Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு றோலர் படகுகள் வடபகுதி கடலில் மீன்பிடி 2 நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபடக் கூடும் GTNற்கு தவரத்னம் தெரிவிப்பு‐

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு றோலர் படகுகள் வடபகுதி கடலில் மீன்பிடி 2 நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபடக் கூடும் GTNற்கு தவரத்னம் தெரிவிப்பு‐

05 March 10 01:32 am (BST)

வெளிநாட்டு றோலர் படகுகள் வடபகுதி கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வடபகுதி மீனவர்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக யாழ்ப்பாண மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்தியாவிலிருந்து தினமும் றோலர் படகுகள் பெருமளவில் இலங்கையின் வடபகுதிக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதனால் தமது மீனவர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்திருப்பதாக சங்கத்தின் தலைவர் ரி.தவரத்னம் குளோபல் தமிழ் நியூஸிற்குத் தெரிவித்தார்.

நீண்டகாலம் நடைபெற்ற யுத்தம், அரசாங்கம் விதித்திருந்த தடை என்பன காரணமாக வடபகுதி மீனவர்கள் நீண்டகாலமாக தமது தொழில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டது.

நேற்றைய தினம் இந்திய றோலர் படகுகள் மண்டதீவு வரை வந்து மீன்பிடியில் ஈடுபட்டது. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுபெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் இரண்டு நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபடக் கூடும்.

யுத்த காலத்திலும்கூட இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்கு வந்து மீன்வளங்களை அள்ளிச் சென்றனர்.

வடபகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாததால் அமைதியாக இருந்தனர். எனினும், தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. தடைகளும் நீக்கப்பட்டுளள்ன. தற்போதுகூட வெளிநாட்டுப் படகுகளுக்கு இடமளித்துவிட்டு வெறுமையாக இருக்க வேண்டுமா? இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண்பது அவசியம் எனவும் தவரத்னம் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=21612&cat=1

ஒரே வழி---- சுட்டுத்தள்ள வேண்டும்,பயத்திலாவது வரமாட்டான் இந்தியன். இந்திய ரோலர்கள் பயன்படுத்தும் இழுவை வலைகள் சிறிய துவாரங்களுள்ளவை மேற்கு மற்றும் பல நாடுகளில் இவற்றிற்கு தடை விதித்துள்ளார்கள்.ஆனால் இந்தியனோ எந்தக் கவலையுமின்றி எமது கடலில் போட்டு இழுக்கின்றான் . இதனால் எமது கடல் வளம் அழிந்துபோகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நாய்களைச் சுட்டுத்தள்ளங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாய்களைச் சுட்டுத்தள்ளங்கள்.

சுடுபடப்போவதும் தமிழன்தான்

வார்த்தைகளில் நாகரீகம் வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவரத்தினம் கொக்கி போடாம தானே போய் சுட்டுப்போட்டு வந்தா எழுத்துக்காவது நல்லதாயிருக்கும். :D

தவரத்தினம் கொக்கி போடாம தானே போய் சுட்டுப்போட்டு வந்தா எழுத்துக்காவது நல்லதாயிருக்கும். :D

அப்ப இனிமேல் தமிழக மீனவர்களை சுடப்போவது இலங்கை கடற்படை இல்லை யாழ்ப்பாண மன்னார் மீனவர்களோ...??? இவ்வளவுகாலமும் புலி இப்ப மீனவர்கள்... இது இன்னும் நல்லா இருக்கே...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இனிமேல் தமிழக மீனவர்களை சுடப்போவது இலங்கை கடற்படை இல்லை யாழ்ப்பாண மன்னார் மீனவர்களோ...??? இவ்வளவுகாலமும் புலி இப்ப மீனவர்கள்... இது இன்னும் நல்லா இருக்கே...

அண்ணே சமாதானகாலத்தில செய்யிறது புலிகளில்ல மக்கள்படை..... உங்களுக்கு இனி ஒண்டொண்டா படிப்பிக்கவேணும். :D

அண்ணே சமாதானகாலத்தில செய்யிறது புலிகளில்ல மக்கள்படை..... உங்களுக்கு இனி ஒண்டொண்டா படிப்பிக்கவேணும். :D

என்ன இந்திய மீனவர்களை சமாதான காலத்திலை சுட்டதோ...??? அட இந்த கதை எனக்கு நீங்கள் சொல்லவே இல்லையே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே சமாதானகாலத்தில செய்யிறது புலிகளில்ல மக்கள்படை..... உங்களுக்கு இனி ஒண்டொண்டா படிப்பிக்கவேணும். ^_^

TNA என்றொறு கூலிப்படை இந்திய படைகாலத்தில் உருவாக்கப்பட்டதை எப்படி அண்ணை இலகுவாக மறந்து போனீர்கள். இப்போ வன்னியில் இராணுவமுகாமுக்கு இடையில் குட்டி முகாம் போட்டு இருக்கினமாம். கேள்விபடவில்லையோ. ??

