Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர்களின் எலும்புக்கூடுகளும், வரிப்புலிச் சீருடைகளும் கூட

Featured Replies

சிங்கள தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தி வன்னியில் அகழப்படும் மாவீரர் துயிலும் இல்லங்கள்

.தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைக்கும் போக்கை சிறிலங்கா அரசும் அரசபடைகளும் நீண்டகாலமாகவே செய்து வருகின்றன. நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது.

வன்னியில் மீளக் குடியமரச் சென்ற மக்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள – வவுனிக்குளப் பாதை சீரமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் அப்பாதைக்கான கிரவல் மண் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்ல வளவிலிருந்தே அகழ்ந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இராணுவத்தினரின் மேற்பார்வையோடு சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் வன்னிவிளாங்குள துயிலுமில்லப்பகுதி கனரகப் பொறிகளைக் கொண்டு ஆழத் தோண்டப்படுகிறது. அப்பகுதிக்கு நேரடியாகச் சென்ற தமிழ்மகன் ஒருவர் கதறியழுதபடி தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டார்.

உக்கிப் போகாமல் இருக்கும் வரிப்புலிச் சீருடைகளும் மாவீரர்களின் எலும்புக்கூடுகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு ஒருபுறத்தில் போடப்படுகின்றன. மணலோடு மணலாகவும் அவை அள்ளிச்சென்று வீதியில் கொட்டப்படுகின்றன. அங்கே பொறுக்கப்படும் சீருடை எச்சங்களும் எலும்புகளும் பொறுக்கப்பட்டு காட்டுக்குள்ளோ வீதிக் கரைகளிலோ வீசப்படுகின்றன. பொதுமக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்திலும் துயிலுமில்லத்திலிருந்து வீதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு இவை ஒன்றாகப் போடப்படும் நிகழ்வும் தற்போது இடம்பெறுகிறது. தமிழ்மக்களின் ஆன்மாவைச் சீண்டிப்பார்த்துப் பரவசப்படும் ஒரு நிலையே தற்போது நடந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அத்தமிழ்மகன் கண்ணீரோடு தெரிவித்தார்.

நன்றி

ஈழநேசன்

Edited by நிழலி
தலைப்பை திருத்த

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தின் ஆன்மாவின் எச்சங்கள் அழிக்கப்பட்டால் தேசியம் கேள்விக்குறியாகிவிடும் நல்ல திட்டம்

உணர்ச்சிவசப்படும் அரசியலை தமிழர்கள் விடுவதுதான் தமிழருக்கு நல்லது என்றும் அந்த அடிப்படையில் சுய மதிப்பீடு,மீளாய்வு இவற்றையே தமிழினம் செய்து புத்திசாதுரியத்துடன் ஜனாதிபதி தேர்தல் பொதுதேர்தல் என்பவற்றில் பங்கு பற்றி அரசியல் சாணக்கியத்துடன் செயற்படுகிறார்கள்.

ஆனால் மறு வளமாக முட்டாள் சிங்களவன் சரணடைந்தவர்களைக்கொன்றும்,எதிரியின் மரியாதைக்குரிய இடங்களை சிதைத்தல்,பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடல் போன்ற போர்குற்றங்களில் ஈடுபடுதல் மக்களை திறந்த வெளி சிறைகளில் அடைத்து சர்வதேச அளவில் மிக மோசமான குற்றவாளியாக நிற்க தமிழினமோ உணர்ச்சி வசப்பட்டு இவற்றை அரசியலுக்குள் இழுத்து சிங்களவனைப்போல் முட்டாள் ஆகாமல் அரசியல் சாணக்கியத்துடன் ஈடுபடுவது பாராட்டத்தக்கது.

சம்பந்தர் போன்ற தேசியம் சிதக்கும் சிலருக்கு சமர்ப்பணம்

  • 4 weeks later...

பதிவு தளத்தில் இருந்து: http://www.pathivu.com/index.php/news/6079/54//d,view/

அண்மைக்காலமாக தமிழீழ தாயக பிரதேசம் எங்கும் விடுதலைப்புலிகளின் நினைவுச்சின்னங்கள்நிலையில் வன்னியில் நேரில்கண்ட சாட்சி ஒருவரின் வெளிவந்த சில அதிர்ச்சி தரும் ஆனால் தமிழர் மனங்களை கொதித்தெழவைக்கும் சில சம்பவங்களை இங்கே தருகிறோம்.

மாவீரர் துயிலும் இல்லங்கள் அகழப்பட்டு அவ்வாறான துயிலுமில்லங்கள் அங்கு இருந்தன என்ற அடையாளத்தையே இல்லாமல் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரங்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.

நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது.

