Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் இந்தியாவை நம்பியது பெரும் தவறு - பேராசிரியர் மார்க்கஸ்

Featured Replies

ஈழத்தமிழர் இந்தியாவை நம்பியது பெரும் தவறு - பேராசிரியர் மார்க்கஸ்

கொழும்பு நிருபர்

புதன்கிழமை, மார்ச் 10, 2010

இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கொழும்பு தமிழ் சங்கத்தில் பகை மறப்பு என்ற தலைப்பிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. ஒருவாரகால விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரபல நூலாசிரியரும், பகுத்தறிவுவாத இயக்க சிந்தனையாளருமான பேராசிரியர் மார்க்ஸ் சிறப்புரை நிகழ்த்தினார்.

தமிழ்தேசியம்,இந்தியாவின் பங்களிப்பு ஆகியன குறித்து இங்கு கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தியா மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.எனினும் இந்தியா துரோகம் செய்துவிட்டது என்று பார்வையாளர்களில் ஒருவர் கருத்து வெளியிட்டார்.அச்சந்தர்ப்பத்திலேயே பேராசிரியர் இந்தியாவை நம்பியது தமிழ் மக்கள் செய்த தவறு என்பதை நாம் தமிழ் நாட்டிலும் கூட சொல்லிவந்திருக்கின்றோம் என்று பதிலளித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது கூட பல்வேறு காரணங்களின் காரணமாக வெறும் வார்த்தையளவில் மாத்திரம் காணப்படுகின்றது என்றும் பேராசிரியர் மார்க்ஸ் மேலும் தெரிவித்தார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு வலுவான நாடு அல்ல. அதற்கு என்று வலுவான வெளிநாட்டுக் கொள்கையும் இல்லை. அரசியல் கொள்கையும் இல்லை. பொருளியல் கொள்கையும் இல்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அது நிறம் மாறி தன்னை தற்காத்துக் கொள்வதையே செய்து இந்த உலகில் இன்று வரை ஒரு தேசமாக இருக்கிறது. ஆனால் இது இன்னும் எவ்வளவு காலத்திற்கு தொடரும் என்பது கேள்விக்குறியே.

இந்தியாவில் சிதறுண்ட தேசங்கள் அதிகார ஒட்டவைப்பால் ஒட்டி நிற்கின்றன. அந்த அதிகாரத்தனம் வெல்லப்படும் போது இந்தியா உடையும் சிதறும். மக்கள் அதிகாரத்தின் கோரப் பிடியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அதுவரை இந்தியா உலகில் எந்த விடுதலையையும் அங்கீகரிக்காது.

இந்தியா ஈழத்தமிழருக்கு துரோகம் செய்ய முதல் பலஸ்தீனர்களுக்கு செய்த துரோகம் கொடுமை. அதை கண் முன்னால் பார்த்திருந்தும் இந்தியாவை நண்பனாக வரிந்து கொண்ட ஏமாளித் தமிழர்களை என்னென்பது..??!

இந்தியா நேரு குடும்ப.. இந்துத்துவ.. ஹிந்தித்துவ அதிகார வெறிக்குள் இருந்து என்று விடுபடுகிறதோ அன்றே.. பிற இன மக்கள் இந்தப் பிரதேசத்தில் சுதந்திரமாக சுதந்திர தேசங்களில் வாழ முடியும். காஷ்மீரியர்.. பஞ்சாபியர்கள்.. தமிழர்கள் உட்பட அனைவரும்.

Edited by nedukkalapoovan

தமிழகத்தை நம்பியதே தவறு. அங்கு ஒரு கொதி நிலையில் தமிழகத்தை மாற்ற்றி இருக்க வேண்டும்.

அமைதி பூங்காவாக இருக்க விட்டது பிழை.

பல்ஸ்தீன பிரச்சனையால் எகிப்து, லெபனான் ஜோடான் போன்ற நாடுகளில் காணப்படும் ஸ்திரமற்ற நிலை தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில் இந்தியாதான் எங்கள் விடுதலை முடிவுக்கு ஒத்துழைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தை தங்கள் போக்குக்கு அரசியல் செய்ய விட்டதன் விளைவு தான் ஈழத்தமிழனின் அரசியல் வாழ்வு இந்தியானால் அழிக்க பட்டது.

இனி ஆதல் தமிழகத்தில் புரட்சி ஏற்பட வழி செய்வோம்.

