கள். செயல் செய்யுங்கள், எண்ணங்களை, நேரம் மற்றும் வளங்களைவழங்குங்கள்.

புறக்கணிப்பு, ஆதரவுதேடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

எல்லோரும் அழைத்து நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கத் தொடங்கினால் நாம் வெற்றி பெறுவோம்! அழைப்புக்கு நீங்கள் காத்திருந்தால் நாம் வெற்றியடைய மாட்டோம்! ஓரு நாளில்ஒரு மணி நேரத்தையாவது செலவிடுங்கள்! எதைக் கொடுப்பது என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.

மழையாகட்டும் வெய்யிலாகட்டும் தொடர்ந்து பங்களிப்புச் செய்யுங்கள்.

இதைச் சொல்வதற்கு நான் யார்?

நான் உங்களுக்குச் சொல்ல வில்லை !

நான் எனக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளும் அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்!

அவ்வளவுதான்!

அடுத்த ஆண்டு நிச்சயம் சுதந்திர தமிழீழத்தில்!

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3669

Edited by Aasaan

ஆசான் நாம் யூதரை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, அந்த காலகட்டத்தில் அவர்கள் என்னென்ன பதவிகளில் எங்கெங்கு இருந்தார்கள் அவர்களின் பலம் எப்படியிருந்ததென்பதை தெரிந்து கொள்ளவேண்டும், அமெரிக்க செனற்றில் யூதர்கள் இருந்தார்கள் ,பணம் படைத்தவர்களாகவிருந்தார்கள், அதனால்தான் அவர்களால் அதை சாதிக்க முடிந்தது. நாம் இப்போ எங்கு இருக்கின்றோம்?

நாம் இப்போ எங்கு இருக்கின்றோம்?

நாம் இப்பதான் கவுன்சிலராகவும்,ஊருக்கு நாலு ஸ்பைஸ்கடையும் இடியப்ப கடையும் வைத்திருக்கிறோம்

நாம் இப்பதான் கவுன்சிலராகவும்,ஊருக்கு நாலு ஸ்பைஸ்கடையும் இடியப்ப கடையும் வைத்திருக்கிறோம்

அதுவே உண்மை,அந்த நிலையில்தான் நாமிருக்கின்றோம். நமது அடுத்த அல்லது இன்றைய இளம் சமூதாயத்தினால் சாத்தியமாகலாம்.

  • 4 months later...

யூதர்களின் ஒற்றுமை, சிறந்த திட்டமிடல், ஆளுமை, மன வலிமை,விடாமுயற்சி போன்றவற்றினை கைகொள்ளும் போது தமிழர்களுக்கும் இது சாத்தியமாகும்!

சரி! தமிழர்களுக்கு ஒற்றுமை எப்போது வரும்?. இந்த கேள்விக்கு என்னிடம் விடை இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தைப் பெற முடியுமா?

முன்னர் நம்பிக்கை இருந்தது. தற்போது இல்லை. சிலவேளை மூன்றாம் உலகயுத்தத்திற்குப் பின்னர் கிடைக்கும்.

தமிழர்களுக்கு ஒற்றுமை எப்போது வரும்?

ஒற்றுமை ஒருபோதும் இருந்ததில்லை. இனியும் வராது.

நாட்டில் இருப்பவர்கள் அது என்ன சாமான் எனக் கேட்கின்றார்களாம்.கொக்குவில் இந்து நூற்றாண்டு விழாவிற்கு சென்ற எனது நண்பன் சொன்னான்.

நாட்டில் இருப்பவர்கள் அது என்ன சாமான் எனக் கேட்கின்றார்களாம்.கொக்குவில் இந்து நூற்றாண்டு விழாவிற்கு சென்ற எனது நண்பன் சொன்னான்.

அது ஏன் தெரியுமோ, தமிழ் ஈழம் பற்றி கதைத்தால் வெள்ளை வான் வரும், ஒட்டுக் குழு வரும்,ஆம்மிக்காரன் வருவான்,போலீஸ்காரன் வருவான் அது தான் பிரச்சனை, அதைவிட தமிழ் ஈழம் பற்றி ஆவலாய் இருப்பவரை காட்டிக் கொடுக்கவெண்றே ஒரு கூட்டம் அலையுதே, 2006 - 2007 வரை புலி ஆத்ரவாளர் எல்லாம் எப்படி வேட்டை ஆடப்பட்டார்கள், அப்ப்டியான சூழ் நிலையில் எவரும் ஈழம் பற்றி கதைக்க மாட்டர்கள், எல்லோருடைய உயிருக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு ஈழம் பற்றி கேட்டுப் பாரூங்கோ அதுக்கு பிறகு தெரியும் ஈழம் வேண்டுமா இல்லையா என்று

அண்ணை நான் கதைப்பது 2010.உலகம் முழுக்க இருந்து கொக்குவில் இந்து கல்லூரி நூற்றாண்டுவிழாவிற்கு பழைய மாணவர்கள் சென்றிருக்கின்றார்கள்.கிறிக்கெட் மட்ச் வேறு நடக்கப் போகுதாம்.தேர் முட்டிக்கு கீழே இருந்து தண்ணியடிப்பதாக சொன்னார்கள்.பழைய ஞாபங்களை மீட்டுகின்றார்களாம்.நீங்களும் உங்கள் தமிழீழமும்.