மறக்கிற ஆட்களுக்கு பழைய வாத்தி ஒராள் நாலு சாத்து சாத்தி தான் படிப்பிக்கிறவர். அவரை தான் கொண்டு வர வேணும் போல உங்கடை மறதிக்கு. :D:D

  • கருத்துக்கள உறவுகள்

தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்பதை தமிழக மீனவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரம் ஈழத்தமிழ் மீனவர்கள் வட கிழக்கு கடலில் சிங்களவர்களும் வேறு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்கும் போது அமைதியாகத்தானே இருக்கிறார்கள்,முன்னரும் ஈழத்தமிழ் மீனவர்களுகுள்ளெயே ரோலர் மீன்பிடிப்பவர்களும் வள்ள மீன்பிடிப்பவர்களுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்ட போது விடுதலைப்புலிகளே அந்தப்பிரச்சனையை இலகுவாக தீர்த்திருந்தனர்.

தமிழர்களுக்கு பொதுவாகவே தமிழர் என்றால் இளக்காரம்தான் சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும்தான் குறிப்பிடுகிறேன்.

ஆள்கடல் மீன் பிடிக்குகந்த ரோலரை ஈழத்தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் விட்டொழித்தாலே கடல் வளம் பேணப்படும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TNA என்றொறு கூலிப்படை இந்திய படைகாலத்தில் உருவாக்கப்பட்டதை எப்படி அண்ணை இலகுவாக மறந்து போனீர்கள். இப்போ வன்னியில் இராணுவமுகாமுக்கு இடையில் குட்டி முகாம் போட்டு இருக்கினமாம். கேள்விபடவில்லையோ. ??

மறக்கிற ஆட்களுக்கு பழைய வாத்தி ஒராள் நாலு சாத்து சாத்தி தான் படிப்பிக்கிறவர். அவரை தான் கொண்டு வர வேணும் போல உங்கடை மறதிக்கு. :blink::unsure:

வன்னிக்கு போக பாஸ்போட் தேவையெண்டினம் நீங்கள் சொல்லறத பாத்தால் நிலமை மாறேல்ல...... ^_^:(

Edited by Mathivathanang

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக்கு போக பாஸ்போட் தேவையெண்டினம் நீங்கள் சொல்லறத பாத்தால் நிலமை மாறேல்ல...... :blink::unsure:

என்ன பாஸ்போட்டும் கத்தரிக்காயும் எண்டு கொண்டு.யாழுக்கு வந்து அறளை பெயர்ந்த கதைகளோடை .... ^_^:(

வன்னிக்கு போக பாஸ்போட் தேவையெண்டினம் நீங்கள் சொல்லறத பாத்தால் நிலமை மாறேல்ல...... :blink::unsure:

அப்ப புலி பாஸ்போர்ட் இப்ப சிங்க பாஸ்போர்ட்டாம் ,இப்ப எங்கன்ட ஆட்கள் சத்தம் போடாமல் சிங்க பாஸ்போர்ட் உடன் போயிட்டு வருயினம் .போயிட்டு வந்து மற்ற ஆட்களையும் போக சொல்லியனம் .ஜனநாயகம் பூத்து குலுங்குதாம் .

புலி பாஸ்போர்ட்டுடன் போகும் பொழுது காசு கேட்டவையளாம் ..சிங்கப்பாஸ்போர்டுடன் போகும் காசு கேட்கவில்லயாம் ஆனால் ஆயுதம் கனக்க வைத்திருக்கினம்மாம் .என்களிட்ட காசு கேட்காமல் ஆயுதம் வைத்திருந்தால் அதுவும் யனநாயகம் தானே என்று சந்தோசப்படியினம்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் வந்து மீன்பிடித்தால்....? பொத்திகொண்டு இருக்க முடிகின்றது

ஆனால் உறவுகாரன் என்பதால் பிரச்சனை வேறமாதிரி தெரியுது

சிங்களவன் வந்து மீன்பிடித்தால்....? பொத்திகொண்டு இருக்க முடிகின்றது

ஆனால் உறவுகாரன் என்பதால் பிரச்சனை வேறமாதிரி தெரியுது

அவனிட்ட துப்பாக்கி யிருக்கு அடக்கி வாசிக்கினம் ,உறவுக்காரனிட்ட இருப்பது காந்தியம் அகிம்சை ஆனாபடியால் தூக்கி பிடிக்கினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.