வன்னிவிளாங்குள வவுனிக்குளப் பாதை சீரமை தேவையான கிரவல் மண் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்ல வளவிலிருந்தே அகழ்ந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இராணுவத்தினரின் மேற்பார்வையோடு சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் வன்னிவிளாங்குள துயிலுமில்லப்பகுதி கனரகப் பொறிகளைக் கொண்டு ஆழத் தோண்டப்படுகிறது.

உக்கிப் போகாமல் இருக்கும் வரிப்புலிச் சீருடைகளும் மாவீரர்களின் எலும்புக்கூடுகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு ஒருபுறத்தில் போடப்படுகின்றன. மணலோடு மணலாகவும் அவை அள்ளிச்சென்று வீதியில் கொட்டப்படுகின்றன.

அங்கே பொறுக்கப்படும் சீருடை எச்சங்களும் எலும்புகளும் பொறுக்கப்பட்டு காட்டுக்குள்ளோ வீதிக் கரைகளிலோ வீசப்படுகின்றன.பொதுமக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்திலும் துயிலுமில்லத்திலிருந்து வீதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு இவை ஒன்றாகப் போடப்படும் நிகழ்வும் தற்போது இடம்பெறுகிறது.

தமிழ்மக்களின் ஆன்மாவைச் சீண்டிப்பார்த்துப் பரவசப்படும் ஒரு நிலையே தற்போது நடந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அத்தமிழ்மகன் கண்ணீரோடு தெரிவித்தார்.இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னமாக இருந்த நினைவுக்கல் அழிக்கப்பட்டிருந்தது.

இவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபன் நினைவுத் தூபி அடித்து உடைத்து நொருக்கப்பட்டுமிருந்தது.

அகிம்சை வழியில் நீதி கேட்டு பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகியின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது தமிழர்களின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கும் நிகழ்வாகவே பார்க்கவேண்டும். இவ்வாறு தமிழர்களின் அடையாளங்களையும் சின்னங்களையும் அழிக்கின்ற நடவடிக்கைகள் தன்னெழுச்சியாக நடத்தப்படுவவை அல்ல அண்மையில் சிறிலங்கா அரச அமைச்சர் ஒருவர் புலிகளின் தமிழர்களின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ அழித்தொழிக்கவே முடிவுசெய்துள்ளதாக அறிவித்திருந்தமையை நாம் மறந்துவிடக்கூடாது.

எனவே இவ்வாறு தமிழர் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முனைப்பு பெறும் அதேவேளை சிங்கள தேசத்தின் அடையாளங்களை தமிழர் பிரதேசங்களில் திணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

இது வேதனையிலும் வேதனை.....

  • கருத்துக்கள உறவுகள்
:) இது சிங்களவன் தீர்வு தருவான், ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமக்கு தீர்வு கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருப்பவர்களுக்கும், சிங்களவனின் கோப்பையிலிருந்து விழும் எச்சில் நனைந்த எலும்பிற்குக் கதவடியில் வாலாட்டிக்கொண்டிருக்கும் இனத் துரோகிகளுக்கும் சமர்ப்பணம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பரம்பரை பரம்பரையாக சிங்களவர்கள் மேல் வன்மம் வைத்து தமிழர்களை உருவாக்கும் செயல் இதற்கான பதிலை எதிர்கால சந்ததி சிங்களத்துக்கு வழங்கும்.

கட்டபொம்மபோடு நினைத்து இருப்பர் தமிழன் எதிர்ப்பு முடிந்தது என,

சங்கிலியனுடன் நினைத்து இருப்பர் தமிழன் எதிர்ப்பு முடிந்தது என,

பண்டாரவன்னியனுடன் நினைத்து இருப்பர் தமிழன் எதிர்ப்பு முடிந்தது என,

பிரபாகரனுடன் நினைத்து இருப்பர் தமிழன் எதிர்ப்பு முடிந்தது என,

காலம் ஒரு வட்டம் அது மீண்டும் தொடங்கும், பதில் அப்போது வழங்கபடும். வஞ்சத்தை தமிழன் கூட்டுக்குள் சேர்த்து வைத்து இருப்பான். :):lol::lol:

இந்த செயல் ஒரு சக்கை வாகனத்தை கொண்டு சென்று சிங்களவர் அதிகமாக இருக்கும் இடத்தில் வெடிக்க வைக்க தைரியம் கொடுக்கிறது ஒவ்வொரு ஆண்மாவிற்கும். :):)

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானம் இல்லாத மிருக கூட்டத்திடம் இருந்து வேறு எதனை நாம் எதிர்பார்க்க்க முடியும்??

ஆத்திரமுற்றாலும் எதையுமே எதிர்த்துக் கேள்வி கூடக் கேட்க முடியாத நிலையில் தமிழினம் இருப்பதைக் காட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.