ஆமிக்காரன் பிரச்சனையோ என்று கேட்டேன் புலியைவிட திறம் என்கின்றார்கள்..புலி தனக்கு பிடிக்காட்டி விடாது என்றார்கள்.

அண்ணை நான் கதைப்பது 2010.உலகம் முழுக்க இருந்து கொக்குவில் இந்து கல்லூரி நூற்றாண்டுவிழாவிற்கு பழைய மாணவர்கள் சென்றிருக்கின்றார்கள்.கிறிக்கெட் மட்ச் வேறு நடக்கப் போகுதாம்.தேர் முட்டிக்கு கீழே இருந்து தண்ணியடிப்பதாக சொன்னார்கள்.பழைய ஞாபங்களை மீட்டுகின்றார்களாம்.நீங்களும் உங்கள் தமிழீழமும்.

ஆமிக்காரன் பிரச்சனையோ என்று கேட்டேன் புலியைவிட திறம் என்கின்றார்கள்..புலி தனக்கு பிடிக்காட்டி விடாது என்றார்கள்.

தமிழ் ஈழ விடுதலையை எதிர்த்தே பிழைப்பு நடதியவையள் அப்படித்தான் சொல்லுவீனம், அது சரி நீங்கள் கூறுவது உண்மையாய் இருந்தால் உலகதிலேயே அடிமையாய் இருப்பது தான் சிறப்பு என் நினைக்கும் ஒரே இனம் தமிழ் இனமாய் தான் இருக்கும். நல்லா தண்ணி அடிக்கட்டும் ஏன் என்றால் இன்னும் சில வருடத்தில யாழ்பாணம் சென்றால் சிங்களதில் பேசுபவர்களைத் தான் பார்ப்பினம், அப்போது தெரியும் புலி நல்லதா கெட்டதா என்று. அத்தோடு நான் உங்க்களுடைய கருத்தான புலிகள் அரசியல் தெளிவற்ற அமைப்பு என்ற கருத்துடன் உடன்படுகிரேன், ஏனென்றால் எனக்கு என் தனி நாடு வேண்டாம் நாம் ஜாலியக தண்ணி அடித்து வாழ்கையை அனுபவித்தால் போதும் ,என்னுடைய இனம் எனது மண்ணில் இருந்து அழிக்கப்பட்டாலும் பரவாயிலலை என திரியும் ஒரு கூட்டதிற்காக போராட வெளிகிட்வன் ஒரு சுத்தமான மடையன் தான்.பேசாமல் ரோகாரன் கொடுத்த பணத்தை வேண்டிக்கொண்டு நான் தான் வட கிழக்கு மாகாண முதல்வன் என ஊருக்கு 2 ,3 பெண்ஜாதி மாருடன் வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவன் அரசியல் தெளிவற்றவன் தான். அது சரி ஆமி திறமோ வெளினாட்டில இருத்தவைக்கு அப்படித் தான் தெரியும், அப்படி என்றால் 61 வருடமான கொல்லப்பட்ட்தமிழர் என்ன தண்டவாளத்திற்கு முன்னால் விழுந்து செத்த்வை என்று சொன்னாலும் செத்தவை என்று சொன்னலும் சொல்லுவீனம், உதைச் சொல்ல முதல் எத்தனை போத்தல் அடிச்சவை

தமிழீழத்தைப் பெற முடியுமா?

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3669

எங்களுக்குள் ஒற்றுமையின்மை, இராசதந்திரமின்மை, மொள்ளமாரித்தனம், முட்டிச்சவிக்கித்தனம், இவையெல்லாம் நீங்கும்வரை 'கிடைக்கும் ஆனா கிடைக்காது'.

அண்ணை நான் கதைப்பது 2010.உலகம் முழுக்க இருந்து கொக்குவில் இந்து கல்லூரி நூற்றாண்டுவிழாவிற்கு பழைய மாணவர்கள் சென்றிருக்கின்றார்கள்.

250 பேர்வரை சென்றதாக தகவல் அவர்கள் ஏன்சென்றார்கள்? தண்ணிஅடிக்கவும் பவர் காட்டவும்

250x 2000= 500000 டாலர்கள் இந்த ரிக்கட் பணத்தை அந்தக் கல்லூரிக்கு அன்பளிப்பாக கொடுத்திருந்தாலாவது

அங்கு பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருந்திருக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.