Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருமித்த நாட்டுக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சியையே நாம் விரும்புகின்றோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாவது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் [படங்கள் இணைப்பு]

நாம் சரித்திரரீதியாக வாழ்ந்த பிரதேசத்தில் ஒருமித்த நாட்டுக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சியையே நாம் விரும்புகின்றோம். இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வவுனியாவில் கூறினார்.

இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பொதுத்தேர்தல் வேட்பாளர்களை வவுனியா மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் முதலாவது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திங்கள் இரவு வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் விளையாட்டு மைதானத்தில் நகர சபை உப தலைவர் எம்.எம்.ரதன் தலைமையில் நடைபெற்றது. ஒன்பது வேட்பாளர்களுடன் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா, ஈபிஆர்எல்எவ் செயலாளர் நாயகம் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

போரில் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தின் அபிவிருத்தி தேவையாகும் அது சுயநிர்ணய உரிமையுடன் கூடியதான அபிவிருத்தியாக இருக்கவேண்டும் எனவும் இந்த வைபவத்தில் உரையாற்றிய தமிழரசு கட்சியின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். இரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்த தேர்தல் பிரச்சார கூட்டம் 9:30 மணிவரை நடைபெற்றது. கூட்டம் ஆரம்பமாக முன்னர் அருகில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசையில் வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இரா சம்பந்தன் மேலும் பேசுகையில் கூறியதாவது.-

இந்த நாட்டில் நாம் ஒரு தேசிய இனம். இதனை எவரும் மறுக்கமுடியாது. சரித்திரரீதியாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ளோம். ஐக்கியநாடுகள் சாசனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கைதான் சுயநிர்ணய உரிமையாகும். தனித்துவமுள்ள மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு. அது மிகபெறுமதியான மனித உரிமையாகும். எமக்கு தேவையான சமூக பொருளாதார கலாச்சார விடயங்களை நாமே மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும். அதனைத்தான் நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.

இவ்வாறானதொரு நிலையை அடையவேண்டும் என்பதற்காக 1956ம் ஆண்டுமுதல் போராடிவருகின்றோம். ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டில் வாழுகின்ற மக்கள் மத்தியில் நல்லிணக்கம் புரிந்துணர்வு ஏற்படவேண்டும் என எமக்காக குரல்கொடுக்கும் நாடுகள் ஆட்சியாளர்களிடம் தெரிவித்துவருகின்ற அதே நேரத்தில் தமிழ்பேசுகின்ற மக்களிடம் அவர்கள் திருப்தி அளிக்க கூடிய விதத்தில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் கருத்தாகவும் உள்ளது.

தேர்தலின் பின்னர் தமிழ் பிரதிநிதிகளுடன் பேசப்போவதாக ஜனாதிபதி கூறிவருகின்றார். பிரதிநிதிகள் யார் என்பதினை நீங்கள் தீர்மாணிக்கவேண்டும் என்றார் வேட்பாளர்கள் அனைவரும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்கள்.

[படங்கள் இணைப்பு]

ஒருமித்த நாட்டுக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சியையே நாம் விரும்புகின்றோம்

நன்று...

  • கருத்துக்கள உறவுகள்

கலந்து கொண்ட மக்கள் கூட்டததையும் படத்தில் காட்டியிருக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

பல வேட்பாளர்கள் நாடியிலை கை வைச்சுக் கொண்டிரிக்கினம்,

நாடியிலை கை வைச்சால், இழவு விழப் போகுது எண்டு எங்கடை ஊரிலை சொல்லுறவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் அழிதொழிக்கபட்ட நாட்டில், இனி கப்பம், கொலை, ஊழல், அரசபயங்கரவாதம், களவு எல்லாம் கட்டுக்கு அடங்காமல் மலியும். ஒருமித்த இலங்கையில் சமஷ்டி அரசியல் பேசுகிறார் சம்பந்தர். விடுதலைபுலிகளின் போராட்டத்தை, வெளி நாடுகளுக்கு சென்று நியாயபடுத்தி பரப்புரை செய்யவுமில்லை, பதிலாக கொச்சை படுத்தி அவர்களை அழிக்க சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் துணை போனவர்கள் தான் இந்த சம்பந்தர் குழு.

ஒருமித்த நாட்டுக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சியையே நாம் விரும்புகின்றோம்

நன்று...

சிங்களவனோடை செய்ய பட்ட பல ஒப்பந்தங்கள் கிளிபடுவதை பார்த்த பின்னும் அறிவு வர இல்லை எண்டால் என்ன செய்யுறது....??