:) ஈழத்தமிழர்களின் பூர்வீக வாழ்விடம், பூகோள ஈதியில் அமிரிக்காவிற்கு பக்கத்திலைதானே இருக்குது?? .... இந்தியாவை விடுத்து .... அரசியல் செய்ய .... வாழ!!!!!!! :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) ஈழத்தமிழர்களின் பூர்வீக வாழ்விடம், பூகோள ஈதியில் அமிரிக்காவிற்கு பக்கத்திலைதானே இருக்குது?? .... இந்தியாவை விடுத்து .... அரசியல் செய்ய .... வாழ!!!!!!! :lol:

அண்ணை கண்டதுகளையும் எழுதக்கூடாது ஈழத்தமிழர்களின் பூர்வீக வாழ்விடம் லண்டன் , வெஸ்மினிஸ்ரரிலதான் முடிவுகள் எடுக்கப்படுது உங்களுக்கு தெரியாதோ?

இந்தியா ஹிந்தித்துவ..., நேரு குடும்ப.., இந்துத்துவ.. அதிகார வெறிக்குள் இருந்து என்று விடுபடுகிறதோ அன்றே.. பிற இன மக்கள் இந்தப் பிரதேசத்தில் சுதந்திரமாக சுதந்திர தேசங்களில் வாழ முடியும். காஷ்மீரியர்.. பஞ்சாபியர்கள்.. தமிழர்கள் உட்பட அனைவரும்.

உண்மை.

ஆனால் இதுமட்டும் போதாது,

தமிழ்நாட்டுத் தமிழரும் (1) போலித் திராவிட (2) சினிமா உலக (3) மேற்கத்திய ஆக்கிரமிப்பால் உருவாக்கப்பட்ட இந்திய தேசம் என்ற மாயைகளில் இருந்து முற்றாக விடுபடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: ஈழத்தமிழர்களின் பூர்வீக வாழ்விடம், பூகோள ஈதியில் அமிரிக்காவிற்கு பக்கத்திலைதானே இருக்குது?? .... இந்தியாவை விடுத்து .... அரசியல் செய்ய .... வாழ!!!!!!! :)

நெல்லை..

ஆனானப்பட்ட ரஷ்யாவுக்குப் பக்கத்தில இருந்த கொசொவோவும் ரஷ்யாவை எதிர்த்து விடுதலை கண்ட வரலாறு இருக்கு. இந்தியா எம்மாத்திரம்? :)

யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே..! :lol:

வட இந்தியன், அவன் வால்கள் = தமிழின படுகொலையாளிகள், தமிழின விரோதிகள், பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், போலி சாமியார்கள். ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டோட சேந்து வாழவும் விருப்பமில்ல இந்தியாவிட்ட கையேந்திறத விட சிங்களவனிட்ட கையேந்திறது மேலெண்டு எழுதுறினம். சம்மந்தரோ ஒற்றையாட்சிக்குள்ள இந்திய அனுசரணயோடதான் தீர்வெண்டு அடம்புடிக்கிறார். தனிநாடு புடிச்சுத்தாறதெண்டு சொன்ன தலைவர கானேல்லயெண்டு தேடுகினம் பாக்க தமிழினம் அம்மணமா நிக்கிறதுமாதிரி தெரியிது. :)

வட இந்தியன், அவன் வால்கள் = தமிழின படுகொலையாளிகள், தமிழின விரோதிகள், பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், போலி சாமியார்கள். ...

அப்ப தமிழ்நாட்டார நம்புறவ :lol:

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டோட சேந்து வாழவும் விருப்பமில்ல இந்தியாவிட்ட கையேந்திறத விட சிங்களவனிட்ட கையேந்திறது மேலெண்டு எழுதுறினம். சம்மந்தரோ ஒற்றையாட்சிக்குள்ள இந்திய அனுசரணயோடதான் தீர்வெண்டு அடம்புடிக்கிறார். தனிநாடு புடிச்சுத்தாறதெண்டு சொன்ன தலைவர கானேல்லயெண்டு தேடுகினம் பாக்க தமிழினம் அம்மணமா நிக்கிறதுமாதிரி தெரியிது. :lol:

சிங்களவனுக்கு காவடி தூக்கும் நீங்கள் என்ன உடுப்பு போட்டபடி தான் திரியுறதா எண்ணமோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கு காவடி தூக்கும் நீங்கள் என்ன உடுப்பு போட்டபடி தான் திரியுறதா எண்ணமோ...??

ம்.....முதலில இளம்பருதி போட்டிருக்கிறாரோ பாருங்கோ பிறகு நான் காச்சட்டை போட்டிருக்கிறனோவெண்டு பாக்காலாம். எழுதின கட்டுரையள பாருங்கோ துரொகி பட்டம் குடுத்த எல்லாருமே .....தாயகம் தேசியம் தன்னாட்சி எண்டு சொல்லிக்கொண்டுதான் திரியிறினம்....

