Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடி 13 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் கப்பம் கோரி வர்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர் ‐ யாழ்ப்பாணத்தில் இருந்து GTN செய்தியாளர்‐

20 April 10 03:49 pm (BST)

மீண்டும் யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடிகாரர்களின் செயற்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக மானிப்பாய் பகுதியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்து மானிப்பாயிலுள்ள நலன்புரி முகாமில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இன்று கறுப்பு வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். துரைசிங்கம் அஜித்குமார் எனும் 13 வயதுடைய இந்த மாணவன் தனது முகாமிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சமயம் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். எனினும் சிறுவனும் தாயும் கத்திக் குழறியதை அடுத்து அருகிலுள்ள படை முகாம் ஒன்றிற்கு அருகில் சிறுவனை அரைகுறை மயக்கமான நிலையில் வானிலிருந்து தள்ளி விட்டு கடத்தலாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி படையினரால் மீட்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் அப்பகுதி இடம்பெயர்ந்த மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மானிப்பாய் காவற்துறையில் அவர்கள் முறைப்பாடு செய்ய முற்பட்ட பொழுதிலும் மானிப்பாய்க் காவற்துறையினர் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குறித்த பெற்றோருடன் தொடர்பு கொண்ட போது தமது சிறுவன் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் மேற்படி வாகனத்தில் மேலும் இரு சிறுவர்கள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளைத்துணியால் மூடி படுக்க வைக்கப்பட்டிருந்ததனை தமது மகன் கண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

குறித்த 13 வயது மாணவன் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சர்ச்சைகள் பெரும் பரபரப்பை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்றளது. விடுதலைப் புலிகளுடனான சமாதானக் காலப்பகுதியில் அதாவது ஏ9 வீதி முன்னர் திறக்கப்பட்டிருந்த போதிலும் இவ்வாறான சிறுவர் கடத்தல் தொடர்பான பரபரப்பான செய்திகள் அப்போதைய காலத்திலும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வலிகாமம் பகுதியைச் சேர்ந்த 2 குடும்பத்தவர்கள் கப்பம் பெறும் இலக்காக கடத்தப்பட்டு உள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். மகேஸ்வரன் என்பவரை 50 லட்சம் கப்பம் கோரியும், மகேந்திரன் என்பவரை 20 லட்சம் கப்பம் கோரியும் கடத்தப்பட்டு உள்ளதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர். இதில் மகேஸ்வரன் வாகன திருத்தும் தொழிலக உரிமையாளர் எனவும் மகேந்திரன் மின்சார தொழில்நுட்பவியலாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கின் பாசிக்குடா மக்களின் இலகு பாவனைக்காக சுற்றமாக்கப்படுகிறது ‐ பிள்ளையான் தலைமையில் சிரமதானம்‐

3ஆம் இணைப்பு‐புதுடெல்லியில் இடம்பெற்ற இலங்கையின் யுத்தக் குற்றம் தொடர்பிலான மாநாடு குறித்து கொளத்தூர் மணி வழங்கிய விசேட செவ்வி. டப்ளின் மாநாடு குறித்த ஆவணப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன‐டெல்லி மகாநாட்டுப் படங்கள் இணைப்பு‐

தமது உறவுகளும் விடுதலையாவர் என ஏக்கத்துடன் முகாமின் முன் காத்திருந்த மக்கள் ‐ களம் நிகழ்ச்சி‐

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை வலிகாமம் பகுதியைச் சேர்ந்த 2 குடும்பத்தவர்கள் கப்பம் பெறும் இலக்காக கடத்தப்பட்டு உள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். மகேஸ்வரன் என்பவரை 50 லட்சம் கப்பம் கோரியும், மகேந்திரன் என்பவரை 20 லட்சம் கப்பம் கோரியும் கடத்தப்பட்டு உள்ளதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர். இதில் மகேஸ்வரன் வாகன திருத்தும் தொழிலக உரிமையாளர் எனவும் மகேந்திரன் மின்சார தொழில்நுட்பவியலாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுக்குழுவுக்கு பணக் கஷ்டம் என்றால், நொந்துபோன தமிழ் மக்களிடமா தமது கைவரிசையை காட்ட வேண்டும்.