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் அழிதொழிக்கபட்ட நாட்டில், இனி கப்பம், கொலை, ஊழல், அரசபயங்கரவாதம், களவு எல்லாம் கட்டுக்கு அடங்காமல் மலியும். ஒருமித்த இலங்கையில் சமஷ்டி அரசியல் பேசுகிறார் சம்பந்தர். விடுதலைபுலிகளின் போராட்டத்தை, வெளி நாடுகளுக்கு சென்று நியாயபடுத்தி பரப்புரை செய்யவுமில்லை, பதிலாக கொச்சை படுத்தி அவர்களை அழிக்க சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் துணை போனவர்கள் தான் இந்த சம்பந்தர் குழு.

அடேங்கப்பா! கஜேந்திரன் குழுவுக்கு வாக்கு போட்டவுடன், இதை எல்லாம் மாத்தி, நாட்டை பிரிச்சு எடுத்துத் தந்து போடுவினம். வெளிநாடுகளுக்கு ஓடிஒளிச்சிருந்து போராட்டத்த நியாயப்படுத்தின குழுவுக்கு கட்டாயம் வாக்கு போடத்தானே வேணும். இல்லாட்டி? rofl2.gif

அடேங்கப்பா! கஜேந்திரன் குழுவுக்கு வாக்கு போட்டவுடன், இதை எல்லாம் மாத்தி, நாட்டை பிரிச்சு எடுத்துத் தந்து போடுவினம். வெளிநாடுகளுக்கு ஓடிஒளிச்சிருந்து போராட்டத்த நியாயப்படுத்தின குழுவுக்கு கட்டாயம் வாக்கு போடத்தானே வேணும். இல்லாட்டி? rofl2.gif

அடேங்கப்பா. சிங்களவனின் முந்தானைக்குள் பாதுகாப்பாக இருந்தவர்கள் தான் இண்டைக்கு தமிழர்களின் நம்பிக்கை நட்ச்சத்திரங்களோ. ? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் எழுதுவதில்லை காவாலி

தங்களுக்கு ஒரு பச்சை போட்டால் போதும்

இப்பவெல்லாம் எழுதுவதில்லை காவாலி

தங்களுக்கு ஒரு பச்சை போட்டால் போதும்

உங்களுக்கு பதில் தெரியாது. சொல்ல முடிய இல்லை என்பதுதான் உண்மை. அதை நீண்டகாலம் முன்னமே புரிந்து கொண்டு இருக்கிறேன்.

அப்படி உங்களால் சரியான தரவுகளோடு விளக்கம் கொடுக்க முடிந்தால் உங்களை பாராட்டலாம்.

Edited by பொய்கை

நல்ல விடயம் ஐயா ,கடிவாளத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பதில் தெரியாது. சொல்ல முடிய இல்லை என்பதுதான் உண்மை. அதை நீண்டகாலம் முன்னமே புரிந்து கொண்டு இருக்கிறேன்.

அப்படி உங்களால் சரியான தரவுகளோடு விளக்கம் கொடுக்க முடிந்தால் உங்களை பாராட்டலாம்.

கெடுகுடி சொல்கேளாது நண்பரே...

எதை எழுதியும் பிரயோசனமில்லை என்கின்றபோது....

ஆனால் தங்களுக்கு பதில் எழுத முயற்சிக்கவில்லை

ஏனெனில் சில வருடங்களுக்குமுன் நான் இப்படித்தான் போய்ப்போய்............முட்டிக்கிட்டேன்

கெடுகுடி சொல்கேளாது நண்பரே...

எதை எழுதியும் பிரயோசனமில்லை என்கின்றபோது....

ஆனால் தங்களுக்கு பதில் எழுத முயற்சிக்கவில்லை

ஏனெனில் சில வருடங்களுக்குமுன் நான் இப்படித்தான் போய்ப்போய்............முட்டிக்கிட்டேன்

இதையே நானும் உங்களை பார்த்து சொல்லிக்கொள்கிறேன்.

இந்தியா போனதடவை விட்ட தவறை மீண்டும் விடாது. இந்த தடவை மாட்டு பட்டீர்கள் எழுந்து இருக்க கூட முடியாதவர்களாகி விடுவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதையே நானும் உங்களை பார்த்து சொல்லிக்கொள்கிறேன்.

இந்தியா போனதடவை விட்ட தவறை மீண்டும் விடாது. இந்த தடவை மாட்டு பட்டீர்கள் எழுந்து இருக்க கூட முடியாதவர்களாகி விடுவீர்கள்.

அதுதானையா...

திமிங்கிலத்துக்கு தெரியாத மிருகமா மாற முயற்கிக்கலாம் என்பது எனது கருத்து.

திமிங்கிலம் எம்மை விட்டு அகன்றதும்மீண்டும் நாமெல்லாம் பு......

அதுதானையா...

திமிங்கிலத்துக்கு தெரியாத மிருகமா மாற முயற்கிக்கலாம் என்பது எனது கருத்து.

