Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுவை இரத்தினதுரையின் விடுதலை

Featured Replies

மூலச் செய்திக்கு: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=௫௫௯௮

புதுவை இரத்தினதுரையின் விடுதலை குறித்து டக்ளஸிடம் அவரின் சகோதரி வேண்டுகோள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன் னர் செயற்பட்ட முக்கியஸ்தர்களில் ஒரு வரும் கவிஞருமான புதுவை இரத்தின துரையின் விடுதலை குறித்து அவரது சகோதரி இராசலட்சுமி நேற்றுமுன்தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந் தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவையின் சகோதரி தனது கணவரான பத்மநாதனுடன் வந்து அமைச்சரைச் சந்தித்தார் என்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சினால் வெளியி டப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்தக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது மனைவி குடும்பம் சகிதமாக படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தார். இதன்போது புதுவை இரத்தினதுரை தவிர்ந்த அவரது மனைவியும் பிள்ளை களும் நலன்புரி முகாமில் தங்க வைக்கப் பட்டு பின் விடுவிக்கப்பட்டு திருமலை யில் வசித்து வருகின்றனர். இத்தகவலை புதுவை இரத்தினதுரை யின் சகோதரி அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தாவிடம் தெரிவித்ததோடு தனது சகோதரனான புதுவை இரத்தினதுரையை விடுவித்து தருமாறு வேண்டுகோள் விடுத் துள்ளார். இதன்போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் சகோதரியும் இவ்வாறு தம்மிடம் உதவி கேட்டு வந்த தாகவும் தாம் அதற்கான உதவிகளைச் செய் திருந்ததாகவும் தற்போது தயா மாஸ்டர் வடமராட்சியில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும் தெரிவித்தார். புதுவை இரத் தினதுரை குறித்து விவரங்களைக் கண்ட றிந்து அவரது விடுதலைக்காகவும் தம் மால் மனிதாபிமான அடிப்படையில் உதவ முடியும். அதற்கான நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைது செய்யப்பட்டடோர் சரணடைந்தோர் என அனைத்து புலிகள் இயக்க உறுப்பினர்களை யும் விடுதலை செய்யவேண்டுமென்ற கோரிக்கையை தாம் ஜனாதிபதியிடம் வலி றுத்தி வருவதாகவும் எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஐக் கிய சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி யிடம் சமர்ப்பித்திருக்கும் கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்றும் தெரிவித்தி ருந்தார். இரத்தினதுரையின் சகோதரியான வய தான மூதாட்டிக்கு அமைச்சர் ஆறுதல் கூறியும் அனுப்பிவைத்தார். இச்சந்திப்பின்போது ஈ.பி.டி.பியின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் விந்தனும் புதுவை இரத்தினதுரையின் உற வினரும் இலங்கை மக்கள் ஜனநாயகப் பேரவை(சுவிஸ்)யின் செயலாளருமான கே.ராஜ்மோகனும் பிரசன்னமாகியிருந்த னர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளைக் கடத்தி கப்பம் கேட்பதற்குச் சமமமான இதுவும் டக்ளசின் ஒரு யுக்தி.

அவர்களுக்காக இப்போது யார் வாய்திறக்கின்றார்கள். அவர்கள் மறக்கப்பட்ட தமிழர்களாகிக் கொண்டு வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனிடம் சிக்கி சாவதைக் காட்டிலும் உள்ள ஓட்டைகளைப் பாவித்து வெளியில வாறது நன்றே.

வியட்நாம் போரில் சிறைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பல அமெரிக்க வீரர்கள் வியட்நாமியர்களுக்கு உளவாளிகள் ஆகிறோம் என்ற பெயரில் தப்பி வந்தததும் போர் தந்திரங்களில் ஒன்று. எனவே.. எமது போராளிகள் ஆதாரவாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு வழியில் வெளியே வந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி வாழட்டும். அதுதான் இன்றைய தேவை..! எதிரியிடம் சிக்கி அழிந்து போவதைக் காட்டிலும் இது சிறந்ததே..!

இந்த தேர்தல் காலத்தை அதற்கு சரியாக பாவித்துக் கொள்ளுங்கள்... என்றே நான் கூறுவேன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குயிலைப்பிடித்து கூண்டிலடைத்து..... ...

பார்த்துக்கொண்டிருக்கும் உலகத்தை நம்பி பிரயோசனமில்லை

எமக்காக பாடியதைத்தவிர என்ன செய்தான் இக்கவி

கதவு திறக்க என்ன செய்தாலும் தகும்...

Edited by விசுகு

  • தொடங்கியவர்

அவர்களுக்காக இப்போது யார் வாய்திறக்கின்றார்கள். அவர்கள் மறக்கப்பட்ட தமிழர்களாகிக் கொண்டு வருகிறார்கள்.

இறைவன் நெடுக்கு சொன்னதையும் யோசியுங்கோ

இதை டக்கிலசால் தான் முடியுமென்றால் அதை ஏன் முயற்சிக்காமல் இருப்பான்.

இப்போதைக்கு அவர் வெளில வருவதே தேவை யார் கொனந்தாலும் நல்லதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் கூற்று சரியானதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரே இறுதிநேரத்தில் தெடர்புகளை பேனியதாக இங்கு எங்கேயோ வாசித்ததாக நினைவு.....வவுனியாவிலிருந்தும் பலரை அனுப்பியதாக எழுதப்பட்டிருந்தது , ரத்தினதுரையாரும் வெளியே வருவார். :wub:

இறைவன் நெடுக்கு சொன்னதையும் யோசியுங்கோ

இதை டக்கிலசால் தான் முடியுமென்றால் அதை ஏன் முயற்சிக்காமல் இருப்பான்.

இப்போதைக்கு அவர் வெளில வருவதே தேவை யார் கொனந்தாலும் நல்லதுதான்.

அந்த அர்த்தம் கொண்டுதான் நான் எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் உதவி செய்வது முக்கியமல்ல, புதுவை உட்பட சிறையில் இருக்கும் அனைவரும் வெளியில் வருவது தான் முக்கியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.