சிங்களப் பகுதிகளில் போய் கொள்ளை அடிக்க வேண்டியது தானே..... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டுக்குழுவுக்கு பணக் கஷ்டம் என்றால், நொந்துபோன தமிழ் மக்களிடமா தமது கைவரிசையை காட்ட வேண்டும்.

சிங்களப் பகுதிகளில் போய் கொள்ளை அடிக்க வேண்டியது தானே..... :lol:

புலி இருந்தால் அரசிடமிருந்து பணம்... புலி இல்லாமையினால் மக்களிடம் பணம் பறிப்பு... ஆக மொத்தத்தில் புலி தான் அவர்களின் வாழ்வாதாரம்... பல பேர் இப்படிதான்..

புலிகள் இருந்தால் தான் மக்களுக்கு இவர்களிடமிருந்து மட்டுமல்ல இன்னும் பல பேரிடமிருந்து பாதுகாப்பு...

பயணக்கட்டுரை எழுதுற ஆக்கள் எங்கை...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மதிவதனங் அவர்களுடைய சிலமனைக் காணவில்லை யாராவது யவரை யாழ்ப்பாணப்பக்கம் கண்டியளோ என விசாரிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிவதனங் அவர்களுடைய சிலமனைக் காணவில்லை யாராவது யவரை யாழ்ப்பாணப்பக்கம் கண்டியளோ என விசாரிக்கவும்.

கொலிடே போனத கண்டுபுடிச்சிட்டாங்கப்பா. :lol:

மாகாணசபை லெக்சனெண்டு ஒரு செய்தி வந்திருக்கு...... முடியுமட்டும் உப்புடி செய்தியள் வரும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொலிடே போனத கண்டுபுடிச்சிட்டாங்கப்பா. :lol:

மாகாணசபை லெக்சனெண்டு ஒரு செய்தி வந்திருக்கு...... முடியுமட்டும் உப்புடி செய்தியள் வரும். :lol:

உழைத்து தின்ன வக்கில்லை.அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதே வேலையாப் போச்சு. கேட்டால் மக்கள் வாக்களித்து வெண்டவையாம். கள்ள வாக்கு கூட்டம் மக்களால் அடித்து துரத்தப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உழைத்து தின்ன வக்கில்லை.அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதே வேலையாப் போச்சு. கேட்டால் மக்கள் வாக்களித்து வெண்டவையாம். கள்ள வாக்கு கூட்டம் மக்களால் அடித்து துரத்தப்பட வேண்டும்.

இளனி குடிக்கிறவன் ஒருத்தன் கோம்பை நக்கினவன் இன்னொருத்தன் பேச்சு வாங்கிறவன் ...... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இளனி குடிக்கிறவன் ஒருத்தன் கோம்பை நக்கினவன் இன்னொருத்தன் பேச்சு வாங்கிறவன் ...... :lol::lol:

இரண்டும் ஒராக்கள் தான். தாடிக்காரர் கூட்டம் தான். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைக்கில் ஓடினவைக்கும் வேல இல்லதானே! :lol:

சைக்கில் ஓடினவைக்கும் வேல இல்லதானே! :lol:

வேலை ஒன்றை உங்களுக்கு பெற்றுக் கொடுத்தால் நீங்கள் செய்வீர்களா?

பயணக்கட்டுரை எழுதுற ஆக்கள் எங்கை...??

அவர்களின் நோக்கம் வேறு! தமிழரின் அவலம் அல்ல!!!

டக்கி - கருணா குழுக்கள் யாழில் இணைந்து வேலை செய்வதாக கேள்வி!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கி - கருணா குழுக்கள் யாழில் இணைந்து வேலை செய்வதாக கேள்வி!!!

உது புரதான,புராண காலத்திலையிருந்தே நடக்கிற கூத்துகள் தான்

வெட்டின இராவணன் ஒழுங்காய் வெட்டேல்லை

அதுதான் இப்ப பிரச்சனை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.