திமிங்கிலம் எம்மை விட்டு அகன்றதும்மீண்டும் நாமெல்லாம் பு......

இப்போதே பிடி கொடுக்காதவர்கள் இனிமே பிடி கொடுத்து மாறிவிட போகிறார்களாக்கும்...

கடந்த 25 வருடமாக புலிகளில் இருந்து பிரிந்து நிண்று போராட்டத்துக்கு பலவகையிலும் இடையூறு வழங்கியவர்களை கொண்ட இப்போதைய கூட்டமைப்பு 2001 ம் ஆண்டில் திருந்தி விட்டது, எண்று சொல்பவர்கள் இனிமேல் என்னத்தை திருந்த வேண்டி கிடக்கு...??

அப்போது அவர்களுக்கு தெரியாதை ஒற்றுமையும் ஒருமிப்பும் 2001 ம் ஆண்டு புரிந்து கொண்டனர் எண்டதும் அவர்கள் பெரிய மேதைகள் என்பது யாரை ஏமாற்றுவதுக்கு...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறும்

அனுபவங்களும்

பாடங்களும்

ஏன்

தோல்விகளும் கூடத்தான் ஒருவரை மாற்றக்கூடியது

எனவே அவர்கள் மாறவே கூடாது என்ற தங்களின் வாதம் ஏற்புடையதல்ல...

அதேநேரம் தேசியமும் நாட்டுப்பற்றும் எமக்கு மட்டுமே உரியவை என்ற தங்களுடைய எடுதுகோளும் நல்லதல்ல....

Edited by விசுகு

ஒருமித்த நாட்டுக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சியையே நாம் விரும்புகின்றோம்

நன்று...

... மே 18 இற்குப்பின்னம், முதன் முதலாக விடுதலைப்புலிகளின் அறிக்கை(தராக்கியினால் உருவாக்கப்பட்ட செயலாளராம்) என்று வெளியிட்ட "பல்லூடக விற்பன்னர்" தராக்கி, .... இன்று ஒன்றினைந்த சிறிலங்காவாம்!! அதன் கீழ் சுயாட்சியாம்!! ... கட்டாயம் தருவாங்கள்!!!! :wub:

ஒருமித்த நாட்டுக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சியையே நாம் விரும்புகின்றோம். இரா.சம்பந்தன்

சரி .. தனிநாடு சாத்தியமானது/இல்லை என்பதற்கு மேல் ... உந்த சுயாட்சியை எடுத்துப்போட்டு உந்தக் கோரிக்கையை கைவிட்டிருக்கலாமே??? ஏன் இந்த அவசரம்????

Edited by Nellaiyan

... மே 18 இற்குப்பின்னம், முதன் முதலாக விடுதலைப்புலிகளின் அறிக்கை(தராக்கியினால் உருவாக்கப்பட்ட செயலாளராம்) என்று வெளியிட்ட "பல்லூடக விற்பன்னர்" தராக்கி, .... இன்று ஒன்றினைந்த சிறிலங்காவாம்!! அதன் கீழ் சுயாட்சியாம்!! ... கட்டாயம் தருவாங்கள்!!!! :wub:

சரி .. தனிநாடு சாத்தியமானது/இல்லை என்பதற்கு மேல் ... உந்த சுயாட்சியை எடுத்துப்போட்டு உந்தக் கோரிக்கையை கைவிட்டிருக்கலாமே??? ஏன் இந்த அவசரம்????

சிந்தியுங்கள்....

Edited by தராக்கி

அதுதானையா...

திமிங்கிலத்துக்கு தெரியாத மிருகமா மாற முயற்கிக்கலாம் என்பது எனது கருத்து.

திமிங்கிலம் எம்மை விட்டு அகன்றதும்மீண்டும் நாமெல்லாம் பு......

திமிங்கிலம் உங்களை விட்டு அகலும் வரைக்கும் நீங்கள் உயிரோடை இருப்பியளோ. ?? ஏன் திமிங்கிலம் இப்ப எல்லாம் மரக்கறிதான் சாபிடுகிறதோ. ?

ஏழரைச்சனி பிடிச்சாலும் ஏழரை வருசத்திலை போய் விடும். ஆனால் இந்தியா பிடிச்சால் வாழ்நாளில் போகாது. இந்தியாவின் கையுக்குள் போய் கெட்டு அழிஞ்ச நாடுகளாக பூட்டான், நேபாளம், பங்களாதேஸ் எண்டு பல நாடுகளை என்னால் உறுதியான உதாரணமாக காட்ட முடியும்.

இந்தியாவின் பிடியுக்குள் போய் செழிப்பான நாடுகள் எதையாவது உங்களால் காட்ட முடியுமா.?

Edited by பொய்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.