Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி

Featured Replies

சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி

சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு இறுதியில் கண்ணீ ரில்தான் முடியும். புத்திசாலித்தனமாகச் செயற்படமுடியும் என்று இலங்கை நினைக்கிறது.இது மாபெரும் தவறாகும். ஆனால் இது பிழையான நினைப்பு. இலங்கை அதன் சுயாட்சியை இழக்க நேரும். இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இச்செயற்பாடு மிகவும் முட்டாள்தனமானது. இந்தியாவை மீறி சீனாவுடன் நட்பைப்பேணுவது ஆபத்தானது.

இவ்வாறு அவுஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரும், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் துணை உயர்ஸ்தானிகராக 1994 ஆம் ஆண்டு கடமையாற்றியவருமான புரூஸ் ஹெய் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நடப்பு விவகாரங்கள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அதில் அவர் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு, இலங்கைத் தூதரகங்கள் அரசியல் மயப்பட்டுவிட்டன. அவை புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

தமிழர்களுக்கு தொல்லை கொடுக்கின்றன. இலங்கைத் தூதரகங்கள் அமைந்திருக்கும் அந்தந்த நாடுகளின் இணக்கத்துடன் இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது நிலைமை மாறுகிறது. ஏனெனில் அந்நாடுகள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டன.

ஐ.நாவின் சர்வதேச குற்ற விசாரணைகளுக்கு இடம்கொடுக்காமல் இருப்பதன் மூலம் இலங்கையின் பெயர் கெடுகிறது. இலங்கையே அதன் பெயரை கெடுக்கிறது. இலங்கையின் யுத்தக் குற்றங்கள் உள்நாட்டு விடயங்கள் அல்ல.யுத்தக் கைதிகளை படுகொலை செய்தல். அப்பாவி பொதுமக்களை கொலைசெய்தல், பெண்களை கற்பழித்தல் என்பன எப்படி உள்நாட்டு விடயங்கள் ஆகி விடமுடியும்.

இலங்கைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் கிடைக்கப்பெற்றது உண்மையான வெற்றி அல்ல. ஏனெனில் சிவில் யுத்தத்தின் மூலப் பிரச் சினைகண்டறிந்து தீர்க்கப்படவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுடன் அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம், நம்பிக்கை, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சுக்களை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஆனால் அரசுத் தரப்பில் இவை ஒன்றையும் காண முடியாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

ஈழநேசன்

எல்லாம் சொல்லிகிட்டே இருப்பார்கள் . ஒரு பெரிய தொல்லை என்னவென்றால் ஒய்வு பெற்ற பின் தான் பெரும்பாலும் அதிகம் பேருக்கு ஞானோதயம் வருகிறது . நானும் கூட கலைஞரின் ஓய்வை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு அதிக நாள் காத்திருக்க வேண்டியதில்லை. மரீனா கடற்கரையில் அண்ணா சதுக்கத்துக்கு அருகே வாருங்கள் அங்கே சந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

எல்லாம் சொல்லிகிட்டே இருப்பார்கள் . ஒரு பெரிய தொல்லை என்னவென்றால் ஒய்வு பெற்ற பின் தான் பெரும்பாலும் அதிகம் பேருக்கு ஞானோதயம் வருகிறது . நானும் கூட கலைஞரின் ஓய்வை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.

சரியாகச் சொன்னீர்கள். அப்போது கூட "ஈழ விடயத்தில் நடந்த உண்மைகள்" என்று புத்தகம் அடித்து காசாக்கிப்போடுவார் கலைஞர்.

  • கருத்துக்கள உறவுகள்

பலர் பதவிக்காக உண்மையை மறைத்தார்கள்.

இப்போதும் மறைக்கின்றார்கள்

நாளையும் மறைப்பார்கள்

பதவி ஆசையும் காலமும் முடிந்த பின்னர் சிலர் புகழுக்காக உண்மை சொல்வார்கள்.சிலர் பாவ மன்னிப்புக் கேட்பார்கள்.

இவர் எப்படியோ?

வாத்தியார்

..............

யார் நாடகமாடுகிறார்கள் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இலங்கை சீனாவை நம்பித்தானாக வேண்டும். சர்வதேச அழுத்தங்களுக்கு முகங் கொடுப்பதற்கு சீனாவைவிட்டால் வேறு துணையில்லை. இந்தியா சில வேளைகளில் இலங்கையைக் கை கழுவலாம். இந்தியாவை இலங்கை ஒருபோதும் நம்பாது. இலங்கை கூப்பிடுவதற்கெல்லாம் வாலாட்டும் நாய்க் குட்டியாகத்தான் இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ளும். இதை இந்தியா புரிந்து கொண்டிருக்கிறது. இருந்தும் என்ன பயன். சீனாவின் இந்துசமுத்திரப் பிராந்திய ஆதிக்கம் ஒரு பக்கமில்லாமல் தமது பக்கமும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா தவழ்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Bruch Haigh கடந்த சில ஆண்டுகளாக தமிழர் சம்பந்தமான கலந்துரையாடல்களில் பங்கு கொண்டு செயலாற்றி வருபவர். இலங்கை அரசின் இனவாதத்தை பன்னாட்டு சமுகத்துக்கு எடுத்துச் செல்பவர்களூள் ஒருவராக இருக்கின்றார்.

Bruch Haigh கடந்த சில ஆண்டுகளாக தமிழர் சம்பந்தமான கலந்துரையாடல்களில் பங்கு கொண்டு செயலாற்றி வருபவர். இலங்கை அரசின் இனவாதத்தை பன்னாட்டு சமுகத்துக்கு எடுத்துச் செல்பவர்களூள் ஒருவராக இருக்கின்றார்.

அதான் சொல்கிறேனே . ஒய்வு பெற்ற பின் ஞானோதயம் என்று

அடேய் முட்டாள் தமிழா முடிந்தளவு உனக்கான ஆதரவினைத் தேடிக்கொள்... கிடைக்கும் ஆதரவுகளை அப்படியே அரவணைத்துக்கொள்.....உன்னுடைய எகத்தாளப் போக்கும் எத்தனப் பேச்சும் சம்பாதித்தது தான் முள்ளிவாய்க்கால் பேரவலம்..... உன்னை வன்னியில் ஒரு வாய் சோத்துக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் கஷ்டப்படும் ஒரு ஜீவனாக ஒரு கணம் கற்பனை செய்து பார்.....ஆக்கபூர்வமா எதையாவது யோசி இல்லாட்டி comments எழுதாத....

Edited by Rudran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.