ஏன் உங்களுக்கு கோபம் வருது எண்டு ...... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

tamilnadu.jpg

TAMIL_EELAM_PROVINCES.jpg

தமிழருக்கு இரண்டு நாடுகள் ஒன்று தமிழர் நாடு மற்றொன்று தமிழீழம் இதை ஏற்று கொள்ளுவதற்கு தமிழீழ தேசிய தோழர்கள் முன்வர வேண்டும்.. முள்ளிவாய்கால் சம்பவதிற்கு பிறகு தமிழக மீனவர் தொடர்ந்து தாக்க படுவதற்கு பிறகு... இங்கு அனைவரும் இந்தியத்தின் மீது படித்தவர்கள் வெறுப்புடனே காணபடுகின்றனர்.. அவர்களை ஆதரிக்க வேண்டியது ஈழத்தோழர்களின் கடமை ஆகும்.. இப்போது அல்ல... முன்பு பண்டையகாலம் தொட்டு.... ஈழதமிழருக்கு இன்னல் நேரும் போதெல்லாம் தமிழர்நாட்டில் இருந்து படை கிளம்பியதை நினைவு கூறவேண்டும் எனவே ஈழதோழர்கள்.. தமிழ்நாட்டில் தமிழர் விடுதலை இயக்கம்... தமிழ்தேசிய பொதுவுடமை இயக்கம்.. இளந்தமிழர் இயக்கம் ஆகியவற்றை ஆதரிக்க வேண்டும்..

பின்குறிப்பு: இவையாவும் இந்தியத்தின் தேர்தலில் பங்கேற்கும் கங்காணிகட்சிகள் இல்லை.. தமிழக விடுதலைக்கு போராடும் இயக்கங்கள் .. இது போக இங்கு ஈகி முத்துகுமார் பெயரிலும் பல இயக்கங்கள் தோன்றியுள்ளன

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்றோ ஒருநாள் உடையும். அப்போது தமிழருக்கு இரண்டு தனியான தேசங்கள் உலகில் இருக்கும்.

  • தொடங்கியவர்

ம்.....முதலில இளம்பருதி போட்டிருக்கிறாரோ பாருங்கோ பிறகு நான் காச்சட்டை போட்டிருக்கிறனோவெண்டு பாக்காலாம். எழுதின கட்டுரையள பாருங்கோ துரொகி பட்டம் குடுத்த எல்லாருமே .....தாயகம் தேசியம் தன்னாட்சி எண்டு சொல்லிக்கொண்டுதான் திரியிறினம்....

ஏன் உங்களுக்கு கோபம் வருது எண்டு ...... :lol:

லச்சக்கணக்கிலை எங்கட தலைவருக்கு பின்னாலை வந்தவை அதிலை நூற்று கணக்கிலை இப்ப சிங்களவனுக்கு பின்னாலை போகுது... அதுக்காக ஒட்டு மொத்த சனமும் போனது போல பில்ட் அப் குடுக்காதேங்கோ...

உதுக்கும் முன்னாலை இந்தியனுக்கு பின்னாலை போய் தமிழ் மக்களை கொலை செய்த பத்மநாபா தொடங்கி டக்கிளஸ் வரைக்கும் தமிழீழம் தனி நாடு எண்டு வெளிக்கிட்டவை தான்... இண்டைக்கு ஜனநாயக நீர் ஓட்டத்திலை கலந்திட்டம் எண்டு சனத்தை வதைச்சவைக்கு உளவு குடுத்துதானே வாழ்ந்தவை...???

இந்தியா என்றோ ஒருநாள் உடையும். அப்போது தமிழருக்கு இரண்டு தனியான தேசங்கள் உலகில் இருக்கும்.

பிறகு ரெண்டு நாடும் அடித்துகொள்ளளாம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி இந்தியா உடைஞ்சு தமிழ்நாடு புறிய தமிழர் இலங்கேல இருக்காயினம். லண்டன் கனடா அவுஸ்திரேலியா போடுவினம்......மிச்சம் சிங்களமா மாறிடும் லண்டன் கனடா அவுஸ்திரேலியாபோனாக்களும் அந்தந்த நாட்டாரா மாறிட்டா பிரச்சனை இருக்காதெல்லோ......தலைவர் தீக்கதருசி......முன்கூட்டி எல்லாம் பிளான்பண்ணி நடத்தி முடிச்சிருக்கிறாது. சில நந்திக்கலில வைக்கிறாங்களாம்....அவரது சரித்திரத்தில இருக்கும் ஒருத்தரும் கவலைப்பட தேவையில்ல. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.