Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

EXCLUSIVE இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார்.

தாம் இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்ததாக சிவாஜிலிங்கம் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் பிஸர் எனப்படும் தனியாருக்குச்சொந்தமான விமானத்தில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தாம் 4.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தாக சிவாஜிலிங்கம் எம்மிடம் கூறினார்.

சுமார் நான்கு மணித்தியாலங்கள் தமக்கு சென்னை விமான நிலையத்தில் தரித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

மாலை 5.மணியளவில் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் தம்மை இந்தியாவுக்குள் பிரவேசிக்க முடியாது எனக்கூறினர்.அதற்குரிய காரணத்தை தாம் வினவியபொழுது தமக்கு இடப்பட்ட உத்தரவு என்றும்,தம்மால் எதுவும் கூற முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எதுவாக இருப்பினும் புது டில்லியில் உள்ள உள்துறை அமைச்சுடன் தொடர்புகொள்ளுமறும் கேட்டுக்கொண்டனர்.பிறகு 9.15 மணியளவில் தம்மை எயர்லங்கா விமானத்தில் ஏற்றிவிட்டனர் என்றும் சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பீர்களா என தமிழ்மிரர் இணையதளம் வினவியது.

இன்று புதன்கிழமை புத்தாண்டு விடுமுறை என்பதால் நாலை இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகத்தில் தமது கண்டனத்தை தெரிவிக்கவுள்ளதாக அவர் பதிலளித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதிவரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதாகவும்,அந்த அடிப்படையிலேயே தமது பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

என்ன காரனத்திற்காக இந்தியா சென்றீர்கள் என்று கேள்வி எழுப்பியபொழுது,மருத்துவ பரிசோதனைக்காக தாம் சென்றதாகவும் சிவாஜிலிங்கம் பதிலளித்தார்.

இந்தியாவுடன் யுத்தம் செய்த முஷர்ரபுக்கே அனுமதி வழங்கும் போது,தமக்கு ஏன் வழங்க முடியாது என்றும் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

http://www.tamil.dailymirror.lk

சனாதிபதித் தேர்தலின் பொது சிவாஜிலிங்கம் இந்தியாவின் கைப் பொம்மையாக இருந்தாராம் எண்டு சிங்க வந்து குத்தி முறித்தார்கள் எலாம் பொய்யா?

அது சம்பந்தன் குழுவினரின் சதி வேலை....

சனாதிபதித் தேர்தலின் பொது சிவாஜிலிங்கம் இந்தியாவின் கைப் பொம்மையாக இருந்தாராம் எண்டு சிங்க வந்து குத்தி முறித்தார்கள் எலாம் பொய்யா?

அது சம்பந்தன் குழுவினரின் சதி வேலை....

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ..... ... ...

அது சம்பந்தன் குழுவினரின் சதி வேலை....

அது சம்பந்தன் குழுவினரின் சதி வேலை....

இருக்கும் இருக்கும் யார் கண்டது...

எதுக்கும் பழைய திரிகளை ஒருக்காப் பார்த்தால் தான் தெரியும் எவன் சதி செய்தானென்று.

எல்லாரும் ஏறி விழுந்த குதிரையில சக்கடத்தாரும் ஏறி சறிக்கி விழுந்தாராம்.

இதுக்குள்ள சிவாஜிலிங்கம் மாத்திரம் விதிவிலக்கா?

செல்வாவில இருந்து எங்களுக்கு விடுதலை பெற்றுத் தாரமெண்டு எத்தினையோ பேர் வந்து போட்டினம்

அதில சிவாஜிலிங்கத்துகும் ஒரு இடம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சனாதிபதித் தேர்தலின் பொது சிவாஜிலிங்கம் இந்தியாவின் கைப் பொம்மையாக இருந்தாராம் எண்டு சிங்க வந்து குத்தி முறித்தார்கள் எலாம் பொய்யா?

அப்ப புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலருக்கு தலைவர் சரத் பொன்சேகாவில்லோ, அவருக்கு ஆதரவு தெரிவிக்காமல் தனியாகப் போட்டியிட்டார் என்று சனம் இவரைத்துரோகி என்று கதைச்சது.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இருக்கும் யார் கண்டது...

எதுக்கும் பழைய திரிகளை ஒருக்காப் பார்த்தால் தான் தெரியும் எவன் சதி செய்தானென்று.

எல்லாரும் ஏறி விழுந்த குதிரையில சக்கடத்தாரும் ஏறி சறிக்கி விழுந்தாராம்.

இதுக்குள்ள சிவாஜிலிங்கம் மாத்திரம் விதிவிலக்கா?

செல்வாவில இருந்து எங்களுக்கு விடுதலை பெற்றுத் தாரமெண்டு எத்தினையோ பேர் வந்து போட்டினம்

அதில சிவாஜிலிங்கத்துகும் ஒரு இடம் கிடைக்கும்.

புதிதாக ஒரு தியறி வந்திருக்கு. நீங்கள் வாசிக்கவில்லை போல. அதாவது நீங்கள் நல்லவனாக வேணுமெனில் உனது சுற்றத்தை துரோகியாக்கு என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் இந்தியக்கூட்டுக்குப் பலிக்கடாவாக்கப்பட்ட ஒரு உண்மையான முழுமையடையாத அரசியல்வாதி.

நாளுக்கு ஒரு கருத்துக் கூறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அடிபட்டுப்போனவர்.பொய் பேசுபவர்களும் அடிக்கடி கொள்கைகளை மாற்றுபவர்களுமே அரசியலில் நிலைத்து நிற்பார்கள் என்பதற்கான உதாரணம்.

வாத்தியார்

...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.